tag:blogger.com,1999:blog-79593256852893705362024-03-12T19:58:55.312-07:00MowniRamprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger160125tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-45492602629736550622010-02-13T23:55:00.000-08:002010-02-15T03:17:04.440-08:00பழைய ஒரு சிறிய காதல் கதை - பஷீர்<blockquote> <p><strong>வைக்கம் முஹம்மது பஷீர்</strong> <br /><em>தமிழில் </em>: <strong>சுரா</strong></p> </blockquote> <p>காதல்வயப்பட்டிருந்த கால  கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!</p> <p><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S3eseb0EWcI/AAAAAAAAFnc/RYHsRapWbJM/s1600-h/augusterodinthekissrodinmuseumparis6.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="auguste-rodin-the-kiss-rodin-museum-paris" border="0" alt="auguste-rodin-the-kiss-rodin-museum-paris" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S3esfeudr1I/AAAAAAAAFng/HdkHhwmDTis/augusterodinthekissrodinmuseumparis_.jpg?imgmax=800" width="324" height="380" /></a></p> <p>பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!</p> <p>பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.</p> <p>நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.</p> <p>தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…</p> <p>என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.</p> <p>பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.</p> <p>இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.</p> <p>இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!</p> <p>முதல் பார்வை…</p> <p>பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!</p> <p>இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!</p> <p>இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.</p> <p>நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!</p> <p>உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!</p> <p><a href="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S3esgeSp6wI/AAAAAAAAFnk/-nc6euKzWSA/s1600-h/180pxVaikomMuhammadBasheer25.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="180px-VaikomMuhammadBasheer" border="0" alt="180px-VaikomMuhammadBasheer" align="right" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S3eshc-L3II/AAAAAAAAFno/q0athBd_B48/180pxVaikomMuhammadBasheer_thumb23.jpg?imgmax=800" width="173" height="240" /></a> முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.</p> <p>என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.</p> <p>அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!</p> <p>தெய்வமே!</p> <p>அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?</p> <p>நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!</p> <p>அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?</p> <p>அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?</p> <p>இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.</p> <p>நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!</p> <p>அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.</p> <p>ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.</p> <p>ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?</p> <p>ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.</p> <p>கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.</p> <p>தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.</p> <p>காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.</p> <p>அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?</p> <p>நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.</p> <p>நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!</p> <p>“”ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”</p> <p>“”சும்மா…”</p> <p>உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:</p> <p>“”போயாச்சா?”</p> <p>“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”</p> <p>“”எதற்கு?”</p> <p>“”சும்மா!”</p> <p>“”வேண்டாம்!”</p> <p>“”வேணும். நான் வருவேன்!”</p> <p>“”நாய் இருக்கு!”</p> <p>“”பரவாயில்லை!”</p> <p>“”அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”</p> <p>“”பரவாயில்லை. நான் வருவேன்!”</p> <p>“”அய்யோ… வேண்டாம்!”</p> <p>நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.</p> <p>நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!</p> <p>நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.</p> <p>அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.</p> <p>“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.</p> <p>ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.</p> <p>அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.</p> <p>நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.</p> <p>தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!</p> <p>எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.</p> <p>நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.</p> <p>“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.</p> <p>பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?</p> <p>நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.</p> <p>வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!</p> <p>அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?</p> <p>என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!</p> <p>“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.</p> <p>ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.</p> <p>தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!</p> <p>நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’</p> <p>கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.</p> <p>அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.</p> <p>எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.</p> <p>அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.</p> <p>அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!</p> <p>நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.</p> <p>இறுதியில் அவர்கள் கூறினார் கள்:</p> <p>“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”</p> <p>மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!</p> <p>மங்களம்.</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-25766385532163373302010-02-11T09:17:00.000-08:002010-02-15T03:17:04.453-08:00அவன் அவள் - விக்ரமாதித்யன் நம்பி<blockquote> <h5>விக்ரமாதித்யன் நம்பி</h5> </blockquote> <p><strong><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S3Q7iZACf6I/AAAAAAAAFm8/tt1zflL7yBQ/s1600-h/nambi2565.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="nambi256" border="0" alt="nambi256" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S3Q7jYVZ_sI/AAAAAAAAFnA/_YJk5VLihms/nambi256_thumb3.jpg?imgmax=800" width="268" height="410" /></a></strong></p> <p><strong>அவன் அவள்</strong> <br /></p> <p>எவ்வளவு சொல்லியும் நம்புவதாக இல்லை அவள். <br />எந்தவிதத்திலும் சமாதானம் செய்துவிடமுடியாது என்கிற மாதிரி <br />பிடிவாதமாக இருந்தாள். <br />இப்படி வைராக்யமாக இருக்கிறவளோடு எப்படி வாழமுடியும். <br />அன்பான வார்த்தைகளைக் கூட ஆணின் பசப்புமொழிகள் என்பது <br />போலப் புறக்கணிக்கப் பழகிவிட்டிருந்தாள். <br />தொட்டுப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து வந்தாள். <br />பார்வையை எதிர்கொள்வதை விட்டுவிட்டிருந்தாள். <br />இவ்வளவு இறுக்கம் ஒரு பெண்ணுக்கு ஆகாது. <br />கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்திருந்த அவநம்பிக்கை <br />நாள்பட நாள்படத் திரண்டிருந்த கசப்பு <br />சன்னம் சன்னமாகக் குவிந்துபோன வெறுப்பு <br />எல்லாம் ஆகக்கூடிப் பாறையாக நின்றன. <br />அவள் இக்கதிக்கு ஆனதில் தான்தான் முழுமுதல் காரணகர்த்தா என்ற உறுத்தல் வேறு மனசைக் குடைந்து கொண்டிருந்தது. <br />நிவர்த்திக்க வகையறியாது சிந்தை குழம்பியிருந்தான். <br />நியாயம் அவள் பக்கம்தான் என்று ஆதியிலிருந்தே உணர்ந்திருந்தான். <br />அவள் மனசில் இத்தனை துக்கம் கொண்டிருப்பது தப்பில்லைதான் <br />தன்னிடம் அவள் மிகுந்த வன்மத்தோடு இருப்பதில் தவறில்லை <br />என்றாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. <br />பகையாளி போலவேதான் அவள் நடந்துகொண்டாள். <br />வெகு கடுமையாக விரோதம் பாராட்டினாள். <br />இது இப்படி ஆகியிருக்கக் கூடாது. <br />இந்த மாதிரி துரதிர்ஷ்டம் நேரக்கூடாது ஒரு ஆணுக்கு. <br />அவள் இப்படிப்பட்ட பெண்ணே இல்லை. <br />ஆசையும் பாசமும் கொண்டவள். <br />குழந்தைதான். <br />கவலை தெரியாத அந்த பச்சைப்பிள்ளை மனசைக் காலம் அழித்துவிட்டதா. <br />காற்றுப்போல சுதந்திரமான அவள் குதூகலத்தைக் கொன்றது விதிதான். <br />பெண்ணுக்கு மட்டுமேயான அவள் கனவுகள் கருகிப் போயிருக்க வேண்டாம். <br />நாளும் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்கையில் பேதலித்துப் போகிறான் அவன். <br />அவளுடைய தொடர்ந்த புகார்களைக் கேட்டுக்கேட்டு கலவரமடைகிறான். <br />அவனைச் சுட்டெரிக்கிறது அவள் கோபம். <br />அவள் பழிவாங்கிக் கொண்டிருக்கிறாளா. <br />உண்மையிலேயே அவன் களைத்துப் போய்விட்டான். <br />இந்த யுத்தத்தை நீடிக்கவிடுவது முட்டாள்தனமானது. <br />ஆனால் அவள் எதையும் கேட்க சித்தமாயில்லை. <br />என்னை விட்டுவிடு என்கிறாள். <br />வேண்டாம் இந்த உறவு என்றே சொல்கிறாள். <br />நிம்மதியாக இருக்கவிடு போதும் என்று கணக்குத் தீர்க்கிறாள். <br />அப்படி என்ன கொடுமை இழைத்துவிட்டோம். <br />பெண்தெய்வங்களே பெண்தெய்வங்களே <br />பிழை பொறாத பெண்தெய்வங்களே <br />* * * *</p> <p> <br />ஆயாசமாக இருந்தது. <br />பக்கத்தில் இருந்தும் விலகிப்போயிருப்பது இருவருக்குமே <br />புரிந்த ஒன்றுதான். <br />பேசினாலே தப்பாகிவிடுகிறது. <br />விஷம் தோய்ந்த கத்திகளாகின்றன வார்த்தைகள். <br />முகத்திலேயே விழிக்காதவர்கள் போலத்தாம் பேசிக் கொள்ளும்படியாகின்றன. <br />அன்பாக இருந்தோம் என்பது கனவாகவும் <br />அப்படி இனிமேல் இருக்கமுடியாது என்பது எதார்த்தமாகவும் மாறியிருந்தன. <br />நாலு சுவர்களுக்குள் இந்தமாதிரி இருப்பது அவளுக்கும் <br />தாளமுடியாத அவஸ்தையாகத்தான் இருக்கும். <br />என்னசெய்தும் இந்த மனமூட்டத்தை விலக்க முடியாது போயிற்று. <br />ஆண்களையெல்லாம் வரிசையாக நிற்கவைத்துச் சுடவேண்டும். <br />கோபமாகக் குரல் உயர்த்தி அவள் அன்றொருநாள் சொல்லக் கேட்டபோது <br />அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. <br />இதுநாள் வரை பத்து தடவையாவது சொல்லியிருப்பாள். <br />எரிச்சல்தான் இது. <br />எரிப்பது தீதானே. <br />இது தீதான். <br />இதை அணைக்கமுடியுமா. <br />* * * *</p> <p> <br />கொஞ்சம் நாடியைப் பிடித்துத் தாங்கினால் போதும் முதலில். <br />பிறகு உன்னைவிட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று <br />மண்டியிட வேண்டியிருந்தது. <br />காலகதியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்டையிடம் அடிமை <br />போல மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துக் கொண்டிருந்தான். <br />நாடகத்தின் காட்சிகள் மாறுவது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவள் <br />நடிப்பு என்று கருதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள். <br />அவனும் நாடகத்தை முடித்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தான். <br />என்றபோதும் அவள் அவனுக்குப் பெரிதும் வேண்டியிருந்தாள். <br />உணவை ஒழிக்கமுடியுமா. <br />உறக்கத்தை விடமுடியுமா. <br />சுவாசத்தை எப்படி நிறுத்த. <br />இப்படியே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் அவன் அவளிடம் <br />சமரசம் செய்து கொண்டிருந்தான். <br />இனி சமரசத்துக்கு இடமில்லை என்று அவள் முடிவு செய்திருப்பது <br />போலப் பட்டது. <br />இவனுக்குமே அபத்தமாகத்தான் இருந்தது. <br />இதுவரை ஏதோ ஒரு பந்தத்தில் கட்டுண்டிருந்திருக்கிறோம். <br />எல்லாம் கழிந்துபோனதாகத் தோன்றுகிறது. <br />அவளுக்கு அவன் வேண்டியதில்லை. <br />ஒரு பரிவிலும் பற்றிலும்தாம் நடையேற்றி வைத்திருக்கிறாள். <br />பாவம் என்றுகூட இருக்கலாம். <br />காலம்காலமாக எல்லாப் பெண்களும் பாவம் பார்த்துத்தான் <br />ஆண்களை விட்டு வைத்திருக்கிறார்கள். <br />எந்த நேரமும் எளிதாகத் துண்டித்துவிடமுடியும் உறவை. <br />ஒரு பெண்ணை உண்மையான ஆண் ஒதுக்கிவிட்டுப் போகமுடியாது. <br />இது ஆணின் பலவீனமாக இருக்கலாம். <br />அது பெண்ணின் சக்தியாக இருக்கும். <br />இந்த மாயவளையில்தான் எல்லாரும் சிக்கிக் கிடக்கிறார்கள். <br />இவனும் விதிவிலக்கு இல்லை. <br />இதுதான் பெரியசோகம். <br />* * * *</p> <p> <br />அவளுக்குத் தெரியும் அவனை. <br />திரும்பத்திரும்பத் தேடி வருவான். <br />அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான். <br />அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது. <br />அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக் கூடியவள். <br />இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு. <br />இனி நடக்கவிருப்பது வினை. <br />விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன் <br />வினைக்கு என்ன ஆவான். <br />* * * *</p> <p> <br />தூங்கிக் கொண்டிருந்தாள். <br />தொட்டு எழுப்பலாம். <br />தயக்கமாக இருந்தது. <br />எப்படி தூங்கமுடிகிறது அவளுக்கு <br />அவன் தூக்கத்தைப் பறித்துவிட்டு. <br />அவள் அயர்ந்து உறங்குவதே அவன் அருகாமையில்தான். <br />நிம்மதியான உறக்கம் அவன் சார்ந்தது.</p> <p>* * * *</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-51539786881104176052010-02-09T09:32:00.000-08:002010-02-15T03:17:04.464-08:00அம்முலு -லா.ச.ரா<blockquote> <p><strong>லா.ச.ராமாமிருதம்</strong></p> </blockquote> <p>அம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக்கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந்தால்தானே ஆனநேரம் தெரியும் ?</p> <p>அப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னீரடுப்பை மூட்டி, தாமிரம் பளபளக்கத் தேய்த்து செம்மண் பூசிய வென்னீர்த் தவலையை அடுப்பில் ஏற்றினாள். பிறகு எண்ணெய் தேய்த்துக் கொண்டாள். அளகபாரத்தில் அங்கங்கே வெள்ளி சுடர்விட்டது.</p> <p><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S3GcOYnW30I/AAAAAAAAFl0/NYRn6bWl1GI/s1600-h/Mystic%2BGrove%2B07%2B72dpi%5B6%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="" border="0" alt="" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S3GcPpD8cWI/AAAAAAAAFl4/cwzFQ0GIG0U/Mystic%2BGrove%2B07%2B72dpi_thumb%5B4%5D.jpg?imgmax=800" width="373" height="275" /></a> </p> <p>வேறு யாராவது, வெற்றிலை மடித்துக் கொடுத்து, குங்குமமிட்டு, 'கெளரி கல்யாணம் ' பாடி தலையில் ஒரு கை எண்ணெய் வைத்தால் அவளுக்கு இஷ்டம் தான். ஆனால் மன்னி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பக்ஷணமெல்லாம் அம்முலுதான் பண்ணினாள். ஆனால் நேற்று முழுக்க சற்று உளையக் காரியம் தான். இப்போ போய், நேரமாச்சுன்னு அண்ணா அறைக்கதவைத் தட்டி எப்படி எழுப்புவது ?</p> <p>எதற்கும் ஸ்னானம் பண்ணிவிட்டு இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் போட்டு விட்டு வந்தால், மன்னியையும் குழந்தைகளையும் எழுப்பச் சரியாயிருக்கும்.</p> <p>முழுகிவிட்டு வந்து கண்ணாடி எதிரில் நின்றாள். அவள் நிறம் உற்ற சிவப்பைச் சேர்ந்ததல்ல; வெளுப்புமல்ல. இரண்டும் கலந்தவொரு பொன்னிறம், முகத்தில் காலத்தின் வடுக்களோ, வயதின் கோளாறுகளோ இல்லை. இன்னமும் பத்து வருஷங்களானாலும் அவளால் இப்படியே இருக்கமுடியுமோ என்னவோ ? புன்னகையில் இடது கன்னம் குழிந்தது.</p> <p>குழந்தை மாதிரி கையைக் கொட்டிச் சிரித்துக் கொண்டே ஓடிப்போய் அண்ணாவின் அறைக் கதவைத் தட்டினாள்.</p> <p>'மன்னி ' மன்னி ' '</p> <p>'ஊம்-- ?ஆ-- ? 'உள்ளிருந்து கொட்டாவிகள் கிளம்பின.</p> <p>'மன்னி ' -- தீபாவளி வந்துடுத்து, எழுந்திரு ' '</p> <p>'இப்போத்தானே உடம்பை சாய்ச்சேன் ' ' மதுரம் இன்னொரு கொட்டாவி விட்டாள்.</p> <p>'இதென்ன அக்கிரமம் ' பாதிராத்திரி ஒண்ணரை மணிக்கே தீபாவளி வந்து விடுமா என்ன ? ' என்று அவள் அகமுடையான் சாப்பிட மறந்தாலும், கையில் கட்டிக் கொள்ள மறக்காத கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.</p> <p>'பம்பாயெல்லாம் ராத்திரி முழுக்கவே தீபாவளி தான் ' என்றாள் மதுரம்.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S3GcQRoEMxI/AAAAAAAAFl8/n4IcPG8IegY/s1600-h/18120731%5B26%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="18120731" border="0" alt="18120731" align="right" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S3GcRHcmPyI/AAAAAAAAFmA/PlGMgAfPyzc/18120731_thumb%5B24%5D.jpg?imgmax=800" width="180" height="240" /></a> 'உங்கள் அண்ணாவாத்துப் பெருமை இங்கே வேண்டாம். இந்தப் பக்கமெல்லாம் விடிய இரண்டு நாழிக்குத்தான் தீபாவளி. அதோ அம்முலு கதவையுடைக்க ஆரம்பித்து விட்டாள். சொன்னாலும் கேட்காது. மரியாதையாய் எழுந்து நீ வெளியே போய்விடு. நான் இன்னும் நாலு இன்னும் நாலு மணி நேரமாவது தூங்கணும். '</p> <p>'விடிஞ்சா அமாவாசை. தர்ப்பணமுண்டு. தெரியுமோன்னோ ? '</p> <p>'தர்ப்பணம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இட்டிலி முன்னாள் ஆகட்டும் ' என்று அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.</p> <p>'தூங்கவிடமாட்டேங்கறாளே பாவி கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தானும் தூங்கமாட்டேன் என்கிறாள் ' என்று உரக்கத் திட்டிக் கொண்டே, மதுரம் கதவைத் திறந்தாள்.</p> <p>அம்முலு எதிரே நின்றாள். அவள் மனதில் பொங்கி வழியும் தீபாவளிக் கொந்தளிப்பில், மன்னியின் முகச் சுளிப்புக் கூட தெரியவில்லை.</p> <p>'மன்னி ' மன்னி ' தீபாவளி ' ' அம்முலு கையைக் கொட்டினாள். 'முன்னாலே உன்னைத் தூக்கி மணையில் வைக்கலாம் வா ' ' முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு மதுரம் வென்னீருள் அறைப்பக்கம் சென்றாள்.</p> <p>'அடே வாசு ' அடே மணி ' சீனா ' கமலம் ' எல்லோரும் எழுந்திருங்கோ தீபாவளி ' தீபாவளி ' '</p> <p>'இந்தச் செவிடு பண்ணற ரகளையைப் பாரு ' என்று மாடியில் படுத்திருந்த மதுரத்தின் தம்பி பாலு இரைந்தான்.</p> <p>'என்னப்பா இப்படி கத்தறே ' காதிலே விழப்போகிறது. '</p> <p>பாலுவின் நண்பன் பாஸ்கரன், பாலுவின் அழைப்பின் பேரில் தீபாவளிக்காக வந்திருந்தான். அவன் பெற்றோர்கள் வெளியூரில் இருந்தனர். இந்த ஒரு நாளைக்காக அவ்வளவு தூரம் எங்கே போவது ?</p> <p>'கவலையே படாதே. அவள் காதில் குண்டு போட்டாலும், விழாது. படுசெவி. ஐயையோ, இந்த வீட்டில் நாங்கள் பேசுவதெல்லாம் அம்முலுவுக்குக் காது கேட்குமென்றிருந்தால், எங்கள் அத்தனை பேருக்கும் நாக்கு இழுத்து விடவேண்டியதுதான் ' '</p> <p>'கெளரீ கலியாணம் வைபோகமே.... '</p> <p>'யாரப்பா அது ? குரல் 'ஜம்மென்று இருக்கிறதே ' கம்பீரமா, புருஷக் குரல் மாதிரி ' '</p> <p>'யாரு, எல்லாம் செவிடாம்பாள் தான் ' '</p> <p>'குரலில் என்ன சுத்தம் ' ஆனால் அவள் பாடுவது அவளுக்கே கேட்காதல்லவா ? '</p> <p>'வாசுதேவ தவபாலா -- அரசகுல காலா.... '</p> <p>அம்முலுவின் குரல் கணீரென இயற்கையான காத்திரம் படைத்து நல்ல கணகணப்புடன் எழும்பி மலையருவி போல் வீட்டை நிறைத்தது. நட்டா முட்டியாய், தாயின் வாய்வழி கேட்டு நறுக்காய் நாலு உருப்படிகள் தான் அவளுக்குத் தெரியும். அவைகளும் அவளுக்குக் காது கேட்காது.</p> <p>உள்ளே, ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு தலைமேல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.</p> <p>பாஸ்கரனும் பாலுவும் கீழிறங்கி வருகையில், குழந்தைகளெல்லாம் நீராடிவிட்டு எண்ணெய் பிசுக்கு உலருவதற்காகப் பழந்துணிகளைக் கட்டிக் கொண்டு மத்தாப்புக்களைக் கொளுத்திக் காண்பித்துக் கொண்டிருந்தன. அம்முலு கைகுழந்தையை முழங்காலில் போட்டுக்கொண்டு, எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள். இன்னமும் சீக்காய் தேய்க்கும் கட்டம் வரவில்லையாதலால் பாப்பா தலையை தூக்கித் தூக்கி அவளையே பார்த்து பொக்கை வாயைக் காட்டிக் கொக்கரித்தது.</p> <p>மதுரம் புதுத் துணிகளை எடுத்துவர மாடிக்குச் சென்றிருந்தாள். எப்பவுமே அப்படித்தான். உடல் நலுங்காத வேலைகளைத் தனக்குப் பங்கு போட்டுக் கொள்வதில் மதுரத்துக்கு அலாதி சாமர்த்தியமுண்டு. வரப்பிரசாதி என்றுகூட சொல்லலாம். சமையல் வீட்டுவேலைகளுக்கும், குழந்தைகளுக்குப் பணிவிடைக்கும் அம்முலுதான்.</p> <p>அம்முவின் அசாதாரண அழகைக் கண்டு பாஸ்கரன் பிரமித்துப் போனான். முட்கள் நடுவே சப்பாத்திப் பூவைப்போல், இத்தனை பேர்களுக்குமிடையில், அவள் அழகின் பூரிப்பில் ஒரு தனி ஒதுக்கம், வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கும் அவனால் அறிய முடிந்தது.</p> <p>ஆம், அவளே ஒரு தனி உலகத்திலிருந்தாள்; நித்திய மெளன உலகம். மற்றவர்கள் பேசினால், மெளனப் படங்களில் காண்பதுபோல, உதட்டின் அசைவிலும் உடல் ஆட்டத்திலும் சமிக்கையிலும் அவள் அர்த்தம் கண்டுகொள்ளணுமேயொழிய, வாய்ப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ள முடியாது.</p> <p>தினசரி, குழந்தை பெரியவர்களின் கூக்குரல்களும், சிறுஞ்சண்டை பெருஞ் சண்டைகளும், நாகரிகம் முற்ற முற்ற நாளடைவில் உலகத்தை நாசத்துக்கே இழுத்துச் செல்லும் தெருச் சந்தங்களும், சொல்வதெல்லாம் காது கேட்பதால் நேரும் கவலைகளும், அவள் உலகத்தில் புகுந்து, மற்றவர்களைச் செய்வது போல், உடலையும் மனதையும் துளைத்து உருக்கி அவளை உளுக்க வைக்கவில்லை. அவளை விட நாலு வயது மதுரம் இளையவள். ஆனால் மதுரத்திற்குக் கன்னத்துச்சத்தை ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் அலங்காரம், பூச்சு எல்லாம் அமர்களம்தான். தான் இன்னும் புது மெருகு அழியாமல் இருப்பதாகவே எண்ணம்.</p> <p>அம்முலுவின் முகத்தில் இன்னமும் பால் சொட்டிற்று ஆயினும் கூந்தலில் மாத்திரம் இருண்ட மேகத்தில் மின்னல் போல், ஒன்றிரண்டு வெள்ளி மயிர்கள் புரண்டன. அவள் பல்வேறு பிடுங்கல்களுக்கு ஆளாகவில்லை. கணப்புச் சட்டியில் தணல் மூடிய பொன்னுருண்டை போல் ஒரே ஒரு மஹோன்னதமான துயரத்தில் துலங்கிக் கொண்டிருந்தாள்.</p> <p>பாலுவையும் பாஸ்கரனையும் பார்த்துவிட்டுச் சட்டென எழுந்து, புன்னகை புரிந்த வண்ணம் குழந்தையை அலக்காய்த் தூக்கிக் கொண்டு வென்னீர் அறையுள் சென்றாள்.</p> <p>'உடம்பைப்பார், சரியான நாட்டுக் கட்டை ' ' என்றான் பாலு. பாஸ்கரனுக்குத் திடாரென்று பாலுவைக் கண்டு கரிப்பு எடுத்தது.</p> <p>'என்ன முழிக்கிறாய் ? நாட்டுக் கட்டையென்றால் எல்லா விதத்திலும் நாட்டுக் கட்டைதான். எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாம் கைநாட்டுதான். 'இந்த இடது கைப் பெருவிரல் குறி செவிடாம்பாள் -- இல்லை--அம்முலு--இல்லை அலமேலு அம்மாளுடையது. ' 'இன்று முழுவதும் பற்றுப் பாத்திரங்களைத் தேய் அல்லது கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்று ' என்றால் செய்து கொண்டிருப்பாள். அதுவும் என் அக்காளுக்கு வேலை வாங்க சொல்லிக் கொடுக்கணுமா ? '</p> <p>அம்முலுவுக்கு, பாலு தன்னை ஏளனம் பண்ணுவதெல்லாம் தெரியாது. கொல்லைப் புறத்து முற்றத்தில் குழந்தையின் தலையைத் துவட்டிக் கொண்டே ஆகாயத்தை குழந்தைக்குச் சுட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.</p> <p>திடாரென்று ஒரு அவுட்டு வாணம் கிளம்பி ஆகாயத்தில் சீறிக் கொண்டே சென்று 'பட் 'டென்று வெடித்தது. அதனின்று நாலைந்து வர்ணங்களில், நஷத்திரக் கூட்டங்கள் உதிர்ந்து குடை கவிந்து அவிந்தன. ஆயினும் ஒரே ஒரு நீலப் பொறி மாத்திரம் அழியாது, வெகு தூரம் வானவெளியில் தனியே மிதந்து சென்றது. அதன் கதியைக் கண்ணுக்கெட்டிய வரை கவனித்த வண்ணம், அம்முலு அதிசயித்து நின்றாள்.</p> <p>அது கடைசியாய்க் கரியாய்த்தான் ஆயிற்றோ அல்லது நஷத்திரங்களுடன் கலந்துவிட்டதோ ? நிச்சயமாய்த் தெரியவில்லை.</p> <p>அம்முலு பெருமூச்செறிந்தாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.</p> <p>மதுரம் புதுத் துணிகளுக்குக் குங்குமம் தடவிக் கொசுவிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அவளைச் சுற்றி ஆரவாரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தசிவம் அறையை விட்டு வெளியே வந்து நின்று கையை முறித்து முதுகைச் சொரிந்து கொண்டிருந்தான்.</p> <p>'இந்தாடா வாசு, உனக்கு சொக்காய் வேஷ்டி; மணி, உனக்கு அரை நிஜார் சொக்காய்; சீனு, உனக்கு சொக்காய் வேஷ்டி; கமலுவுக்குப் பாவாடை ஜாக்கெட்; எனக்குப் புடவை ரவுக்கை; பாலு, உனக்கு உன் அத்திம்பேருக்கும் வேஷ்டி துண்டு-- '</p> <p>அம்முலு எல்லோருக்கும் பங்கீடு ஆவதைப் பார்த்துக் கொண்டு வாய் பேசாது தன் பங்கிற்காகக் காத்துக் கொண்டிருந்தாள் முகத்தில் ஆவல் ததும்ப. புன்சிரிப்புடன் அப்படி அவள் நின்றது, அப்பா ஆபீஸிலிருந்து வருகையில் வாங்கி வந்த பொட்டலத்தைப் பிரிக்கக் காத்துக்கொண்டிருந்த குழந்தை மாதிரியிருந்தது.</p> <p>திடாரென்று இம்சையான மெளனம் அங்கு தேங்கியது.</p> <p>அம்முலுவை அவர்கள் அடியோடு மறந்து விட்டார்கள். பாஸ்கரனுக்கு முகம் திகுதிகு என்று எரிந்தது. கண்ணுக்கெதிரில், இருள் தூலங்கள், கூட்டானிட்டாற் போல், ஒன்றன்பின் ஒன்று குறுக்கே பாய்ந்து சென்றன.</p> <p>இங்கு நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ?</p> <p>இந்த வீடே காடு மாதிரி இருந்ததேயொழிய வீடாய் இல்லை. அவரவர் துணியை அவரவர் பிய்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் மாமிசத்துண்டை முன்னங்கால்களுக்கிடையில் பதுக்கிக்கொண்டு ஒன்றுக்கொன்று 'உர்--ர்-- ' என்று உறுமிக்கொண்டிருக்கும் மிருகங்கள்....</p> <p>அம்முலு--</p> <p>ஆனந்தசிவத்தின் முகத்தில் அசடு தட்டிற்று. போன தீபாவளிக்கு என்ன பண்ணினானோ, அல்லது இந்த தீபாவளிக்குப் பாஸ்கரனில்லாவிட்டால் என்ன சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்திருப்பானோ ? இருந்தாலும் மூணாம் மனிதனுக்கெதிரில்..... மதுரத்தைப் பார்த்துக் கடுகடுவென விழித்தான். மதுரம் மென்று விழுங்கினாள்.</p> <p>'எல்லாம் ஏகப்பட்ட செலவாயிடுத்து, நான் என்ன பண்றது ? உள்ளே என் கலியாணப் புடவை இருக்கு. வேணுமானால்... '</p> <p>ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு சீறினான். கொண்டு வா அதை இல்லை, இவளை அழைத்துக் கொண்டு போய்க் கொடு -- என்ன ஸார், பாருங்கோ இந்த பொம்மனாட்டிகளை ' நமக்கு இவர்களோடு கடைக்குப் போகப் பொழுது இல்லையே என்று காசை இவர்கள் கிட்டேவிட்டால் இப்படித்தான். தன் காரியம் தன் கணக்குத்தான்-- '</p> <p>Damn you ' உங்களைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரிய வேண்டாம். இங்கே நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ? Damn you, Damn பாலு Damn all of you '</p> <p>பட்டுப் புடவையுடன் அம்முலு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள். சுயம்வர மண்டபத்திற்கு வந்த ராஜகுமாரி மாதிரியிருந்தாள் அவள் பின்னால் மதுரம், புதுப் புடவையைக் கட்டியும், சோபையிழந்து, தாதி மாதிரி.</p> <p>அம்முலு வந்து அண்ணனை நமஸ்கரித்தாள்.</p> <p>ஆனந்தசிவத்துக்கு தொண்டையை என்னவோ பண்ணிற்று. விழிகளில் கண்ணீர் விளும்பு கட்டியது. தொண்டையைப் பலமாய்க் கனைத்துக்கொண்டு ஸ்னானத்திற்குச் சரேலென்று சென்றான்.</p> <p>அம்முலு மன்னியைச் சேவித்துக்கொண்டாள். மதுரம் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, 'தீர்க்க சுமங்கலீ பவா ' என்று ஆசிர்வதித்தாள். ஆசி சாபம்போல் ஒலித்தது.</p> <p>பாஸ்கரனுக்கு, குளித்துவிட்டுப் படியேறுகையில் 'ஏண்டாப்பா இந்த வீட்டிற்கு வந்தோம் ' என்ற ஒரே எண்ணம், இசைத்தட்டில் கீறல் விழுந்தாற்போல், திரும்பத் திரும்ப அதே எண்ணம், இடம் தூக்கி எடுத்து விடுவார் இன்றி, நெஞ்சில் தவித்தது.</p> <p>மாடியில் ஆனந்தசிவம், மதுரத்திற்குப் பட்டாசு சுடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐந்து பெற்றும் இன்னமும் ஆசை விடவில்லை. அவளுக்கும் பட்டாசுக்குப் பயப்பட ஆசைவிடவில்லை.</p> <p>பாஸ்கரன் பாலு அறைக்குச் சென்றான். பாலு ஒரு சோமாசியை அப்படியே முழுசாய் விழுங்க முயன்று கொண்டிருந்தான்.</p> <p>'அம்முலுவின் கணவன் எங்கே ? ' என்று பாஸ்கரன் ஏதோ பேச்சுவாக்கில் கேட்பதுபோல் கேட்டான்.</p> <p>'ஓ, அதுவா, அது ஒரு கதை. அவள் கணவன் எங்கே என்று ஒருத்தருக்கும் தெரியாது. அவன் ஒரு சங்கீத வித்வான். அப்படியென்றால் என்ன தெரியுமோல்லியோ ? தேங்காமூடி வித்வான். இஸ்பேட் ராஜா. ' வாய் நிறைய அடைத்துக் கொண்டு, கன்னம் உப்பக் குதப்புகையில், பாலுவின் விழிகள் பயங்கரமாய்ப் பிதுங்கின.</p> <p>'அக்காவுக்கும் அம்முலுவுக்கும் ஒரே பந்தலில்தான் கலியாணம் நடந்தது. பையன் கொஞ்சம் தறிதலை. படிப்பு வரவில்லை என்றுதான் பாட்டில் போட்டிருந்தார்கள் என்று பந்தல் பேச்சு. ஏதோ பொறுப்பையும் தலையில் கட்டிப் போட்டால், பையன் உருப்பட்டு விடுவான் என்று பெற்றவர்கள் எண்ணம். அதனால் ஒரு கலியாணத்தையும் பண்ணி வைத்தார்கள். '</p> <p>'அவனுக்கும் அம்முலுவுக்கும் ஒரு வயது வித்தியாசம் தானிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு பத்து வருஷத்திற்கு முந்திய கதை சொல்கிறேன். '</p> <p>'தலை தீபாவளி வந்தது. அதுவும் ஒன்றாகத்தான் நடந்தது. மாப்பிள்ளைப் பையனை வழக்கம்போல் கூப்பிட்டிருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு கல்லிழைத்த மோதிரத்தை சண்டை போட்டு வாங்கினார். வித்வான் அட்சரம் எண்ணி தாளம் போடுவது சபைக்கு எப்படித் தெரிகிறது ? '</p> <p>'எல்லாம் 'குஷி 'யாய்த்தானிருந்தது மாப்பிள்ளைப் பையன்கள் பட்டாசு சுட்டான்கள். பெண்டாட்டிகளுக்கு சுடக் கற்றுக் கொடுத்தான்கள் -- இல்லையா சேஷ்டையெல்லாம் ' '</p> <p>பாலு தாத்தா மாதிரி பேசினான்.</p> <p>'பொல்லாத வேளை வந்தால் யார் என்ன பண்ண முடியும் ? அம்முலு, பட்டாசு வெடித்து அப்பொழுதான் அணைந்து போன விளக்கை குனிந்து ஏற்றிக்கொண்டிருந்தாள். அம்முலு புதுப் புடவையும் புதுமணப் பெண்ணுமாய் விளக்கை ஏற்றுகையில் எப்படியிருந்திருப்பாள். அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்துக்கொள். '</p> <p>அவள் அகமுடையானுக்குத் திடாரென கும்மாளம் பிறந்து விட்டது. கல்யாணி ராகத்தின் உச்சஸ்தாயி ஸ்வரத்தை ஒரே மூச்சாய்ப் பிடித்துக் கொண்டு, இரண்டு கையிலும் ஓலைப் பட்டாசுகளை பக்கத்து விளக்கில் ஏற்றி அவள் முகத்துக்கெதிரே பிடித்தான்.</p> <p>'ப--டா--ர்-- '</p> <p>இரண்டு காதுகளையும் கெட்டியாப் பொத்திக் கொண்டு அம்முலு அப்படியே, குனிந்த தலை நிமிராது, குன்றி உட்கார்ந்து விட்டாள்.</p> <p>பையனுக்குக் கிலி பிடித்துவிட்டது. ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டோம் என்று தெரிந்து விட்டது இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்.</p> <p>'அம்முலு '---அம்முலு ' ' '</p> <p>அன்றிலிருந்து அம்முலுவுக்குக் காதே கேட்கவில்லை. திருப்பித் திருப்பி என்ன கேட்டாலும், 'நீளமாய் ஒரே சத்தம்தான் எனக்குக் கேட்கிறது -- யாரோ பாடறாளா ? ' என்பாள்.</p> <p>'என்ன நடந்தது ? எது நடந்தது ? மாப்பிள்ளை பையன் எங்கே ? '</p> <p>'மாப்பிள்ளைப் பையனாவது மண்ணாங்கட்டியாவது ' எண்ணெய் ஸ்னானம் பண்ணி, புது வேஷ்டியுடன் ஓடினவன்தான். இன்னமும் அகப்படப் போகிறான். இங்கு வந்தவனுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பியவனுமில்லை. ஆச்சு, பத்து வருஷங்களும் போச்சு. அவனைத் தேடாத இடமில்லை. அம்முலுவுக்குப் பண்ணாத வைத்தியமில்லை. ஒன்றும் பயனில்லை. காதும் போச்சு, கணவனும் போனான். வாழ்வும் போச்சு. '</p> <p>அதே ஏக்கத்தில் அம்முலுவின் தாயார் இறந்து விட்டாள். ஒரே பெண். அப்புறம் அம்முலுவுக்கு கதி ஆனந்தசிவம்தான்.</p> <p>அம்முலு மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அதை ஆராய எனக்கு யோக்யதையுமில்லை, தைரியமுமில்லை. அவள் தன் வாழ்க்கையின் சூன்யத்தில் தான் ஐக்கியமாகி விட்டாளோ, அல்லது இன்னமும் என்றாவது ஒரு நாள் அவள் கணவன் திரும்பி வருவான் என்னும் நம்பிக்கையில் தான் இன்னமும் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறாளோ ? '</p> <p>அறைக்கு வெளியே யாரோ போகும் அரவம் கேட்டது. பாஸ்கரன் எட்டிப் பார்த்தான்.</p> <p>அம்முலு புதுப்புடவை சரசரக்க வான வீதியில் மிதந்து சென்ற நீலப்பொறிபோல், அதிசயக் கனவு கண்டு இன்னும் அதனின்று விழித்தெழாத கண்களுடன், புன்னகை புரிந்த் வண்ணம் நிதானமாய் மாடிப்படி வழியாக கீழே போய்க் கொண்டிருந்தாள்</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-55682408468793431012010-02-07T09:17:00.000-08:002010-02-15T03:17:04.478-08:00தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்<blockquote> <p><td class="content"><b>எம்.வி. வெங்கட்ராம்</b></p> </blockquote> <p><span>கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும். <br /><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S271rleISfI/AAAAAAAAFk8/c0BwZGjfjDc/s1600-h/FatherandSon2%5B5%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="FatherandSon2" border="0" alt="FatherandSon2" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S271stiMx9I/AAAAAAAAFlA/CB7Qd6KXYHo/FatherandSon2_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="350" height="354" /></a> <br />என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், 'கலியாணம் ஆகாத பையன்; குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கலாம். 'காக்காயின் பொன் குஞ்சு' என்று பரிகாசம் செய்கிறவர்களும் இருப்பார்கள். என் மகனை நான் இகழ்ந்தால் 'பிள்ளையைப் பெறத் தெரிந்ததே தவிர, வளர்க்க தெரியவில்லையே, ஐயா' என்று என்னையே சாடுவார்கள். ஆகையால், பொதுவாக, அவனைப் பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடுகிறேன். <br /> <br />அவன் பெயர் சந்திரன்; என்னுடைய மூத்த மகன். வயது இருபத்திரெண்டு முடிந்துவிட்டது. சட்டப் பரீட்சையில் தேறி, பிராக்டீஸ் செய்யாமல் வீட்டோடு இருக்கிறான். என்னோடு வியாபாரத்தையும் நில புலங்களையும் கவனிக்கிறான். சட்டக் கல்லூரியில் சேரும்வரை வக்கீல் ஆக வேண்டும் என்று ஒரே ஆத்திரமும் ஆவலுமாக இருந்தான். கல்லூரியில் சேர்ந்ததும் அவனுக்குக் கதை எழுதும் பைத்தியம் பிடித்தது. படித்தபடியே கதைகளும் கட்டுரைகளும் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினான். (சில பல என்று கூடச் சொல்லலாம்) பத்திரிகைகளில் அவை வெளியாயின. வக்கீல் பட்டம் பெற்று வெளியே வந்ததும் அவனுக்கும் வக்கீல் தொழில் பிடிக்க வில்லை. பத்திரிகை நடத்துகிறேன் என்று என்னிடம் அனுமதி கேட்டான். அனுமதி கேட்பதென்ன, 'ஆரம்பிக்கட்டுமா?' என்று கேட்டான், ஆரம்பித்து விட்டான். அதுவும் ஒரு தொழில்தானே என்று நானும் பேசாமல் இருந்தேன். <br /> <br />அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் நான் குறுக்கிடுவதில்லை. அவன் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை. தவறு செய்யமாட்டான் என்று பத்திரிகை நடத்தப் பணம் கொடுத்தேன். 'ராகம்' என்ற அந்தப் பத்திரிகை அழகாகத்தான் இருந்தது. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அதை மரியாதையுடன் வரவேற்றன. அவை மலை உயரத்துக்கு என் மகனைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தியதைக் காண எனக்கு மிகவும் பெருமையாகத்தான் இருந்தது. <br /> <br />ஆறு மாதங்கள் கழித்துக் கணக்குப் பார்த்தேன், ஆறுமாத இலக்கியத்தின் விலை ஐயாயிரம் ரூபாய் என்று கணக்கு காட்டியது. எனக்குப் 'பக்' கென்றது. <br /> <br />அவனைக் கூப்பிட்டு, ''சந்திரா, பத்திரிகை நன்றாக நடக்கிறதா?'' என்று கேட்டேன். <br /> <br /><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S2726mkiRGI/AAAAAAAAFlE/upHYdF23Ntw/s1600-h/mv.%20venkatraman%5B26%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="mv. venkatraman" border="0" alt="mv. venkatraman" align="right" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S2727fa22cI/AAAAAAAAFlI/UD0tlKRluNY/mv.%20venkatraman_thumb%5B24%5D.jpg?imgmax=800" width="239" height="335" /></a> ''இதோ பாருங்கள் அப்பா'' என்று அன்று தபாலில் வந்த இருபது, முப்பது கடிதங்களை என்னிடம் நீட்டினான் அவன். <br /> <br />''அது சரி, கணக்குப் பார்த்தாயா?'' <br /> <br />''அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல'' என்றான் அவன் உணர்ச்சியோடு. <br /> <br />''லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங் களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன். <br /> <br />கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்?'' <br /> <br />''பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? 'ராகத்'துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?'' <br /> <br />''நீ கதை கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு எல்லாம் அனுப்பு. மார்க்கெட்டில் பெயர் உண்டாகிவிடும். பிறகு பத்திரிகை ஆரம்பம் செய், தொழில் எப்படி நடக்கிறது பார்,'' என்றேன் ஆறுதலுக்கு. <br /> <br />''இலக்கியம் வேறே, தொழில் வேறே; இலக்கியம் தொழில் ஆக முடியாது; சரி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, 'ராகம்' முடிந்துவிட்டது.'' <br /> <br />சொன்னபடியே செய்துவிட்டான் அவன். அவனுக்கு வருத்தமாக இருந்ததா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. என்னோடு வியாபாரத்தை கவனித்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து, பத்து இருபது என்று சம்பாதிக்கத் தொடங்கினான். <br /> <br />மொத்தத்தில், என் அபிப்பிராயத்தில், என் பையன் நல்லவன். என் சொல்லைத் தட்டமாட்டான் என்பதில் மட்டும் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏராளமாக மார்க்குகள் வாங்கித் தேறியதோடு, வருஷம் தவறாமல் நன்னடத்தைப் பரிசும் அவனுக்குத்தான் கிடைக்கும். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. சீட்டாட்டத்தில் ஜாதிப் பிரிவினை கூடத் தெரியாது. பெண்களுடன் சங்கோசம் இல்லாமல் பழகுவான். நானும் பயப்படாமல் பழகவிட்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லையே? ஆனால் அவன் வேலியைத் தாண்டியது கிடையாது. அப்படிப் போனதாக அபவாதம் கூட இல்லை. படித்த பையனின் லட்சணம் ஒன்றும் அவனிடம் காணோமே என்று நான் கூட ஆச்சரியப்படுவது உண்டு. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று எனக்கு அவன்மேல் குறை; எனக்கு கண்டிக்கத் தெரியவில்லை என்று என்மேல் அவனுக்கு குறை! அவனும் நானும் பழகுவதைப் பார்த்தால், அப்பனும் பிள்ளையுமாகத் தோன்றாது. இரண்டு நண்பர் களாகத்தான் தோன்றும். <br /> <br />இப்பேர்பட்ட பிள்ளை, கல்யாண விஷயத்தில் மட்டும் என்னிடம் மனம் விட்டுப் பேசாமல் மர்மமாக இருப்பதன் காரணம் எனக்கு பிடிபடவில்லை. அவன் பையன்; நாற்பது வயதில் கூட மணம் செய்து கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமி பெண்; அவனைக் கலியாணம் செய்து கொள்வதற்காகக் காத்திருக்கிறவள். அவளை ஊறுகாய் போட முடியுமா? <br /> <br />மகனுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் தகப்பனின் உரிமையை மறந்துவிட முடிகிறதா? நாள் ஆக ஆக எனக்கும் பொறுமை போய்விட்டது. அவனைக் கண்டித்துக் கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அதற்கு ஒரு நாளும் குறித்துக் கேட்டேன். <br /> <br />அன்று விடுமுறை நாள். காலையில் எனக்கு முன்னால் அவன் எங்கோ போய்விட்டான். மத்தியானம் சாப்பிட வரட்டும் என்று கோபமாக இருந்தேன்; ஆனால், இரவு ஏழு மணிக்கு, அதாவது நான் கோபித்துக் கொள்வதற்கு தயாராக இல்லாத ஒரு நேரத்தில் அவன் வந்து சேர்ந்தான். <br /> <br />கோபம், என் இயற்கைக்குப் பொருந்தாத ஓர் உணர்ச்சி. கோபம் வந்தால் முகம் கடுமையாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லாம் அவன் வரவில்லை. அவன் வந்தபோது நான் குருமூர்த்தியோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தேன். அவன் என் கடைசிப் பையன். வயது மூன்று இன்னும் பூர்த்தி ஆகவில்லை. <br /> <br />இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்? இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கொஞ்சம் உண்டு. நானும் அவளும் கட்டுப் பாடாகத்தான் இருந்தோம். நாங்கள் மனிதர்கள் தானே? கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தால் அதை மீறிவிட்டோம். பிறகு டாக்டரைப் பார்த்து அவள் நாலைந்து இஞ்செக்ஷன்கள் செய்து கொண்டோள்; ஏதோ மாத்திரைகள் கூட அவள் சாப்பிட்டதாக ஞாபகம். கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி. <br /> <br />'சுத்த பிண்டம்; கல்லைப் போட்டாலும் கலைக்க முடியாது, ஸார்' என்று பிறகு சொன்னார் ஜோஷியர். சுத்த பிண்டம் என்பதாலோ என்னவோ வீட்டில் உள்ள எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டு, குருமூர்த்தி பெரியவன் ஆகிவிட்டான். <br /> <br />சந்திரன் இரவு வீடு திரும்பிய சமயம் குருமூர்த்தி பென்சிலும் நோட்டுமாக எழுதிக் கொண்டிருந்தான்; நான் செலவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். <br /> <br />''என்னடா எழுதினே?'' <br /> <br />''மஞ்சள் ஓரணா,'' என்றான் குருமூர்த்தி. <br /> <br />''எழுது, சந்தனம் ஓரணா'' <br /> <br />''ஆயிட்டுது,'' <br /> <br />''பழம் ரெண்டனா'' <br /> <br />''எழுதிட்டேன்'' <br /> <br />''எல்லாம் என்ன ஆச்சு?'' <br /> <br />''ரெண்டனா'' <br /> <br />முட்டை முட்டையாகக் கிறுக்கி, அவன் கணக்கு எழுதுவதைப் பார்த்து சந்திரன் சிரித்தபோதுதான் அவன் வந்ததை நான் கவனித்தேன். உடனே, கோபம் வந்தது. குருமூர்த்தியை அப்படியே விட்டு விட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தேன். <br /> <br />''ஆசிரியர் வந்தாயிற்றா? காலையிலிருந்து எங்கே மறைந்துவிட்டீர்கள்?'' என்றேன், என் குரலில் கொஞ்சம் கடுமை இருந்ததை நானே கண்டேன். <br /> <br />அவன் அதை லட்சியம் செய்ததாகத் தெரிய வில்லை. <br /> <br />''ஏன் அப்பா, ஏதாவது அவசர ஜோலி இருந்ததா? மகாலட்சுமி வீட்டுக்குப் போனேன். ரகுராமன் வந்தார். மகாலட்சுமி அங்கேயே சாப்பிடச் சொல்லிவிட்டாள். பேசிக் கொண்டே இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.'' <br /> <br />மகாலட்சுமியின் பெயரைக் கேட்டதும் நான் வரவழைத்த கோபம் எங்கோ போய்விட்டது. <br /> <br />''உனக்கு என்ன வயது தெரியுமா?'' <br /> <br />''இருபத்திரண்டு'' என்றான் அவன் சிரித்தபடி. <br /> <br />''இவ்வளவு வயசாகியும் இந்த குருமூர்த்திக்கு இருக்கிற தெளிவு கூட உன்னிடம் காணோமே? வீட்டுக்கு வந்ததும் செலவுக் கணக்கு கேட்கிறான். நீ'' <br /> <br />''நான்தான் பத்திரிகையை எப்போதோ நிறுத்தி விட்டேனே'' <br /> <br />''அதை நான் சொல்லவில்லை. எந்த விஷயத்திலும் ஒரு தெளிவு வேண்டும் என்கிறேன். வயது வந்த ஒரு பையனும் ஒரு பெண்ணும் நாள் முழுவதும் கதை பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை யாராவது கண்டால் என்ன நினைப்பார்கள்?'' <br /> <br />''பிறத்தியார் ஒன்று சொல்வார்கள் என்பதற்காக நமக்குப் பிடித்ததைச் செய்யாமல் இருக்க முடியுமா அப்பா?'' <br /> <br />''அப்படியானால் மகாலட்சுமி உன் மனசுக்குப் பிடிக்கிறாள் என்று சொல்லு'' <br /> <br />''பிடிக்காமல் என்ன அப்பா?'' <br /> <br />''அப்படியானால் முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க லாமா?'' <br /> <br />''யாருக்கு?'' <br /> <br />''என்னடா அது? மகாலட்சுமிக்குத்தான்'' <br /> <br />''மகாலட்சுமிக்கா? என்னிடம் கூட சொல்லாமல் வரன் பார்த்துவிட்டீர்களா?'' <br /> <br />''என்ன அது, என்ன அது, வரன் பார்த்து விட்டீர்களாவா! என்னடா, புதுசாய் பேசுகிறாய்? உனக்காகவே பிறந்து வளருகிறாள், வேறு வரன் எதுக்காகத் தேடுவது?'' <br /> <br />''வேண்டாம்'' <br /> <br />''அதுதானே பார்த்தேன்; வருகிற பங்குனியில் நாள் பார்த்துவிடட்டுமா?'' <br /> <br />''வேண்டாம் என்றேனே அப்பா?'' <br /> <br />''எப்போது வேண்டாம் என்றாய்? நாள் பார்க்காமல் சீர்திருத்த மணம் செய்து கொள்ளப் போகிறாயா? இதற்காகத்தான் ஆகட்டும், ஆகட்டும் என்றாயா? எனக்கு என்னடா இதில்? மகாலட்சுமியும் சரி என்றால் எனக்கு சம்மதம். இதைச் சொல்லவா இவ்வளவு தயங்கினாய்?'' <br /> <br />''அது இல்லை அப்பா, மகாலட்சுமியை வேண்டாம் என்றேன்.'' <br /> <br />''ஆரம்பித்து விட்டாயே! என்ன விளையாட்டு இது? இரண்டு பேரும் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறீர்கள். கலியாணப் பேச்சில் மகாலட்சுமியைப் பற்றி விளையாடாதே, சொல்லிவிட்டேன்.'' <br /> <br />''நிஜமாகத்தான் சொல்லுகிறேன்'' <br /> <br />''ஏன், கறுப்பாயிருக்கிறாள் என்பதாலா?'' <br /> <br />''அதுக்காக இல்லை'' <br /> <br />''ஒண்ணரைக் கண் என்றா?'' <br /> <br />''வந்து அப்பா'' <br /> <br />''சதா நாட்டியம் ஆடுகிறாளே, அதனாலா?'' <br /> <br />''நான் சொல்ல வந்தது''</span></td> </tr><tr><td style="padding-bottom: 10px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 10px" align="center"><!--<img src="BannerImages/bannersample.gif" border="0">--></td></tr><tr><td class="content"><span id="lblContent2">''அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்று தானே சொல்லப் போகிறாய்?'' <br /> <br />''நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டே போனால் நான் எப்போது பேசுவது?'' <br /> <br />''மனசுக்குப் பிடிக்கிறது என்று கலியாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா, போடா, கலியாணம் என்றால் இவ்வளவு வெட்கமா? போ, போ நாள் வைத்து விட்டுச் சொல்லி விடுகிறேன்.'' <br /> <br />''இரண்டு நாள் தவணை கொடுங்கள் அப்பா. முடிவாகச் சொல்லிவிடுகிறேன்'' <br /> <br />''நல்ல பிள்ளை! உனக்கு இவ்வளவு தூரம் இடம் கொடுத்துப் பழகியது பிசகு என்று கூட தோன்றுகிறது.'' <br /> <br />''அப்பா, பிறகு உங்களுக்குத் தெரியும்'' <br /> <br />''எனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு எல்லாம் தெரியும். அப்படித்தானே? வக்கீலுக்குப் படித்து, பத்திரிகை நடத்திவிட்டால்'' <br /> <br />''அப்பா, ஒரு நியூஸ். நாளைக்கு ரகுராமனும் மகாலட்சுமியும் இங்கே சாப்பிட வருகிறார்கள். நீங்களும் நானும் கடைக்குப் போக வேண்டாம்.'' <br /> <br />''யார் இந்த ரகுராமன்?'' <br /> <br />''அவர் ஒரு கவி; ரொம்ப நல்லவர்'' <br /> <br />''கதாசிரியனாலேயே வீடு இவ்வளவு அமளிப் படுகிறது; கவி நல்லவராம். என்ன வயசு அவருக்கு? மகாலட்சுமியோடு அவருக்கு என்ன வேலை?'' <br /> <br />''அவருக்கா? ஐம்பது, ஐம்பத்திரண்டு இருக்கும்'' <br /> <br />''சரி, இரண்டு நாளில் உன் சம்மதத்தைச் சொல்லிவிட வேண்டும்'' <br /> <br />அவன் அங்கே இருந்தால்தானே நான் பேச முடியும்? <br /> <br />எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை மணப்பதற்கு, தவணை சொல்லும் பையனைப் பற்றி என்ன சொல்லுவது? <br /> <br />மகாலட்சுமியை நான் சாதாரணப் பெண் என்று சொல்ல மாட்டேன். நல்ல சிவப்பு; களையான முகம்; எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிப்பு; சிறந்த சங்கீத ஞானம்; பாடுவதற்கு இனிமையான குரல்; நாட்டியமாடத் தெரியாது; தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் நல்ல பண்டித்தியம்; பெட்டி போல் அடக்கமான பெண், வீட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி; பெண்ணா அவள்? வரதட்சிணை நான் எதிர்பார்க்கவில்லை. மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தாலே போதும் என்பது என் ஆசை. <br /> <br />இந்த ஆசைக்கு மற்றோர் அடிப்படையான காரணமும் உண்டு. நானும் அவள் தகப்பனாரும் அடி வயது முதல் சினேகிதர்கள். எங்கள் இருவருடைய குடும்பங்களும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தன. தெய்வத்தின் தயவில், இரண்டு குடும்பங்களுக்கும் 'இல்லை' என்று ஏங்கும்படியான நிலைமை இல்லை. இந்த அமைதியில் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மகாலட்சுமியின் தந்தை திடீரென்று மாரடைப்பு என்று வியாஜம்-தலை¨யைக் கீழே போட்டுவிட்டார். உயிர் பிரியும் தறுவாயில்-தம் குடும்பத்தை சம்ரட்சிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டார். அவருடைய மனைவி உள்பட அந்தக் குடும்பம் பூராவுமே என்னைக் கலந்து கொள்ளாமல் ஒன்றும் செய்வதில்லை. மகாலட்சுமி நான் சொல்வதற்கு மாறாக ஒரு வார்த்தை பேச மாட்டாள். <br /> <br />அவள் தகப்பனார் உயிரோடு இருந்தபோதே இரு குடும்பங்களுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் ஏற்பட வேண்டும் என்கிற ஆவல் அவருக்கும் எனக்கும் இருந்தது. அதற்கு ஏற்பச் சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டபோது நாங்கள் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டோம். 'இவனுக்கு அவள்; இவளுக்கு அவன்' என்று முடிச்சு போட்டிருந்தோம். <br /> <br />இப்போது, இந்நிலையில் சந்திரன் அவளை மணப்பதற்கு சால்ஜாப்பு சொல்லி வந்ததோடு, தவணையும் கேட்பதன் மர்மம் எனக்கு புரியவில்லை. <br /> <br />'சிறிது காலம் போனால் சரியாகிவிடுவான். இருவரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறார்கள்? எதற்காகவோ தயங்குகிறான், பின்னால் ஒப்புக் கொண்டுவிடுவான்' என்று சமாதானம் செய்து கொண்டு படுத்தேன். <br /> <br />காலையில் மகாலட்சுமியின் முகத்தில் கண் விழித்தேன். <br /> <br />''வா அம்மா'' என்று வெளியில் வந்தபோது சந்திரனோடு ஓர் இளையவன் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன். <br /> <br />''அப்பா, நான் சொன்னேனே; இவர்தான் ரகுராமன்...'' <br /> <br />''இவரா? ஐம்பது வயது என்றாயே, இருபது இருபத்திரண்டுதான் இருக்கும்போல்...'' <br /> <br />''வேடிக்கையாகச் சொன்னேன்!'' <br /> <br />ரகுராமன் கவியாகத் தோன்றவில்லை. மிகவும் அடக்கமாக இருந்தான்; அழகாய் பேசினான். <br /> <br />அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது. <br /> <br />மாலையில் முதலில் மகாலட்சுமி விடை பெற்றுக் கொண்டாள். பிறகு ரகுராமன் கிளம்பினான். இருவரும் போனபின் சந்திரன் என்னைச் சூழ்ந்து கொண்டான். <br /> <br />''அப்பா, ரகுராமன் எப்படி?'' என்றான். <br /> <br />''எப்படி என்றால்?'' <br /> <br />''அவனைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?'' <br /> <br />''ஏதாவது சிபாரிசுக் கடிதம் வேண்டுமோ?'' <br /> <br />''காலேஜ் லெக்சரர் வேலை போதும் அவனுக்கு. ரகு நல்ல பையனா, கெட்ட பையனா?'' <br /> <br />''என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான்'' என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக. <br /> <br />''அப்படிச் சொல்லுங்க அப்பா!'' என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான். <br /> <br />''இது என்ன அற்ப சந்தோஷம்?'' <br /> <br />''ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.'' <br /> <br />''நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே'' என்றேன் சிரித்துக்கொண்டே. <br /> <br />''இருக்கிறதே!'' <br /> <br />''பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை...'' <br /> <br />''பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!'' <br /> <br />''நான் அப்போதுதான் முதன் முறையாக அதிர்ச்சி எனப்படும் உணர்ச்சிக்கு வசப்பட்டேன். சில நிமிஷங்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. <br /> <br />''என்னடா சொல்லுகிறாய்'' <br /> <br />''அப்பா, ஆத்திரப்படக்கூடாது.'' <br /> <br />''எனக்கு ஆத்திரப்படத் தெரியவில்லை என்று தானே நீ என்னை இப்படி ஹிம்சிக்கிறாய்? மகாலட்சுமியை நான் மருமகளாக அடைய.'' <br /> <br />''கொஞ்சம் பொறுங்கள். உங்கள் வார்த்தையை நான் எப்போதாவது தட்டியது உண்டா? நான் சொல்வதில் தப்பு இருந்தால் சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன்.'' <br /> <br />''என்னடா சொல்லப் போகிறாய்? இப்படி எல்லாம் பழகிவிட்டு, இது என்ன முடிவடா திடீரென்று? <br /> <br />''அப்பா மகாலட்சுமி நீங்கள் சொல்வதுபோல், மகாலட்சுமி மட்டும் அல்ல, ஸரஸ்வதியும்கூட வயது வந்த பிறகும் நான் அவளுடன் இவ்வளவு அதிகமாய்ப் பழகினேன் என்றால்... அதற்குக் காரணத்தைச் சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.'' <br /> <br />அவன் முகம் சுண்டுவதைக் கவனித்தேன். அதை ஒருபோதும் என்னால் சகிக்க முடியாது. என்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதலாகப் பேசினேன். <br /> <br />''சும்மாச் சொல்லு; என்னிடம் சொல்லுவதற்குமா வெட்கம்?'' <br /> <br />மகாலட்சுமி படித்தவள் என்று மட்டும் நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு அவள் அப்படித் தோன்றவில்லை. எனக்கு அவள் ஒரு பிறவி மேதையாகத் தோன்றுகிறாள். இல்லாவிட்டால், இந்த வயதில் அவளுக்கு இவ்வளவு ஞானம் இருக்க நியாயம் இல்லை. நான் சட்டம் படித்தேன்; பத்திரிகை நடத்தினேன். ரொம்பத் தெரிந்தவன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்குத் தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு... எனக்கு மலைப்புத் தட்டுகிறது. அப்பா, சொல்ல வெட்கமாக இருக்கிறது; சொல்லா விட்டால் உங்களுக்கு வருத்தமாயிருக்கும்; அதனால் சொல்லுகிறேன். நான் அவளை அடிக்கடி பார்க்கப்போவது அவளிடம் ஏதாவது கற்கலாம் என்றுதான். அவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்... எனக்கு ஏன் நீங்கள் ஸமஸ்கிருதம் சொல்லித் தரவில்லை?'' <br /> <br />''தமிழையாவது நீ ஒழுங்காய்ப் படித்திருக்கலாமே?'' <br /> <br />''சரி, அப்பா; ரகுவைப்பற்றி யோசித்து முடிவு சொல்லுங்கள்.'' <br /> <br />சொல்லிவிட்டு எங்கோ வெளியில் போனான் அவன். இந்தப் பிள்ளையைப்பற்றி நான் என்ன சொல்வது? அழகு இல்லை, படிப்பு இல்லை. ஆரோக்கியம் இல்லை, வரதட்சிணை இல்லை என்பதுபோன்ற காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிப்பது உலகு வழக்கு. தனக்குக் கல்வி குறைவு என்று சொல்லிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறான் என் பிள்ளை. 'என்னைவிட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதுபோல், என்று அவன் சொன்ன பிறகு அவளையே மணம் புரியும்படி அவனை நான் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? <br /> <br />இரவு சுமார் பத்து மணிக்கு அவன் மறுபடியும் என்னிடம் வந்தான். <br /> <br />''என்மேல் கோபமா அப்பா?'' <br /> <br />''உன்மேல் எனக்கு எப்போது கோபம் வந்தது? நீ சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. நீ சொல்வது போலவே செய்யலாம். மகாலட்சுமியின் அபிப்பிராயம் தெரியாமல் என்ன செய்வது?'' <br /> <br />''அவளையும் ஜாடையாகக் கேட்டேன். நீங்கள் பார்த்து முடிவு செய்தால் சரி என்கிறாள்.'' <br /> <br />''அட பாவி! அவள் சம்மதமும் வாங்கிவிட்டாயா?'' <br /> <br />சிறிது நேரம் அவன் மெளனமாக உட்கார்ந்திருந்தான். <br /> <br />''உனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லப்போகிறாயா, அடுத்தபடி?'' என்றேன் அவன் தயங்குவதைக் கண்டு. <br /> <br />''என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்வளவுதானா? அப்படியெல்லாம் நான் சொல் வேனா அப்பா? உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் பார்த்து ஒரு பெண் முடிவு செய்யுங்கள்.'' <br /> <br />''அப்புறம் ஆடுபோல் ஒரு பெண் வாங்கி மாடு போல் ஒரு பையனை விற்றார் எங்கள் அப்பா என்று கதை எழுதுவதற்கா?'' <br /> <br />''கலியாண விஷயம் எனக்கு என்ன தெரியும்? உங்கள் திருப்திக்குச் செய்யும் முடிவு என் நன்மைக்குத் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.'' <br /> <br />குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந் தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை. <br /> <br />இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.</span></p> <p><span>****</span>*</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-73503456382430635802010-02-04T09:07:00.000-08:002010-02-15T03:17:04.490-08:00ஐந்திணை- விக்ரமாதித்யன் நம்பி<blockquote> <h5>விக்ரமாதித்யன் நம்பி</h5> </blockquote> <h5><a href="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S2r-0zrcvWI/AAAAAAAAFkE/mg5XGINdMz0/s1600-h/nambi2318.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="nambi23" border="0" alt="nambi23" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S2r-1466kRI/AAAAAAAAFkI/yzujnNE28us/nambi23_thumb16.jpg?imgmax=800" width="337" height="423" /></a> </h5> <h5>குறிஞ்சி</h5> <p>கண்ணில் தெரிவதெல்லாம் <br />மலை முகடுகள் <br />ஒரு <br />நறுஞ்சுனை <br />தொலை <br />தூரத்தில் சிற்றாறு <br />மரம் செடி கொடிகளில் <br />கனி சுமந்த கிளைகள் <br />உச்சியில் <br />கொம்புத் தேன் கூடுகள் <br />அதிசயமாய் <br />துலங்கும் அருவிகள் <br />மெளனமே <br />இருப்பான சித்தர்கள் <br />முன்னை <br />பழங்குடிகள் <br />வானம் <br />தொடும் மஞ்சுக்கூட்டம் <br />தண்ணீர் பட்டுத் தெறிக்கும் <br />தேக்குகள் மூங்கில்கள் <br />பக்கத்திலேயே <br />பாக்குமரங்களும் <br />ஏலக்கொடிகளில் <br />எச்சமாய் மணம் <br />சிந்திக் கிடக்கும் <br />மலை முந்திரி <br />படர்ந்து தழுவும் <br />மிளகுக் கொடிகள் <br />வேரில் பழுத்துக் <br />கிடக்கும் பலாக்கள் <br />தேன் கதலிகள் <br />வேட்டுவ வள்ளியின் <br />விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும் <br />யாசித்து நிற்கும் வடிவேலன் <br />* * *</p> <h5> <br />முல்லை</h5> <p>காதைக் குடையும் <br />சிள்வண்டுகள் சப்தம் <br />பார்க்கும் இடமெல்லாம் <br />பச்சை நிறக்காடு <br />இருள் நிறைத்திருக்கும் <br />தாவரங்கள் <br />உலாவும் <br />உயிர்பிராணிகள் <br />குழிபறித்து விளையாடும் <br />குறுமுயல்கள் <br />காற்று கொண்டுவரும் <br />செண்பக மணம் <br />கொடிவலைப் பின்னல்களில் <br />காட்டுக் குயில்கள் <br />ஆகாயம் மறைத்துக் <br />கிடக்கும் இலையடர்த்தி <br />பூமியே தெரியவிடாத <br />புதர்கள் புல்காடுகள் <br />கலகலப்பாய்த் திரியும் <br />காடை கெளதாரிகள் மலையணில்கள் <br />வழிமறிக்கப் பார்க்கும் <br />நரிக்கூட்டம் <br />அலைபாயும் மயில்கள் <br />மிரண்டோடும் மான்ஜாதி <br />ஆடுமாடுகளுக்கு <br />அற்றுப்போகாத இரை <br />ஆயர்கள் மனம் போல <br />அழகுபட்ட முல்லைக்காடுதான் <br />* * * * *</p> <h5> <br />மருதம்</h5> <p>காடு திருத்துகிறார்கள் <br />கழனி யாக்கிறார்கள் <br />அருவி வந்து விழுந்து <br />ஆறாய்ப் பெருகிப் பெரும் <br />பேறாய் நயத்தக்க நாகரிகம் <br />விதைத்தது <br />முளைத்தது கண்டு <br />பசேலென்று <br />வயல் வைத்தார்கள் <br />வாழை நட்டார்கள் <br />கரும்பு போட்டார்கள் <br />கொடிக்கால் செய்தார்கள் <br />ஆணும் பெண்ணும் <br />நாளும் பாடுபட்டார்கள் <br />கோடையில் உழுந்து <br />பயறுச் செடிகள் <br />கூடவே வெள்ளரியும் <br />இஞ்சி மஞ்சள் கிழங்கென்று <br />வகைவகையாய்ச் செய்வித்தார்கள் <br />ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல <br />பாதி மனிதன் முழு மனிதனான் <br />தலை வாழை இலையிட்டு <br />சோறு கறி பரிமாறினாள் திலவி <br />பந்தியில் பாலும் <br />பலாச்சுளையும் இட்டார்கள் <br />நெய்போட்டார் மோர் விளம்பினார் <br />பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார் <br />கூட்டென்றார் பொரியலென்றார் <br />பச்சடியில் பத்து தினுசு செய்தார் <br />சொதியில் தனி ருசி சேர்த்தார் <br />வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு <br />வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும் <br />விருந்துகள் விழாக்கள் தோரணங்கள் <br />தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள் <br />ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள் <br />பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க <br />போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு <br />கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும் <br />கலைவண்ணமாய் சிலை வடித்தார் <br />கண்பார்த்ததைக் கைசெய்யும் <br />வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும் <br />கொட்டி முழக்குகிறார் ஓய்வில் <br />சொல்கொண்டு எழுத்தாக்கினார் <br />பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார் <br />நதி கொண்டு வந்த பண்பாடு தேறி <br />காதலோடு கற்புக்கும் வகைசெய்தார் <br />இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த <br />சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக <br />சைவத்தால் தமிழ் வளர்த்தார் <br />தமிழால் சைவம் வளர்த்தார் <br />மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து <br />மானுடத்தின் உச்சம் காட்டும் <br />மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம் <br />எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம் <br />* * * * *</p> <h5> <br />நெய்தல்</h5> <p>திரண்டு வரும் தண்ணீர் <br />எங்கே போகும் <br />தெறித்து விழுந்த <br />தண்ணீரோடு சேரும் <br />வந்துபோகும் அலைகளின் <br />வருத்தமென்ன வாட்டமென்ன <br />தொடுவானம் சொல்லும் <br />இரகசியமென்ன விஷயமென்ன <br />அடிவானத்துக்கப்பால் <br />இருக்கும் மர்மமென்ன மாயமென்ன <br />கடல் நடுவே பூமியா <br />பூமிக்கு மத்தியில் சமுத்ரமா <br />எப்படி வகைபடுத்த <br />கடல் என்னது <br />கடல்குதித்துச் சூடாற்ற <br />கண்ணதாசன் கவிதைவரி <br />நடுக்கடலில் <br />நாளும் நெய்தலின் மக்கள் <br />திரண்டிருக்கும் <br />தேக்கு உடம்பும் ஆதிமனசும் <br />எதன் கைவண்ணம் <br />கடல்மீன்கள் நண்டுகள் <br />முத்துகள் <br />தோன்றுவதெப்படி <br />பவளம் விளைவது <br />எந்த முகூர்த்தத்தில் <br />வலம்புரிச் சங்குகள் <br />வடிவுகொள்வது எங்ஙனம் <br />வருணதேவன் <br />வகுத்து வைத்ததா காலமழை <br />உப்பு நீரில் <br />ஒரு கொள்ளைத் திரவியம் <br />யார் செய்த <br />மாயம் <br />கடல் <br />ஒரு அதிசயம் <br />கடல் <br />கொண்டிருப்பது போதிசயம் <br />அது <br />வைத்திருப்பது நிறைய அற்புதம் <br />நெய்தல் நிலமே <br />நிரம்ப அற்புதம்தான் <br />* * * * *</p> <h5> <br />பாலை</h5> <p>வேரோடும் <br />பிரண்டைக் கொடிகள் <br />சப்பாத்தி கள்ளிகள் <br />கானலெரிக்கும் வெயில் <br />கையவு நீர் <br />காணக்கிடைக்காத மண் <br />புழுதி <br />பறக்கிறது <br />பேய்கள் <br />இராஜ்யம் செய்கின்றன <br />என்ன <br />செய்வார்கள் ஜனங்கள் <br />எப்படி <br />வாழ்வார்கள் இந்த வெக்கையில் <br />காளி மாதாவின் கருணை <br />இப்படியா <br />* * * * *</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-53178736812780267822010-02-02T08:42:00.000-08:002010-02-15T03:17:04.500-08:00மௌனியின் உலகு<blockquote> <h3>வெங்கட் சாமிநாதன்</h3> </blockquote> <p>எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான்.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S2hV7AHmlwI/AAAAAAAAFjc/beX2OI0P6mc/s1600-h/mowni433.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="mowni4" border="0" alt="mowni4" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S2hV8qxe-TI/AAAAAAAAFjg/YL-Zgstvo2k/mowni4_thumb31.jpg?imgmax=800" width="243" height="326" /></a> </p> <p>மௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-ல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் கதைகளின் தொகுப்பு ஒன்றை புத்தகமாக வெளியிட முயன்றபோது, அது எத்தகைய சாகச வேட்டையாக முன் நிற்கும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கடைசியில் ஒரு பதினைந்து கதைகளை அவர் தேடிப்பிடித்து வெளியிடுவதில் வெற்றி பெற்றார். மௌனி என்ற பெயரில் ஒரு மனிதர் எழுத்தாளர் உண்மையில் இந்த உலகில் இருக்கிறார் என்று நிரூபிக்க, மௌனியை ல்வாயில் நடந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு அழைத்துவந்து முன் நிறுத்தினார். பின் வந்த வருடங்களில் மௌனியின் கதைகளைப் புகழ்ந்து பாராட்டும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதே அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது எழுத்தைக் குறிந்த கண்டனங்களும் தான்.</p> <p>தமிழின் சிறுகதை முன்னோடிகள் இரண்டு முனைகளில் போராடியதாகத் தோன்றுகிறது. ஒன்று மொழி சம்பந்தப்பட்ட போராட்டம். இரண்டு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைக் கையாளுவதில். அவர்களில் புதுமைப் பித்தன் மாத்திரமே எவ்வித சிரமமுமின்றி வெற்றிகண்ட ஒரு மேதையாகவிருந்தார். என்னமோ அவர் பாட்டிலைத் திறக்கவேண்டியது உடனே அடைத்துக் கிடந்த பூதம் அவர் கட்டளையை நிறைவேற்றுவது போலத்தான் மொழியும் வடிவமும் அவருக்கு பணிந்தன. மற்றவர்கள் எல்லாம் சிரமப்பட வேண்டியிருந்தது.</p> <p>மௌனியின் விஷயத்தில் அந்த போராட்டம் இன்னம் சிரமம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் அவர் எழுத நினைத்தது அவருக்கே உரிய கருப்பொருளாக இருந்தது. புதுமைப் பித்தனே இது பற்றி எழுதியிருக்கிறார்.</p> <p>"கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டு வார்த்தைகளில் அடைபட மறுக்கும்</p> <p>கருத்துக்களையும் மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் அவர்(மௌனி) ஒருவரே"</p> <p>கற்பனை வளமும் மொழித்திறனும் மிக எளிதாகக் கைவரப்பெற்ற ஒரு மாமேதை, தன்னுடைய சிந்தனைகளையும் கற்பனையையும் வெளியிடுவதற்கு மொழியுடன் நிரந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன் உடன் நிகழ்கால முன்னோடிக்கு அளிக்கும் இந்த பாராட்டு மிகப் பெரிய பாராட்டுத்தான்.</p> <p>அக்காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்படவேண்டியிருந்தது.</p> <p>அவரது ரம்பத் தயக்கத்தையும் பின்னர் அவருக்கு இருந்த அசிரத்தையையும் மீறி, பின்னர் அவர் ஒரு கதை எழுத உட்கார்ந்து விட்டாரானால், அவர் தான் சொல்லவிரும்பியதைச் சொல்லும் வகையில் மொழியை க்கிக்கொள்வதில் அவர் திறன் காட்டத்தான் செய்தார். அவருடைய முதல் சிறு கதையான</p> <p>ஏன்? அவருடைய இலக்கியக் கலையை ராய முதல் அடியை எடுத்துக்கொடுக்கிறது. மாதவன் என்னும் பதிநான்கு வயது மாணவன் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் போது தன் வகுப்புத் தோழி சுசீலாவிடம், "சுசீலா, நானும் வீட்டிற்குத் தானே போகிறேன், இருவரும் சேர்ந்து போகலாமே?" என்று சொல்கிறான். ஆனால் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, புருவங்கள் உயர்த்தி வியப்புடன் கண்கள் பெரிதாகிப் பார்த்தது "ஏன்?" என்று கேட்பது போல் இருந்தது. இந்த "ஏன்?" அந்த பையனைப் பிசாசாகப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் அவர்கள் இருவர் மனதையும் ட்டிப் படைக்கிறது. அவர்கள் தனித் தனி அன்றாட வாழ்வில் அந்த ஏன் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முன் நின்று ஏன்? என்று கேட்கத் தவறுவதில்லை. அவர்கள் பிரமை பிடித்தது போல் கிறார்கள். இந்த ஏன்? அவர்களுக்குள்ளிருந்து மாத்தி ரம் எழும் கேள்வியாக இல்லை. அவ்விதமாயின் அது உணர்வு நிலையாக இருக்கும். மன நோயாக கியிருக்கும். ஆனால் இந்த ஏன்? அவர்களை வெளிஉலக்த்திலிருந்தும் எதிர்ப்பட்டு முறைத்து நிற்கும் ஒன்றாக கியிருக்கிறது. அப்போது அது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக விரிகிறது. ஏன் இப்படி? எதற்காக? ஏன் எதுவும் அப்படி? என்ற கேள்விகளே எழுந்தவண்ணம் இருக்கின்றன, பதில் வருவதில்லை. மௌனி கதையை அத்தோடு முடிக்கிறார். இரு நிலைகளின் இடையே வாசகனை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுகிறார் மௌனி.</p> <p>உலகைப் பற்றிய இந்தப் பார்வையைத் தான் மற்ற கதைகளிலும் நாம் சந்திக்கிறோம். கொஞ்ச தூரம் என்ற கதையில், "மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம் இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. ... வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது,. அதுவும் திடீரென்று பறந்து அச்செடியில் "ஏன்? எங்கே? என்று கத்திக்கொண்டு மறைந்து விட்டது. "</p> <p>இங்கும் கதைமுழுதும் பரந்து கவிந்திருப்பது ஒரு வெறுமை உணர்வு. வாழ்வின் அர்த்தமற்ற குணம். அது முதலில் நிறைவேறாத காதலில் தொடங்கி பின் அத்தோடு நிற்பதில்லை.</p> <p>மௌனியின் கதைகளிலும், கதை சொல்பவனும், கதையின் முக்கிய பாத்திரமும் கா•ப்கா கதைகளின் K போல ஒரு பெயரற்ற 'அவன்' தான். அவன் எங்கிருந்தோ தன் இருப்பிடம் திரும்பி வருவான். தன் கடந்த காலத்திய நினைவில் தோய்ந்து விடுவான். இன்னொரு படி நிலையில் மௌனியின் பாத்திரங்கள் தனி மனிதர்கள் மாத்திரமல்ல. உணர்வு நிலைகளின் பிரதிபலிப்புகள். பிரக்ஞை வெளிகள். தோற்ற உலகின் பின்னிருக்கும் உலகின் பளிச்சிட்டு மறையும் மின்னல் காட்சிகள்.</p> <p>அவருடைய கதைகளில் சம்பவங்கள் என்று எதுவும் நிகழ்வதில்லை. அவர் ஒரு நிலையின் மின்னல் வெட்டிப் <a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S2hV9vjG4NI/AAAAAAAAFjk/bf9Ypy84hMs/s1600-h/venkat_swaminathan48.gif"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="venkat_swaminathan" border="0" alt="venkat_swaminathan" align="left" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S2hV-lAuieI/AAAAAAAAFjo/RRAToWep7_E/venkat_swaminathan_thumb46.gif?imgmax=800" width="210" height="288" /></a> பளிச்சிடும் கணத்தை எடுத்துக்கொண்டு அதன் சாரமான உணர்வு நிலையை வெளிக்கொணர்கிறார் பின் அதை தத்துவார்த்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார். ரம்ப ஏன்? என்ற கேள்வியின் நீரில் விரல் விட்டுப் பார்க்கும் சோதனையாய் தொடங்கிய மௌனியின் பயணம் பின் கதைகளில் மிகச் சிக்கலான ஒன்றாக வளர்ந்து விடுகிறது. அழியாச் சுடர் கதையில் ஒரு இளைஞன் கோவிலில் சன்னதியின் முன் கூடியிருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்த பரவசத்தில் 'நான் உனக்காக எது செய்யவும் காத்திருக்கிறேன், எதுவும் செய்ய முடியும் " என்று ரகசியமாகச் சொல்லிக்கொண்டது "உள்ளிருந்த விக்கிரஹம், எதிர்த் தூணில் ஒன்றி யிருந்த யாளி எல்லாம் கேட்டு நின்றது" போலத் தோன்றியது மட்டுமல்லாமல் "சந்தனப் பொட்டுடன் விபூதி பூசி இருந்த விக்கிரஹமும் புருவஞ்சுளித்து சினம் கொண்டதாகத்" தோன்றுகிறது. அது மட்டுமில்லை. "தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு கோபித்து முகம் சுளித்தது" கோவிலினுள் அந்நிகவையும் அச்சூழலையும் விவரிக்கும் மௌனி ஒரு மயிர்க் கூச்செரியும் அச்சம் தோன்றும் மாய உலக உணர்வை எழுப்புகிறார். கற்பக்கிரஹத்தினுள் இட்டுச் செல்லும் நுழைவாயிலுக்கும் கற்பக்கிரஹத்திற்கும் இடையே உள்ள இருள் வெளியில் எண்ணெய் விளக்குகளின் விட்டு விட்டு பிரகாசிக்கும் மஞ்சள் ஒளி பரவியிருக்க நிகழ்கிறது இந்த நாடகம். இந்த வெளி தான் பிரக்ஞை நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் வெளி போலும். இடத்திலும் காலத்திலும் நிகழும் மாற்றம்.</p> <p>அவருடைய தனித்துவமான பெரும்பாலான கதைகளில் இந்த நிலை மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கான பயணம் அந்தி நேரத்தில் தான் நிகழ்கிறது. சுற்றியிருக்கும் இருள் வெளியை ஒரு மாய உணர்வூட்டும் மஞ்சள் ஒளி, அப்போது மனிதர்கள் நிழல் உருவங்களாக, நகரும் நிழல்களாகத் தோற்றம் தருவார்கள். விக்டர் டர்னர் தன் The Ritual Process: Structure and Anti-Structure (1969) புத்தகத்தில் liminality என்றும் communitas என்றும் சொல்லும் நிலையை மௌனி கதைகளின் இச்சூழல் நினைவூட்டுகின்றன.</p> <p>மரபான நாட்டுப்புற கலைகளையும் அவற்றின் சடங்குகளுக்குள்ள சக்தியையும், உள்ளர்த்த அங்களையும் பற்றியெல்லாம் மௌனி தெரிந்திருப்பார் என்றோ ழமாக ராய்தறிந்திருப்பார் என்றோ சொல்லமுடியாது. தன்னையறியாமலே, கூட்டு அடிமனப் பிரக்ஞையிலிருந்து பெற்றதைக் கொண்டு அவர் இலக்கிய சிந்தனை இவற்றை வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. பிரக்ஞை வெளியில் என்ற கதையில் அவர் சொல்கிறார்:</p> <p>"ஓளி படராத பிரக்ஞை வெளியில் சேகரன் தடுமாறிக்கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -வஸ்துக்கள் வாஸ்தவம் எனப் படுவதற்கு - மாயைப் பூசு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும் விழிப்பில் மறக்கவும்......"</p> <p>இம்மாதிரியான பல பகுதிகளை மௌனியின் கதைகளில் சந்திக்க நேரும். அவை வேறு வேறு சந்தர்ப்பங்களில் வேறு வடிவங்களில், தனி மனிதனையும் பிரபஞ்சத்தையும், ஒரு தத்துவார்த்த பிரகடனமாக அல்ல, குணரூப வாக்கியமாக அல்ல, உணர்ந்த வாழ்ந்த அனுபவங்களாக சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசகன் தத்துவார்த்த உள்ளீடுகளை, பிரபஞ்சம் முழுதும் ஒன்றிணைந்துள்ள முழுமையை, அத்வைத ஒருமையை வாசிக்கக் கூடும். ஆனால் இக்கதைகள் ஏதும் தத்துவார்த்த சிந்தனை விளக்கமாக எழுதப்படவில்லை. உண்மையான மனித வாழ்க்கை நிலைகளை, மனதின் உருக்கமான மன நிலைகளைச் சொல்லும் முகமாகத்தான் இவை எழுதப்பட்டுள்ளன. இது தான் அவருடைய எழுத்தின் உள்ளார்ந்த மையம். அவருடைய சிறந்த கதைகள் சொல்ல முயற்சிப்பது.</p> <p>மௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர் கணிதத்தின், தத்துவ விசார பயின்ற மாணவர். கர்னாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் அவருக்கு ழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எ•ப். எ.ஹெச் ப்ராட்லியின் Appearance and Reality அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் •ப்ரான்ஸ் கா•ப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.</p> <p>அவருடனான என் பழக்கம் அறுபதுகளின் தொடக்க வருடங்களில் ஏற்பட்டது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம். Encounter என்ற மாதப்பத்திரிகையில் போர்ஹேயின் இரண்டு கதைகளை முதலில் நான் படிக்க நேர்ந்த போது (அவற்றில் ஒன்று Circular Ruins, மற்றது இப்போது என் நினைவில் இல்லை) அந்த கதைப் பக்கங்களைக் கிழித்து அவருக்கு அனுப்பி வைத்தேன். அவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. அதிலிருந்து போர்ஹேயும் அவர் விரும்பிப் படிக்கும் சிரியர்கள் பட்டியலில் சேர்ந்தார். அறுபதுகளில் அவருடனான என் ரம்ப சந்திப்புக்களில் அவருடைய அப்போதைய சமீபத்திய கண்டு பிடிப்பான ராபர்ட் ம்யுசீலின் Man without Qualities பற்றி மிகப் பரவசத்தோடு பேசினார்.</p> <p>சங்கீதத்தைப் பொறுத்த வரை ஒரு சங்கீதக் கச்சேரி முழுதும் உட்கார்ந்து கேட்க அவருக்குப் பொறுமை இருப்பதில்லை என்பார். ராக சஞ்சாரத்தில் அவ்வப்போது மின்னலடிக்கும் மேதைத் தெறிப்புகள் ஒருவரது கற்பனையின் வீச்சைச் சொல்லும் அத்தெறிப்புகள் தான் அவருக்கு வேண்டும். இலக்கியத்திலும் அவர் விரும்பி ரசிப்பது இம்மாதிரித்தான். அவ்வப்போது பளிச்சிடும் மின்னல் வீச்சுக்கள், அவைதான் கற்பனையின் மின்னல் கீற்றுப் போல வீசி மறையும், அவை தான் தோற்றக் காட்சி உலகத்திலிருந்து அவற்றின் பின்னிருக்கும் உண்மைக்கு வாசகனை இட்டுச் செல்லும். ராமக்ரிஷ்ண பரமஹம்சர் முன்னறிவிப்பில்லாது அவ்வப்போது ழ்ந்து விடும் தன்னை மறந்த தியான நிலை போல. உருவகமாகச் சொல்வதென்றால் எழுத்து என்பது அவருக்கு ஒரு பயணம் கட்டமைக்கப்பட்ட நிலையிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டதுக்கு, டர்னர் liminality என்று சொல்கிறாரே அந்த நிலைக்கு. மௌனி சொல்வார், "புதுமைப் பித்தனிடம் தான் ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது"</p> <p>தமிழ் இலக்கியத்தில் தனித்து நிற்கிறார். கா•ப்காவும் போர்ஹேயும் அவரவர் இலக்கிய சமூகத்தில் தனித்து இருப்பது போல. இன்று இந்த நூற்றாண்டு நிறைவு பெறும் கட்டத்தில் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் சிலர் தம் எழுத்துக்களில் புதுமைப்பித்தனின் பாதிப்பை, இன்னும் சிலர் ஜானகி ராமனின் பாதிப்பைக் காணமுடியும். மௌனி, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுடன் அவர்களது சகாவாக அவர் காட்சியளித்தாலும், அவர் தனித்து நிற்பவர். அவர் இவ்வளவு நீண்ட காலமாக எழுதியது அரைகுறை மனத்தோடும் தயக்கத்தொடும், மிகக் குறைவாக எழுதிய போதிலும்.</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-70734369789762390932010-01-30T10:13:00.000-08:002010-02-15T03:17:04.514-08:00வினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி<blockquote> <h5>விக்ரமாதித்யன் நம்பி</h5> </blockquote> <h5><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S2R2rGEHyXI/AAAAAAAAFjA/3CE0cZywCeA/s1600-h/nambi26%5B8%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="nambi26" border="0" alt="nambi26" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S2R2saovvFI/AAAAAAAAFjE/I_h4dSmC98s/nambi26_thumb%5B6%5D.jpg?imgmax=800" width="418" height="303" /></a> </h5> <h5 align="center"><a href="http://azhiyasudargal.blogspot.com/2010/01/blog-post_5539.html">கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது</a></h5> <h5 align="center">*****</h5> <h5>வினோத ரசமஞ்சரி <br /></h5> <p>எல்லோருக்கும் <br />வாய்ப்பதில்லை மொழி <br />அதுவும் கவிதைமொழி <br />அமைவது பெரும்பேறு <br />கவிதை மொழியே <br />கவித்துவம் போல <br />யாருக்குக் கொடுக்கலாமென <br />பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் <br />நூலறிவாளர்களை <br />நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான் <br />மரபறியாதவர்களை <br />பெரிதாய் மதிப்பதில்லை <br />ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை <br />ஒரு பொருட்டாய் கருதுவதில்லை <br />மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும் <br />மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய் <br />****</p> <h5> <br />பாவக்கதை <br /></h5> <p>உன்னைப் பார்க்க <br />பாவமாகத்தான் இருக்கிறது <br />ஆனால் <br />அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது <br />அவன் <br />பார்க்க பாவம்தான் <br />எனில் <br />ஒன்றும் செய்வதற்கில்லை நான் <br />ஐயோ பாவம் <br />அவள் <br />அதற்கு <br />என்ன செய்ய முடியும் <br />பாவம்தான் <br />இவள் <br />நான் <br />என்ன செய்ய <br />என்ன தெரியுமா <br />பாவத்தைக் கட்டிச் சுமக்கமுடியாது <br />நானே பாவம் <br />உருகிவழிதல் மட்டுமல்ல உண்மை <br />உறைந்துபோதலும்தான். <br />******</p> <h5> <br />எந்த போதையிலும் <br /></h5> <p>சங்கப் பாடல்கள் <br />திரும்பத்திரும்ப <br />சுழன்றுகொண்டிருக்கின்றன மனசுள் <br />சிலம்பின் வரிகள் <br />சிந்தையிலேயே <br />குடிகொண்டுவிட்டன எப்பொழுதோ <br />திருநாவுக்கரசு சுவாமிகள் போல <br />தேடினாலும் <br />கிடைக்கமாட்டான் ஒரு கவிஞன் <br />திரிகூடராசப்பகவிராயர்க்கு <br />யார் <br />சொல்லித் தந்திருப்பார்கள் கவிதை <br />பாரதி <br />ஒரு <br />கவிஞானி <br />கண்ணதாசன் <br />குற்றாலப் <br />பேரருவிதான் <br />பிறகு <br />எவர் வந்திருக்கிறார் <br />சிறுகுயிலே <br />*******</p> <h5> <br />கவிதை <br /></h5> <p>என்ன <br />நிறம் கேட்டார்கள் ஐயா <br />வெள்ளையா <br />இதோ எடுத்துக்கொள்ளுங்கள் <br />பச்சையா <br />வேண்டும் <br />இரண்டொரு நாள் கழித்து <br />வந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார் <br />சிவப்பா <br />தோழரே <br />செய்வதற்கு <br />ஒரு பத்து நாளாகுமே <br />கறுப்பா <br />கொஞ்சம் கஷ்டம் <br />சற்று அவகாசம் தந்தால் <br />வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா <br />மஞ்சளா <br />திட்டுவார்களே அப்பா <br />சரி தருகிறேன் <br />நாலு நாள் பொறுங்கள் <br />நீங்கள் சொன்னது <br />நீலம்தானே <br />அடுத்த வாரம் தருகிறேன் <br />அன்பரே <br />என்ன நிறத்தில் <br />எப்பொழுது வேண்டும் சொல்லுங்கள் <br />உடனுக்குடன் செய்து தருகிறேன் <br />உங்கள் விருப்பம் போல <br />தரம் <br />நன்றாய் இருக்கும் <br />விலை கூட என்று <br />யோசிக்கக் கூடாது சரியா <br />****</p> <h5> <br />மேலும் மேலும் <br /></h5> <p>மேலும் மேலும் <br />குழப்புகிறார்கள் <br />மேலும் மேலும் <br />கொள்ளையடிக்கிறார்கள் <br />மேலும் மேலும் <br />நோகடிக்கிறார்கள் <br />மேலும் மேலும் <br />கவலையூட்டுகிறார்கள் <br />மேலும்மேலும் <br />யோசிக்கவைக்கிறார்கள் <br />மேலும்மேலும் <br />தொந்தரவுபடுத்துகிறார்கள் <br />மேலும் மேலும் <br />கலவரப்படுத்துகிறார்கள் <br />மேலும்மேலும் <br />பதறச்செய்கிறார்கள் <br />மேலும் மேலும் <br />கேள்வி கேட்கிறார்கள் <br />மேலும் மேலும் <br />விமர்சிக்கிறார்கள் <br />மேலும் மேலும் <br />பயப்படுத்துகிறார்கள் <br />மேலும் மேலும் <br />கோபம் கொள்கிறார்கள் <br />மேலும்மேலும் <br />பொய்சொல்கிறார்கள் <br />மேலும்மேலும் <br />கோழையாகிறார்கள் <br />மேலும் மேலும் <br />வாழவே விருப்பம் கொள்கிறார்கள் <br />மேலும்மேலும் <br />சாவைத் தள்ளிப் போடுகிறார்கள் <br />மேலும் மேலும் <br />என்ன இருக்கிறது <br />மேலும் மேலும் எனும் <br />மனசுதான் <br />மேலும் மேலும் <br />என்ன எழுத. <br />****</p> <h5> <br />கூட்டுக் கவிதை</h5> <p>காக்கைப்பாட்டு <br />காகமே எங்கே போனாய் நீ <br />எங்கேயும் போகவில்லை காகம் <br />எங்கே போனாலும் <br />கூடு திரும்பிவிடும் அந்திக்கு <br />காகமே எங்கே போனாய் நீ <br />பொன்மாலைப் பொழுதுகளை இழந்து <br />போகப் போகிறாயா நீ <br />இழந்ததெல்லாம் என்றும் <br />இழப்புதான் காகமே <br />இழக்காதே எதையுமே நீ <br />காகமே எங்கே போனாய் நீ <br />துணை தேடிப் போனாயா நீ <br />துணைதேடி அவ்வளவு <br />தூரம் போயிருக்க முடியாது <br />எங்கே போனாய் நீ <br />எல்லோரும் கலக்கமுறும்படி <br />காகமே எங்கே போனாய் நீ <br />காகத்துக்குத் தெரியும் <br />காகத்தைப் பற்றி <br />கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது <br />காகமே எங்கே போனாய் நீ <br />காகம் உள்ளூர்தாண்டிப் போகாது <br />காகத்துக்கு என்ன கவிதை <br />காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில் <br />காகமே எங்கே போனாய் நீ <br />குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில் <br />கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை <br />கொத்தித் திங்கப் போனேன் போ <br />சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல் <br />மிச்சமிருக்கு எனக்கு போ <br />புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே <br />பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ <br />என்று சொல்வாயோ <br />திருநெல்வேலி மண் விட்டுப் போக <br />பிரியப்படாத காகம் நான் <br />மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான் <br />லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான் <br />என் இஷ்டதெய்வம் <br />போடா போ போக்கத்தவனே போ <br />என கரையும் காகமே எங்கே போனாய் நீ <br />கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே <br />கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே <br />கேட்பது சுலபம் கிழவி போல <br />கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று <br />கேட்டு நீ இம்சிக்காதே <br />குஞ்சுமுகம் தேடுது <br />கூடு செல்ல நேரமாகுது <br />கொண்ட ஜோடி நினைவு வாட்டுது <br />கோபித்துக் கொள்ளாதே <br />போய் வருகிறேன் நான்</p> <blockquote> <p> <br /><em><strong>(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.கேள்விகள் எம்.டி.எம். உடையவை. பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை--விக்ரமாதித்யன் நம்பி)</strong></em> <br />******</p></blockquote> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-9470998475689599372010-01-29T10:11:00.000-08:002010-02-15T03:17:04.526-08:00'பொய்தேவு' க.நா.சுப்ரமண்யம்<blockquote> <p><td class="content"><strong>க.நா.சுப்ரமண்யம் </strong></p> </blockquote> <p><span>பள்ளிக்கூடத்துநிழல் 'பொய்தேவு' க.நா.சுப்ரமண்யம் 1946ல் எழுதிய ஒரு நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன் சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கை தேடல் குறித்த சுவையான படைப்பு. அதிலிருந்து ஒரு அத்தியாயம் இங்கு தரப்படுகிறது.</span></p> <p><span><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S2Mkv0rmmdI/AAAAAAAAFiE/9LKKmrikyVc/s1600-h/ganesha8216.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="ganesha-82" border="0" alt="ganesha-82" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S2MkwzZEL8I/AAAAAAAAFiI/uJn7YeY2k7E/ganesha82_thumb14.jpg?imgmax=800" width="367" height="251" /></a> <br /> <br />மேட்டுத் தெருவுக்கு வெகு சமீபத்திலுள்ள பிள்ளையார் தெருவிலோ ஏதோ சொல்பந்தான் என்றாலும் கொஞ்சமாவது 'உடையவர்கள்' வீட்டிலே சோமசுந்தரம் பிறந்திருப்பானேயானால், ஐந்து வயசு ஆனவுடனே அவனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருப்பார்கள். விஜயதசமி அன்று மேளங்கொட்டி அவனுக்குப் புது ஆடைகள் உடுத்தி தெருவிலுள்ள சிறுவர்களை எல்லாம் கூப்பிட்டுக் கை நிறையப் பொரிக் கடலை கொடுத்து, ஊரிலுள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பாயாசம் வடையுடன் விருந்து செய்வித்து, ஏகப்பட்ட தடபுடல்களுடன் ஊரிலுள்ள ஒரே பள்ளிக் கூடத்துக்குப் பையனை அனுப்பி வைத்திருப்பார்கள். இரண்டு மூன்று வருஷங்கள் அந்தப் பள்ளிக் கூடத்திலே படிப்பான் பையன். அதற்குள் பெற்றோரும் மற்றோரும், ''படிப்பால் என்ன பிரயோசனம்'' என்று கேட்கத் தொடங்கிவிடுவார்கள். வீட்டையோ வயலையோ கடையையோ கண்ணி யையோ பார்த்துக் கொள்வது படிப்படைவிட லாபமாக இருக்கும் என்று பையனைப் பள்ளி யிலிருந்து நிறுத்திவிடுவார்கள். விடாமல் படித்துப் புரட்டியவர்கள் பலருடைய பிற்காலத்து வாழ்க்கை யைக் கவனிக்கும் போது உண்மையிலேயே படிப்பை நிறுத்திவிட்டதுதான் சரியான காரியம் என்று ஒப்புக்கொள்ள யாருக்குமே ஆ§க்ஷபம் இராது. பள்ளிக்கூடத்தில் இரண்டு மூன்று வருஷங்கள் படித்து அறிந்து கொண்ட எல்லாவற்றையும் பையன் இரண்டு மூன்று வராங்களிலே மறந்து விடுவான். இதற்கு விலக்காக உள்ளவர்கள் சில ஐயர் வீட்டுப் பிள்ளைகள்தாம். சாத்தனூர்ப் பள்ளிக்கூடத்தை முடித்துக் கொண்டு, கும்பகோணத்துக்குக் கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போய்ப் பெரிய பள்ளியிலே படிப்பார்கள். அதிலும் படித்துப் பாஸ் பண்ணிய பிறகு பட்டணம் கோயம்புத்தூர் என்று எங்கெங்கேயோ வேலைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, படிக்காமல் ஊரிலேயே தங்கிவிட்டவர்கள் சுலபமாகவே நல்ல லாபம் அடைவார்கள். கும்பகோணத்தில் பெரிய பள்ளிப் படிப்புப் படித்து முடித்த பின்கூடத் திருப்தி அடையாமல் தஞ்சாவூர், பட்டணம் என்று போய் இன்னும் மேலான படிப்புப் படித்தவர்களும் சர்வமானிய அக்கிரகாரத்துப் பையன்களிலே சிலர் உண்டு. <br /> <br />ஆனால் மேட்டுத் தெருக் கறுப்ப முதலியின் மகனாக வந்து பிறந்துவிட்ட சோமுவுக்கு இதெல்லாம் கிட்டுமா? கிட்டும் என்று அவன் கனவிலாவது கருதி ஆசைப்பட்டிருக்க முடியுமா? <br /> <br />ஏதோ ஒருநாள் பிள்ளையார் தெருவிலே பையனைப் பள்ளிக்கு அனுப்பும் கல்யாணம் ஒன்று நடந்தது. தெருவில் தூரத்தில் நின்றபடியே அந்தக் கல்யாணத் தைப் பார்க்கும் <a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S2Mkxz9lKoI/AAAAAAAAFiM/WuxnxEcEG-4/s1600-h/kanasu29.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="ka-na-su" border="0" alt="ka-na-su" align="right" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S2Mkypx0mYI/AAAAAAAAFiQ/sPgz8JivFbU/kanasu_thumb27.jpg?imgmax=800" width="269" height="227" /></a> பாக்கியம் சோமுவுக்குக் கிட்டியது. பிள்ளைமார் தெருப் பணக்காரர்கள் வீட்டுப் பையன் ஒருவனை அன்று, நாள் பார்த்துப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதிகாலை யிலிருந்து நண்பகல் வரையில் மேளக்கார ராமசாமி ஊதித் தள்ளிவிட்டான்; தவுல்காரன் தவுலைக் கையாளும் கோலாலும் மொத்தித் தள்ளி விட்டான். பொரியும் கடலையும் - இது ஒரு பதக்கு, அது ஒரு பதக்கு - கலந்து போன இடம் தெரியாமல் போய்விட்டன. இரு நூறு பேருக்கு மேல் வந்து விருந்து சாப்பிடக் காத்திருந்தார்கள். <br /> <br />தெருவிலே தூரத்தில் இருந்தபடியே ஐந்தாறு வயசுப் பையன் ஒருவன், நாய்கள் பார்ப்பதுபோல ஆவலுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறானே, அவனைக் கூப்பிட்டு ஒரு பிடி பொரி கடலை கொடுக்கலாம் என்று கல்யாணத்திற்கு வந்திருந்த பக்கத்துக் கிராமத்து மிராசுதாரர் ஒருவர் அவனை அழைத்துக் கை நிறையப் பொரியும் கடலையும் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு என்றும் இல்லாத தன் அதிர்ஷ்டத்தைப் பாராட்டி வியந்து கொண்டே சோமு தன்னுடைய பழைய இடத்துக்குத் திரும்புகையில் கல்யாண வீட்டுக்காரர் அவனைப் பார்த்துவிட்டார். ''அந்தச் சோமுப் பயலை யாருடா இங்கே வரவிட்டது? கறுப்பன் மவன்தானேடா அவன்? ஏதாவது சமயம் பார்த்து அடிச்சுண்டு போய் விடுவானேடா! சந்தனப் பேலா எங்கே? இருக்கா...சரி... அடிச்சு விரட்டு அந்தப் பயலை!'' என்று ஊரெல்லாம் கேட்கும்படியாகக் குரல் கொடுத்தார் அவர். <br /> <br />சோமு திரும்பி ஒரு விநாடி அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். ஆட்கள் யாராவது வந்துவிடும் வரையில் அங்கே காத்திருக்க அவன் தயாராக இல்லை. யாரும் தன்னை நோக்கி வருமுன் ஒரே பாய்ச்சலில் பந்தலுக்கு வெளியே போய்விட்டான். மறுபடியும் நின்று திரும்பிப் பார்த்தான். தன் கையிலிருந்த அவர்கள் வீட்டுப் பொரியையும் கடலையையும், மண்ணை வாரி இறைப்பது போலப் பந்தலுக்குள் எறிந்தான். அவர்களுடைய சொத்தில் எதுவும் தன் கையில் ஒட்டிக்கொண்டிருப்பதில்கூட அவனுக்கு இஷ்டமில்லை போலும். கையோடு கையைத் தட்டித் தேய்த்து இடுப்பிலே கட்டியிருந்த வேட்டியிலே துடைத்துக் கொண்டான். தன்னுடைய பழைய இடத்திற்கு நகர்ந்தான். <br /> <br />இவ்வளவையும் கவனித்துக் கொண்டே உட்கார்ந் திருந்த அயலூர்காரர் மறுபடியும் சோமுவைக் கூப்பிட்டு பொரியையும் கடலையையும் கொடுத்தார். தமக்குள் சொல்லிக் கொண்டார். ''கெட்டிக் காரப்பயல்! ரோஷக்காரப் பயல்! பின்னர் பெரிய மனுஷ்யன் ஆனாலும் ஆவான்! அல்லது குடித்து ரெளடியாகத் திரிந்துவிட்டு உயிரைவிடுவான். உம்... இந்தப் பயலைப் படிக்கவச்சால் உருப்படுவான்... உம்... அவனைக் கண்டாலே இப்படிப் பயப் படுகிறார்களே! பலே பயல்தான் போலிருக்கு!'' என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் அவர். ஆனால் அடுத்த இரண்டொரு வினாடிகளுக் குள்ளாகவே அந்தப் பயலுடைய ஞாபகம் அவருக்கு அற்றுப்போய்விட்டது. அதற்குள் அவரைச் சாப்பிட அழைத்துப் போய்விட்டார்கள். <br /> <br />அந்தத் தெருவில் அந்த வீட்டில் விருந்து சாப்பாடு நடக்கிறது என்று தெரிந்து கொண்டு குறவர் குறத்தியர் பலர் எச்சிலை பொறுக்குவதற்கு வந்து கூடியிருந்தார்கள். தெருக்கோடியில் தெரு நாய்கள் ஏழெட்டு என்ன நடக்கிறது என்பதை அறியாதன போல, ஆனால் எச்சிலைகள் விழுகிற சப்தம் கேட்டவுடனே எழுந்து பாய்ந்து ஓடிவரத் தயாராகப் படுத்துக் கிடந்தன. சோமு, நாய்களுடைய கூட்டத்திலும் கலக்கவில்லை. குறவர் குறத்தியர் கூட்டத்திலும் கலக்கவில்லை. இரண்டும் இடையே தெரு ஓரமாக வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டே கால் கடுக்க நின்று கொண்டிருந்தான் அவன். <br /> <br />எவ்வளவு நேரம் சாப்பிட்டார்கள் விருந்தாளிகள்! ஒன்றரை நாழிகை நேரம் சாப்பிடும்படியாகப் பலமான விருந்து தான் போலும்! எச்சிலைகள் வந்து விழுந்த உடனே குறப் பாளையத்துக்கும் நாய் மந்தைக்கும் பாரதப் போர் தொடங்கியது. குறப்பாளையந்தான் இறுதி வெற்றி அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா? இந்தப் பாரதப் போரின் சுவாரசியத்திலே ஈடுபட்டு நின்றான் சோமு. <br /> <br />அதற்குள் கலியாண வீட்டிலே மீண்டும் மேளம் கொட்டத் தொடங்கிவிட்டது. பையனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதலில் மேளக் காரர்கள் வாசித்துக் கொண்டே தெருவில் வந்து நின்றார்கள். விருந்து சாப்பிட்ட சிரமத்தைப் பொருட்படுத்தாத சில விருந்தாளிகளும் திண்ணை யை விட்டு இறங்கி தெருவிலே நின்றார்கள். பள்ளிக்கூடத்தில் சேரவேண்டிய பையன் வந்து நின்றான். மாங்காய் மாங்காயாச் சரிகை வேலை செய்த சிவப்பு பட்டு உடுத்தியிருந்தான் அவன். மேலே ஒரு சீட்டித் துணிச்சொக்காய் - அந்தச் சீட்டியிலே பெரிய பெரிய பூக்கள் போட்டிருந்தன. அவன் தலையை படிய வாரிச்சீவிப் பின்னி லிட்டிருந்தார்கள். எலிவால் போன்ற சடையின் நுனியைச் சிவப்பு நூல் அலங்கரித்தது. பையனுடைய கறுத்த நெற்றியிலே கறுப்புச் சாந்துப் பொட்டு ஒன்று ஒளியிழந்து தெரிந்தது. பெண்களின் கூந்தலிலே வைப்பதுபோல ஒரு மல்லிகைச்சரத்தை அவன் தலையிலே வைத்திருந்தார்கள். வால் பெண் ஒன்று. அது அவன் அக்காளாக இருக்கும். பையன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது அவனுடைய எலிவால் சடையை வெடுக்கென்று இழுத்து விட்டு ஓடிப்போய்விட்டாள். பையன் மிரள மிரள நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான். <br /> <br />கால் நடையாகவே ஊர்வலம் கிளம்பியது. பள்ளிக்கூடம் பக்கத்துத் தெருவிலேதான் இருக் கிறது. சர்வமானியத் தெருவின் மேலண்டைக் கோடியில் உள்ள மாடி வீடுதான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தின் சொந்தக்காரர், ஹெட்மாஸ்டர், பிரதம உபாத்தியார் எல்லாமே சுப்பிரமணிய ஐயர் என்பவர்தாம். அவருக்கு உதவி செய்ய இன்னோர் உபாத்தியாயரும் இருந்தார். ஆனால் அவர் அவ்வளவாக உதவி செய்தார் என்று சொல்வதற் கில்லை. சுப்பிரமணிய ஐயருடைய வீட்டு மாடிதான் சாத்தனூர்ப் பள்ளிக்கூடம். அதே வீட்டில் கீழ்ப் பகுதியில் அவர் வாசித்து வந்தார். பள்ளிக்கூடத்திலே சுமார் ஐம்பது அறுபது பையன்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து வயசி லிருந்து பதினைந்து வயசு வரையில் இருக்கும். <br /> <br />பள்ளிக்கூடத்துப் பையன்கள் எல்லோரும் அன்று தங்களுடன் வந்து சேர இருந்த புதுப் பையனைப் பார்ப்பதற்கு ஆவலாக, தெருவிலே மேளச் சப்தம் கேட்டவுடன், மாடி ஜன்னல்கள் மூன்றையும் அடைத்துக் கொண்டு நின்றார்கள். புதுப்பையன், பணக்கார வீட்டுப் பையன் அன்று வந்து சேரப் போகிற செய்தி காலையிலேயே சுப்பிரமணய ஐயருக்குத் தெரியும். ஆகவே அவர் பள்ளிக்கூடத்தையும் பையன்களையும் தம் உதவி உபாத்தியாயரிடம் ஒப்பித்துவிட்டுப் பிரம்பும் கையுமாக வீட்டுத் திண்ணையில் வந்து நின்றார் - புதுப் பையன் ஊர்வலத்தை எதிர்பார்த்துக் கொண்டு. <br /> <br />ஊர்வலம் மாடி வீட்டு வாசலில் வந்தவுடன் திண்ணையிலிருந்து சுப்பிரமணிய ஐயர் இறங்கி ஆளோடியில் இரண்டடி முன்வந்து, ''வா! ராமசாமி, வா!'' என்று பையனின் தகப்பனை வரவேற்றார். அந்தப் பையனின் தகப்பன் ராமசாமியும் பல வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய ஐயரிடம் படித்தவன்தான். கையில் சந்தனப் பேலாவை எடுத்து அவருக்குச் சந்தனம் கொடுத்தார் ராமசாமி. பிறகு ஒரு வெற்றிலைத் தட்டில் நிறைய வெற்றிலையும் பாக்கும் மஞ்சளும் வைத்து அதிலே ஒரு ஜோடி சேலம் பட்டுக்கரை வேட்டியும் சாத்தனூர்ப் பட்டுப் புடவை ஒன்றையும் ரவிக்கை ஒன்றையும் வைத்து அவரிடம் கொடுத்தார். வாத்தியார் ஐயா தட்டுடன் அதை வாங்கித் திண்ணையில் தம் பக்கத்தில் வைத்துக் கொண்டு பையனையும் பையனின் தகப்பனாரையும் ஆசீர்வதித்தார். புதுப்பையனும் அவனுடைய தகப்பன் ராமசாமியும் சுப்பிரமணிய ஐயரை விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். மீண்டும் ஒருமுறை அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் சந்தனமும் சர்க்கரையும் வெற்றிலை பாக்கும் வழங்கப்பட்டன. வாத்தியார் ஐயாவால் அல்ல - பையனின் செலவில் அவரால்தாம். பிறகு பள்ளிக்கூடத்துப் பையன் களுக்கென்று கொண்டு வரப்பட்டிருந்த பதக்குப் பொரியும், கடலையும் மாடிக்குக் கொடுத்தனுப் பப்பட்டன. சற்று நேரத்துக்கெல்லாம் மாடி ஜன்னல்கள் ஒன்றிலும் பையன்கள் யாரும் இல்லை என்பதில் ஆச்சரியம் என்ன? <br /> <br />இவ்வளவையும் கவனித்துககொண்டே சோமு நெருங்கி வரப் பயந்தவனாக எதிரே இருந்த வேலியோரமாக ஒரு பூவசர மர நிழலில் நின்றான். பூவரச மரக்கிளை ஒன்றிலிருந்து அவன் தலைக்கு நேரே நூல் விட்டுக் கொண்டு ஒரு கம்பளிப் பூச்சி ஊசலாடிக்கெண்டிருந்ததை அவன் கவனிக்க வில்லை. <br /> <br />புதுப் பையனைப் பள்ளியில் சேர்த்துவிட வந்தவர்கள் எல்லோரும் அரை நாழிகை நேரத்திற்குள் கிளம்பி விட்டார்கள். புதுப் பையனை தம்முடன் அழைத்துக் கொண்டு சுப்பிரமணிய ஐயரும் மாடிக்குப் போய்விட்டார். நடுப்பகல் நல்ல வெயில் தகித்துக் கொண்டிருந்தது. தெருவிலே ஜனநடமாட்டமே இல்லை. வேலையுள்ளவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் அலுவல்களைக் கவனிக்கப் போய்விட்டார்கள். வேலையில்லாமல் வீட்டிலே தங்கியிருந்தவர்கள் உண்ட களை தீரப்படுத்து உறங்கிக் கொண்டிருந் தார்கள். சோமு என்கிற மேட்டுத் தெரு பையனைத் தவிர தெருவிலே அப்பொழுது யாருமே இல்லை. அவன் மாடிப் பள்ளிக்கூடத்தண்டைபோய் மாடியை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வெகுநேரம் நின்றான். சற்று நேரம் கழித்து வெயில் அதிகமாக இருக்கிறதே என் நிழலில், மாடி வீட்டின் நிழலில், மாடிப் பள்ளிக்கூடத்தின் நிழலில் ஒதுங்கி நின்றான். மாடியிலிருந்து என்ன என்னவோ சப்தங்கள் ஒலித்தன. பையன்கள் எல்லோரும் ஏககாலத்தில் சந்தை வைத்து உரக்க என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்லிக் கொண்டிருந் தார்கள் என்பது சோமுவின் காதில் தெளிவாக விழவில்லை. உபாத்தியாயரும் உதவி வாத்தியாரும் நடு நடுவே உரத்த குரலில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். <br /> <br />அவர்களுடைய குரல்தான் சோமுவின் காதுக்கு எட்டியது. வார்த்தைகள் தெரியவில்லை. சில சமயம் ஒரு பையனுடைய பெயரைச் சொல்லித் தலைமை உபாத்தியாயர் கூப்பிட்டார். அந்தக் கூப்பாட்டிற்கு இரண்டொரு வினாடிகளுக்கப பிறகு, 'ஐயோ அப்பா! ஸார் ஸார்! வேண்டாம் ஸார்! இனிமேல் இல்லை ஸார்!'' என்று பையன் யாராவது அலறுவது சோமுவின் காதில் விழுந்தது. அதற்கடுத்த வினாடி பலர் 'கலகல' வென்று பேசுவதும் சிரிப்பதும் அவன் காதில் விழுந்தன. அந்தப் பள்ளிக்கூடத்துச் சப்தம் முழுவதுமே இசைந்து இன்ப ஒலியாகச் சோமுவின் காதிலே விழுந்தது. <br /> <br />சாத்தனூர் மாடிப் பள்ளிக்கூடத்து நிழலிலே சுவரில் சாய்ந்து கொண்டு நின்றபடியே பகற்கனவுகள் காணத் தொடங்கினான் சோமு. அவன் அப்பொழுது கண்ட கனவுகளை விவரிப்பதென்பது ஆகாத காரியம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம். அவனுடைய வாழ்க்கையிலே முதல் ஆசை, முதல் லக்ஷ்யம் உருவாகிவிட்டது. அவ்வளவு சிறு வயசிலேயே அவன் தனகென்று ஒரு லக்ஷ்யத்தை ஏற்படுத்திக்கொண்டு விட்டான். பள்ளியிலே தானும் படித்துப் பெரியவனாகி...</span></td> </tr><tr><td style="padding-bottom: 10px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 10px" align="center"><!--<img src="BannerImages/bannersample.gif" border="0">--></td></tr><tr><td class="content"><span id="lblContent2">படித்துப் பெரியவனானபின் என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கு முன் அவன் நின்றபடியே கண்களை மூடிவிட்டான். பகற்கனவுகளிலிருந்து உண்மைக் கனவுகளுக்குத் தாண்டிவிட்டான். <br /> <br />இப்படிச் சுவரில் சாய்ந்தபடியே நின்றுதூங்கிக் கொண்டிருக்கும் பையனைக் கண்டால் எந்த உபாத்தியாயரானாலும் என்ன செய்வாரோ அதைத் தான் அரை நாழிகை நேரம் கழித்துக் கீழே இறங்கி வந்த சுப்பிரமணிய ஐயர் செய்தார். தம் பள்ளிக் கூடத்தைச் சேர்ந்த சோப்பேறிகளில் அவனும் ஒருவன் என்று அவர் எண்ணியதில் தவறில்லை. <br /> <br />சோமுவின் இன்பக் கனவுகளைப் கிழித்துக் கொண்டு 'சுளீர்' என்று ஒரு சப்தம் கேட்டது. 'பளீர்' என்று ஓர் அடி முதுகிலே விழுந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டு சோமு எதிரே பிரம்பும் கையுமாக நின்ற சுப்பிரமணிய ஐயரை ஒரு தரம் பார்த்தான். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டதே தவறு. பள்ளிக்கூடத்தின் நிழலிலே ஒதுங்கிச் சிறிது நேரம் நின்றதுகூடத் தவறு என்று ஒப்புக்கொண்டவன் போல, வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல, 'ஜிவ்'வென்று பாய்ந்து ஓடி, சர்வமானிய அக்கிரகாரத் தெருத் திரும்பி மறைந்துவிட்டான். <br /> <br />தம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் அல்ல அவன் என்று சுப்பிரமணிய ஐயருக்குத் தெரிய இரண்டு வினாடி நேரம் ஆயிற்று. அதற்கு இரண்டு விநாடி கழித்துத்தான் அப்படித் தம்மிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடிப்போனது மேட்டுத் தெருக் கறுப்பன் மகன் சோமு என்பதை உணர்ந்தார். முதலில் இவர் அதைக் கவனித்திருந்தாரானால் அவனை அடித்தே இருக்க மாட்டார். அவனிடமும் கறுப்ப முதலியிடமும் உபாத்தியார் சுப்பிரமணிய ஐயருக்கு எப்பொழுமே கொஞ்சம் அநுதாபம் உண்டு. அவர் 'உடையவர்கள்' கோஷ்டியைச் சேர்ந்தவர் அல்ல. ஊரில் மற்றவர் களெல்லோரும் கறுப்பன் மகன் என்பதற்காகச் சோமுவை எப்படி நடத்தினார்கள், என்ன என்ன சொன்னார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவனை அவர் அப்படி அடித்திருக்க வேண்டியதில்லை! அடி என்னவோ அவரையும் மீறியே பலமாகத்தான் விழுந்துவிட்டது. <br /> <br />சிரித்துக் கொண்டே தம் வீட்டுக்குள் போனார் சுப்பிரமணிய ஐயர். ''அடியே!'' என்று தம் மனைவியைக் கூப்பிட்டார். ''இதோ பார்!... அந்த மேட்டுத் தெருக் கறுப்பன் பிள்ளை சோமு எப்பவாவது இந்தப் பக்கம் வந்தானானால் சாதம் கீதம் மிச்சம் இருந்தால் போடு! பாவம்; சாப்பாடே இல்லாமல் கஷ்டப்படறதுகளோ என்னவோ!'' என்றார். <br /> <br />''வள்ளியம்மை அந்த ரங்கராயர் ஆத்திலே வேலை செய்கிறாள். சாப்பாட்டுக்கு ஒரு குறைவும் வைக்க மாட்டார் அந்த ராயர். ஆனால் இப்போ என்ன அந்தப் பயலைப்பற்றி ஞாபகம் வந்தது உங்களுக்கு?'' என்று விசாரித்தாள் அவர் மனைவி ஜானகியம்மாள். <br /> <br />சற்றுமுன் நடந்ததைச் சொன்னார் சுப்பிரமணிய ஐயர். அவர் சிரித்துக் கொண்டேதான் சொன்னார் என்றாலும், அனாவசியமாக ஒரு சிறு பையனை அடித்து விட்டதைப் பற்றி எவ்வளவு வருத்தப்பட்டார் என்பது அவர் சொன்ன மாதிரியிலிருந்தும் குரலிலிருந்தும் நன்கு தெரிந்தது. <br /> <br />''ஐயோ பாவம்!'' என்றாள் ஜானகியம்மாள். சற்று நேரம் கழித்து அவள், ''நல்ல வாத்தியார் வேண்டியிருக்கு! எப்போ பார்த்தாலும் பிரம்பும் கையுமக!... இப்படிக் கொடுங்கோ பிரம்பை - அதை முறித்து அடுப்பிலே போட்டுவிடறேன்!'' என்றாள். <br /> <br />''கண்ணை மூடிண்டு எதிர்ப்படறவா எல்லோரையும் என்னிக்காவது ஒருநாள் இந்தப் பிரம்பால் வெளுத்து வாங்கி விட்டால் தேவலை என்றிருக்கிது எனக்குச் சில சமயம்'' என்றார் சுப்பிரமணிய ஐயர். <br /> <br />''ஆத்திலே ஆரம்பிச்சுடாதேயுங்கோ! மாடிக்குப் போங்கோ!'' என்றாள் அவர் சகதர்மிணி. <br /> <br />''ஆத்திலே ஆரம்பிக்கிறதாகத்தான் உத்தேசம்! அதுகாகத்தான் இப்போ கையோடு பிரம்பைக்கூடக் கொண்டு வந்திருக்கேன்'' என்று சொல்லிக் கொண்டே சிரித்துக் கொண்டு தன் மனைவியை அணுகினார் சுப்பிரமணிய ஐயர். <br /> <br />''எங்கள் வாத்தியார் ஐயாவுடைய சமத்தைப் பார்த்து யாராவது நாப்பு காட்டப் போறா! அசடு வழியாம போங்கோ'' என்று சொல்லிவிட்டு ஜானகியம்மாள் சமையலறைக்குள் போய்விட்டாள். <br /> <br />சுப்பிரமணிய ஐயரும் மாடிக்குப் போய்விட்டார். <br /> <br /><b>*****</b></span></p> <p><span><strong> </strong></span></p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-12776488702097494082010-01-27T09:15:00.000-08:002010-02-15T03:17:04.539-08:00கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்<blockquote> <p><td class="content"><b>கி. ராஜநாராயணன்</b></p> </blockquote> <p><span>கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்... <br /></span></p> <p><span><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S2B0hZmuKRI/AAAAAAAAFgo/do6geaCILdE/s1600-h/modernart1716.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="modern-art-17" border="0" alt="modern-art-17" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S2B0jRHa37I/AAAAAAAAFgs/brL_tygoXps/modernart17_thumb14.jpg?imgmax=800" width="390" height="294" /></a> </span></p> <p><span>முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். <br /> <br />கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி ததும்பப் பாடல்கள் பாடினார்கள். அதைப்போலப் பாடல்கள் கிராமத்துக்குப் புதுசு. ஆவலோடு அவைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். தாளக் கட்டோடும் ராக அடக்கத்தோடும் ஒருத்தர் இப்படிப் பாடினார் <br /> <br />"ஆட்டித் தோலுக் கிடங்கொடுத்த <br />தாலே வந்த மோசம் - அத <br />னாலே வந்த மோசம்......" <br /> <br />எப்படி வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு முதல் முதலில் ஆட்டுத் தோல் வாங்க என்று இங்கே ஒரு வியாபாரியாக வந்து நம்மை ஏமாற்றி, நம்மவர்களைப் பிரித்து நமக்குள் சண்டை மூட்டிவிட்டு வஞ்சகமாக நம்மை அடிமைப் படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறான் என்று அழகாக விவரித்தது பாடல் <br /> <br />ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் பஜனையில் "கோவிந்த நாம சங்கீர்த்தனம்..." சொல்லு வதுபோல அவர்கள் "வந்தே மாதரம்" என்று சொல், அதை ஜனங்கள் எப்படி வாங்கித் திரும்ச் சொல்லணும் என்று சொல்லித் தந்தார்கள். இதனால் அந்த கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல நேர்ந்தது. இது குழந்தைகளை ரொம்பத்தான் உத்ஸாகப் படுத்தியது! அவர்கள் ரொம்ப ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் இதில். "வந்தே... மா...தரம்" என்று சொல்லி, தே என்பதைக் கொஞ்சம் நீட்டி, மா என்பதைக் கூடக் கொஞ்சம் நீட்டி ஒரு நாமசங்கீர்த்தனம் போல - ஒரு சுருதியோடு சேர்த்துச் சொல்லுவது போல - சொல்ல வேண்டும் என்று சொல்லிக் காட்டினார் அந்த சிந்து பூந்துறைக்காரர் <br /> <br />"வந்தே..மா..தரம்" <br />"அல்லா...ஹூ......அக்குபர்" <br />"நமதே.....ராஜ்யம்;அடைந்தே...தீருவோம்" <br />"போலோ;மஹான் மகாத்மா காந்தீக்கி;ஜே" <br /> <br />பிரசங்கிகள் ஒவ்வொருவராகப் பேசினார்கள். மக்களுக்குத் தெரிய வேண்டுமே என்று எளிய தமிழில் பேச்சு நடையில் கதை காரணங் களோடு ஜனரஞ்சிதமாகப் பேசினார்கள் <br /> <br />குடியின் கேட்டைப் பற்றி ஒருவர் பேசினார். "முந்தியெல்லாம் இப்படிக் கடையை ஏலத்துக்கு விட்டு ஊரு தவறாமல் கள்ளுக் கடையை நிலையாக இருக்கும் படி யாரும் பண்ணியதில்லை. இது இந்த வெள்ளைக் காரன் வந்த பிற்பாடுதான். கள்ளை வியாபாரப் போட்டிக்கு உட்படுத்தியதால், போதை அதிகம் இருக்க வேண்டும் <a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S2B0kmHs0OI/AAAAAAAAFgw/9S1Nuv29InY/s1600-h/kira220.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="kira2" border="0" alt="kira2" align="left" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S2B0mF5-isI/AAAAAAAAFg0/FXSKjCuGViE/kira2_thumb18.jpg?imgmax=800" width="306" height="246" /></a> என்பதற்காக செயற்கையாக அதில் உடம்புக்குக் கேடு  விளைவிக்கும் பொருள்களை சேர்த்து விற்கும்படி ஆகிறது. இந்த அதிபோதையால் அரசுக்கு அதை விற்பவர்களுக்கும் நல்ல காசு என்பதோடு, போதையில் கிடக்ககும் மக்களின் தொகை அதிகமாக, ஆக ஆக அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு பலவீனப்பட்டுப் போகும். மக்கள் போதையில் கிடப்பது கொள்ளைக்காரர் களான வெள்ளைக் காரர்களுக்கு நல்லது. அதனால் நாம் முதலில் நமது மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். அதோடு நமது குடும்பப் ¦¡ருளா தாரத்துக்கு இந்தக் குடி உதவவே உதவாது. ஆகையால்த்தான் மகாத்மா காந்தி அவர்கள் கள்ளுக்கடை மறியலையும் தனது நிர்மாண திட்டத்தில் பெண்கள் பகுதியைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே 'தாய்மார்களே உங்கள் வீட்டுக்காரர் களை, சகோதர்களை குடிக்கவிடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்' என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். <br /> <br />அடுத்தபடியாகப் பேசியவர் "பஞ்சாப் படுகொலை சொக்கலிங்கம்பிள்ளை" என்பவர். இவர் பெயரைக் கேட்டதுமே ஊர்க்காரர்கள் முதலில் நினைத்தது, பஞ்சாப் படுகொலைகளில் இவரும் சம்பந்தப்பட்ட ஆளாக இருப்பார் போலிருக்கு (!) என்று. <br /> <br />பேசியபிறகு தான் தெரிந்தது அவருக்கு அந்தப்பேர் வந்ததுக்கான காரணம். ஜாலியன் வாலாபாக்கில் நடந்த அந்தப் படுகொலையை அந்தப் பாஞ்சால நாட்டுமக்கள் பட்ட இன்னலை, அப்படியே இந்த மக்களின் கண்ணெதிரே, நடந்தது நடந்தது போலக் கொண்டுவந்து காட்டினார். <br /> <br />பேசிக்கொண்டு வரும்போது அவருடைய முகம் அழுகையினால் கோணியது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மூக்குக் கண்ணாடியை பலதடவை கழற்றினார். அங்கிருந்த பெண்களை யெல்லாம் ஒரு நொடியில் அழவைத்து விட்டார். ஒரு அப்பாவின் தோளில் உட்கார்ந்து கொண்டிருந்த சிறுவன் ''வீட்டுக்குப் போகலாம் ப்பா'' என்று சொல்லும்போதும் அவனுக்கு நாக்குக் குழறியது. <br /> <br />ஒரு பாவமும் அறியாத மக்களை, பெண்களை மண்டி போட்டு நடக்கும் படியாக நிர்ப்பந்தித்து, வெள்ளை அதிகாரி அவர்களை சவுக்கால் அடித்ததாக அவர் சொன்னபோது இவர்கள் நெஞ்சிலே அந்த அடி விழுந்தது போலிருந்தது. <br /> <br />வெள்ளையர்கள் இவ்வளவு கொடூர மானவர்களா என்று தோன்ற ஆரம்பித்தது. இந்தக் கொடூரம் நாளைக்கு இங்கேயும் தோன்றாது என்று எப்படிச் சொல்ல முடியும்? <br /> <br />அவருக்குப் பிறகு பேசிய பிரசங்கி, பம்பாயில் நடந்த அந்நியத்துணி பகிஷ்கரிப்பு (புறக் கணிப்பு) போரட்டாத்தில் ஒரு சத்யாகிரகி மீது வேண்டுமென்றே லாரியை ஏற்றிக் கொன்றதைப் பற்றிச் சொன்னார். <br /> <br />ஜெயிலுக்குப் போன இளைஞன் எதீந்தி நாத்தாஸ் என்பவர், ஜெயிலில் ஒருவாய் மோருக்காக - சாப்பாட்டில் ஒரு வேளைக் காவது கொஞ்சம் மோர் தரவேண்டும் அனைத் துக் கைதிகளுக்கும் என்று- 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 64வது நாளில் உயிர் நீத்ததைப் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்கும் போதே அங்குள்ள மக்களின் மனசைப் பிசைந்தது அந்தச் செய்தி. <br /> <br />''எதீந்திரநாத் மரணம் பம்பாயை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பம்பாயை மட்டுமா, இந்தியா பூராத்தையும்தான். பத்திரிகைக ளெல்லாம் அதைப்பற்றித் தலையங்கங்கள் எழுதின. டெல்லி சட்டசபையில் அதைப்பற்றிக் கேள்விகள் கேட்டார்கள். <br /> <br />''இந்தியா உஷ்ணமான நாடு. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உணவில் ஒரு வேளைக்காவது 'ஒரு வாய்' மோர் தர வேண்டாமா?'' என்று கேட்டார்கள். <br /> <br />'' ஒ பொன்னான உயிரைப் பலிகொடுத்து, பத்திரிகைகளும் சட்டசபைக்குள்ளும் கேள்விக் கணைகள் தொடுத்து, மக்களும் கிளர்ந்தெழுந்த பிறகே இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஜெயில் கைதிகளுக்குச் சிறிது மோர் தர ஒப்புக் கொண்டது. <br /> <br />''அப்பேர்ப்பட்ட கெடுங்கோலான அரசாங்கம் இது'' என்றார் பிரசங்கி. <br /> <br />கூட்டத்தின் கடைசியில் பேசியது ஒரு சிறிய பையன் ! இளங்கோ என்று பேர் சொனனார்கள். பத்து வயசுக்குள்ள தானிருக்கும். மேஜை மீது அவனைத் தூக்கி விட்டார்கள். எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. <br /> <br />கால்களையும் கைகளையும் ஆட்டி உடம்பை நிமிர்த்தி அழகான தமிழில் அவன் அமளப்பொரி பொரிந்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தையே, 'என்னோட சண்டைக்கு வாராயா?'' என்று கேட்பது போலிருந்தது! கைதட்டி அவனை உத்ஸாகப்படுத்தினார்கள் வந்திருந்த பிரசங் கிகள்; அதைப் பார்த்த ஊர்க்காரர்களும் கை தட்டினார்கள். <br /> <br />கூட்டத்தின் முடிவில் ஜே கோஷம் வானைப் பிளந்தது. இப்படியாக இந்திய நாட்டு சுதந்திரப் போரின் சங்கநாதம் அந்த கிராமத்தினுள்ளும் வந்து ஒலிக்கத் தொடங்கியது. அந்த கிராமத்தின் குழந்தைகள், அந்த அரசியல் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு தங்கள் விளையாட்டில் ஒரு புதுவிளையாட்டைச் சேர்த்துக்கொண்டார்கள். சோளத் தட்டையின் நுனியில் சிறிய துண்டுத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள். ''நமதே ராஜ்யம்: அடைந்தே தீர்வோம்'' என்று கத்தினார்கள். <br /> <br />இப்படிப் பல ஊர்வலங்களை தினமும் குழந்தைகள் தவறாமல் நடத்தி விளையாண் டார்கள். ''பாரதமாதாக்கி ஜே'' ''மகாத்மா காந்திக்கி ஜே'' ''வந்தே...மா..தரம்''. <br /> <br />காலையில் எழுந்திருந்த கிராம முன்சீப் அய்யர் கச்சேரிக்கு (கிராமச்சாவடி) முன்னால் நின்று கொண்டு 'காச்மூச்' என்று கத்திக் கொண் டிருந்தார். என்னமோ ஏதோ என்று தலையாரித் தேவர் ஓடோடி வந்தார். <br /> <br />''என்னடா இது: ஊருக்கு விநாசகாலமா? பாரு மரத்துக்கு மேலே. இப்படிப் பண்ணியிருக் கானே! மேலாவிலிருந்து வந்தா நா என்னடா பதில் சொல்றது? யாரு பண்ணுன காரியம்டா இது. குடியெக் கெடுத்தானே பாவி...'' <br /> <br />மூச்சு இறைக்க அய்யர் கூவிக் கொண் டேயிருந்தார். <br /> <br />தலையாரிக்கு முதலில் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது ராவோடு ராவாய் யாரே ஒரு பாவி மூவர்ணக்கதர்- கொடியை பிள்ளையார் மேடை அரசமரத்தின் உச்சியில் கொண்டுபோய் உயரமான வருச்சியில் கட்டி அதை ''ஊரு உலகத்துக்கெல்லாம்'' தெரியும்படியாகப் பண்ணியிருந்தான். <br /> <br />வெகுதூரத்திலிருந்து பார்த்தாலே தெரியும் படியாக இருந்தது கொடி. மங்கம்மாசாலை வழியே போகிறவர்களுக்குக் கட்டாயம் தெரியும். வேணுமென்றே அக்கிரமத்துக்காக - செய்த காரியமாப்பட்டது அய்யருக்கு. ''கூட்டம் போட்டுப் பேசினார்கள். சரி. பேசிட்டுத் தொலை. பொ. காத்தொடபோறதுன்னு இருந்தேன். இப்பொ 'அடி மடியிலே' கையைக் கொண்டாந்துட்டானெ? நா ஒர்த்தன் பிராமணன் இங்கெ உத்யோகம் பாக்றது யாருகண்ணெ உறுத்தறதுன்னு தெரியவில்லை.'' கொஞ்ச நேரத்துக்குள் ஒரு கூட்டத்தையே கூட்டிவிட்டார் தனது கூப்பாட்டின் மூலம். <br /> <br />அதிகாலை மம்மல் நேரத்திலேயே சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நுன்ன கொண்ட நாயக்கரைப் பார்த்ததும் அய்யர் குரலை உயர்த்தினார். ''பாத்தியளா மொதலாளி, பயல்களோட காரியத்த!'' என்று அரச மரத்தின் உச்சியைக் காண்பித்தார். <br /> <br />புகையும் சுருட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு இடது கைவிரல்களைப் புருவக்கட்டில் வைத்து 'கண்ணாடி போட்டு' அண்ணாந்து பார்த்தார் நுன்னகொண்ட. <br /> <br />பகீரென்றது வயிற்றில் அவருக்கு. <br /> <br />ம்செரி' என்று எண்ணிக்கொண்டு அங்கே கூடியிருந்த இளவட்டங்களின் முகங்களை ஒருபார்வையால் ஆராய்ந்தார். ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது அவரால். <br /> <br />அய்யரைப் பார்த்துச் சொன்னார் கையில் சுருட்டை எடுத்துக் கொண்டு. ''கட்டுச்சோறு கட்டிக்கிட்டா வரப்போறான் அசலூரிலிருந்து இதுக்கு. சவத்துப் பயல்க.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் போனதுக்குப் பிறகும் கொஞ்ச நேரம் சுருட்டின் வீச்சம் அங்கே மணத்துக் கொண்டிருந்தது. <br /> <br />அய்யர் இந்த மாதிரி 'பேசக்கூப்பாடு' போடுவாரே தவிர தன்னுடைய கிராம மக்கள் பேரில் எப்பவும் எந்த விஷயத்துக்காகவும் மேலாவுக்கு எழுதி அனுப்பியதில்லை. இந்த விஷயங்களில் அவர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தார். <br /> <br />பிரிட்டிஷ் அரசு மூவர்ணக் கொடியைத் தடைசெய்திருந்தது. அதனால் எல்லா இடங்களிலும் இப்படி ராவோடு ராவாக கொடி ஏத்தங்கள் நடைபெற்றுவந்தன. <br /> <br />இதே கொடியைப் பிடித்துக் கொண்டு பகிரங்கமாக ரோட்டில் நடந்து கைதியானவர் களும் உண்டு. அப்படிப் கொடியைக் கையில் பிடித்துக்கொண்டு போகும்போது, 'போடு கீழே' என்று சொல்லி போலீஸார் லத்தி' யால் அறைவதும் உண்டு. உடம்பில் அடிமேல் அடி தொடர்ந்து விழும்போது, வலி பொறுக்க முடியாமல், தன்னையறியாமல் அய்யோ அம்மா என்று அலறுவதற்குப் பதில் ''வந்தேமாதரம் வந்தேமாதரம்'' என்று மாறிமாறிச் சொல்லு வார்கள். திருப்பூர் என்கிற ஊரில் குமரன் என்ற பேருடைய பிள்ளையாண்டான் ஒருத்தனை இப்படி அடித்தே கொன்று விட்டார்களாம் பாவிகள் என்று பேசிக்கொண்டார்கள். தலையாரியை மரத்தின் மேலே ஏறி அந்தக் கொடியை அவிழ்க்கும்படிச் சொன்னார் கிராம முன்சீப் அய்யர். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தலையாரி கிட்ணத் தேவர் மேலே ஏறினார். வளர்ப்பு ஆட்டுக்குக் குழைஓடிக்க மரம் ஏறிப் பழக்கந்தான் அவருக்கு. மேலே ஏறிப்போன கிட்ணத்தேவருக்கு மலைப்பு ஏற்பட்டது. ஒருப்பூட்டாக எழுந்துநின்று உச்சிக் கொம்பில் கொண்டுபோய் அதிலும் இருட்டு வேளையில் எப்படிக் கட்டினான் இந்தக் கொடியை என்று யோசித்தார். கொம்பைப் பிடித்து தொத்தி எப்படியாவது மேலே போய் விடலாம். கட்டுவதோ, அவிழ்ப்பதோ என்பது சாத்தியமே இல்லை என்று தோன்றியது. சாமி வந்து ஆவேசத்தோடு ரவ்வாளி போடுகிறவனை பத்துப்பேர் சேர்ந்து பிடித்தாலும் அமைக்க முடிவதில்லை. இதெல்லாம் ஒரு வெறிச்சியில் செய்கிற காரியம் என்று நினைத்தார். <br /> <br />மேலே ஏறி எந்த ஆசில் இருந்து கொண்டு கட்டிய கொடிக்கம்பத்தை அவிழ்ப்பது என்று பார்த்தார். நினைக்க நினைக்க உடம்பு புல்லரித்தது. தவறிக் கீழேவிழுந்தால் அவ்வளவு தான். நச்சத்திரம் கழண்டுறும் என்பதோடு கழைக்கூத்தாடிக்காரன் சொல்லுவது போல எண்ணுவதற்கு ஒரு எலும்புக்கூடக் கிடைக் காது ! <br /> <br />இறங்கிக் கீழே வந்த விஷயத்தைச் சொன்ன கிராம முன்சீப்பிடம் அதைக் கேட்டவர்களுக்கு மகிழ்ச்சியும் குஷியும் ஏற்பட்டது. <br /> <br />ஒருத்தருக்கொருத்தர் கலந்து யோசித் தார்கள். இது யார் செய்த காரியமாக இருக்கும் என்று. கொத்தனார் சாமிநாயக்கரும் அங்கே இருந்தார். துண்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு, குளத்தின் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்து முழங்கால்களை ஆட்டிக் கொண்டு, இந்தத் தலையாரி எப்படித்தான் அந்தக் கொடியை அவிழ்க்கிறான் பார்ப்போம் என்று. அவருக்குப் பக்கத்தில் வந்து செவிட்டு குருசாமி நாயக்கர் உட்கார்ந்து கொண்டு சந்தோஷத் துடன் கேட்டார் ''இத எப்பிடி அங்கன போயி கட்டியிருக்கான்!'' சாமிநாயக்கர் பதில் சொல்லாமல் வேகமாகக் காலை ஆட்டினார். மனசுக்குள் 'எங்கலெ வந்து மெல்ல விளாறு ஒட்டுதெ' என்று நினைத்துக் கொண்டார். <br /> <br />பேருதான் செவிட்டு குருசாமி நாயக்கர். யாருடைய ரகசியங்களும் அவர் காதுக்குள் நுழைந்துவிடும். நுழைத் வேகத்தில் பத்து ஜோடி காதுகளில் போய் எதிரொலிக்கும். யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும், செவிட்டு குருசாமி நாயக்கர் வாரார் என்றால் பேச்சை நிப்பாட்டி விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள் ! <br /> <br />கிராமத்தில் எப்பவாவது சில காரியங்கள் நடக்கும். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று யூகிக்கவே முடியாதபடி இருக்கும். அப்போது செவிட்டு குருசாமி நாயக்கர் எங்கே என்ற எல்லோரும் தேடுவார்கள். அவரும் ஓடியாடி, விஷயத்தின் நுனி நூலைப் பிடித்துக் கொண்டு வந்து தந்துவிடுவார். <br /> <br />இளவட்டங்களின் ஒருமித்த ஏளனப்பார்வை தலையாரியை உசுப்பிவிட்டு விட்டது. குழை அறுக்கும் கத்தி கட்டிய தொறட்டிக் கம்பை எடுத்துக்கொண்டு வந்தார் வேகமாக. மரத்தில் ஏறி, அதைக் கொடுக்கச் சொல்லி வாங்கி, ஒவ்வொரு கொம்பிலும் அதைத் தொங்கவிட்டுக் கொண்டே மேலே ஏறிப்போனார். வசமான ஒரு கிளையில் இருந்து கொண்டு உச்சிக்கொம்பில் கட்டிய கயிற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அறுத்துக் கொடியோடு கம்பைக் கீழே விழச்செய்தார். <br /> <br />கீழே விழுந்த கொடியை கிராம முன்சீப் அதைக் கம்பிலிருந்து பிரித்து எடுத்தார். அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை ! வீட்டுக்கும் கொண்டு போக முடியாது கச்சேரியில் வைத்துக் கொண்டிருக்கமுடியாது. பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் களிமண் பிள்ளையாரை குளத்து தண்ணீரில் கொண்டு போய் போடுவதுபோல, அவர் அதில் நாலைந்து கற்களை எடுத்து வைத்து மூட்டைபோல் கட்டினார். குளத்தில் கொண்டு போய் வீசி எறிந்துவிட்டு, விசுக்விசுக்கென்று வேகமாக வீட்டைப் பார்க்க நடந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கைதட்டிப் பலமாகச் சிரித்தார்கள். <br /> <br />இது நடந்து கொஞ்சநேரத்துக்கெல்லாம், பார்வதியம்மன் கோவிலுக்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மாட்டு வண்டிக்கு அருகே நின்றுகொண்டு ''ஊர்பய பிள்ளைகளை'' வாய்க்கு வந்தப்படி திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார் வெல்லம் ரங்கசாமி நாயக்கர்.</span></td> </tr><tr><td style="padding-bottom: 10px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 10px" align="center"><!--<img src="BannerImages/bannersample.gif" border="0">--></td></tr><tr><td class="content"><span id="lblContent2">அருடைய வண்டிப் பைதாவில் யாரோ சாக்பீஸால் வந்தேமாதரம் என்று எழுதிவைத்து விட்டார்களாம். ''நா ஒரு வண்டி வச்சிப் பெளைக்கிறது இந்தப் பயபிள்ளெகளுக்குப் பிடிக்கலெ'' என்று சொல்லிக் கொண்டே அதை அழித்தார். அழித்ததில் எழுத்துக்கள் கலைந்த தே தவிர மறையவில்லை. வாளியில் தண்ணீர் கொண்டு வந்து துணியை மூக்கித் துடைத்துக் கொண்டிருந்தபோது செவிட்டு குருசாமி நாயக்கர் வந்து ''என்ன மாமா இது?'' என்று விசாரித்தார். ''பாத்தியாடா இந்த கொடுமயெ; எந்த நாறப்பய புள்ளையோ வந்து ஏம் வண்டியில் 'வந்தேமாதம்' எழுதித் தொலைச்சிருக்கான் பாத்துக்கொ.'' <br /> <br />''அதானெ மாமா, சர்க்காருக்கு தெரிஞ்சா அம்புட்டுதான். வண்டியும் பொயிரும், நீங்களம் கம்பியெ எண்ணணும். செருக்கிபிள்ளையளுக்கு வந்தே மாதரம் எழுத வேற எடமே கெடைக் கலை பாத்தியளா !'' <br /> <br />வேகம் வந்துவிட்டது வெல்லம் ரங்கசாமி நாயக்கருக்கு. தனக்கு எத்தனை வசவுகள் தெரியுமோ அத்தனையும் மனப்பாடமாக ஒப்பிப்பதுபோல மள மளவென்று சொல்லிக் கொண்டே போனார். <br /> <br />ஊர்ப்பிள்ளைகளெல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது வேறு அவருக்கு எரிச்சலாக இருந்தது. அவர்களைப் பார்த்து எரிந்த விழுந்தார். அவர்கள் நகருவது போல பாவலாக் காட்டினார்களே தவிர நகரவில்லை. ஆகவே அவர்களையும் ஒரு பாட்டம் வசவுகளால் 'அர்ச்சனை' செய்துக் கொண்டே வாளியையும் துணியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் கிளம்பினார். நாலு எட்டுகள்தான் எடுத்து வைத்து நகர்ந்திருப்பார். யாரோ ஒரு பையன் அவரைப் பார்த்து வந்தே மாதரம் என்று கத்தினான். மற்ற பிள்ளைகள் அதை வாங்கிச் சொன்னார்கள் ! <br /> <br />நாயக்கருக்கு ஆங்காரம் வந்துவிட்டது. ''எவண்டா அவன் வந்தே மாதரம் சொன்னது'' என்று கேட்டார். <br /> <br />''பொடிப்பய புள்ளக. நீங்க போங்க மாமா'' என்று சமாதானப்படுத்தினார் செவிட்டுக் குருசாமி நாயக்கர். <br /> <br />சமாதானம் பண்ணவும் சேர்த்துப் பிடித்துத் தடுக்கவும் ஒரு ஆள் கிடைத்துவிட்டால் அதுக்கென்று ஒருவேகம் வருமே; அந்த 'வேகம்' வந்தது வெல்லம் ரங்கசாமி நாயக் கருக்கு. அதன் பலனை அவர் ஆயுள் பூராவும் அனுபவித்தார் ! தினமும் காலையில் வந்து பார்க்கும் போதெல்லாம் அவருடைய வண்டிப் பைதாவின் அலகில் வந்தே மாதரம் எழுதியிருப்பதும், அதை அவர் வாளியும் தண்ணீரும் கொண்டு வந்து துடைத்துக் கொண்டே வைது விட்டுப் போவதும் கொஞ்ச நாள் இருந்தது. ஒருநாள் காலையில் வாளியும் தண்ணீரோடும் வந்து பார்த்தபோது, சாக்பீஸ¤க்கு பதில் கீல் எண்ணெய் கொண்டு எழுதப்பட்டிருந்தது! ரொம்ப நேரம் அதைச் சொரண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அன் றைக்கு அவர் வேலைக்குப் போக முடியவில்லை. இனி வண்டியை வெளியே வைத்தால் சரிப்பட்டு வராது என்று பைதாக்களை அச்சிலிருந்து உருவி எடுத்து, சட்டத்தையும் வீட்டுத் தொழுவுக்குள் கொண்டுபோய் வைத்துக் கொண்டுவிட்டார். பிரச்சனை அதோடு முடியவில்லை. எந்நேரமும் நாலு பையன்கள் அவருடைய வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டே கொஞ்சதூரத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் அவருடைய தலை தெரிய வேண்டியதுதான் தாமதம், வந்தே மாதரம் என்று கத்துவார்கள். திட்டிக் கொண்டே அவர்களைக் கொஞ்ச தூரம் விரட்டுவார். தெருவிலோ காட்டிலோ எங்கே அவரைக் கண்டாலும் பிள்ளைகள் வந்தே மாதரம் என்று தூரத்தில் இருந்து கொண்ட கூப்பாடு போட்டுச் சொல்லுவார்கள். <br /> <br />ஊர்மடத்துக்கு முன்னால் பிள்ளைகள் தெல்லு விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் யாரோ ரண்டுபேர் வந்து வெல்லம் ரங்கசாமி நாயக்கர் வீடு எது என்று பையனிடம் விசாரித்தார்கள். <br /> <br />''என்னது, வெல்லம் ரங்கசாமி நாயக்கரா'' என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டான் அதில் ஒரு பையன் ஒன்றுமே தெரியாதது போல. <br /> <br />''அதாண்டா நம்ப வந்தேமாதர நாயக்கர் வீட்டைக் கேக்கறாங்க'' என்றான் மற்ற ஒருவன். <br /> <br />''வந்தே மாதர நாயக்கரா!'' என்று கேட்டார் வந்தவர்களில் ஒருத்தர். <br /> <br />''ஆமாம். அது தெரியாதா ஒங்களுக்கு? அவரு இப்ப வந்தேமாதரம் கட்சியிலெ சேந்துட்ட ரில்லெ'' என்றான் பையன். இவர்கள் சிரித்த விதம் வந்தவர்களுக்கு, இது தெரியாதா உங்களுக்கு என்பது போல் பட்டது. <br /> <br />''ஏங்கூட வாங்க நாங் காட்டுரென்'' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய், ''அந்தோ தெரியிதில்லெ, அந்தக் கல்லு வீடுதான்'' என்று காட்டிவிட்டு வந்தான். <br /> <br />''என்னடே ''வந்தே மாதரம்'' இருந்தாரா? என்று மடத்தில் பதினைஞ்சாம்பிள்ளை விளையாட்டில் உட்கார்ந்து ஆடிக்கொண்டி ருந்த கொண்டுசாமி கேட்டார் குறும்பாகச் சிரித்து. <br /> <br />''இருக்காரு, தொளுவுக்குள்ளெ சத்தம் கேட்டது'' என்றான். <br /> <br />''என்ன விசயமாத் தேடி வந்திருக்காகளாம்?'' <br /> <br />''பசுமாடு ஒண்ணு வெலைக்கி நிக்கில்லா அவரு தொளுவுல; அதெ வாங்கீட்டுப்போக'' <br /> <br />''அத அவரு யான வெலெ குருதெ வெலெ சொல்லுவா ரெ'' <br /> <br />''சொன்னா என்ன வந்தேமாதரம்னு மாத்திரம் சொல்லுங்க; செ, நம்ம கச்சி ஆளுகள்ளெ வந்திருக்காக போலுக்குன்னு நெனச் கொஞ்சம் கொறைச்சிக் கொடுத்துருவாருன்னு சொல்லிக் கொடுத்துட்டுத்தாம் வந்திருக்கென்'' என்று அந்த வினாடியில் அவனுக்குத் தோன்றியதைச் சொன்னான். அவனுடைய கற்பனையை மடத்தில் இருந்தவர்கள் பாராட்டிச் சிரித்தார்கள். <br /> <br />நுன்னகொண்டநாயக்கர் ஒருநாள் வெல்லத் தைக் கூப்பிட்டு ''ஏண்டா யாரு என்ன சொன்னா ஒனக்கென்ன. எதுக்காக அப்படிக் கோவப் படணும். நீ அப்படிக் கோவப்படப்படத்தான் அதும் அதிகமாகும்'' என்று சண்டை பிடித்தார். ''நா யாருக்கு என்ன செஞ்சென் பெரியப்பா. என்ன இப்படிக் கண்ணுலெ காங்காம வையிராங்களெ'' என்று சொல்லும்போது அவருக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. <br /> <br />வெல்லம் ரங்கசாமி என்று துலங்கி வந்த அவருடைய பெயர் அதன்பிறகு ''வந்தேமாதர நாயக்கர்'' என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர் விரும்பினாலும் - விரும்பாவிட்டாலும் அதுவே அவருடைய பட்டப்பெயராக நிலைத்து நின்றது அவருடைய வாழ்நாள் பூராவும் ! அதுக்குப் பிறகும்கூட. <br /> <br />கையில் கரித்துண்டோ சாக்பீஸோ எது கிடைத்தாலும், சுவர் என்று ஒன்று கிடைத்து விட்டால் அந்தவூர் குழந்தைகள் தப்பும் தவறுமாக வந்தேமாதரம் என்று எழுதியும் கை ராட்டையில் படத்துடன் மூவர்ணக் கொடி யையும் வரையாமல் விடமாட்டார்கள். <br /></span></p> </td> <p></p> <p>*****</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-55977824445944485302010-01-25T21:38:00.000-08:002010-02-15T03:17:04.550-08:00கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது<p><strong>கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது </strong><strong>வழங்கும் விழா</strong></p> <p> <a href="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S15_4VBGv4I/AAAAAAAAFgA/Vh8KAaVqZgE/s1600-h/nambi2562%5B7%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="nambi2562" border="0" alt="nambi2562" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S15_5WH3d9I/AAAAAAAAFgE/kaTXnoFMDjA/nambi2562_thumb%5B5%5D.jpg?imgmax=800" width="237" height="280" /></a></p> <p>நாள்: 31 ஜனவரி 2010 <br />நேரம்: மாலை 6 மணி <br />இடம்: இக்ஸா செண்டர், <br />107 பாந்தியன் சாலை, <br />எழும்பூர், சென்னை – 8 <br />(எழும்பூர் மியூசியம் எதிரே)</p> <p>வண்ணநிலவன் <br />சி.மோகன் <br />அ.மார்க்ஸ், <br />எஸ்.ராமகிருஷ்ணன் <br />சமயவேல் <br />சங்கர ராம சுப்ரமணியன் <br />வித்யாசங்கர்</p> <p>விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள்.</p> <p>கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.</p> <p>‘நாடக வெளி’ ரங்கராஜன் ‘விளக்கு விருது’ அமைப்பினர் சார்பாக இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.</p> <p>அனைவரும் வருக</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-69151383824538795582010-01-25T21:34:00.000-08:002010-02-15T03:17:04.558-08:00எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது<p> </p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S15-8ojvmJI/AAAAAAAAFf4/FM4wjl_SQKg/s1600-h/IndiraParthasarathi%5B5%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="IndiraParthasarathi" border="0" alt="IndiraParthasarathi" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S15--agQlfI/AAAAAAAAFf8/6env7Ng4ur4/IndiraParthasarathi_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="227" height="279" /></a> </p> <p>நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.  இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்; 81 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள்.</p> <p>எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஜாம்பவனான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (வயது 80) கும்பகோணத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கநாதன் பார்த்தசாரதி. <br />கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழில் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கிய உலகில் சிறந்த எழுத்தாளராக உயர்ந்த இவர், ஏசுவின் தோழர்கள், சத்திய சோதனை, குருதி புனல், தந்திரபூமி, ராமானுஜர், வெந்து தணிந்த காடுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார்.</p> <p>இவர் மொத்தம் 15 நாவல்கள், 4 குறுநாவல்கள், 6 சிறுகதைகள், 10 நாடகங்கள், 2 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை படைத்துள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட இவர், சாகித்திய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்பட 8-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறா</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-17511476652995394582010-01-24T09:30:00.000-08:002010-02-15T03:17:04.571-08:00நெருப்புக் கோழி - ந.பிச்சமூர்த்தி<blockquote> <p><strong>ந.பிச்சமூர்த்தி</strong></p> </blockquote> <p>நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள்தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்.</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S1yDsTZ263I/AAAAAAAAFfA/w7jw04_BTag/s1600-h/Untitled%5B9%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="Untitled" border="0" alt="Untitled" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S1yDttAcBHI/AAAAAAAAFfE/8-oZRw4D78Y/Untitled_thumb%5B7%5D.jpg?imgmax=800" width="389" height="289" /></a> </p> <p>வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. 'கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல' என்று இப்பொழுதுதானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, பழவகைகளின் குண தத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வது நடுவயதிற்கப்பால் தானே! <br />பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம்; அல்லது கிட்டுப்புள்ளுக்குக் கொய்யாக் கழியை விடச் சிறந்ததொன்றில்லை என்ற நினைப்பாய் இருக்கலாம். தவிர, கை எட்டக் கூடிய தூரத்தில் கொய்யா தொங்கிக் கொண்டிருந்தால், நாளைக்கு வரும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேல் என்று தோன்றாதா? கருவேப்பிலைப் பழத்தைக் கூட ருசித்துச் சாப்பிடக்கூடிய வயதாயிற்றே!</p> <p>ஆனால், எவ்வளவு ஆசைப்பட்டாலும் மரத்து நிழலைக் கூட மிதிக்க முடியாது. ஏனென்றால், தோட்டக் காவல்காரன் லயன் கரையின் மேல் நந்தியைப் போல் எப்பொழுதுமே உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகையால்,தினம் கொய்யா மரத்தின் தரிசனத்துடன் திருப்தி அடைந்தேன்.</p> <p>நரி முகத்தில் விழிப்பது என்பது மெய்யாகக் கூட இருக்கலாம். இல்லாவிட்டால் நானும், என் நண்பர்களும் லயன் கரைப் பக்கம் போன பொழுது தோட்டக்காரன் இல்லாமல் இருப்பானேன்? எங்கள் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது! வேகமாகச் சென்று, ஆளுக்கொரு பக்கம் கொய்யாவைக் கொய்து கொண்டிருந்தோம்.'மளக்'கென்று ஏதோ குச்சி ஒடியும் சத்தம் கேட்டது. மரத்தின் மேலிருந்த நான், உஷாரடைந்து இறங்கத் துவங்கினேன். மறுபடி இலைகளில் நடப்பது போன்ற சலசலப்பின் ஓசை காதில் விழுந்தது. தொடர்ந்து புதரை விலக்கிக் கொண்டு ஒரு கையும், முண்டாசும் தெரிந்தது. தோட்டக்காரன்! அவ்வளவுதான்; என் நண்பர்கள் சிட்டாய்ப் பறந்து விட்டனர்; நான் பாதி மரத்திலிருந்து குதித்தேன். அதற்குள் தோட்டக்காரன் என்னண்டை வந்துவிட்டான். நான் அலங்கமலங்க விழித்தேன்.</p> <p>"ஏம்பா கொய்யாக்காய் பறித்தாய்?"</p> <p>நான் மௌனம் சாதித்தேன். வெறும் துண்டை மட்டும் நான் போட்டுக் கொண்டிருந்ததால், அவன் வெடுக்கென்று சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதுதான் சாக்கென்று நான் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.</p> <p>"என்ன தம்பி, கொய்யாக்காயைத் திருடிவிட்டு, டம்பமாய் கம்பி நீட்டுகிறாயே?"</p> <p>"திருட்டென்னப்பா? வேணுமென்றால் கொய்யாக்காய்க்குக் காசு வாங்கிக்கொண்டு போயேன். சின்னப் பையன் என்றுதானே சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டாய். அதை எடுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே முறைப்பாய் நின்றேன். மனதிற்குள் உதைப்புதான்.</p> <p>"சவுக்கத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ... போ... போ" என்று அவன் கருவினான்.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S1yDugokbQI/AAAAAAAAFfI/td4QQCqyYZM/s1600-h/na_pitchamurthy%5B11%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="na_pitchamurthy" border="0" alt="na_pitchamurthy" align="left" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S1yDwGUZooI/AAAAAAAAFfM/mH3ZOzE7Tls/na_pitchamurthy_thumb%5B9%5D.jpg?imgmax=800" width="214" height="238" /></a> இதுதான் சாக்கென்று நான் நடையைக் கட்டினேன். <br />இந்த சம்பவம் நடந்தபொழுது என் மனம் பட்ட பாட்டைப்பற்றிப் பின்னர் எண்ணும் போது வெற்றி உணர்ச்சிதான் தலைதூக்கி நின்றது. என் வாக்கின் திறமையல்லவா வெற்றி கொண்டது. அதை மனத்திற்குள் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இல்லாவிட்டால் கன்னம் பழுத்திருக்காதா? இதைப் போலவேதான் மற்றொரு நிகழ்ச்சியும். எங்கள் வீட்டில் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள்! தினந்தோறும் வீட்டில் ஒரு தமாஷ்! குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு வரும். எதுவோ வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு, பிறகு எல்லாமாகக் கொல்லைக்கட்டு திண்ணையில் வந்து கூடிவிடும். 1-ம் நம்பர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு திண்ணையில் உட்காரும். 2, 3, 4 குடும்பத்துக் குழந்தைகள் எதிர்த்தாற்போல் வந்து நிற்கும்.</p> <p>"உட்கார். வாய்மேல் கை வை" என்றதும், குழந்தைகள் உட்காரும்.</p> <p>"பிரார்த்தனை கீதம்", "அருள் புரிவாய் கருணைக் கடலே" என்று குழந்தைகள் ஆளுக்கொரு ஸ்தாயில் கத்தும்.காமாட்சி வந்து கை நீட்டியதும், அதில் இரண்டடி விழும். வாங்கிக்கொண்டு, தன் இடத்திற்குத் திரும்பி விடுவாள். இதற்கிடையில் வாத்தியார் பிள்ளைகளை அடித்தால், கசமுசவென்று பேசுவார்களே, அதே மாதிரி இந்தக் குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கும். <br />"பேசாதே, அடிச்சூடுவேன்."</p> <p>கப்சிப் என்ற மௌனம். இம்மாதிரி மாலைக் காட்சி ஒன்று தினம் வீட்டில் நடைபெறுகிறது. வாத்தியார் அடித்து விட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை நடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காணுகிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ,அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு!</p> <p>இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்?வாழ்க்கையில் தாங்க முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்? <br />இவைகளை எல்லாம் நினைக்கும் பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப் பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும்,குளுமையையும் தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்?</p> <p>இந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கிறது. காலம் என்று மற்றொன்றிருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையே காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும் பொழுதே, அவைகளுக்குப் புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண்போல் மனத்தில் காட்சி அளிக்கிறான்.அடிபட்ட பள்ளிப் பிள்ளைகள் போலிப் பள்ளிக்கூடம் நடத்தி இன்பம் அடைகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்குத் தாளம் போடுகிறவன் நாடகத்தில் ராஜாவாக நடைபோடுகிறான். சூரியனின் கிரணம் சந்திரனை வந்து அடையும்பொழுது, காலம் கடந்துவிடவில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயஜாலமா?</p> <p>அல்லது,</p> <p>சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமோ?சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷதம் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாய சக்தி மனத்திற்கும் இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும், மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனத்திற்கும் இருக்குமோ? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவதுதான் கலையோ?</p> <p>****</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-80536314165183623842010-01-22T17:51:00.000-08:002010-02-15T03:17:04.583-08:00ஊமைத் துயரம் - நீல பத்மநாபன்<blockquote> <p><b>நீல</b><b> </b><b>பத்மநாபன்</b></p> </blockquote> <p>ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது.</p> <p>விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் கொண்டிருந்த காலை நேரம்...</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S1pWCqj7VNI/AAAAAAAAFeo/Shga6SMKQYA/s1600-h/expressionism-3%5B29%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="expressionism-3" border="0" alt="expressionism-3" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S1pWD7FNILI/AAAAAAAAFes/U21qKczTFzY/expressionism-3_thumb%5B27%5D.jpg?imgmax=800" width="292" height="321" /></a> </p> <p>அழைப்பு மணி வீறிட்டது.</p> <p>வெளிக்கதவு திறக்கும் சப்தம். ஒரு நிமிட நேர நிசப்தம். பிறகு தன் அருகில் வரும் காலடியோசை கோமதியின் குரல்... யாரோ உங்களைத் தேடி வந்திருக்காங்க...</p> <p>'யாராம் ? ' அவனுக்கு எரிச்சலாக வந்தது. 'சரியாக தெரியல்லே. அண்ணைக்கு ஒரு நாள் காலம்பற வந்த நம்ம ஊமையன் செத்துப் போணாண்ணு சொல்லி ரூபா வாங்கிகிட்டுப் போனவண்ணு தோணுது '.</p> <p>திடாரென்று நித்திரை தேவி போன இடம் தெரியவில்லை, அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். அந்தக் காலைக் குளிரிலும் அவன் உடம்பு உஷ்ணம் அடைந்தது.</p> <p>'யாரு... அந்த ஊமையனின் மருமகன் பொன்னையனா... ? '</p> <p>'அப்படிண்ணு தான் தோணுது... '</p> <p>அவனைக் கண்டு சூடா நாலுவார்த்தைக் கேட்க வேண்டுமென்று நாராயணனுக்கு சகிக்க முடியாத ஆத்திரம் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த வாய்ப்பு இப்படி தன்னைத் தேடி தன் வீட்டுக்கே வந்து சேருமென்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.</p> <p>தூக்கம் எழுந்ததும் நிலைக் கண்ணாடியில் போய் விழிக்கும் நித்ய பழக்கத்தைக்கூட மறந்து அவன் விரைந்து நடந்து வெளியில் வந்து முற்றத்தில் நிற்கும் பொன்னைய்யன் முகத்தில்தான் விழித்தான்.</p> <p>இரண்டு மாதம் முந்தி தன்னைப் பார்க்க வந்த அதே பாவம். நரைத்த தலைமயிர், தாடி, மீசை, கன்னங்கரிய மெலிந்த குட்டையான உருவம் ஒரு அசட்டுச் சிரிப்பு.</p> <p>தொண்டை முழுதும் திறந்து காரசாரமாக கேட்க வேண்டியிருந்ததையெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு இன்றைய அவன் நல்வருகையின் உத்தேசத்தை அறியும் பொருட்டு, உம் என்ன ? என்று வினவினான் அவன்.</p> <p>'இல்லே என் மாமனார் க்ளோஸ்... '</p> <p>நாராயணனுக்கு குபீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.</p> <p>உன் மாமனார் பாவி எத்தனை தடவைதான் உனக்கு வேண்டி சாவணும் ? ரெண்டு மாச முந்தி நீயல்லவா எங்கிட்டேவந்து அவன் செத்துப் போனாண்ணு சொல்லி பத்து ரூபா வாங்கிகிட்டுப் போனே, அண்ணைக்கு சாயந்திரம் குத்துக்கல்லுப்போல் ஆரியசாலை ஜங்கஷனில் கடை நடையில் அவன் உட்கார்ந்திருப்பதை நான் கண்ணாலே பார்த்தேன்.</p> <p>- அந்த கட்டத்தைச் சொல்லச் சொல்ல அவன் கோபத்தின் கொதிநிலை டிகிரி மேலே மேலே ஏறிக் கொண்டே சென்றது; மேற்படி சாவு சம்பவம் நடந்ததாக இவன் சொல்லி அறிந்த அன்று முழுதும் இன்று போல்தான் காரியாலயம் செல்லும்போதும், அங்கே வேலையில் ஈடுபட்டிருந்த போதும், பிறகு மாலையில் வீடு திரும்பும் போதும் எல்லாம் முழுக்க முழுக்க ஊமையனைப் பற்றிய பழைய நினைவுகள்தான். வழியில் டாக்கடைச் சந்தில் வைத்து பொன்னைய்யன் மிகவும் அலங்காரமாய் ஆர்பாட்டமாய் பேசிக்கொண்டு நிற்பதைக் கண்ட போதே இவனுக்குச் சிறிது சந்தேகம் தட்டியது. பிறகு வீட்டுக்குப் போய் உடைமாற்றிவிட்டு மாலையில் நடக்க இறங்கிய போது ஆரியசாலை முனையில் அடைத்துக்கிடந்த ஒரு கடை நடையில் மிகவும் விச்ராந்தியாக தன் இரண்டு யானைக் கால்களையும் நீட்டி அதைச் செல்லமாக தடவுவதிலும் அங்கங்கே பூத்துக் காய்ந்திருந்த கொப்புளங்களிலிருந்து தோலை நேர்த்தியாக உரித்து எடுப்பதிலும் பரமானந்தமாய் லயித்து உட்கார்ந்திருந்த ஊமையனைக் கண்டதும், செத்துப் போனதாக சொல்லப்பட்ட மனுஷன் உயிரோடு சுகமாய் இருக்கிறானே என்று அவனுக்குத்துளி கூட மகிழ்ச்சியோ ஆசுவாசமோ ஏற்படவில்லை மாறாகத்தான் ஏமாற்றப்பட்டோம் என்று அவனுக்கு வந்த ஆத்திரமும் அவமானமும் கொஞ்ச நஞ்சமல்ல. பிறகு அடுத்த தெருவில் தன் அம்மாவும் சகோதரர்களும் வசிக்கும் குடும்ப வீட்டுக்குப் போனபோது, நடந்ததை அவனிடமிருந்து கேள்விபட்ட அம்மா சொன்னாள்:</p> <p>'உனக்குத் தெரியாதடா பொன்னைய்யன் மகா குடிகாரன்; ஊமையன் செத்துப்போனதாகச் சொல்லி அவன் இழவுச் செலவுக்குண்ணு எல்லோர்கிட்டேயும் ரூபாய் வாங்கி சாராயம் குடிப்பதுதான் அவன் வேலை, இனி வந்தால் ஒன்னும் கொடுக்காதே '.</p> <p>அதைக் கேட்டு அவன் ஏமாற்றப்பட்டது இன்னும் ஊர்ஜிதமான போது அவனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இருந்தும் அதுக்கென்ன ' என்னைக்கு ஆனாலும் ஊமையன் இழவுச் செலவுக்குண்ணு ஏதாவது கொடுக்கணுமுண்ணு இருந்தேன். அதை இப்போ கொடுத்தாச்சு. இனி நிஜமாக அவன் சாவும்போது கொடுக்கப் போவதில்லை என்று சொல்லிச் சமாளித்தான். ஆனால் அதை அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. 'அது எப்படிடா ' அவன் மகள் மாப்பிள்ளை இப்படி ஏமாற்றினதுக்கு பாவம் ஊமையன் என்ன செய்வான் ' '</p> <p>'ஊமையன் நிஜமாக மண்டையைப் போடும்போதும் அவன் இழவுச் செலவை ஊமையன் கையிலா கொடுக்கப் போறோம். அப்போதும் இந்தப் பொன்னைய்யன் தான் வந்து வாங்கிகிட்டு போகப் போறான் ' அதை இப்பவே கொடுத்தாச்சு அவ்வளவுதான் ' அவனுக்கு ஏனோ இப்படிச் சொல்லும் போதுதான் உட்பட்ட எல்லோர் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.</p> <p>அன்றிலிருந்தே மனதில் கருவிக்கொண்டிருந்தான். என்றைக்காவது எதுக்காவது வேறொண்ணுக்கும் இல்லாவிட்டாலும் ஊமையன் நிஜமாக சாவும் போதாவது பொன்னைய்யன் தன்னிடம் வராமலா இருக்கப் போகிறான்.</p> <p>அப்போ காரசாரமாக நாலு வார்த்தை கேட்கணும் '... அப்படி இதோ அந்த தருணம் வாய்த்து விட்டிருக்கிறது.</p> <p>பொன்னைய்யனின் முகம் சிறுத்துவிட்டது. இல்லே இப்போ நிஜமாகவே ஆள் க்ளோஸ். ஊர்க்காரங்க எல்லோரும் வந்துட்டாங்க , ஆஸ்பத்திரிலிருந்து என் வீட்டில் கொண்டு வந்து கிடத்தியிருக்கிறேன் வேறொண்ணுமில்லே. அதைத்தான் தெரிவிச்சுகிட்டுப் போக வந்தேன் என்று கூறிவிட்டுத் திரும்பிப் போக அவசரப்பட்டான் அவன்.</p> <p>இப்போது நாரயணனின் நெஞ்சம் தளர்ந்தது பாவம்... ஊமையன் ' இருந்தும் குரலில் இருந்த இறுக்கத்தைச் சற்றும் தளர்த்தாமல் 'எப்போ எடுப்பாங்க ? ' என்று கேட்டான்.</p> <p>'அதிக நேரமாகாது; ஊர்க்காரங்க வரத் தொடங்கியாச்சு. இதை தெரிவிச்சுகிட்டுப் போகத்தான் வந்தேன் நான் வரேன் ' என்று கூறிவிட்டு அவன் அவசரம் அவசரமாக வெளியேறி தெருவில் இறங்கி நடந்து மறைந்தான்.</p> <p>பிறகு யந்திரரீதியில் பல் தேய்க்கும்போதும் குளிக்கும்போதும், காப்பி சாப்பிடும்போதும், காரியாலயம் செல்லும்போதும் எல்லாம் நாராயணனின் நெஞ்சில் ஒரு குற்றவாளி உணர்ச்சியின் கனம் அழுத்திக் கொண்டிருந்தது.</p> <p>என்ன ஆனாலும் பொன்னைய்யனிடம் அப்படி முகத்தில் அறைந்தது போல் இந்தக் கட்டத்தில் சூடாகப் பேசியிருக்கக் கூடாது. ஏதாவது கொடுத்திருக்கலாம். வீதியில் ஜனக் கூட்டத்தின் இடையில் நடந்து கொண்டிருந்த அவன் மனம் இப்போதும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தது.</p> <p>பாவம்...ஊமையன்</p> <p>செவியும் கேட்காது. பேச்சும் வராது. காலமாகிப் போன தன் அப்பாவைவிட ஒரு பதினஞ்சு வயது கூடுதல் இருக்கும். இப்போ ஒரு எழுபத்தஞ்சு வயசிருக்கலாம்.</p> <p>ஆமாம்... அவனுக்கும் தன் குடும்பத்துக்கும் என்ன சொந்தம் ? நாராயணன் அறிந்தவகையில் சுய ஜாதி என்பதைத் தவிர வேறு எந்த சொந்தமோ பந்தமோ இல்லை. ஆனால் தனக்கு அறிவு வந்த காலம் முதல் இரண்டு ஆண்டுகளுக்குமுன் தன் அப்பா காலமாவது வரையிலும் காலைப் பொழுது முழுதும் இந்நகரின் கடைத் தெருவில் எல்லாம் சுமை தூக்கும் ஊமையன், ராத்திரி பனிரெண்டு மணி வாக்கில் தங்கள் வீட்டு வெளித் திண்ணையில் வந்துதான் படுப்பான். பத்து ஆண்டுகளுக்கு முன் பாட்டி <a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S1pWFM6kaJI/AAAAAAAAFew/5_rIrm1ek-g/s1600-h/neelapadm%5B41%5D.gif"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="neelapadm" border="0" alt="neelapadm" align="right" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S1pWHGiiEPI/AAAAAAAAFe0/RrzR1RaYrEM/neelapadm_thumb%5B39%5D.gif?imgmax=800" width="236" height="284" /></a> இறப்பது வரையில், வந்ததும் அன்றைய விசேஷங்களை பே....பே... என்ற ஒரே வார்த்தைப் பிரயோகத்தாலும் முகபாவத்தாலும் கை சைகையாலும் அரைமணி நேரமாவது பாட்டியிடம் பேசித் தீர்க்காமல் ஊமையன் தூங்குவது இல்லை. வீட்டில் அனைவரும் சற்று நேரத்திற்கு அவனைப்போலவே செவியும் நாக்கும் இயங்காத ஊமையர்களாக மாறி, அவனிடம் சம்பாஷனை செய்யாமல் தூங்கப் போவது இல்லை. அந்த அளவுக்குக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தான் ஊமையன். அவனிடம் எல்லோருக்கும் ஒரு தனி வாஞ்சை. அவனிடம் பேசுவதில் பாட்டிக்கும் அப்பாவுக்கும் இருந்த ஒரு பிரத்யேக தேர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் சிறுவர் சிறுமிகள் உட்பட எல்லோரும் கைவரப் பெற்றிருந்தார்கள்.</p> <p>அவன் நெஞ்சு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டது. அண்ணைக்கு ஊமையன் நிஜமாகவே செத்துப் போயிருப்பானா ? இன்னும் சற்று நேரத்தில் வழியில் ஆரிய சாலை ஜங்ஷன் எதிர்ப்படும். அங்கே அன்று போல் கடை நடையில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் ஊமையனைக் காண நேர்ந்து விடுமோ... ?</p> <p>-இப்படி நினைக்கும் அளவுக்குத் தன் மனம் கொடுமையானதாக ஏன் மாறுகிறது என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் சாகாமலிருப்பதில் தனக்கு ஏன் இந்த ஏமாற்றம் ? அவன் பாட்டுக்கல்லவா உயிருடன் இருக்கிறான் ' அதனால் தனக்கு என்ன நஷ்டம் ?</p> <p>இப்போது மறுபடியும் அவனுக்குப் பொன்னைய்யன் மீது கோபம் கோபமாக வந்தது. படுபாவி ஊமையனின் மகளைக் கட்டியிருக்கான். இருந்தும் இப்படியா தன் மாமனார் சீவனை சாக்கு சொல்லி பணம் பறிப்பான்... ' அவனால் தானே தன் மனமும் இப்போ இப்படியெல்லாம் விசித்திரமாக இயங்குகிறது.</p> <p>சின்ன வயது நாட்களில் பாட்டியிடமிருந்தும் அப்பா அம்மாவிடமிருந்தும் ஊமையனைப் பற்றிக் கேட்டறிந்த தகவல்கள் தனக்கு ஞாபகம் இருக்கிறது.</p> <p>ஊமையனின் சொந்த ஊர் இங்கிருந்து நாற்பது மைல் தொலைவிலிருக்கும் பத்மநாபுரம், அவன் அப்பாவுக்கும் அவனைப் போலதான் செவி கேட்காது; பேச்சும் வராது. அம்மாவுக்கும் இரண்டு கண்ணும் தெரியாது. </p> <p>குழந்தைகளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. பத்து பிள்ளை பெற்றதில் மூத்தவன் இவன் மட்டும்தான் தேக ஆரோக்கியமாக இருந்தான். மற்றவங்களுக்குப் பலவித ஊனங்கள், ஊர்க்காரங்க மனமிரங்கி ஏதாவது கொடுத்தால் உண்டு, மற்ற நேரங்களில் முழுப் பட்டினி. அப்படிக் கிடந்துத் தவிக்கும் போதுதான் ஒருநாள் மகாராஜா, காலத்தில் ராஜதானியாக இருந்த அந்த பத்மநாபபுரம் அரண்மனைக்குத் தன் பரிவாரங்களுடன் எழுந்தருளும் போது இவன் அப்பா தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன் திடாரென்று காவலை மீறி, ரதத்தின் முன்வந்து பே...பே... என்று கத்தியவாறு விழுந்தாராம். ஊர் பிரதானியைக் கூப்பிட்டு மகாராஜா விஷயம் என்னவென்று விசாரித்தபோது அந்த ஊனகுடும்பத்தின் பரிதாபங்கள் அவருக்குத் தெரியவந்தது. அதன்பின் இவன் அப்பா அம்மா உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் நீலகண்ட ஸ்வாமி கோயிலில் இருந்து நாலு கட்டி சாதம் உச்சக்கால தீபாராதனை கழிந்ததும் இலவசமாகாவர்களுக்கு வழங்க வேண்டுமென்று ராஜா உத்தரவு பிறப்பித்தார். பிறகு இவன் பெற்றோர்கள் காலம் வரை சாப்பாட்டுக் கவலை இல்லாதிருந்தது ' இருந்தும் இவனைத் தவிர போதிய ஆரோக்கியமில்லாத மற்ற இவன் தம்பி தங்கைகள் பிஞ்சும் காயுமாக இருக்கும் போதே அற்பாயிசில் இறந்து போனார்கள்.</p> <p>ஊமையனின் அப்பாவும் அம்மாவும் காலமானபிறகு மறுபடியும் இவனுக்கு வயிற்றுப்பாடு பிரச்னையாகி விட்டது. நல்ல கட்டுமஸ்தான உடம்பு வாய்த்திருந்த இவன், பக்கத்து தக்கலை பஸ் நிலையத்தில் மூட்டை சுமக்கும் வேலையில் ஈடுபட்டான். கிடைக்கும் பணத்தை மிகவும் சிக்கனமாகச் செலவு பண்ணுகையில் கொஞ்சம் காசுகூட சேர்த்து வைத்தானாம். ஊர்க்காரங்க பத்மநாபபுரத்திலிருந்தே ஒரு ஏழைப் பெண்ணை இவனுக்கு மணம் முடித்து வைத்தார்கள். பணத்தால்தான் ஏழையே தவிர மற்றபடி ஆரோக்கியத்திலும் அங்க அமைப்பிலும் அவளுக்கு எந்த குறையும் இல்லை. பிறகென்ன ஆண்டுக்கு ஒரு பிரசவம் நிகழத் தொடங்கிவிட்டது. எல்லாம் பெண் குழந்தைகள். குழந்தைகள் எல்லோருக்கும் நன்றாகச் செவி கேட்டது. ம்மா...ப்பா..... என்று சரளமாக வாய் பேசியது....</p> <p>பெண்டாட்டி குழந்தை குட்டிகள் என்றெல்லாம் வந்தபோது அவன் கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. அந்தச் சின்ன ஊரில் சுமை தூக்கிக் கிடைக்கும் வரும்படியில் குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாகிவிட்டது.</p> <p>பிறகுதான் நவராத்திரி தோறும் பத்மநாபபுரத்திலிருந்து இங்கே நகரத்தில் ஒன்பதுநாள் திருவிழாவுக்குக் கொண்டுவரும் சரஸ்வதி அம்மனின் பல்லக்கைச் சுமந்து கொண்டு ஊமையன் இங்கே நகரில் பிரவேசித்தான். இங்கே பெரிய கடைவீதியிலும் பஸ் நிலையத்திலும் மூட்டைத் தூக்குவதில் அதிக வரும்படி கிடைப்பதுக்குள்ள சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கண்டு, நவராத்திரி கழிந்து அம்மனை பத்மநாபபுரத்துக்குப் பல்லக்கில் சுமந்து கொண்டுபோய் சேர்த்த பிறகு மறுபடியும் இங்கே கால் நடையாகத்தான் வந்து சேர்ந்துவிட்டான் அவன்.</p> <p>என்றும் ராத்திரி பதினோரு மணி அளவில் படுக்க வரும்போது வெளித் திண்ணையில் வைத்து, அன்றைய உணவுச் செலவு கழித்து மீதியிருப்பை மறுபடியும் மறுபடியும் எண்ணுவதும் துணிப்பையில் போட்டு கட்டிப் பத்திரமாய் தன் மடியில் யாருக்கும் தெரியாமல் அவன் சொருகுவதும் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.</p> <p>அடிக்கடி ஊரிலிருந்து பெண்டாட்டி வந்து சத்தம் போடுவாள் பாவி மனுஷா... அங்கே நான் எட்டுப்பிள்ளைகளை வச்சுகிட்டு எப்படி பிழைப்பேண்ணு இருக்கேன்...... செலவுக்கு ரூவாதா ... ' அப்படி இப்படாண்ணு சொல்லும் போது அவன் கையும் முகமும் எல்லாம் அதற்கேற்றாற்போல் அபிநயிக்கும். அவன் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி கையை விரிப்பான். அவள் விடமாட்டாள். மடியில் கைவைப்பாள். பே.... பே என்று வீடு கிடுங்க கோபத்தில் அலறுவான். பிறகு பாட்டியும் அப்பாவும் அவர்கள் சண்டையில் புகுந்து பெண்டாட்டிக்காரிக்கு ஏதாவது கொடுக்க அவனை நிர்பந்திப்பார்கள் மனசில்லா மனசோடு வெளியே போய் அங்குமிங்கும் பார்த்து யாரும் காணாமல் மடியிலிருந்து கொஞ்ச ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து, அதை ஒண்ணுக்கு நாலு தடவை துப்பல் தொட்டு எண்ணிவிட்டு பே... பே என்று புலம்பியவாறு அவள் கையில் கொடுப்பதை நாராயணன் பார்த்திருக்கிறான். பிறகு கொஞ்சம் நாட்களுக்கு உபத்திரவம் இல்லை. இவன் மறுபடியும் வாய்க்கும் வயிற்றுக்கும் கொடுக்காமல் ஒரு நல்ல வேட்டி வாங்காமல் கந்தலைக் கட்டிக் கொண்டு பணம் சேர்ப்பான்.... மீண்டும் ஒருநாள் பெண்டாட்டி வந்து நிற்பாள். பிறகு பழைய கதைதான் : இப்படியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.</p> <p>ஒரு மகளை இந்த டாக்கடை பொன்னைய்யனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டது. இனியொரு மகளை ரெண்டாந்தாரமாக ஒருவன் கட்டினான். அவன் இப்போ இறந்து போனான்.</p> <p>ஊமையனின் பெண்டாட்டியும் வாய்க்கில்லாமல் வயிற்றுக்கில்லாமல் நெல்லுகுத்துவது மாவிடிப்பது இப்படி கடுமையான வேலைகளுக்கெல்லாம் போய் ஒரு சீக்காளி ஆகி, ஒருநாள் சிவனேண்னு கண்ணை மூடிவிட்டாள். செய்தி அறிந்த அப்பா அவனிடம் விஷயத்தை அறிவித்தபோது அவன் ஆகாயத்தை தலை உயர்த்திப் பார்த்துவிட்டு கையை விரித்து இரு தடவை ஆட்டினான் அப்படியென்றால் கடவுள் செயல் என்றும் ஆகலாம் கடவுளிடம் போய் சேர்ந்துவிட்டாள் என்றும் கூறலாம். பிறகு அப்பா கோபமாய் சொன்னதால் பெண்டாட்டியின் கடைசி கர்மத்தில் பங்கெடுக்க பத்மநாபுரத்துக்குப் போனான். ஆனால் மறுபடியும் இங்கேயே வந்து விட்டான்.</p> <p>'நாளுக்கு ரெண்டு ரூபா வச்சு தா... காலம்பர காப்பி மத்தியானமும் ராத்திரியும் சாப்பாடு நான் போடுறேன் ' என்று இங்கேயே உள்ளூரிலேயே குடியிருக்கும் மகள் வந்து கூப்பிட்டபோது, அவன் மகள் வீட்டுக்குப் போக மறுத்துவிட்டான் மகள் போனபிறகு பாட்டி கேட்டாள். எல்லாம் சைகை மொழியில் தான். 'ஏன் இப்படி கண்ட கண்ட ஓட்டலில் எல்லாம் சாப்பிட்டுகிட்டு இங்கே வந்து பழிக்கிடைக்கிறே ? உன் மகள் வீட்டுக்குப் போயேன். உள்ளதை அவகிட்டே கொடுத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுகிட்டு படுத்துக்கோயேன். '</p> <p>அதுக்கு ஊமையனின் பதில் சைகையில்தான். ரெண்டு நாளைக்குச் சோறு போடுவாள். பிறகு காசை வாங்கிவிட்டுத் திட்டுவாள் கஞ்சிகூட விடமாட்டாள்.</p> <p>ஆனால் பாட்டி விடமாட்டாள் ' நீ என்ன கருங்கல்லா, எண்னைக்கும் இப்படியே சம்பாதிச்சுகிட்டு இருக்க ' ஏதாவது சுகக்கேடு வந்து படுத்துட்டா பிறகு உனக்கு யாரு கஞ்சி காய்ச்சித் தருவா ? '</p> <p>இதுக்கு அவன் கைகளை மேலே வானத்தில் உயர்த்திக் காட்டிவிட்டு தலையாட்டிக் கொள்வான். அதன் அர்த்தம் எல்லாவற்றிற்கும் கடவுள் இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்.</p> <p>எது எப்படியோ, கடைசியில் இப்போது பாட்டி இல்லை; போய் சேர்ந்து விட்டாள். அவள் சொன்னது சரியாகிவிட்டது. ஊமையனின் ரெண்டு கால்களும் வீங்கி வெடித்துச் சீழ் வடியத் தொடங்கிவிட்டது. முன்னால் போல் சுமை தூக்கவும் முடியவில்லை. இரண்டு வருஷங்களுக்கு முன் அப்பா காலமாவது வரையிலும் தங்கள் வீட்டு அதே வெளித் திண்ணையில் தான் ராத்திரி வந்து படுப்பான். ராத்திரி திடாரென்று தூக்கத்தில் தனக்குத் தானே ஊ...ஊ என்று ஊளையிடுவான். ஒரு பிரத்யேக தொனியில் அடித் தொண்டையில் கத்துவான். இதையெல்லாம் கேட்டு வீட்டில் குழந்தைகள் பயந்து வீறிட்டு அழத் தொடங்கின. வெளித்திண்ணை முழுதும் இவன் காலில் இருந்து வடியும் சீழால் அசுத்தமாகி, எப்போதும் ஒருவித வாடை வேறு.... ராத்திரி நேரம் கெட்ட நேரத்தில் இவனுக்கு ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது. மேலும் அவன் மகள், மருமகன் எல்லோரும் இதே ஊரில் அடுத்த தெருவில் குடியிருக்கிறாங்க, அவர்களுக்கு இல்லாத அக்கரையா ? ஆனாலும் இங்கே வந்து இனி படுக்கக் கூடாது என்று ஊமையனிடம் சொல்ல நாராயணனுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே தன் இளைய தம்பி வழியாக விவரம் அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 'நீ இனி உன் மகள் வீட்டில் போய் படு. '</p> <p>இதைக் கேட்டு ஊமையன் விழிகள் நனைந்தன. பாட்டி அப்பா இவர்கள் போட்டோக்களைச் சுட்டிக் காட்டி வானத்தைப் பார்த்துவிட்டு பே... பே... என்று அவன் சொன்னதை கேட்க வீட்டில் எல்லோருக்கும் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது...</p> <p>அப்படி அவனை விலக்கிய பிறகும் ஒருமாத காலம்கூட அங்கேயே வந்து படுத்துக் கொண்டிருந்தான். இப்போ வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர்களுக்கும் பெரிய தொந்தரவாகி விட்டது. எல்லோரும் அவர்களையே குற்றம் சொன்னார்கள். பிறகு ஊமையன் ராத்திரி வரும் முந்தியே வெளிகேட்டை அடைத்துத் தாள் போடப்பட்டது, ரொம்ப நேரம் பே... பே... என்று பரிதாபமாகச் சத்தம் போட்டவாறு அவன் கதவைத் தட்டும்போது வீட்டில் எல்லோரும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தார்கள். பிறகு பே... பே... என்று என்னமோ புலம்பியவாறு அவன் போய்விட்டான்.</p> <p>இதன் பிறகு ராத்திரி படுக்க அவன் வருவதில்லை, ஆனால் பண்டிகை நாட்களிலும் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் நடக்கும் போதும் வந்து சாப்பாட்டிலும் பலகாரத்திலும் அவன் பங்கை உரிமையுடன் பெற்றுக்கொண்டு போவான். சிலபோது காப்பிக் குடிக்கவென்று சில்லறை கேட்டு வாங்கி போவான். நாராயணனின் கல்யாணத்திற்குப் பிறகு, வீட்டின் இட வசதியின்மை காரணமாக இரண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டுக்கு அவனும் மனைவியும் தனிக்குடித்தனம் போன பிறகு அங்கும் அடிக்கடி சென்று ஏதாவது வாங்கிச் செல்வான்.</p> <p>ஆரியசாலை ஜங்ஷன் வந்து கொண்டிருந்தது. நாராயணனின் நடை இப்போது இன்னும் மெதுவானது. ஊமையனைப் பொறுத்த வரையில் அவன் வாழ்க்கை நாடகத்தின் கடைசி காட்சிதான் இப்போ நடந்து கொண்டிருக்கிறது. எனவே அவன் சாவு இப்போ அப்படியொன்றும் அதிசயமானதல்ல. ஆனால் பொன்னைய்யன் எத்தனையோ பேரிடம் எத்தனையோ முறை அவனை அவன் அறியாமல் கொன்று விட்டிருக்கிறான் என்பதை நினைக்கையில்தான் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.</p> <p>வழக்கமாய் ஊமையன் உட்கார்ந்திருக்கும் அந்த அடைத்துக் கிடக்கும் கடையின் நடையில் அவன் கண்கள் இப்போ மெல்ல மெல்ல அஞ்சி அஞ்சிச் சென்றன.</p> <p>அவன் மனம் துணுக்குற்றது. அந்த இடம் சூன்யமாக இருந்தது.</p> <p>அப்படியென்றால்...</p> <p>இன்று காலையில் பொன்னையன் சொன்னது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். நிஜமாகவே புலி வந்துவிட்டதா ?</p> <p>பாவம், அவன் இறுதிச் சடங்குக்குச் செலவுக்கு ஏதாவது கொடுத்திருக்கலாம் என்று மனம் கஷ்டப்பட்டதே. ஆனாலும் இன்றுதான் ஏமாற்றப்படவில்லை என்று வக்கிரமான ஒரு ஆசுவாசம் நெஞ்சில் நிறைய அவன் நடந்து வீட்டின் வெளிகேட்டைத் திறந்து கொண்டு முற்றத்தில் கால்வைத்தபோது, முற்றத்திலிருந்து வீட்டுக்கு ஏறும் நடைப்படியில் உட்கார்ந்திருந்த ஊமையன் நாராயணனைப் பார்த்து பே... பே... என்று பேசிச் சிரித்து அமர்களமாய் வரவேற்றான்.</p> <p>*****</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-75498661067219372272010-01-19T10:06:00.000-08:002010-02-15T03:17:04.597-08:00கபாடபுரம் - புதுமைப்பித்தன்<blockquote> <p><strong>புதுமைப்பித்தன்</strong></p> </blockquote> <p><strong>1. கடல் கொண்ட கோவில்</strong></p> <p>நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும்.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S1X0mWwU2pI/AAAAAAAAFeQ/2NRF4SDt6o8/s1600-h/TE-Mystic-Outlook%5B9%5D.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="TE-Mystic-Outlook" border="0" alt="TE-Mystic-Outlook" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S1X0nhUcSsI/AAAAAAAAFeU/u7pKcmV-Nt4/TE-Mystic-Outlook_thumb%5B7%5D.jpg?imgmax=800" width="387" height="351" /></a> </p> <p>நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட்டுவிடுவார்களா? கல்லில் உறையும் கன்னி எனில், திரிகால பூஜையும் ஆர்ப்பாட்டமும் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் கூட, சற்றும் சஞ்சலமற்று நடந்து விடுகிறார்கள். என்ன மனிதர்கள், என்ன பிழைப்பு! <br />நான் உள்ளுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். கல்லில் வடித்திருந்த உருவத்தில் மனசை லயிக்கவிட்ட எனக்கு, அந்தக் கோயிலில் அந்த அர்த்த ஜாமத்தில் இப்படி எண்ணமிட்டுப் பொழுதைக் கழிக்க நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்த ஒரு காரியமா அல்லது... அதற்கும் அப்பால், அதற்கும் அப்பால் என வெங்காயத்தோல் உரித்துகொண்டுபோவது போல் மனித அறிவு என்ற ஸ்பரிசம் படப்பட மற்றொரு திரையிட்டுவிட்டு, அதற்கும் அப்பால் அகன்று சென்றுகொண்டே இருக்கும் அந்த விவகாரத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்ச்சியா என என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.</p> <p>எனது இளமையில், எப்போதோ ஒரு முறை - கணக்குக் கூடத் தவறிப் போய் வெகுகாலமாகிவிட்டது - கன்னியின் கொலு விழாவிற்கு வந்தேன். மஞ்சணை மெழுகு வைத்து அர்ச்சகன் அந்தக் கருங்கல் வடிவத்தை பதினாறு வயது சிறுமியாக ஆக்கியிருந்தான். அந்த அர்ச்சகனுடைய கைத் திறமையை மறந்து அந்த அழகில் மனசை இழந்தேன். பிறகு உலகத்து ஊர்வசிகள் எல்லாம் பெண் பிறவிகளாகக் கூட எனக்குத் தென்படவில்லை. ஆனால் அதற்கு மறுநாள் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. மறுநாள்தான் அர்ச்சகனுடைய கைத்திறமையை உணர முடிந்தது. உதயகால பூஜையின்போது, தேய்ந்தும் மாய்ந்தும் போய்த் தென்பட்ட கருங்கல் விக்கிரகந்தானா முந்திய நாள் இரவில் கண்ட யுவதி! அன்று சிதறின ஆசை பிறகு மறுபடியும் மனசில் குவியவே இல்லை.</p> <p>திட்டிவாசல் வழியாகக் கடற்காற்று பரம் பரம் என அடித்துக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. மூலக் கிரகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். இருட்டுடன் ஐக்கியமாகிக் கிடக்கும் சிலையில் வைர மூக்குத்தி மட்டும் சுடர்விட்டது. எழுந்து பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். தூக்கமோ அகன்று விட்டது. என்ன செய்யலாம்? பொழுது விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும் என்று பார்க்கலாம் எனக் கிழக்குக் கோபுர வாசலின் திட்டிவாசல் வழியாக வெளியேறினேன். கடலலைகள் ஆக்ரோஷமாகக் குமுறி கிழக்கு வாசலிலிருந்து சமுத்திரத்துக்குள் இறங்கு <a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S1X0otrFY0I/AAAAAAAAFeY/ORA7ssmybpE/s1600-h/978-81-8368-545-0_b%5B8%5D.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="978-81-8368-545-0_b" border="0" alt="978-81-8368-545-0_b" align="left" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S1X0p8kVi_I/AAAAAAAAFec/fAaAnMolkvQ/978-81-8368-545-0_b_thumb%5B12%5D.jpg?imgmax=800" width="216" height="240" /></a> படிக்கட்டுகளை மோதி நுரை கக்கின. அன்று நல்ல நிலாக் காலம் ஆகையால் கடற்பரப்பு நுரைக் கரையிட்ட வெள்ளிபோல் மின்னியது. பேரலைகளுக்கிடையில், கடல் மட்டத்துக்கு அடியில் உள்ள குன்றுகளின் முகடுகள் பெரிய சுறா மீன்களின் முதுகு போலத் தென்படும். அடுத்த கணம் பனைப் பிரமாண்டமாக படம் எடுக்கும் நாக சர்ப்பம் போன்ற பேரலை மடங்கி அடித்து அதை முழுக்கிவிடும். வானத்தை அண்ணாந்து பார்த்தேன். இன்னும் விடிவெள்ளி உதிக்கவில்லை. எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது. நின்று நின்று காலோய்ந்து மறுபடியும் கோவிலுக்குள் நுழைந்தேன். திண்ணையில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு அசந்துவிட்டேன். கடலின் ஓங்காரநாதம் தாலாட்டியது. நினைவு வழுவியது எப்பொழுது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எங்கோ வெகு தொலைவில் நினைவின் அடிவானத்தில் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது...</p> <p>என்ன அதிசயம். கடல் அலைச் சத்தம் கேட்கவில்லையே. கடல் ஓய்ந்துவிட்டதா அல்லது என் காதுகள்தான் ஓய்ந்து விட்டனவோ? முழுப் பிரக்ஞையும் வந்துவிட்டது. ஆனால் இமைகள் மட்டும் விழிக்க முடியவில்லை. இடைவெளிகளினூடே கோயிலின் திட்டிவாசல் தெரிந்தது. கண் இமைகளை யார் இப்படி அமுக்குகிறார்கள். மேல்விழுந்து அழுத்தும் பெரும்சுமையை உதறித் தள்ளுகிறவன் போல, கண் இமைகளை நிர்ப்பந்தப்படுத்தித் திறக்க முயன்றேன். முடியவில்லை. மூச்சுத் திணறியது. சற்று அயர்ந்தேன். மந்திர வலையிலிருந்து விடுபட்டவைகளைப் போல எனது கண்கள் திறந்தன. அப்பாடா என்ன சுகம்! எழுந்து உட்கார்ந்தேன். உறக்கச் சடைவு தீரவில்லை. என்ன அதிசயம்! அலைச் சத்தமே கேட்கவில்லையே! இதென்ன கூத்து? திட்டிவாசல் வழியாக நிலவொளிதான் தெரிந்தது. கர்ப்பக்கிரகத்தில் வைரத்தின் ஒளிச் சிமிட்டும் பழையபடிதான் இருந்தது. எழுந்து திட்டிக் கதவு வழியாக வெளியே வந்தேன். என்ன ஆச்சர்யம்! கண்ணுக்கெட்டிய வரை சமுத்திரத்தையே காணவில்லை. பால் போன்ற நிலவில் சமுத்திரப் படுகைதான் தெரிந்தது. கடல் வற்றுவதாவது! எதிரில் சற்று முன் குமுறிக் கொண்டு நின்ற பேரலைகள் எங்கு சென்று ஒளிந்தன? கடல் ஜலம் உள்வாங்கிவிட்டதா!</p> <p>சமுத்திரப் படுகையிலே பெரும் பெரும் கற்குன்றுகள் சிதறிக் கிடந்தன. தூரத்தில் ஒரு குன்றின் பேரில் கோபுரமும் கோவிலும் தென்பட்டன. சமுத்திர மட்டத்துக்குக் கீழ் கோவிலும் கோபுரமுமா? பரளியாறும் பன்மலை யடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என எவனோ ஒருவன் ஏங்கியது நினைவுக்கு வந்தது. நான் கண்ட கோவில் அழிந்து போன, கடல் உண்டு பசியாறின சமுதாயத்தின் கோவிலோ? என்ன கோவிலாக இருக்கக் கூடும்? ஒருவேளை இந்தக் கன்னிக்கு அவர்கள் கட்டிய கோவிலோ? எண்ணமிட்டுக் கொண்டே கோபுர வாசலில் இருந்து கடலுக்குள் இறங்கும் படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். ஐந்நூறு படிகள்! கடல் படுகையில் நான் கால் வைத்து அண்ணாந்து பார்த்தேன். கன்னியின் கோவில் மலை முகட்டிலிருந்தது! கடல் திசையை நோக்கினேன். நிலவொளி அவ்வளவு தீட்சண்யமாக விழவில்லை. நாலா திசைகளிலும் சிதறிக் கிடக்கும் பாறைகளின் நிழல்கள் படுகையில் குடிகொண்டிருந்தன. படுகையில் கணுக்கால் அளவுதான் சகதி; பொருட்படுத்தாமல் நடந்து சென்றேன். ஆனைத் துதிக்கை போன்ற தன் எட்டுக் கைகளையும் ஒரு பாறையைப் பற்றிக்கொண்டு கவந்தன் மாதிரி வெறுந்தசைக் கோளமாகக் கண்சிமிட்டிக் கிடந்தது ஒரு ஜலராசி. அதன் வாழ்வு இன்னும் எவ்வளவு நேரமோ என்று எண்ணமிட்டுக் கொண்டு அதை கடந்தேன். தண்ணீர் வற்றிப் போனதால் மாண்டிருக்கும் என்று நினைத்தேன். அது ஜிவ்வென்று எழும்பி, தனது எட்டுத் துதிக்கைகளில் ஒன்றை என்மீது வீசியது. நல்ல காலம் நான் அதைக் கடந்துவிட்டேன். இல்லாவிட்டால் கழுத்தே முறிந்து போயிருக்கும். கடல் படுகையில் அழகான பவழக் கொடிகள், விசித்திர விசித்திரமான செடிகள் இருந்தன. இந்த இருட்டுப் பாதை வழியாகச் செல்லுதற்கே பயமாக இருந்தது.</p> <p>பாறையின் பேரில் ஏறி நிலவு வெளிச்சத்துக்குப் போய்விட்டால் போதும் என்றாகிவிட்டது. பாறை வழுக்குமோ என்று நினைத்தேன். கரடுமுரடாக இருந்ததினால் பற்றி ஏறுவதற்குச் சுளுவாக இருந்தது. அதன் உச்சிக்கு வந்த பிறகு தான் வளைந்து வளைந்து நான் நடந்து வந்த தூரம் எவ்வளவு என்பது தெரிந்தது. கரையிலிருந்து பார்க்கும் போது தொலைவில் தெரிந்த கோவில் அடுத்த குன்றின் மேலிருந்தது. அது இதைவிட சற்றுத் தாழ்ந்தது. மறுபடியும் கீழே இறங்கிவிட்டால் அதில் ஏறுவது எப்படி என்று நான் தடுமாடிக்கொண்டு வரும்போது கிழக்குச் சரிவில் படிக்கட்டுகள் தென்பட்டன. எந்த யுகத்து மனிதர்கள் செதுக்கி வைத்ததோ! அதிசயப்பட்டுக் கொண்டு படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். கால்கள் சற்று வழுக்கத்தான் செய்தன. மனசில் உள்ள வேகந்தான் என்னை இழுத்துச் சென்றது. படிக்கட்டுகள் மறுசரிவில் உயர ஏற ஆரம்பித்தன. சுமார் ஐம்பது படிக்கட்டுகள் தானிருக்கும். கோயிலிருந்த குன்றின்மேல் கொண்டுவிட்டது. கரையைத் திரும்பிப் பார்த்தேன். எங்கோ எட்டாத் தொலைவில் ஒரு பெருங்குன்றின்மேல் சிகரமும் கிழக்கு வாசலும் தெரிந்தன. <br />நான் நின்றிருந்த குன்று வெறும் பாறை. யாரோ அதை வெட்டிச் செதுக்கி சமதளமாகத் திருத்தி இருக்கிறார்கள். கோவிலும் அந்தக் குன்றின் ஒரு பகுதி. குடைவரைக் கோவில் என்று சொல்லுகிறார்களே அந்த ரகம். ஆனால் அதன் அமைப்பு வேறு. குன்றின் உச்சியைக் கோவிலாகச் செதுக்கி அதனோடு ஒட்டி பிரகாரமாக தளத்தையும் செப்பனிட்டிருக்கிறார்கள். கோவில் எல்லாம் பிரமாதமான உயரமல்ல. சுமார் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரந்தானிருக்கும். அதற்குக் கோபுரம் ஏதும் கிடையாது. மலையாளத்துக் கோவில்கள் மாதிரித் தானிருந்தது. ஆனால் கருங்கல் வேலைப்பாடு. சுற்றி வந்தேன். கிழக்குப் பக்கத்தில் வாசலிருந்தது; ஆனால் கதவில்லை. கோவிலின் முற்றத்தில் கிழக்குப் பிரகாரம் மூன்று நான்கு அடி அகலத்துக்கு மேல் இல்லை. அந்த பிரமாண்டமான பாறை பிளவுபட்டு, வெறும் பாதாளமாக இருட்டுடன் ஐக்கியமாயிற்று. வெளிப்பக்கத்தில் நிற்க பயமாக இருந்தது. கோவில் வாசலில் கால் வைத்தேன். சற்று தயக்கத்துடனேயே உட்புகுந்தேன். இந்த ஒற்றை கல் கோவிலுக்குள்ளும் சிறு பிரகாரம். அதன் மையத்தில் தான் கர்ப்பக்கிரகம். பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். இருட்டில் எதுவும் தெரியவில்லை. காலில்கூடப் பாசியும் நுரையும் மிதிபட்டது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி ஒரு பிரதட்சணம் வந்துவிட்டு, அதன் வாசல் பக்கம் நின்றேன். வாசலில் இரண்டு பக்கத்திலும் இரு அபூர்வமான மிருகங்களை துவாரபாலகர்கள் போல் கல்லில் செதுக்கியிருப்பது சற்று மங்கலாகத் தெரிந்தது.</p> <p>கர்ப்பக்கிரகத்தில் என்ன இவ்வளவு இருட்டு என்று எண்ணமிட்டுக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டிக்கொண்டு கருங்கல் நிலையில் கால் வைத்தேன். நிலைப்படியில் தாமரைப்பூ செதுக்கியிருப்பது காலுக்குத் தட்டுப்பட்டது. முன் நீட்டிய கைகளை வழவழப்பான இருள் வழிமறித்தது. வழி கிடையாதா அல்லது கல்லால் செதுக்கிய கதவா என்று எண்ணமிட்டுக்கொண்டு தடவிப் பார்த்தேன். கரும் பளிங்குபோல வழவழப்பாக இருந்தது. கால் பாதத்தில் தட்டுப்படும் தாமரை உறுத்தியதினால் சற்று பாதத்தை உயர்த்திவிட்டு மறுபடியும் காலைக் கீழே வைத்தேன். குமிழ் போல ஏதோ தட்டுப்பட்டது. தாமரையின் மையம் என்று நினைத்தேன். அதே சமயத்தில் கருப்புப் பளிங்குக் கதவு உட்பக்கமாகத் திறந்தது. நான் கதவின் மீது கைகளை ஊன்றிக் கொண்டு நின்றதினால் தடமாடிக்கொண்டு உள்ளே சாய்ந்தேன். அங்கும் இருட்டு. அதே சமயம் வெளிவாசல் பக்கம் பேரிரைச்சல் கேட்டது. கடல் ஜலம் பிரளயம் போல நுங்கும் நுரையுமாக கோவிலுக்குள் பிரவேசித்தது. கர்ப்பக்கிரகத்தின் கதவு தானாகவே சாத்திக்கொண்டது.</p> <p>இனிமேல் நமக்கு ஜலத்தில் சமாதி கட்டின மாதிரிதான் என்று பீதியடைந்து பதறினேன். ஆனால் பயம் மறுகணம் அகன்றது. கதவு பொருந்தியடைத்துக்கொண்டதும் கர்ப்பக்கிரகத்துக்குள் பிரமாதமான பிரகாசம். கண்ணையே குருடாக்கிவிடுமோ என்று பயந்தேன். இத்தனை நேரம் இருட்டில் கிடந்து தடமாடியதினால் இந்தத் தொந்தரவு போலும். ஒளியின் தன்மை கண்களுக்குப் பழக்கமாக ஆக உறுத்துவது போய் பன்னீர் விட்ட மாதிரி குளுமையாக இருந்தது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன். மேல் சுவரில் உள்ள ஒரு மாடத்தில் குத்துவிளக்குப் போல் ஒன்றிருந்தது. அதன் உச்சியிலிருந்து வந்தது இந்தப் பிரகாசம். சற்று நெருங்கிச் சென்று கவனித்தேன். குத்துவிளக்கு தங்கம் போலப் பிரகாசித்தது. அதன் உச்சியில் வைரம் ஒன்று பதித்திருந்தது. அதிலிருந்து எழுந்தது இந்தப் பிரகாசம். தூண்டாமணி விளக்கு என்று சொல்லுகிறார்களே அதுதானோ என்று அதை எடுத்துப் பார்க்க முயன்றேன்.</p> <p>"அடே, அதைத் தொடாதே" என்று அதட்டியது ஒரு குரல். <br />நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆணோ பெண்ணோ எனச் சந்தேகப்படும்படியாக இருந்தது. வாக்கு தமிழ்தான் என்றாலும் தொனிப்பு யாழ்ப்பாணத்துக்காரர் ரீதியில் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தென்படவில்லை.</p> <p>"நான் இங்கேதான் இருக்கிறேன். இதோ என்னைப் பார்" என்றது அந்தக் குரல்.</p> <p>நிருதியின் திசையிலிருந்து பலிபீடத்தின்மீது ஒரு தலை அமர்ந்திருந்தது. பெண்ணின் தலை. அதன் அளகபாரம் பலிபீடத்தில் மயில் தோகை மாதிரி விரிந்து கிடந்தது. முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. வருஷாவருஷம் வாழையடி வாழையாக அர்ச்சக பரம்பரை மஞ்சணை மெழுகு வைத்து அலங்காரம் செய்யும் முகத்தின் சாயலுக்கும் இதற்கும் சற்றும் வித்தியாசமில்லை. எத்தனை எத்தனை காலம் இந்த முகத்தின் சாயல் அர்ச்சக பரம்பரையின் நினைவில் படிந்து மனித வம்சத்தின் ஞாபகச் சரடாக இருந்து வந்திருக்கிறது! எனக்கு பலிபீடத்தில் அமர்ந்திருந்த தலை பேசியதில் அதிசயம் தோன்றாதது எனக்கே வியப்பாக இருந்தது. அசாதாரணமான நிலையில் அகப்பட்டுக் கொண்டால் எல்லாம் இயல்பாகத் தோன்றும் போலும். இப்படியாக நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சண்பகப் பூவின் வாசம் கலந்த மெல்லிய காற்று கர்ப்பக் கிருகத்தில் ஊசலாடியது. காற்று எங்கிருந்து வருகிறது எனச் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தக் காற்று அந்தக் கற்குகைக் குள்ளாகவே தோன்றி அதனுள்ளேயே மடிகிறது போலும். <br />"இம்மாதிரிக் காற்று அடித்தால் சூர்யோதயமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும்போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது அந்தத் தலை.</p> <p>இது என்னடா புதுவிதமான கடிகாரமாகத் தோன்றுகிறதே என்று எண்ணமிட்டுக்கொண்டு "நீ யார்? எப்படி சிரசை மட்டும் காப்பாற்றி உயிருடன் இருந்து வருகிறாய்?" எனக் கேட்கலாமா என்று வாயெடுத்தேன்.</p> <p>அந்த சிரசு கண்களை மூடியபடியே நான் சொல்ல வந்ததை எதிர்பார்த்தது போல, வாயைத் திறவாமலேயே பேசியது. <br />"நானும் ஒரு காலத்தில் உன்னைப் போல உடம்புடன் தானிருந்தேன். உலக பந்தங்களுக்கு உடன்பட்டு பிறப்புச் சங்கிலிக்குள் தன்னையும் உட்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்குத்தான் உடம்பு அவசியம். காலத்தை எதிர்த்து நிற்க விரும்புகிறவர்களுக்கு உடம்பு அனாவசியம். மேலும் பால பேதத்தினால் உடலில் தோன்றும் இச்சா பந்தங்களையும் போக்கிக் கொள்ளலாம் அல்லவா? என்னுடைய வயசு என்னவென்று நினைக்கிறாய்? மூன்று கர்ப்ப காலம் கடந்துவிட்டது; நான் எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும். என்னுடைய இச்சை என்று அவிந்ததோ அன்று நான் காற்றுடன் காற்றாகக் கரைந்துவிடுவேன்..."</p> <p>அந்த சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது. <br />"உடல் இழந்த வாழ்வு எனக்கு எப்படி ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதே. அந்த ரகசியம் உனக்குக் கிடைக்காது. அது குமரிமலையுடனும் பரளியாற்றுடனும் பரம ரகசியமாக ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. கேவலம் நீ ஒரு மனிதன். மிஞ்சிப்போனால் இன்னும் இருபது வருஷங்கள் உயிரோடு இருப்பாய். அதாவது இந்த உடம்போடு உறவு வைத்திருப்பாய். உனக்கு எதற்கு இந்த ரகசியங்கள்?" என்று கேட்டது. <br />"அழியும் உடம்பு என்பதை உன்னுடைய முன்னோர்களும் அறிந்துதானிருந்தார்கள். இருந்தாலும் கர்ப்ப கோடி காலம் பிரக்ஞை மாறாமல் வாழ்வதற்கு ஒரு வழி உண்டு என்பதைக் கண்டுபிடிக்காமல் ரொம்ப நாட்களைக் கழித்தார்களா? அப்படி அவர்கள் கழித்திருந்தால் இப்போது என்னுடன் பேச உனக்கு முடியுமா?" என்று கேட்டேன்.</p> <p>தலை கடகடவென்று சிரித்தது. "உனக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளப் போதுமான தைரியம் உண்டா? நான் யார் என்பதைத் தானே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறாய். கர்ப்ப கோடி காலத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன். நான் வாழ்ந்த உலகம் எப்படி இருந்தது. என்பதை நான் உனக்கு காட்டுகிறேன். மணிவிளக்கு நிற்கிறதே, அந்த மாடத்தின் அருகில் யாளியின் தலை ஒன்று செதுக்கியிருக்கிறது. தெரிகிறதா? அந்தத் தலையை வலப்புறமாகத் திருப்பு." <br />நான் அது சொல்லியபடி செய்தேன். தளத்தின் ஒரு பகுதி விலகியது. படிக்கட்டுகள் தென்பட்டன.</p> <p>"தைரியமாக உள்ளே போ; உனக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது" என்றது அந்தத் தலை.</p> <p>"நீ இருக்கும்போது எனக்கு என்ன பயம்? மேலும் ஆபத்துக்குப் பயப்படுகிறவனாக இருந்தால் சமுத்திரத்துக்கு அடியில் வலிய வந்து மாட்டிக்கொள்ள வேண்டாமே! நீ சொல்லக்கூடாத பரம ரகசியம் அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டேன்.</p> <p>"என்னிடம் காதல் பேசினது போதும். என் வயசு மூன்று கர்ப்ப காலங்கள். நான் உன் பாட்டிகளுக்கு பாட்டி என்பதை மறந்து பேசாதே. இஷ்டமிருந்தால் போய்ப் பார்" என்று சற்று கடுகடுப்பாகப் பேசியது அந்த சிரம்.</p> <p>"நானும் உன்னைப் போல உடம்பை இழந்துவிட்டு, எத்தனை கர்ப்ப கோடி காலமானாலும் உன் எதிரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கத்தான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே படிக்கட்டுகளின் வழியாகக் கீழே இறங்கிச் சென்றேன். படிகள் எங்கு கொண்டு என்னை விடும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. கீழே என்ன இருக்கிறது; உலகத்தாருக்குத் தெரியக் கூடாது என காலம் என்ற திரையிட்டு, இயற்கை மறைத்து வைத்துள்ள ரகசியங்களில் எது என் வசம் சிக்கப் போகிறது என்று எண்ணமிட்டுக்கொண்டே நடந்தேன். கடல் கன்னிக் கோவிலில் இருந்த தூண்டாமணி விளக்கின் ஒளி, சிறிது தூரந்தான் படிக்கட்டுகளில் வீசியது. அதன் பிறகு, வழி நெடுக, நிலவொளி போல, வெள்ளியை உருக்கி வெளிச்சம் செய்தது போல ஒரு ஒளி எனக்கு வழிகாட்டியது. நிலவு எனவோ அல்லது நட்சத்திர ஒளியெனவோ அதை வருணிப்பது பொருந்தாது. தற்கால நியான் விளக்குகள் போல ஒரு வெளிச்சம். ஆனால் நியான் ஒளியைப் போல கண்ணையோ உடம்பையோ உறுத்தவில்லை. </p> <p>குளுகுளுவென்று ரம்யமாக இருந்தது. வெளிச்சம் எந்தத் திசையிலிருந்துதான் வருகிறது என்பதை நிர்ணயிக்க முடியாதபடி ஒளிப்பிரவாகத்தின் காந்தி எல்லாவிடங்களிலும் ஒரே மாதிரி இருந்தது. பத்துத் திசையிலும் சிக்கென்று மூடிய பிலமாக இருந்தும், சுகந்தமான காற்று ஒன்று சற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. பிலத்தில் நான் இறங்கிச் செல்லச் செல்ல, பேரலைகளின் குமுறல் போன்ற ஒரு பேரிரைச்சல் என் செவியை உடைக்க ஆரம்பித்தது. சப்தம் வந்த திசையை நான் நெருங்க ஆரம்பித்தேன். <br />படிக்கட்டுகள் கடைசியாக ஒரு நிலவறையில் சென்று முடிவடைந்தன. நிலவறை அறுகோண யந்திரம் போல அமைக்கப்பட்டிருந்தது. படிக்கட்டுகளுக்கு எதிர் பாரிசத்தில் உள்ள சுவரில் உள்ள பிறையில் தலையற்ற முண்டம் ஒன்று வளர்த்தியிருந்தது; பச்சைக் கல்லைக் குடைந்து செய்த ஒரு பாத்திரம், அதன் தலை இருக்க வேண்டிய இடத்தில் ஒரு யந்திர சக்கரத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. உடலத்தின் மீது ஒரு பிரம்பு கிடந்தது. நிலவறையின் இரு பாரிசத்திலும் இரண்டு வழிகள் தென்பட்டன. நான் பிலத்தின் மையத்தில் வந்து நின்று எந்தத் திசை நோக்கிச் செல்லலாம் என்று எண்ணமிட்டேன்.</p> <p>எந்தத் திசையில் சென்றால் என்ன? எல்லாம் பார்க்க வேண்டிய இடந்தானே என்று நினைத்துக் கொண்டு இடது பக்கமிருந்த பாதை வழியாகச் செல்லுவதற்குத் திரும்பினேன்.</p> <p>"இது திசைகள் அற்றுப்போன இடம்; எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதானே" என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒருவரையும் காணவில்லை. என் காதில் விழுந்தது நிச்சயமாக ஆண் குரல்.</p> <p>குரலுக்குப் பதில் கொடாமல், நான் முதலில் நிச்சயம் பண்ணின பாதை வழியாகச் சென்றேன். <br />யாரோ கடகடவென்று கர்ண கடூரமான குரலில் சிரிப்பது போலக் கேட்டது. திரும்பிப் பார்த்தாலும் ஆள் எங்கே தென்படப் போகிறது; பேசுகிறவன் என்றால் எதிரில் வந்து பேசட்டுமே என்று முனகிக் கொண்டே நடந்தேன். இந்தப் பாதையிலும் நன்றாக வெளிச்சமாகத் தானிருந்தது. ஆனால் நான் முன்பு கேட்ட பேரலைச் சத்தம் இன்னும் ஆக்ரோஷமாகக் கேட்டது. கடல் தளத்தருகில் நெருங்குகிறோமா, கடல் பிரவாகம் செல்லும் பிலத்துவாரம் எதுவும் இருக்கும் போலும் என்று நினைத்தேன். அடுத்த நிமிஷம் அது என்ன அசட்டுத்தனமான நினைப்பு. கடல் தண்ணீர் உள்ளே வர வழியிருந்தால் இந்தப் பிலம் முழுவதும் அல்லவா நிரம்பியிருக்க வேண்டும்? இரைச்சலுக்குக் காரணம் வேறு ஏதாவதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆச்சு இன்னும் எவ்வளவு தூரமிருக்கப் போகிறது? போயே பார்த்து விடுகிறது. சப்தத்தைத் தாங்குவதற்குச் செவித் தொளைகளுக்குப் போதுமான சக்தியில்லை. மேல்துண்டை எடுத்துக் காதோடு காதாக வரிந்து கட்டிக் கொண்டு மேல் நடக்கலானேன். சிறிது தூரம் சென்றதும் வெக்கை அடிக்க ஆரம்பித்தது. வரவர வெக்கை அதிகமாயிற்று. அக்னிச் சுவாலைக்குள் நடப்பது போலத் திணறினேன்.</p> <p>ஆனால் அடியெடுத்து வைக்கும்போது தரை சுடவில்லை. இதற்கு மேல் சுமார் பத்து கெஜ தூரந்தான் என்னால் போக முடிந்தது. மேல் நடப்பது சாத்தியமில்லை என்று திரும்பினேன்.</p> <p>"வடக்குச் சுவரில் உள்ள மாடத்தில் ரசக் குழம்பு இருக்கிறது. அதை உடம்பில் தடவிக் கொண்டால் மேலே போக முடியும்" என்று ஒரு குரல் கேட்டது. பழைய குரல்; அதே குரல்.</p> <p>மாடத்திலிருந்த பாத்திரத்தை எடுத்தேன். உருக்கிய வெள்ளி போல, சந்தனக் குழம்பின் மென்மையுடன் கைக்கு இதமாக இருந்தது. அள்ளி எடுத்து உடம்பு முழுவதும் பூசிக்கொண்டேன். வெக்கை குடியோடிப் போயிற்று. ஆனால் உடம்பு வெள்ளி வார்னிஷ் கொடுத்த மாதிரி ஒரேயடியாக மின்னியது. இந்த நவராத்திரி வேஷத்துடன் மேலும் நடந்து சென்றேன். தூரத்தில் புகையும் அக்னிச் சுவாலையும் ஒரு பிலத்திலிருந்து எழுவதும், மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கடியில் இருக்கும் எரிமலையோ எனச் சந்தேகித்தேன். நான் நினைத்தது சரிதான். எரிமலைதான். இந்த அக்னி கக்கும் மலையினருகில் எப்படிப் படிக்கட்டும் மண்டபமும் கோவிலும் வந்து கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்? எந்த மனித வம்சம் இதைக் கட்டியிருக்கக் கூடும் என எண்ணமிட்டுக் கொண்டு நின்றேன். பொங்கிக் கொப்புளிக்கும் அக்னிச் சுவாலை ஒடுங்கியது. பூமியினடியில் மட்டும் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் சற்று தைரியமாக எரிமலையின் விளிம்பு அருகே சென்றேன்.</p> <p>ஆழத்தில் வெகு தூரத்தில் பாறையும் மண்ணும் உலோகங்களும் பாகாக உருகிக் கொந்தளித்துச் சுவாலை விடுவது தெரிந்தது. விளிம்பருகிலும் படிக்கட்டுகள். ஆனால் மிகவும் ஒடுங்கியவை. பாறையைக் கொத்திச் செதுக்கியது போலத் தென்பட்டது. இந்தப் படிக்கட்டுகள் எரிமலையின் உட்புறச் சுவரில் தென்பட்ட பிலத்துக்குள் சென்றது. அங்கே ஒரே இருட்டு. திரும்பி விடலாமா என யோசித்தேன். திரும்பவும் படிக்கட்டுகள் வழியாக மேலேறி வருவதற்குப் பயமாக இருந்தது. வந்தது வருகிறது என இருட்டில் நடந்து சென்றேன். சிறிது தூரம் செல்லுவதற்குள் எரிமலையின் பேரிரைச்சல் கேட்கவே இல்லை. அதற்கு வெகு தொலைவில் வந்துவிட்டது போல அவ்வளவு நிசப்தமாக இருந்தது. சுமார் அரை மணிப் பொழுது நடந்து சென்றிருப்பேன். இந்தப் பாதை என்னை ஒரு மண்டபத்தில் கொண்டு சேர்த்தது. கால் கடுக்க ஆரம்பித்தது. தரையில் உட்கார்ந்துகொண்டேன். சுற்றுமுற்றும் இருட்டில் எதுவும் தெரியவில்லை. அக்னி வெக்கைக்குத் தப்புவதற்காக நான் உடம்பில் பூசிக் கொண்ட திராவகந்தான் மின்னியது.</p> <p>"இன்னும் எத்தனை நேரந்தான் உட்கார்ந்திருக்கப் போகிறாய். கால் வலி தீரவில்லையா? ஆனாலும் நீ தைரியசாலிதான்" என்றது ஒரு குரல். அதே குரல்; பழைய குரல். <br />"நீ யார், எங்கு பார்த்தாலும் என்னைத் தொடர்ந்து வருகிறாயே? நீ எங்கே நிற்கிறாய்? எனக்குத் தென்படவில்லையே?" என்று கேட்டேன். <br />அந்தக் குரல் சிரித்தது.</p> <p>"நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன். எனக்கு உடம்பு கிடையாது. அதனால் நான் எங்கும் இருக்க முடியும். நான் எங்கு இருந்தாலும் உன் பக்கத்தில் இருக்க முடியும். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ எங்களுடைய அதிதி. உன்னை உபசரிப்பது எங்கள் கடமை."</p> <p><strong>2. ஸித்தலோகம்</strong></p> <p>"அசிரீரியாருக்கு ஆசாரமாகப் பேசத் தெரியும் போலிருக்கு; வந்தவனை வாவென்று கேட்பாரில்லை; இருட்டில் திண்டாட விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது இந்த இடத்துச் சம்பிரதாயம் போலும்" என்று நான் முழங்காலைத் தடவிக் கொண்டே கேட்டேன்.</p> <p>"எங்களுக்குத் தெரியாததைப் பற்றி நீ பேசிக்கொண்டிருந்தது போதும்; உடனே, எதிரே தெரிகிறதே வாசல், அதன் வழியாகப் போனால் பாதாள கங்கை ஓடுகிறது. அதில் போய்க் குளி. இல்லாவிட்டால் உடம்பு வெந்து போகும். நீ உடம்பில் பூசிக்கொண்டிருக்கிறது கார்கோடக பாஷாணம் சேர்ந்த ரசக்குழம்பு. வெளி வெக்கை இருந்தால்தான் உடம்பைப் பாதுகாக்கும். இல்லாவிட்டால் உடம்பையே தின்றுவிடும். எலும்புக்கூடுகூட மிஞ்சாது" என்றது அசரீரிக் குரல். <br />எனக்குப் பகீர் என்றது. விழுந்தடித்துக்கொண்டு எழுந்தேன். "நீரும் என் கூட வாருமே; பேச்சுத் துணையாக இருக்கும்" என்று சொல்லிக் கொண்டு பிலத்தின் வழியாக பாதாள கங்கைக்குச் சென்றேன். பிரமாண்டமான பாம்புப் பொந்து போல பூமியைக் குடைந்துகொண்டு நதி வேகமாக ஓடியது. இருட்டுக்கும் ஜலத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஜலத்தில் கால் வைத்தேன். ரொம்ப ஜில்லென்றிருந்தது. ஒரு முறை சென்றிருக்கிறேன் மானஸரோவரத்துக்கு; அந்தத் தண்ணீர் அவ்வளவு ஜில்லென்றிருந்தது. வெகு நேரம் தண்ணீரில் துளைந்தால் முடக்குவாதம் வந்துவிடக்கூடாது என்று இரண்டு மூன்று முக்குப் போட்டுவிட்டுக் கரையேறினேன். ஆற்றில் இறங்கியதுதான் தாமசம், உடம்பில் பூசியிருந்த வர்ணச்சாயம் அப்படியே கரைந்து போய்விட்டது. கரையேறி உடம்பைத் துடைத்துக் கொண்டு நிற்கும்போது, தண்ணீரில் மின்னல் கொடிகள் போல அப்பொழுதைக்கப்பொழுது தெரிந்து மறைந்தது. சூரிய வெளிச்சமே படாத இந்த பிலத்தில் கூட ஜல ராசிகள் எப்படித் தோன்ற முடியும் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே நின்றேன். <br />"வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்காதே. உன்னை ஸித்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தேசித்திருக்கிறேன். உனக்கு அங்கே சென்றால்தான் உணவு" என்றது அந்த உடம்பற்ற குரல். <br />"ஸித்தலோகமா? அங்கே செல்வதற்கு இந்தப் பிலத்தினுள் வழி ஏது?" என்று கேட்டேன்.</p> <p>"இதோ இந்த பாதாள கங்கை இருக்கிறதே இதன் வழியாக" என்றது குரல்.</p> <p>"நீந்தியா?" என்று கேட்டேன்.</p> <p>"குளிரும் என்று பயப்படாதே. உன்னை ஏற்றிச் செல்ல புணை வரும்" எனச் சிரித்தது அந்தக் குரல்.</p> <p>"இந்த நதி எங்கிருந்து வருகிறது என்றா எண்ணுகிறாய்? இதுதான் பூலோகத்திலேயே பிரமாண்டமான நதி. இங்கிருந்து பத்து யோஜனை தூரத்திலுள்ள கன்னிச் சுனையிலிருந்து உற்பத்தியாகி கார்கோடகத் தீவுவரை கிழக்கு நோக்கிச் சென்று பிறகு அங்கிருந்து வடதிசை திரும்பி அங்கு காட்டினடியில் ஓடி, அங்கேயே மடிகிறது. பூமிக்கு அடியில் இதே மாதிரி இன்னும் எத்தனையோ நதிகள் உண்டு. அதோ வருகிறது பார் ஒரு புணை. நீ அதில் ஏறிக்கொண்டால் ஸித்தலோகத்துக்குப் போய்ச் சேரலாம்" என்றது அந்தக் குரல்.</p> <p>அது பேசி முடிப்பதற்கு முன் அந்தப் புணை நான் நின்ற படிக்கட்டுகள் அருகில் வந்து தேங்கியது. என்ன கோரம். மூன்று நான்கு பிணங்களை, இல்லை முண்டங்களைச் சேர்த்துக் கட்டிய மிதப்பு. முண்டங்கள் தங்கம் போலத் தகதகவென மின்னின. இதில் ஏறிக் கொள்வதா? <br />"தயங்காதே; நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடுமா? அல்லது பிணம் என்றால் நீயும் பிணமாகிவிடப் போகிறாயா? தயங்காதே; ஏறி உட்கார்ந்துகொள்" என்று அதட்டியது அந்தக் குரல்.</p> <p>நானும் சுவாதீனம் இழந்தவனைப் போல அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். மிதப்பு நகர ஆரம்பித்தது. <br />"நீயும் என்னுடன் வரவில்லையா" என்று கேட்டேன்.</p> <p>"இதுதான் என் எல்லை" என்றது அசரீரி.</p> <p>"பிறகு எப்பொழுது சந்திப்பது?" என்றேன்.</p> <p>"ஸித்தலோகத்தில்" என்றது அசரீரி.</p> <p>"எல்லையும் எல்லையற்ற தன்மையுமா?" என எனக்குள்ளாகவே எண்ணமிட்டேன். பிரேதப் புணை வெகு விரைவாகச் செல்ல ஆரம்பித்தது. நதியின் வேகத்தைவிடப் பன்மடங்கு வேகமாகத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு சென்றது.</p> <p>நான் பிணத்தின் மீது உட்கார்ந்தபடி ஜலத்தைப் பார்ப்பதும் இருட்டைப் பார்ப்பதுமாக இருந்தேன். திடீரென்று உஸ் என்ற இரைச்சல் கேட்டது. புணைக்குக் குறுக்காகக் கருநாகம் ஒன்று படமெடுத்துக் கொண்டு சீறிக் கொண்டு நீந்திச் சென்றது. பயம் பன்மடங்கு அதிகமாக இருந்தது. தலை கிறங்கும்படியாகப் புணையின் வேகமும் அதிகமாக இருந்தது. எத்தனை நேரம் கழிந்ததோ?</p> <p>புணை வேகம் குறைய ஆரம்பித்தது. பிறகு மெதுவாக வலது கரையில் சென்று ஒதுங்கியது. நான் பதனமாகக் கரையில் கால் வைத்தேன். இங்கே முன் போல பாதையில்லை. மணற்பாங்காக இருந்தது.</p> <p>என்ன அதிசயம்! நான் திரும்பிப் பார்க்குமுன் புணையாக வந்த கவந்தங்கள் எழுந்து கரையேற ஆரம்பித்தன. அவை கரைக்கு வந்து நின்றதுதான் தாமசம். அவை தலை பெற்றன. மனிதத் தலைகளா! அல்ல. மாட்டுத் தலைகள். அவற்றின் நெற்றியில் பிரகாசமான கண் போன்ற துவாரம் தெரிந்தது. <br />"வாருங்கள் போகலாம்" என்றன அந்த நான்கு அதிசயத் தோற்றங்களும்.</p> <p>நான் தயங்கினேன்.</p> <p>"இதுதான் ஸித்தலோகம். மாடர்கள் அல்லது நந்திக் கணங்கள் என எங்களைச் சொல்லுவார்கள். பயப்படாமல் வாரும்" என்று சொல்லிக் கொண்டு எனது வருகையை எதிர்பார்க்காமலேயே நடக்க ஆரம்பித்தன. நானும் தொடர்ந்து நடந்தேன்.</p> <p>விசித்திர விசித்திரமான தாவர வர்க்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. பூமியின் சிசுப் பருவத்திலே தோன்றிய தாவர வர்க்கங்கள் என்று சொல்லுவார்களே சயன்ஸ்காரர்கள் அவை போன்றவை. பிரமாண்டமான நாய்க்குடைகள், தாழைகள், கொடிகள் விசித்திர விசித்திரமாக முளைத்திருந்தன. ஆனால் அவை யாவும் பொன் போலும் வெள்ளி போலும் மின்னின. இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஏழு வர்ணங்களிலும் தண்டு முதல் இலை வர பளபளவென சாயம் பூசி வைத்த மாதிரி நிற்கும் விருக்ஷங்களைக் கண்டேன். அதிலே நீல நிறமான கருநாகங்கள் சோம்பிச் சுற்றிக் கிடந்தன. வழியிலே தங்கத் தகடு போல மின்னிய தவளை கத்திச் சென்றது. <br />மரச்செறிவுகளுக்கிடையே நந்திக் கணங்கள் மறைந்து விட்டனர். அவர்கள் எந்த வழியில் சென்றார்கள் என்பதைக் கவனிக்கவில்லை. கால்கொண்டு போன வழியே நடந்தேன். மரங்களுக்கிடையே திறந்த வெளி வந்தது. <br />அங்கே சமாதி நிலையில் பதினெட்டுப் பேர் அந்தரத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கடியிலும் வெள்ளி போன்ற ஒரு உருண்டை இடையறாது சுழன்றுகொண்டிருந்தது.</p> <p>"வா அப்பா, வந்து உட்காரு" என்றார் தலைவராக அமர்ந்திருந்த ஸித்த புருஷர்.</p> <p>அத்தனை பேருக்கும் உருவபேதம் கற்பிக்க முடியாதவாறு ஒரே அச்சில் வார்த்த சிலைகள் போன்றிருப்பதைக் கண்டு அதிசயப் பட்டேன்.</p> <p>"உடம்பை இஷ்டப்படி கற்பித்துக்கொள்ள முடியாதா? இருந்து பார் எப்படி என்பது தெரியும்" என்றார் அவர். <br />நான் அவரது காலடியில் அமர்ந்தேன்.</p> <p>"உனக்குப் பசிக்குமே" என்று சொன்னார்.</p> <p>நந்திக் கணத்தில் ஒருவன் தோன்றினான். முகத்தைக் கழற்றி வைத்தான். அப்பொழுதுதான் மாட்டின் தலையை அப்படியே வெட்டி எடுத்துப் பதனிட்டுச் செய்த முகமூடி என்பதைக் கண்டேன்.</p> <p>"இது பூர்வீக காலத்துத் தலைக் கவசம், இரும்பு தோன்றுவதற்கு முன்" என்றார் ஸித்த புருஷர். <br />நந்தி நேராக எதிரே இருந்த ஒரு விசித்திரமான மரத்தினடியில் சென்றான். இலைகள் அவனைத் தழுவிக் கொண்டன. மரத்தின் பாம்புக் கைகள் அவனைச் சுற்றிச் சுற்றிப் பின்னின.</p> <p>சற்று நேரங்கழித்து இலைகள் தானாக விலகின. அதனடியிலிருந்து விழுந்தது ஒரு எலும்புக் கூடு. <br />ஸித்த புருஷர் ஏதோ துரட்டி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அதை மரத்தினடியிலிருந்து இழுத்துப் போட்டார். எலும்புகள் பற்று விடாமல் பூட்டோ டு அப்படியே வந்தன. வேறு இரண்டு நந்திகள் வந்து எலும்புக் கூட்டைத் தூக்கிச் சென்றார்கள்.</p> <p>"இங்கே பிரபஞ்ச நியதிப்படி பிரஜோற்பத்தி கிடையாது. அதனால் ஒவ்வொரு எலும்புக் கூடும் அத்யாவசியம்" என்றார் ஸித்த புருஷர்.</p> <p>இவர் என்ன, நம்மைப் பசிக்கிறதா என்று கேட்டுவிட்டு வீண்கதை பேசுகிறார் என்று நினைத்தேன். எதிரிலிருந்த மரம் எருமை முக்காரம் போடுவதுபோலக் கனைத்தது! சில மரங்களில் அதன் பால் நாளங்கள் வழியாக வேகமாக ஓடும் போது கனைக்கும் சப்தம் கேட்கும் எனப் படித்திருக்கிறேன். நரமாம்ச பட்சணியான இந்த மரமும் அப்படித்தான் போலும். <br />ஸித்த புருஷர் அருகில் இருந்த அம்பு ஒன்றை எடுத்து வீசினார். வெறும் சதைப்பற்றில் பாய்வது போல புகுந்தது. <br />அம்புடன் தொடுக்கப்பட்டிருந்த கயிற்றின் வழியாக அதன் பால் வழிந்து ஓடிவந்து ஒரு பாத்திரத்தை நிறைத்தது. பாத்திரம் நிறைந்ததும் மரத்திலிருந்து அம்பை உருவினார். கொப்புளித்து வந்த பால் சற்று நேரத்தில் காய்ந்து மரத்தோடு மரமாகிவிட்டது.</p> <p>பாலை எடுத்து என்னிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மனிதனைத் தின்ன மரத்தின் பாலையா சாப்பிடுவது! <br />நான் விழித்தேன்.</p> <p>சுடுகாட்டு மாமரத்துப் பழம் தின்பது என்றால் விரசமாகத் தெரியவில்லையே? சாப்பிட்டுத்தான் பாரேன் எப்படி இருக்கிறது என்று" என ஸித்த புருஷர் சிரித்தார். <br />நானும் எடுத்துப் பருகினேன். பசி களைப்பு எல்லாம் பஞ்சாய்ப் பறந்து உடம்பிலே புதிய சக்தியும் தெம்பும் உண்டாயின. "இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சாக்காடு இல்லை" என்றார்.</p> <p>"கடல் கொண்ட கோவிலில் உள்ள கன்னி யார்?" என்றேன். <br />"அவளா! அந்தக் காலத்தில் உனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள். பூசாரி சடையன் மகள். இன்று காவல் தெய்வம்" என்றார் ஸித்த புருஷர்.</p> <p>"ஞாலத்தில் யாத்திரை செய்வது போல காலத்திலும் யாத்திரை செய்து பார்க்கப் பிரியமா?" என்று கேட்டார். <br />"அது எப்படி முடியும்?" என்று கேட்டேன்.</p> <p>"இதோ சுழன்று கொண்டே இருக்கிறதே அந்த ரஸக் குளிகையைப் பார்த்துக் கொண்டு" என்றார்.</p> <p><strong>3. குமரிக்கோடு</strong></p> <p>"ரஸக் குளிகையைப் பார்ப்பது இருக்கட்டும்; நான் எங்கே இருக்கிறேன்?" என்றேன்.</p> <p>"ஈரேழு பதினான்கு லோகங்களில் இது ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?" என்றார் ஸித்த புருஷர். <br />"நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை. சிந்திப்பதற்கு லாயக்கில்லாதபடி புத்தி குழம்பிக் கிடக்கிறது" என்றேன் நான்.</p> <p>"புத்தி குழம்புவதற்கு இங்கே உனக்கு ஊமத்தைச் சாறு பிழிந்து யாரும் கொடுக்கவில்லையே?"</p> <p>"இயல்பு என நான் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக இங்கே காரியங்கள் நடந்துகொண்டிருக்கும்போது ஊமத்தைச் சாறு வேறு அவசியமா?" என்றேன்.</p> <p>"இயல்பு என்று நீ நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக எதுவும் நிகழந்தால் அதை இயல்புக்கு மாறானது என்று நிச்சயப்படுத்தி விடலாமா?" என்றார் ஸித்த புருஷர். <br />"உடலற்ற தலை பேசுவதும், உடம்பற்ற குரல் துணை வருவதும், தலையற்ற முண்டம் புணையாகவும் பிறகு வழிகாட்டியாகவும் உயிர் பெறுவது என்றால் அது எனக்குக் கொஞ்சம் அதிசயமாகத்தான் இருக்கிறது. நான் பிறந்து நாளது வரையில் நடமாடிய உலகத்தில் அந்த மாதிரி நடந்தது கிடையாது. அங்கே செத்தவர்கள் செத்தவர்கள்தான்" என்றேன்.</p> <p>"சாவு என்பது என்ன?" என்றார் ஸித்த புருஷர். <br />"'உறங்குவது போலும் சாக்காடு - உறங்கி விழிப்பது போலும் உயிர்ப்பு' என்று சொன்னால் உங்களுக்குத் திருப்திதானே?" என்றேன்.</p> <p>"நீ திருக்குறள் படித்திருக்கிறாய் என்பதை எனக்குச் சொல்லிக் காண்பித்தது போதும். சாக்காடு என்றால் என்ன?" என்றார் ஸித்த புருஷர் மறுபடியும்.</p> <p>"அது என்னதென்று சொல்லத் தெரியாமல்தான் எங்களுடைய சமய சாஸ்திரங்கள் தவிக்கின்றன" என்றேன்.</p> <p>"எங்கள் உங்கள் என்று பேதம் பேசினது போதும்; நானும் உங்களவன் தான். உனக்குத் தெரியாமல் போனால் இல்லை என்று சாதித்துவிடுவாய் போலிருக்கிறதே."</p> <p>"நிச்சயமாக ஏகோபித்த அபிப்பிராயம் இல்லாதவரை..." <br />"சமய சாஸ்திரத்தின் நிச்சயத்தன்மை பற்றி பிறகு பேசிக் கொள்வோம். சாவு என்றால் என்ன என்பது நிச்சயமாக உனக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொள்."</p> <p>"நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு மேலே சொல்லுங்கள்."</p> <p>"செத்த பிறகு என்ன நடக்கிறது? மூச்சு நின்று விடுகிறது. ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. ஸ்மரணை கழன்றுவிடுகிறது. நீ உடம்பு என்று சொல்லுகிறாயே அது பல அணுக்களின் சேர்க்கையிலே, அவை சேர்ந்து உழைப்பதிலே உயிர்த் தன்மை பெற்றிருக்கிறது. அது அகன்றவுடன் அணுக்கள் தம் செயலை இழந்துவிடுவதாகப் பொருள் அல்ல; அவை சேர்ந்து உழைக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன; அவ்வளவுதான். அவற்றைத் தனித்து எடுத்து அவற்றிற்கு வேண்டிய ஆகாராதிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தால் அவை வளரும்..."</p> <p>"ஆமாம்; அது சாத்தியந்தான்; எங்கள் லோகத்திலும் ஒரு வெள்ளைக்காரர் இதைச் செய்து காட்டியிருக்கிறார்" என்றேன்.</p> <p>"இதை நீங்கள் வேறு செய்து பார்த்து திருப்தியடைந்திருக்கிறீர்களா? இதுதான் முதல் படி. இதற்கப்புறந்தான் விவகாரமே ஆரம்பிக்கிறது. மரணத்தில் எத்தனை வகையுண்டு என்பது தெரியுமா? கிழடு தட்டிச் சாவது ஒன்று; பிஞ்சிலே மடிவது ஒன்று; நோய் விழுந்து மடிவது ஒன்று; பிறகு திடகாத்திர தேகத்துடன் இருந்து வருகையில் அணுக்களின் சேர்க்கையைத் துண்டிப்பதால் ஏற்படுவது ஒன்று; இந்த மாதிரி மரணத்தில் எத்தனையோ வகை. ஆதி காலத்தில் நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்களே அதனால் எவ்வளவு உபயோகம் இருந்தது தெரியுமா? எமனை எட்டி நிற்கும்படிச் சொல்வதற்கு எங்களுக்கு சக்தி கிடைத்ததெல்லாம் இதனால்தான்..."</p> <p>"நாம் அநாகரீகமானது எனக் கண்டித்துக் கொண்டிருந்த ஒரு காரியம் ஆதிகாலத்தில் சாஸ்திர வளர்ச்சிக்கு எவ்வளவு துணை செய்திருக்கிறது" என நான் எண்ணமிடலானேன். <br />"கழுத்துடன் அரிந்து உயிரைப் போக்கிவிட்ட பிற்பாடு அணுக்களின் நசிவு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியுமானால், அதாவது அதில் உள்ள உயிர்ப்பை மட்டும் அவிந்து போகாமல் காப்பாற்றிக் கொண்டால், அந்த உடம்பை நம் இஷ்டப்படி இயக்கலாம் அல்லவா?"</p> <p>"உதாரணமாக?"</p> <p>"வெறும் மூளை இருக்கிறதே; அதுதான் மனம் புத்தி சித்தம் என்பனவற்றிற்கெல்லாம் ஆதார கோளம் என்பது உனக்குத் தெரியுமா? பழகிக் கொண்டால் பக்கத்தில் உள்ளவரை நம் இஷ்டப்படி ஆட்டி வைக்க முடியும் என்பது தெரியுமல்லவா?"</p> <p>"ஆமாம். அது சாத்தியந்தான். நான் கூட நேரில் பார்த்திருக்கிறேன்."</p> <p>"அதே மாதிரி ஜீவனை அகற்றிய தலையைத் தூர வைத்துவிட்டு, அதன்மூலம் அங்கு நடப்பதை அறியலாம். அங்கு நாம் விரும்புவதை நடத்தலாம். அதே மாதிரி தலைகள் மூலம் உடற்கூறுகளை நம் இஷ்டப்படி இயக்கலாம். இதெல்லாம் வெறும் பொம்மலாட்டம். பிரபஞ்ச தாதுக்களின் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு உயிர்ப்பை மட்டும் உடம்பில் காப்பாற்றி வைப்பதற்கு முடியும்..." <br />"அப்படியானால் நான் முதலில் கோவிலுக்குள் நுழைந்த போது அந்தக் கன்னியின் சிரசின் மூலம் தாங்கள்தான் பேசினீர்களோ" என்று கேட்டேன்.</p> <p>ஸித்த புருஷர் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தச் சிரிப்பிலே நாக சர்ப்பத்தின் சீறலும் தொனித்தது. எனக்கு வெகு பயமாக இருந்தது.</p> <p>என் மனசில் ஓடிய எண்ணங்கள் எல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்சம் என்பதை உணர்ந்துகொண்ட எனக்கு இன்னும் பீதி அதிகமாயிற்று.</p> <p>நான் பயத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. "தூரத்தில் பேசுவதற்கும் பொருள்களை இயக்குவதற்கும் நாங்கள் எங்கள் லோகத்தில் வெறும் ஜடப் பொருள்களையே உபயோகிக்கிறோமே. அந்தக் காரியத்தை நடத்துவதற்காக உயிர்க் கொலை செய்வது அநாவசியம்தானே?" என்றேன் நான்.</p> <p>"நீங்கள் ஜடப் பொருள்களை இயக்கி காரிய சாதனை செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜடப் பொருள்களை இயக்குவது என்றால் ஜடத்துக்குள் வசப்பட்டு அதன் நியதிகளுக்கு இணங்கி, தானே காரியம் நடக்கிறது. உங்களுடைய காரியங்களைப் புயல்கூடத் தடுத்துவிடுமே; எங்களுக்கு அப்படியா? எரிமலையைத் தாண்டிக்கொண்டு எங்கள் எண்ணங்கள் செல்லுகின்றனவே; உங்களுக்கு அப்படியா? நீங்கள் பேசினால் அங்கே குரல் கேட்கும்; அதாவது உங்கள் குரல் கேட்கும்; இங்கு அப்படியா? நீங்கள் ஜடப் பிராணனை உபயோகிக்கிறீர்கள். நாங்கள் அதற்கும் நுண்தன்மை வாய்ந்த சூட்சுமப் பிராணனை உபயோகிக்கிறோம். அது கிடக்கட்டும். நான் கேட்பதற்குப் பதில் சொல்லு; நீ காலத்தில் யாத்திரை செய்ய விரும்புகிறாயா? சொல்லு."</p> <p>"நான் எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன். முதலில் நீங்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஏன் பூலோகத்துக்கு வரக்கூடாது? நீங்கள் பேசுவதற்கு உபயோகமாகும் சிரமுடைய கன்னி யார்? இதெல்லாம் தெரியச் சொல்ல மாட்டீர்களா?" என்று கேட்டேன்.</p> <p>ஸித்த புருஷன் சிரித்துக்கொண்டு "பூலோகத்தில் எங்களுக்குக் கிடைக்காத சௌகரியங்கள் எல்லாம் இங்கு கிடைக்கும்போது நாங்கள் ஏன் அங்கு வர வேண்டும்? மேலும் எங்கிருந்தால் என்ன? நாங்கள் இப்போது பூலோகத்தில் இல்லை என்பதை நீ எப்படிக் கண்டாய்?" என்று கேட்டார்.</p> <p>நான் அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். <br />அவர் மேலும் பேசலானார்.</p> <p>"இப்பொழுது நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம் ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலே பெரியதொரு மலைத் தொடராக இருந்தது. இந்த எரிமலை இருக்கிறதே, அது அந்தக் காலத்தில் கிடையாது. பனிக்கட்டிகள் மூடிய பெரும் மலைகள் இந்த இடமெல்லாம். இதற்குத் தெற்கே அகண்டமான பெரியதொரு நிலப்பரப்பு இருந்தது. அதில்தான் உன்னுடைய மூதாதைகளும் என்னுடைய மூதாதைகளும் வாழ்ந்து வந்தார்கள். இந்த மலையிலிருந்து புறப்பட்டு இரண்டு நதிகள் ஓடின. ஒன்று குமரியாறு. அது கிழக்கே கடலில் சங்கமமாயிற்று. மற்றது பல்துளியாறு என்பது. அது இங்கிருந்து புறப்பட்டு ஏழு பாலைவனங்களைக் கடந்து ஏழ்பனை நாட்டின் வழியாக ஈசனை வலம் வந்து மறுபடியும் தென் திசை நோக்கியோடி, பனிக்கடலுள் மறைந்தது. பனி வரையில் பிறந்து பனிக்கடலில் புகுந்தது பல்துளியாறு. குமரி நதி கீழ்த்திசைக் கடலில் சங்கமாகுமிடத்தில்தான் தென்மதுரை இருந்தது. அதில்தான் பாண்டியர்கள் மீன் கொடியேற்றி மீனவனை வழிபட்டார்கள். அவர்கள் குலதெய்வம் மீன்கண்ணி.</p> <p>படைப்புக் காலந்தொட்டே வழிபட்டுவரும் சிலை அது. அதற்குப் பூசனை நடத்தி வந்தவள் கன்னி. படைப்புக் காலந்தொட்டு ஜீவித்து வருகிறாள் அவள். உன்னைப் போல உன் வயசிலிருக்கும் போதும் அவளைக் கண்டேன். எனக்கு முந்தியோரும் அவளை அப்படியே கண்டு வந்திருக்கிறார்களாம். மீன்கண்ணியின் ஆலயம் ஆதியில் தென்மதுரையில் இருந்தது. நீரிலே நெருப்புத் தோன்ற தென்மதுரை அழிந்தது. நிலப்பரப்பு குன்றியது. பிறகு மீன்கண்ணியின் சிலை, அதே சிலை கபாடபுரத்தில் ஈசனார் திருவடி நிழலிலே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கபாடபுரத்தை நிரூபித்ததும் அங்கு குடியேறியதும் வேலெறிந்த பாண்டியன் காலத்திலாகும்... கபாடபுரம் நிலப்பரப்பின் மையத்திலிருந்தது. மீண்டும் கடற்கோள். கடல் மீண்டும் நகரின் ஒரு பாரிசத்தைத் தொட்டது. அந்த நிலையில்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சிம்மாசனமேறினான். அதன் பிறகு... மறுபடியும் மறுபடியும் சமுத்திர ராஜன் சீற்றங்கொண்டான்... கபாடபுரம் தென்மதுரை போல மூழ்கி மறைந்தது..."</p> <p>ஸித்த புருஷர் பேசி நிறுத்தினார். நாங்கள் இருவரும் மவுனமாக இருந்தோம்.</p> <p>எனது பார்வை இடையறாது சுழன்றுவரும் ரசக்கோளத்தின் மீது கவிந்தது. அதன் சுழற்சி நிதானமாக ஒரே வேகத்தில் வெளிச்சத்தைப் பிரதிபலித்தது...</p> <p><strong>4. கபாடபுரத்தின் அழிவு</strong></p> <p>நான் உற்றுக் கவனித்துக்கொண்டே இருந்தேன். சற்று சித்தம் கிறங்கியது. உடம்பிலிருந்து சுழன்ற புத்தி மட்டும் எங்கோ விரைந்து சென்றது. வேகத்தில் செல்லும் திசை தெரியவில்லை. நேரம் தெரியவில்லை. எதிரே பெரும் பாலைவனம் தெரிந்தது. என்ன சூடு என நினைப்பதற்குள் அவற்றை விட்டு அகன்று விட்டேன்.</p> <p>மாலை நேரம். பிரமாண்டமான செம்புக் கதவின் முன் பக்கம் நின்றுகொண்டிருந்தேன். அது மேற்கே பார்த்திருந்தது. என்ன அற்புதமான வேலைப்பாடு! கதவைத் தள்ளித் திறப்பது என் போன்ற மனிதனால் இயலாத காரியம். உயரம் நூறடிக்கு மேலிருக்கும்; அகலம் இருபத்தைந்து அல்லது முப்பது அடிக்குள்ளாக இருக்காது. கதவின் இரு பக்கங்களிலும் நிமிர்ந்து நின்ற மதில் கற்களைச் செம்பை உருக்கி வார்த்துக் கரைகட்டியிருந்தார்கள். இந்தக் கதவு பிரமாண்டமானதொரு கற்பாறையின் உச்சியிலிருந்தது. வடபுரத்தில் ஆழமான சமுத்திரம். அலைகள் அதனடியில் வந்து மோதி நுரை கக்கின.</p> <p>தென்புறத்தில் காடு. மரம் செறிந்த காடு குன்றினடியில் தென்பட்டது. உயர்ந்த விருக்ஷங்களுக்கு மேல் தனது கொக்குத் தலையைத் தூக்கி நின்று கொண்டிருந்த கர்ப்பேந்திரம் ஒன்று ஒரு யானையைத் தனது கைகளில் பற்றிக் கிழித்துத் தின்று கொண்டிருந்தது. <br />மேற்கே பெரிய மலை ஒன்று கனிந்து புகைந்து கொண்டு இருந்தது. அஸ்தமன செவ்வானத்தில் தென்பட்ட பிறைச் சந்திரன் எனக்கு இழை நெற்றிக்கண் நிமலனை நினைப்பூட்டியது. திரித்திரியாகத் திரிந்து படரும் புகை சடையையும், கனிந்த உச்சி நெற்றிக் கண்ணையும் நினைப்பூட்டியது.</p> <p>அதிசயப்பட்டுக்கொண்டே நின்றேன். பிரமாதமான பேரியும் வாங்காவும் மணிச்சத்தமும் கேட்க ஆரம்பித்தது. கதவு மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது.</p> <p>ஊர்வலத்தின் முன்னால் பூசாரி சடையன் பவித்திரமாக நீறு அணிந்து இடையில் வைரவாள் சொருகி நடந்தான். அவனுக்குப் பின் அவள் வந்தாள். என்ன அழகு! அவளைப் பலியிடப் போகிறார்கள். அவளுக்குப் பின் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வந்தான். அவனுக்குப் பின் நான் வந்தேன். அதாவது என்னைப் போன்ற ஒருவன் வந்தான். கையிலே வேல்.</p> <p>அவன் கர்ப்பேந்திரத்தைக் கண்டான். அதன்மேல் வீசினான். வேல் குறி தவறி அதன் ஒற்றைக் கண்ணைக் குருடாக்கியது. ஐந்நூறு அடி உயரமுள்ள மிருகத்திற்கு இந்த குன்று எம்மாத்திரம்! அதன் கோரக் கைகள் பூசாரி சடையனைப் பற்றின. சடையன் தனக்கு மரணம் நிச்சயம் என்று தெரிந்துகொண்டாலும், வைரக் கத்தியைக் கொண்டு அதன் குரவளையில் குத்தினான். சடையன் தலை அந்த மிருகத்தின் கோர விரல்களில் சிக்கி அறுபட்டது. <br />ஊர்வலத்தில் ஒரே களேபரம். தெறி கெட்ட மிருகம் எங்கே பாயுமோ என நாலா திசையிலும் சிதறி ஓடினர். கர்ப்பேந்திரமோ வலி பொறுக்கமாட்டாமல் மலையுச்சியை நோக்கி ஓடியது.</p> <p>இந்தக் களேபரத்தில் என் சாயலில் இருந்த அவன் கன்னியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினான். அரசன் வாளுக்கும் கோபத்துக்கும் தப்பிவிடலாம் என்று. நேரே ஓடிய கர்ப்பேந்திரம் எரிமலையின் உச்சியில் சென்று பாதாளத்தில் விழுந்து மறைந்தது.</p> <p>கடற்கரை நோக்கி ஓடியவர்கள், நீரிலே நெருப்புத் தோன்றிவரக் கண்டார்கள். அதே சமயத்தில் மண் மாரி போல சாம்பல் விழுந்தது. எரிமலை கர்ஜிக்கத் தொடங்கியது. அக்னிக் குழம்புகள் பாகாக உருகி ஓடிக் கடலில் கலந்து அதையும் பொங்க வைத்தது. கடலின் அலைகளோ ஊழியின் இறுதிப் பிரளயம் போலத் தலை தூக்கியடித்தன. நிமலன் நெற்றிக் கண்ணைத் திறந்தான். கபாடபுரத்தின் செப்புக் கதவுகள் பாகாக உருகியோடுவதைக் கண்டேன். <br />பிறகு அலைச் சப்தம், பேரலைச் சபதம், ஒரே அலைச் சப்தம்.</p> <p><strong>******</strong></p> <p><strong>நன்றி</strong>: சந்திரோதயம், 30-06-1945, 10-07-1945, 20-07-1945</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-57079539583187574492010-01-14T19:42:00.000-08:002010-02-15T03:17:04.611-08:00வாடிவாசல் - சி.சு.செல்லப்பா<blockquote> <p><strong>சி.சு.செல்லப்பா</strong></p> </blockquote> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0_kIkE2-FI/AAAAAAAAFd4/zwTsoaWgMk4/s1600-h/sisuchellappa%5B8%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="sisuchellappa" border="0" alt="sisuchellappa" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0_kJfWTy0I/AAAAAAAAFd8/oDLMLkDC798/sisuchellappa_thumb%5B6%5D.jpg?imgmax=800" width="259" height="323" /></a> </p> <p><strong>வாடிவாசலிருந்து சில பகுதிகள்:</strong></p> <p>கிழக்கு சீமையில் பிரசித்தி பெற்ற மாடு அணைகிறவன் மகன் அந்தப் பையன் -பேச்சுக்கு பையன் என்றாலும் -அந்த வாலிபன் என்ற செய்தி அந்த ஷணமே வாய்க்கு வாய் மாறி வாடிவாசல் முன் சூழ்ந்து நின்ற அதனை நூற்றுக்கணக்கானவர்களுக்கும் பரவி எட்டிவிட்டது. தொழிலில் ஈடுபட்ட அத்தனை பேரும் அவனையே ஆராய்ந்தார்கள் .கண் உறுத்து பார்த்து அவனவன் யூகத்திற்கு அகபட்டபடி பேசிகொண்டார்கள் .</p> <p> <br />" மாடு பிடிகத்தான் வந்திருப்பான் பய.அதுக்கு சம்சயம் வேறேயா?"</p> <p>" கிளகத்தி ஆளு,துடியாதான் இருப்பான் "</p> <p>" சல்லிகட்டு ரோசமாதான் இருக்கும் "</p> <p>" உருமாளுக அத்தனையையும் தட்டிகிட்டு போயிர போறான் கிழக்கத்தியான்" "நம்ம பக்கதானுக அசந்தாப் போச்சு "</p> <p>"ஜமிந்தார் மாட்டை கூட ஒரு கை ..."</p> <p>"ஹும் ! ஜமிந்தார் மாட்டை புடிக்க இவன்தானா ஆளு? ஆண்டுப் பய !"</p> <p>"கொம்புலேர்ந்து குதிசுப்புடானோ ? கிளகக்கதியானா ? வெறும் பேச்சுப் பேசிக்கிட்டு !"</p> <p>" பார்த்தியா பிச்சி, வாடிபுரம் காளைக்கு வந்திருக்கிற மவுசை ?" என்றான்மருதன் கிண்டலாக. "பார்த்துடலாம் ," என்று பிச்சி ஒரே வார்த்தைதான் சொன்னான் ,அதுவும் மெதுவாக .கிழவன் அதை உன்னிப்பாக கேட்டுவிட்டான். அந்த வார்த்தையை பிச்சி அழுத்தின விதம் கிழவனை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது .</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0_kKokmznI/AAAAAAAAFeA/1tDSQC457qE/s1600-h/jallikattu1alanganallur3ja%5B13%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="jallikattu1alanganallur3ja" border="0" alt="jallikattu1alanganallur3ja" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S0_kLqfkAAI/AAAAAAAAFeE/VXRsp99UxSA/jallikattu1alanganallur3ja_thumb%5B11%5D.jpg?imgmax=800" width="347" height="256" /></a> </p> <p>" என்ன தம்பி விளையாட்டுக்கு பேசுறியா, இல்லே ..."என்று தடுமாறக் கலவரத்துடன் பார்த்துக் கிழவன் கேட்டான். பிச்சியின் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்தான் உண்டு .அந்த அர்த்தத்தில்தான் அவன் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டும் அவனால் நம்பமுடியவில்லை "</p> <p>கிழவனின் கலவர முகத்தை நிலைத்து பார்த்து லேசாக சிரித்து பிச்சி சொன்னான் ," ஏன்,தாத்தா ,சும்மா போகிற மாட்டுமேல மனுஷன் விழறதே ஒரு விளையாட்டுதானே , இல்லிங்களா? சொல்லுங்க ,ஏன் பாக்கிறவங்களுக்கு கூட அது விளையாடதானே இருக்கு. அதுக்குன்னு பிறந்துபோட்டு...... "</p> <p>அட விடுங்கப்பா கீழே," என்று பிச்சி வற்புறுத்தி உற்சாக தோள்களிலிருந்து கிழிறங்கி நின்றான்.மறுபடியும் ஜமிந்தார் முகத்தை பார்த்து கும்பிட்டான்." டேய் ,வாடிபுரம் காளையை புடிச்சி பாக்றியா?" என்று திடுதிபென ஜமிந்தார் அவனை கேட்டுவிட்டு அவன் முகபாவத்தை ஆராய்ந்தார்.</p> <p>அந்த சில வினாடிகளுக்கு இருவரும் ஒருவரைஒருவர் நோட்டம் பார்த்து கொண்டார்கள் .அந்த வாலிபனின் வேலையையும் கையாளும் புதுபுது உத்திகளையும் சுதாரிப்பையும் கையுறுதியையும் அந்த இரண்டு காளைகள் விசயத்தில் அவர் பார்த்துவிட்ட பிறகு அவருக்கு திடீர் சந்தேகம் பிறந்துவிட்டது -வாடிபுரம் காளையையும் அவன் பார்த்து விடுவனோ என்று .இதுவரை இருந்த இரட்டை நிச்சயம் அவருக்கு இப்பொது இல்லை,முதல் முதலாக அவர் வாழ்கையில் ,வாடிவாசல் முன்பு.வீசி வந்த கேள்வியை கேட்டு பிச்சியும் சற்று திடுக்கிட்டு விட்டான்.ஜமிந்தார் கேள்விக்கு அர்த்தம் ,அதற்கு பின் உள்ள அவர் நினைப்பு ,இதெல்லாம் நினைத்து பார்த்தான்.அவர் முகத்திலிருந்து நிச்சயமாக மதிப்பிட முடியவில்லை .அனால் ஒன்று மட்டும் நிழல் வீசியது .அவரது சந்தேகத்தை போக்கும்படியாக இரண்டிலொரு பதிலை எதிர்பார்த்தமாதிரி தோன்றியது.</p> <p>"உறுதியாக சொல்லமுடியாதுங்க " என்று ஜமிந்தார் கண்களை சந்திக்காமலே தலை குனிந்து பிச்சி இழுத்தான் ." நோக்கம் பர்த்துகிடனுங்க."அந்த வார்த்தை முனக்கமாக வந்தது.ஆனால் ஜமிந்தார் காதுக்கு தெளிவாக கேட்டது .</p> <p>"சரி போ !"என்று ஜமிந்தார் வெட்டி சொன்னார் ." மாடுகளை புடி!" பிச்சியின் வார்த்தைகளில் உள்ள அர்த்தம் அவருக்கு தெளிவாகிவிட்டது .</p> <p>"ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் . அது விளையாட்டும் கூட.புய வலு ,தொழில்நுட்பம் எல்லாம் அதற்கு வேண்டும் .தான் போராடுவது மனிதனுடன் அல்ல,ரோசமூடப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை நாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன் அந்த இடத்தில மரணம்தான் மனிதனுக்கு காத்து கொண்டிருக்கும்.காளைக்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது .அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை."என்று வாடிவாசல் -கு முன்னுரை எழுதி இருக்கிறார் சி.சு.செல்லப்பா</p> <p>****</p> <p>வாடிவாசல் குறித்து<i> <strong>ஜெயமோகன்</strong></i></p> <p><i>உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான <a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0_kM6P5UkI/AAAAAAAAFeI/sK8nyajy8OA/s1600-h/vaadivasal_b%5B5%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="vaadivasal_b" border="0" alt="vaadivasal_b" align="left" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S0_kN67ut4I/AAAAAAAAFeM/X_xIlqdQPqk/vaadivasal_b_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="203" height="308" /></a>கதை. </i></p> <p><i>தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. 'ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ' என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.</i> <br />காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை <br />இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.</p> <p>ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.</p> <p>வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் .</p> <p>மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன் <br />எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.</p> <p>40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.</p> <p>****</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-4190117345209952502010-01-13T18:12:00.000-08:002010-02-15T03:17:04.624-08:00மனக்குகை ஓவியங்கள் - புதுமைப்பித்தன்<blockquote> <h4><font size="2">புதுமைப்பித்தன்</font></h4> </blockquote> <p>கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத் திறந்து எட்டிப் பார்த்தார்.</p> <p>கீழே, பல யோஜனைகளுக்கு அப்பால், அவர் கற்பித்த பூமண்டலமும் அதன்மீது ஊர்ந்து திரியும் சகல ஜீவராசிகளும் அவர் தமது சாயையில் சிருஷ்டித்து மகிழ்ச்சியுற்ற ஆதாம் ஏவாளின் வாரிசுகளும் தென்பட்டன. <br />ஒரு தாயின் பெருமிதத்துடன், ஒரு சிருஷ்டிகர்த்தரின் கம்பீர மகிழ்ச்சியுடன் அப் பூமண்டலத்தைக் கவனித்தார்.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S059k4eZ8qI/AAAAAAAAFdw/110ehyxst5E/s1600-h/1757785776_81b5cdebed%5B12%5D.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="1757785776_81b5cdebed" border="0" alt="1757785776_81b5cdebed" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S059l4KuOwI/AAAAAAAAFd0/HuZGF_Hed9A/1757785776_81b5cdebed_thumb%5B13%5D.jpg?imgmax=800" width="356" height="397" /></a> </p> <p>அன்று ஏழாம் நாள். தொழிலை (விளையாட்டை?) முடித்துக் கை கழுவிவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த பொழுது எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் மனிதனைத் தவிர்த்துப் பூமண்டலத்தின் மற்றைய ஜீவராசிகளெல்லாம் அவருக்குத் தென்பட்டன.</p> <p>மனிதன் மட்டிலும், ஏக்கத்தாற் குழிந்த கண்களோடு, விலாவெலும்பெடுத்த கூனல் உடலை வளைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட, எதையோ குகையொன்றில் வைத்து ஊதி ஊதி உருக்கிக் கொண்டிருந்தான்.</p> <p>பிதாவின் களங்கமற்ற நெற்றியில், கண்ணாடியில் கலந்த ஆவி போல் சோர்வு போர்த்திய துயரக் களை தோன்றி மறைந்தது.</p> <p>தம் இரத்தத்தின் இரத்தமான, கனவின் கனவான, லட்சியத்தின் லட்சியமான புதல்வனின் நினைவு தட்டியது போலும்!</p> <p>இன்னுமா?</p> <p>     "ஹே! மானுடா, ஏனப்பா உன் பார்வை குனிந்தே போய் விட்டது?" என்ற குரல் பல யோஜனைகளுக்கு அப்பால் உள்ள மனிதனுடைய உள்ளத்தில் ஒலித்தது.</p> <p>மனிதன் தன்னுடைய நம்பிக்கை வறண்ட கண்களைக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான்.</p> <p>     "நீர் எப்பொழுதும் அங்கேயே இருக்கிறீரே?" என்று பதில் கேள்வி கேட்டான்.</p> <p>     "நான் என்ன செய்யட்டும்! உன்னை மாசுபடுத்தும் அந்தப் புழுதி தோய்ந்த கரங்களுடன், மார்புடன் என்னைக் கட்டித் தழுவ முயலுகிறாயே?"</p> <p>     "என்னைச் சிருஷ்டிக்க நீர் உபயோகித்த புழுதியைவிட்டு நான் எப்படி விலக முடியும்? அதை விட்டு விலகி நான் உம்மை எப்படி வரவேற்க முடியும்? நான் நிமிர்ந்து நேராக நிற்பதற்கே இந்தப் புழுதிதானே ஆதாரம்? புழுதியைக் கண்டு அஞ்சும் உமக்கு அதன் மீது நிற்கும் என்னை அறிந்து கொள்ளச் சக்தி உண்டா? நீர் அந்தச் சக்தி பெற்றுக் கீழே வரும் வரை நான் இந்தப் புழுதியில் கண்டெடுத்த - அதில் என்னோடு பிறந்த, என் சகோதரனான - இந்த இரும்புத் துண்டை வைத்து, என்னைப் பாதுகாத்துக் கொள்ளுகிறேன்!" என்று குனிந்து நெருப்பை ஊதலானான். குகையுள் பளபளவென்று மின்ன ஆரம்பித்தது.</p> <p>உத்தானபாதனது குழந்தை தெய்வத்திடம் வரம் கேட்பதற்காகத் தபஸ் செய்யக் கானகத்திற்கு ஓடிற்று. மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும் ஆகாய மார்க்கமாகச் செல்லும் பொழுது இக்குழந்தையைக் கண்டுவிட்டார்கள். <br />ஸ்ரீதேவிக்குப் பசலைக் குழந்தையின் உறுதியைக் கண்டு பரிவு ஏற்பட்டுவிட்டது. தன் கணவருக்கு இருக்கும் அந்தக் 'காத்து அளிக்கும்' சக்தியை விவரம் தெரியாத குழந்தைகள் கூட அறிந்திருக்கின்றனவே என்பதில் ஒரு பூரிப்பு! கணவரைப் பார்த்துக் கொண்டாள்.</p> <p>ஸ்ரீதேவியின் கடைக்கண் வீச்சுக்கிணங்கி வரங்களை வாரிச் சொரியக் குழந்தையை அணுகினார் மகாவிஷ்ணு. <br />குழந்தை ஓடிக்கொண்டிருந்தது.</p> <p>பகற் கனவை ரஸித்துப் பல முறை ஏமாந்த குழந்தை அது. அதற்கு எதிலும் சர்வ சந்தேகம். மனத்தின் பேரில் அதற்கு அசைக்க முடியாத, நிரந்தரமான சந்தேகம். <br />உத்தானபாதனது மடியில் உட்கார்ந்து விளையாடுவதாக, கொஞ்சுவதாக நம்பி எத்தனையோ முறை முன் ஏமாந்திருக்கிறதல்லவா?</p> <p>மகாவிஷ்ணு சங்கு சக்கராயுதராக அதனை வழிமறித்து நின்று "குழந்தாய்!" என்று அழைத்தார்.</p> <p>     "நீ யார்?" என்று கேட்டது குழந்தை.</p> <p>     "குழந்தாய், என்னைத் தெரியாதா? நான் தான் மகாவிஷ்ணு!" என்று புன்சிரிப்புடன் தம்மை அறிவித்துக் கொண்டார்.</p> <p>     "பொய்! நான் என்ன கனவு காண்கிறேனா?" என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டது குழந்தை.</p> <p>     "நிஜந்தான். இந்தா, இந்த வரத்தைக் கொடுக்கிறேன்! இதிலிருந்து தெரிந்து கொள்!"</p> <p>     "ஓஹோ, செப்பிடுவித்தைக்காரனா?"</p> <p>     "நான் தான் மகாவிஷ்ணு; என் பக்கத்திலிருக்கும் ஸ்ரீதேவியைப் பார்!"</p> <p>     "பகல்வேஷக்காரனும் கூடவா? எங்கப்பா கிட்டப்போ! சம்மானம் குடுப்பார். என்னை ஏமாத்த முடியாது!" என்று சிரித்துக் கொண்டே, "நேரமாகிறது; தபஸ் பண்ணப்போறேன்!" என்று காட்டிற்குள் ஓடிவிட்டது அக்குழந்தை.</p> <p>கொடுக்க விரும்பிய வரத்தை ஒரு நட்சத்திரத்தின் மீது வீசி எறிந்துவிட்டு ஆகாச கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார் பகவான்.</p> <p>பசியால் தவிக்கும் 'கல்லினுள் சிறு தேரை' தென்பட்டது. அதை நோக்கி விரைந்து சென்றார். <br />யமபுரி.</p> <p>மார்க்கண்டச் சிறுவனுக்காகப் பரிந்துகொண்டு வந்த சிவபிரான் கையில் தோல்வியுற்று தர்மராஜன் அப்பொழுதுதான் திரும்பி வந்திருக்கிறான். <br />தனது தர்மாசனத்தில் உட்காரவும் அவனுக்கு அச்சம் - தயங்குகிறான்.</p> <p>ஆசனத்தடியில் விடாப்பிடியாக உட்கார்ந்து கொண்டு முரண்டு செய்துகொண்டிருந்த நசிகேதக் குழந்தை, "மரணம் என்றால் என்ன?" என்று மறுபடியும் தன் மழலை வாயால் கேட்டது.</p> <p>எத்தனையோ தத்துவங்களைச் சொல்லிப் பார்த்தான். <br />குழந்தையை ஏமாற்ற முடியவில்லை. தன் ஒற்றைக் கேள்வியை வைத்துக் கொண்டு அவனை யுகம் யுகமாக மிரட்டி வருகிறது அக்குழந்தை.</p> <p>தோல்வியின் சுபாவமோ என்னவோ!</p> <p>     "மனிதர்கள் என்னைக் கண்டு ஏன் மிரளுகிறார்கள்? அஞ்சுகிறார்கள்? நான் உதவி செய்யத்தானே செல்லுகிறேன்? எனக்குப் பயந்து என்னையும் விடப் பெரிய எமனான சங்கரனிடம் சரண் புகுந்தாவது என்னை விரட்டப் பார்க்கிறார்களே! இது என்ன புதிர்? என்னைக் கண்டு பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்று அவனது ஏக்கப் படுதாவில் நினைவு - அலைகள் தோன்றி விரிந்தன. <br />அன்றுதான் அவன் தன் தனிமையை முழுதும் அறிந்தான். <br />அப்பொழுதுதான் கிங்கரர் இருவர் தன்முன் கொண்டு வந்து நிறுத்திய மனித உயிரைப் பார்த்துத் தன் அந்தரங்கக் கேள்வியை வாய் குழறிக் கேட்டுவிட்டான்.</p> <p>     "அதோ கிடக்கிறது பார், நான் போட்டுவிட்டு வந்த உடல்; அதில் போய் உட்கார்ந்து கொள். அப்புறம் உன் கிங்கரர்களை ஏவி, உன்னை அழைத்து வரும்படி உத்தரவு செய். அப்பொழுது தெரியும் உனக்கு!" என்று சொல்லிச் சிரித்தது அந்த மனித உயிர்.</p> <p>பர வெளியிலே, பேரம்பலத்திலே நின்று, தன்னையே மறந்த லயத்தில், ஆனந்தக் கூத்திட்டுப் பிரபஞ்சத்தை நடத்துகிறான் சிவபிரான்.</p> <p>ஒரு கால் தூக்கி உலகுய்ய நின்று ஆடுகிறான். <br />பக்கத்தில் வந்து நின்றார் நாரதர்.</p> <p>     "அம்மையப்பா! எட்ட உருளும் மண்ணுலகத்தைப் பார்த்தருள்க!...அதோ கூனிக் குறுகி மண்ணில் உட்கார்ந்து ரசவாதம் செய்கிறானே! சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது தெரியுமா?... துன்பம், நம்பிக்கை - வறட்சி, முடிவற்ற சோகம்..."</p> <p>தன்னை மறந்த வெறியில் கூத்தாடும் பித்தனுக்கா இவ்வார்த்தைகள் செவியில் விழப்போகின்றன! <br />வீணையை மீட்டிக்கொண்டு வேறு திசை பார்த்து நடந்தார் நாரதர்.</p> <p>கைலயங்கிரியிலே கண்ணைப் பறிக்கும் தூய வெண்பனி மலையடுக்குகள் சிவந்த தீ நாக்குகளைக் கக்குகின்றன. <br />திசையும் திசைத் தேவர்களும், யாவரும் யாவையும் எரிந்து மடிந்து ஒன்றுமற்ற பாழாக, சூன்யமாகப் போகும்படி பிரான், கோரச்சுடரான் நெற்றிக்கண்ணைத் திறந்து, தன் தொழில் திறமையில் பெருமிதம் கொண்டு புன்னகை செய்கிறான்! கண்ணில் வெறியின் பார்வை!</p> <p>பார்த்த இடங்களில் எல்லாம் தீ நாக்கு நக்கி நிமிர்கிறது! <br />இடியும் மின்னலும், இருளும் ஒளியும் குழம்பித் தறிகெட்டு நசிக்கின்றன.</p> <p>இக்குழப்பங்களையும் மீறி ஒரு சிறு குழந்தை அவனது காலடியை நோக்கி ஓடி வருகிறது.</p> <p>தோலாடையைத் தன் தளிர் விரல்களால் பற்றி இழுக்கிறது. <br />பிரான் குனிந்து பார்க்கிறான், புன்சிரிப்போடு.</p> <p>     "அழிப்பதற்குச் சர்வ வல்லமை இருக்கிற தெம்பில் வந்த பூரிப்போ இது?" என்கிறது குழந்தை.</p> <p>     "சந்தேகமா! நீதான் பார்க்கிறாயே!" என்கிறான் பரமன்.</p> <p>     "உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும். உம்மை அழித்துக் கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக் கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்றுவந்த பின்பு நெஞ்சைத் தட்டிப் பார்த்துக்கொள்ளும்!" என்று சொல்லிக் கொண்டே கருகி நசித்தது அக்குழந்தை.</p> <p>****</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-21161548750823794572010-01-11T19:10:00.000-08:002010-02-15T03:17:04.636-08:00ஆறுதல் - வண்ணதாசன்<blockquote> <p><b>வண்ணதாசன்</b></p> </blockquote> <p>ஒரு தெருவும் அதன் மனிதர்களும் அப்படியே காலங்காலமாக அச்சடித்தது மாதிரி தவறாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் தான். ஆனால் மனம் இதுபோன்ற சமயங்களில் முட்டாள் தனமாக இருப்பதற்கே சம்மதமாக இருக்கிறது.</p> <p><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S0voJ7lmNCI/AAAAAAAAFdc/ftYF4sd0kvo/s1600-h/r161143_590255%20%281%29%5B11%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="r161143_590255 (1)" border="0" alt="r161143_590255 (1)" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S0voKxdjymI/AAAAAAAAFdg/Pr8uOOiuG2c/r161143_590255%20%281%29_thumb%5B9%5D.jpg?imgmax=800" width="364" height="212" /></a> </p> <p>தெரு என்று இருந்தால் வாடகைக்கு இருப்பவர்கள் மாறுவார்கள் புது ஆட்கள் வருவார்கள். சில வீடுகள் கிரையம் ஆகிக்கூட வேறு ஆட்கள் வாங்கி இடித்துக் கட்டியிருப்பார்கள். ஏறு நடையாக மிகப்பெரிய வேப்ப மரத்துடன், இரண்டு பக்கமும் பறக்கிறதுப் போலப் பொம்மைகள் வைத்த 'கிருஷ்ணன் வச்ச வீடு ' இப்போது முற்றிலும் இடிக்கப்பட்டு மிக நவீனமான முகப்புடன் வந்து எங்கள் தெருவின் மிக அழகான ஞாபகங்களில் ஒன்றை அழித்துவிட்டது.</p> <p>வீட்டுக்கு வீடு ஆற்றுத்தண்ணீர்க் குழாய் பதிப்பதற்காக, 'ப.ரா--ப.ரா ' என்று மரியாதையாக அழைக்கப்பட்ட ப.ராமசாமி ஐயர் எங்கள் வார்ட் கவுன்சிலராக வந்ததும் போடப்பட்ட நேர்த்தியான ரோடுகள் எட்டடிக்கு ஒரு தடவை பெயர்க்கப்பட்டுவிட்டன. ஐந்து வருஷத்துக்கு முன் உத்யோக உயர்வில் நான் இந்த ஊரை விட்டுப் போகும்போதுகூட இல்லாத ஆட்டோ ரிக்ஷா, இந்தத் தெருவுக்குள் வந்து வீட்டின் முன் நின்றபோது, டிரைவர் மிகச் சிரமத்துடன் கோபம் அடக்கி நாகரீகமாக நடக்கவேண்டிய அளவுக்கு மிக மோசமாகியிருந்தது தெரு.</p> <p>அதெல்லாம் சரி. ஆனால் மனிதர்களுக்கு என்ன வந்தது ? எங்கள் குடும்பம் போல இன்னும் நாலைந்து குடும்பமாவது தெரு நெடுகிலும் ஒரு அறுபது எழுபது வருஷமாக ஓடின வேரைப் பெயர்க்கமுடியாமல் இங்கே தானே இருக்கிறார்கள். அவர்களாவது 'என்னப்பா எப்போ வந்தே ? ' என்று கேட்கலாம் அல்லவா ? கேட்கிறது இருக்கட்டும். பழகின பையனை ரொம்ப காலத்துக்குப் பிறகு பார்க்கிற சந்தோஷத்தையாவது முகத்தில் காட்ட வேண்டாமா ?</p> <p>வீரபத்ரவிலாஸ் பாத்திரக்கடை நொடித்துப் போனதுக்கும், என்னுடன் ஸ்கூலில் கூடப்படித்த அந்த வீட்டு A.கணேசன் என்னைப் பார்க்காமல் போவதற்கும் என்ன சம்பந்தம். அவன் எஸ் எஸ் எல் சி படித்து முடிந்ததும் கல்யாணம் ஆகிவிட்டது. திருவனந்தபுரத்திலிருந்து பெரிய பெரிய கார்களில் பெண் வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். சாயங்காலம் நலுங்குக்கு--கனகராயன் முடுக்குத்தெரு முத்துலட்சுமிதான் அப்போது பிரபலம்-- 'தாயே யசோதா உன்னை ' பாடினபோது நான் கூடப் பக்கத்திலிருந்து அவனையே பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருந்தேன். அவன் இன்று லாட்டரிச்சீட்டுகளைக் க்ளிப்பில் மாட்டிக்கொண்டு, பஸ் ஸ்டாண்டில் ஒரு தற்காலிக மர மேஜைக்குப் பின் நிற்பது துன்பமானதுதான். ஆனால் இந்தத் துன்பத்தையும் சுய இரக்கத்தையும் மீறியதல்லவா அன்பும் சிநேகிதமும்.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S0voMLGnk_I/AAAAAAAAFdk/1Tb-_vaanYQ/s1600-h/vannadhasan1%5B26%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="vannadhasan1" border="0" alt="vannadhasan1" align="left" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S0voM53Qe1I/AAAAAAAAFdo/iBmlld64LV8/vannadhasan1_thumb%5B27%5D.jpg?imgmax=800" width="207" height="265" /></a> பானா தானா ராவுத்தர் கடையிலும், அவர் போய்ச் சேர்ந்தபிறகு அவர் பையன்கள் ஆரம்பித்து வியாபாரம் தெரியாமல் நிறுத்திவிட்ட ராயல் ஸ்டோரிலும் முதலாளிக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து கவனித்துக் கொண்ட, பெண் விஷயங்களில் மிகவும் பெயர் பெற்ற வெங்குப் பிள்ளைக்கும் எனக்கும் என்ன விரோதம் ? அவர் கூட நின்று பேசாமல், நடந்த வாக்கிலேயே, 'என்ன, வடக்கேதானே வேலை ' என்று கேட்டுவிட்டுப் போகிறார். அதுகூட ஒரு போக்கு. வயதானதால் இருக்கலாம்.</p> <p>எப்போது பார்த்தாலும் 'செளக்கியமா பேரப் பிள்ளை ? ' என்று கையைப் பிடித்து, மேலுதட்டிலும் புருவத்தினும் பூனை மயிர் இடுங்க, என்னவென்று சொல்ல முடியாத அன்புடன் தடவிக் கொடுக்கிற தபேலா பட்டு ராஜனின் அம்மாவுக்குக் கண்மங்கிப் போனபிறகு, அவளை இன்னும் உப்புப்புளி வாங்கிக் கொண்டு வரக் கடைக்கு அனுப்புகிற பட்டுராஜன் எத்தனை மியூஸிக் பார்ட்டிக்குப் போய் வாசித்தும் பிரயோஜனம் என்ன ? பிறத்தியார் மேல் செலுத்துகிற அன்பு, சங்கீதம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே ஜாதிதான் என்று பிடிபடாவிட்டால் அப்புறம் என்ன தபலா ?</p> <p>ஒருத்தருக்கொருத்தர் முகம் கொடுக்காமல் உலகம் இப்படி அன்பற்றுப் போய்க்கொண்டிருந்தால் என்னவாகும் ? துட்டு இருப்பவர், இல்லாதவர் எல்லோர்க்கும் வந்துசேர்கிற இந்த இம்சைக்கு வாழ்க்கை என்ன நிவர்த்தி செய்யப் போகிறது.</p> <p>தெருமட்டும்தானா ? இந்த வீடு என்னவாழ்கிறது ? இந்தக் குடும்பம்கூட முன்னே மாதிரியா இருக்கிறது. தெருவிலிருந்து வீட்டுக்குப்போகிற முடுக்கு முன்பு இப்படியா இருட்டிக்கிடக்கும் ? வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு, தெருவில் நடையேறுகிறவர் ஜாடை டக்கென்று முன்னால் தெரியும்படி இரண்டு விளக்குகள் எரிந்துகொண்டிருந்த இடத்தில் இன்றைக்கு ஒன்றும் கிடையாது.</p> <p>ஒரு பிள்ளையார் சதுர்த்தி, கோயில் கொடை என்றால் தனியாக ஒரு ஒயர் இழுத்து, ஒரு நூறுவாட்ஸ் பல்பை வாசலில் தொங்கப்போட, சப்பரம் என்றாலும் சரி, கும்பக்குடம் சிலம்பாட்டம் என்றாலும் சரி, கரெக்டா வாசலில் ஒரு பத்துநிமிஷமாவது நின்றுவிட்டுத்தான் புறப்படும்.இப்போது ஒரு மீட்டருக்கு நாலு தனித்தனி மீட்டர் வந்திருக்கிறதே தவிர வெளிச்சம் எங்கேயோ ஓடிப்போய்விட்டது. பொது லைட்டுக்கு யார் பணம் கட்டுவது என்று சண்டையெல்லாம் வந்து, பேசாமல் விளக்கையே அணைத்துவிட்டார்கள். 'நடந்து வரும்போது நட்டு வாக்காளி பிடுங்கினாலும் தெரியாது. கழுத்தில காதில கிடக்கிறதை எவனும் அத்துக்கிட்டுப் போனாலும் தெரியாது. விளக்கு வைக்கிற நேரத்தில் இப்படி வீடும் வாசலும் இருள் அடிச்சுக் கிடந்தா, லெச்சுமி தட்டுத் தடுமாறிட்டு, அடுத்த வீட்டுக்குப் போயிருவா ' என்றெல்லாம் வருத்தப்பட்ட ஆச்சியின் சொல் அவள் இருக்கும்போதே அம்பலத்துக்கு வரவில்லை.</p> <p>கால் தடுக்காமல் இருக்க, அடையாளத்துக்கு இடது சுவரில் ஒருகையால் தடவிக்கொண்டே வந்தேன். இந்தச் சுவர் எவ்வளவு அற்புதமாக இருக்கும். காரை பூசாமல் ஒரு முப்பது அடி உயரத்திற்குக் கோட்டை மாதிரி உயர்ந்திருக்கிற இந்தச் சுவரின் சிறு சிறு துளைகளில், சிலந்திக்கூடுகள் சாம்பல் நிறத்தில் படலமாக உட்குழிந்து பூத்திருக்க, அதிலிருக்கிற பூச்சிகளைச் சிட்டுக்குருவிகள் பறந்தவாக்கிலே பிடிக்கும். இதே நூலாம்படைகளில் சிக்கிய வாரியல் புல்லின் பூவினது சிலிர்த்த கொண்டை கீழே விழாத ஒருதொங்கலில், புரண்டு புரண்டு வெயிலில் அபாராமாய் மினுங்கிய என் சின்னவயது ஞாபகங்களைப் போல, எங்களுடைய மகளோ மகனோ இதுவரை ஏதாவது சேமித்திருப்பார்களா என்று தெரியவில்லை. எப்போதும் ஜீப்பை ஓட்டி, மோட்டார் சைக்கிள்களில் மலைகளைத் தாண்டி, கோபாவேசமாகத் துப்பாக்கி சுட்டுத் திரிகிற கற்பனையில் சதா ஆழ்கிற என் பையனிடமிருந்து, நாளை அன்பும் பரிவும் கசிந்து பெருகும் என்று துளியும் நம்ப முடியவில்லை.</p> <p>பொதுத்திண்ணைக்கு அருகில் வரும்போது நாலு வீடுகளில் எங்கள் வீட்டில் மட்டும் வெளிச்சம் இருந்ததை அறியச் சற்று நிம்மதியாக இருந்தது. இதைவிடப் பெரிய விஷயம் எங்கள் வீட்டுத் தார்சாவில் இருந்து, விசாலமாகக் கிடக்கிறவாசலில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு 'கோபாலசாமி கோயில் தெருவில வீடு வாங்கி நாங்க வரதுக்கு முந்திப் பத்துவருஷம் இந்தத் தெருவுக்கு நேரே பின்னால இருக்கிற தெருவிலதான் இருந்தோம். படிச்சதெல்லாம் குட்டை வாத்தியார் பள்ளிக்கூடத்தலே தான் ' என்று யாரோ ஒருத்தர் இன்னொருத்தரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.</p> <p>வாசல் முழுவதும் இருட்டாக இருக்க, எங்கள் வீட்டின் வெளிச்சம் பின் பக்கத்திலிருந்து வரைந்து காட்டும்படியாக அவர்களிருக்க, அவர்கள் இன்னார் என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை. நடுவயது தாண்டியும் உரத்தும் அன்னியோன்னியமாகவும் இருந்த அந்தக் குரலையும் எனக்கு இனங்கண்டுகொள்ள முடியவில்லை. நாக்குத் தடித்த மாதிரியும் பக்கவாதத்தில் வாய் கோணிப் பேசுகிற மாதிரியும் ஏதோ ஓர் வித்தியாசத்துடன் இருந்த குரலில் சந்தோஷமூட்டும் படியும் ஏதோ கலந்திருந்தது.</p> <p>'இந்தா ' மகனே வந்துட்டானே ' ' நான் நெருங்கியதும் சட்டென்று அந்த இரண்டு பேரில் ஒருத்தர் எழுந்திருந்து சற்று எம்பித் தூணைப் பிடித்துக் கொண்டு நின்று என் பெயரைச் சொல்லி,</p> <p>'இதான் அல்போன்ஸ்உ, மச்சினியோட ரெண்டாவது பையன், மச்சினியோட அப்பா பேருதான் '</p> <p>'யாரு மீசைக்கார ஆயான் பேரா ? '</p> <p>தாத்தாவை ஞாபகம் வைத்துப் பேசுகிற அந்த மனிதரைக் கும்பிட்டுக் கொண்டு, ஆனால் இரண்டு பேரையுமே அடையாளம் தெரியாமல்,</p> <p>'வாங்க. என்ன இப்படியே உட்கார்ந்துட்டாங்க. உள்ளே போய் உட்காரலாம் ' என்று அழைக்கையில் '</p> <p>'இங்கேயே வசதியாத்தான் இருக்கு, காத்தாட. இப்படியே இருக்கலாம் ' என்று அந்த ரெண்டாவது மனிதர் சொல்ல தூணைப் பிடித்துக் கொண்டு நின்ற மனிதர் தன் முகம் தெரியும்படியாகச் சிரித்துக் கொண்டே என்னிடம்,</p> <p>'என்ன, இனம் தெரியலையா இன்னாருண்ணு ' என்று கேட்டார். முறுக்கி விடப்படுவதால் ஒருபக்கம் திருகி நின்ற மீசை குழிவிழுந்திருந்த கன்னத்தை வருட, குங்குமப்பொட்டும் சிரிப்புமாய்க் கலங்கிச் சிவந்த கண்களுடன் பக்கத்தில் வந்து என் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.</p> <p>'சன்ன வருஷமா ஆயிருக்கு. நீயோ புள்ளையும் குட்டியுமா ஆயிட்டே. எப்பமோ நீ சின்னப் பிள்ளையா இருக்கும் போது, கோயில்ல முழுக்காப்புக்கு வந்திருக்கும் போது பார்த்ததுதானே '</p> <p>மறுபடியும் மீசை திருகிக் கன்னத்தில் ஒதுங்கிக் கொண்டது. நரைத்து மேலேற்றிச் சீவப்பட்ட முடியால் அகலமாகத் தெரிந்த நெற்றியில் குங்குமம் ஜொலித்தது. எனக்கு பளிச்சென்று ஒரு விநாடியில் நான் பேசிக் கொண்டிருப்பது வைத்தியலிங்கச் சித்தப்பாவுடன் என்று ஞாபகம் வந்துவிட்டது.</p> <p>வைத்தியலிங்கச் சித்தப்பா கல்யாணம் புதுமாதிரியாக நடந்ததால் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வழக்கம் போலக் கொட்டு அடித்து தாலி எல்லாம் கட்டாமல் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு நிறையப்பேர் பேச, சித்தப்பாவும் மைக் முன்னால் ரொம்ப நேரம் பேசிய அந்தக் கல்யாண வீட்டு லேசில் மறந்து போகாது. ஆனால் அந்தக் கல்யாணப் புகைப்படத்தில் வைத்திச் சித்தப்பா ஒரு அழகன் போல இருப்பார். 'செக்கச் செவேல்னு இருக்கிற ' அழகைப்பார்த்து மயங்கிப் பொண்ணைக் குடுத்திட்டேனே. குடிச்சு எல்லாத்தையும் கட்ட மண்ணாக்கிட்டு சண்டாளன் இப்படிப் பொண்ணையும் புள்ளையையும் தெருவில் நிறுத்திட்டானே பாவி ' என்று சின்னத்தாத்தா தலையில் அடித்துக் கொண்டு அம்மாவிடம் அழுததெல்லாம் சமீபத்தில் தான்.</p> <p>வைத்தியலிங்கச் சித்தப்பாவின் அந்த அழகான ஜாடை எல்லாமே குடிக்கிற ஒரே காரணத்தால் மாறிப் போகும் என்று நம்ப முடியவில்லை. முகம்தான் மாறினது போல இருக்கிறதே தவிர சிரிப்பு அதேதான்.</p> <p>'உள்ளே வாங்க சித்தப்பா வாங்க ஸார் உள்ளே ' என்று மறுபடியும் அழைத்தேன். அம்மா இதைச் சொல்லும்போது கதவுப்பக்கம் வந்து நின்று ஒருமாதிரியாகச் சிரித்துவிட்டுப் போனாள்.</p> <p>'இருக்கட்டும் மகனும் விபரம் தெரிஞ்ச ஆள்தானே, உன்கிட்டே சொல்லுகிறதுக்கு என்ன ? பக்கத்திலே நிண்ணு பேசும்போதே வாசம் தெரிஞ்சிருக்கும். ரெண்டு பேரும் லேசா டிரிங்க்ஸ் அடிச்சிருக்கோம். ஜாஸ்தியில்லை. கொஞ்சம்தான். எவ்வளவு சாப்பிட்டாலும் நிதானமாகத்தான் இருப்பேன். இருந்தாலும் உள்ளே மச்சினி முன்னாலே போகவேண்டாம் '</p> <p>நான் மிகவும் ஆதரவாகச் சித்தப்பாவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.</p> <p>'ஏ 'இங்கே வாடே. நீ என்ன ஒளிஞ்சுக்கிட்டு நிற்கே. அப்பனும் மகனும் ஒண்ணா நிண்ணு பேசுதோம் வித்தியாசம் ஒண்ணுமில்லை. உனக்கென்ன. இங்கே வா சொன்னால் கேளு என் மகனும் உன்னைத் தெரிஞ்சுக்கிடணும் இல்லையா ? '</p> <p>வைத்திச் சித்தப்பா அவரைக் கையைப்பிடித்து இழுக்க இழுக்க அவர் மிகுந்த கூச்சத்துடன் அங்கேயே நின்றார். வைத்தியலிங்கச் சித்தப்பா, 'என்ன அல்போன்ஸ்உ, கிறுக்குப்பண்ணுதே ' என்று என்னை அவரிடம் கூட்டிப் போனார்.</p> <p>மிகவும் விசாலமான நெற்றியும் முன் வழுக்கையும் வெற்றிலைக் காவியேறின பற்களுமாகக் கிட்டத்தட்ட ரிடையர் ஆகப்போகிற ஹைஸ்கூல் வாத்தியார் மாதிரி இருந்த அவரை நோக்கி--</p> <p>'பாத்தியா, இதுதான் என் பிரண்ட் அல்போன்ஸ். நானும் அவனும் முப்பது வருஷமா சிநேகிதம். பாளையங்கோட்டையில ரெண்டு பேரையும் தனித்தனியாய் பார்க்க முடியாது. அவன் சென்ட்ரல் எக்சைஸ்லே சேர்ந்தான் நான் ஹைவேஸ்லே சேர்ந்தேன். டிபார்ட்மெண்ட்லேருந்து திடார்னு அவன் மேலே ஏதோ ஆக்ஷன் எடுத்து சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. ரிட் போட்டிருக்கான் ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தான். சரி வாண்ணு நான் தான் சொன்னேன். கொஞ்சம் போலதான் சாப்பிட்டோம் '</p> <p>'நீ சும்மாஇருப்பா ' என்று அவர் வெட்கப்பட்டுக் கூசிக்கொண்டே தடுக்க வைத்தியலிங்கச் சித்தப்பா, என் இடது புஜம் வழியாகக் கையைப் போட்டு, வலது தோள்ப் பட்டையை இறுக்கிக் குலுக்கித் தன்பக்கம் நெருக்கிக்கொண்டு--</p> <p>'அல்போன்ஸ்உ இது என் மச்சினி மகன். மொத்தம் மூணு பேரு. இவன் நடுவுள்ளவன். மச்சினிக்கு மூணு பையன்களும் மூணு முத்து. படிப்புக்குப் படிப்பு. குணத்துக்குக் குணம் '</p> <p>சித்தப்பா ஒருவித நெகிழ்ச்சியில் பேசிக்கொண்டே போனார். அல்போன்ஸ் என்கிற சித்தப்பாவின் சிநேகிதர் வெறுமனே சித்தப்பாவின் சொல்லுக்குத் தலையை அசைத்துக் கொண்டுதான் வந்தார். ஆனால் 'நீ சொல்வது எல்லாம் சரிதான். அதுதான் தெரிகிறதே. அப்படியே ஒப்புக் கொள்கிறேன் ' என்றெல்லாம் விதம் விதமாக நான் உணரும்படி தன் பார்வையை ஒருவிதப் பிரியம் நிறைந்த மினுமினுப்புடன் என் மீதும் சித்தப்பா மீதும் பதித்துக் கொண்டிருந்தார்.</p> <p>'கேட்டியா அல்போன்ஸ்உ, மச்சினி மச்சினிண்ணு சொல்லுதேனே இவங்க அம்மை, அவளைச் சின்ன வயசிலேயே தெரியும். மச்சினி அப்போ ரொம்பச் சின்னப் பிள்ளை. மிஞ்சிப்போனால் ஆறு ஏழு வயசு இருக்கும். பாப்பாத்தி வீட்டுப் பிள்ளை மாதிரி இருப்பா. நாங்க அப்போ அரசடிப் பாலத்தெருவில் ஒரு வீட்டிலே இருந்தோம். தோட்டம் பூராவும் பூசணியும் பீர்க்குமாய் படர்ந்து கிடக்கும். மார்கழி மாதம் தினசரிக் காலைல ஒரு முக்காட்டைப் போட்டுக்கிட்டு பூ வாங்குகிறதுக்கு இவங்க அம்மை வருவா. முக்காடு நிறம் கூட ஞாபகம் இருக்கு. திக்கு ஊதாக்கலர். செவப்பா ஒருபிள்ளை தினசரி பூ வாங்க தினசரி நம்ம வீட்டுக்கு வருதே, யாரும்மா 'ண்ணு எங்கம்மைகிட்டே கேட்பேன். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஒரு நா(ள்) நான் பல்லைத் தேச்சுக்கிட்டுப் புறவாசல்ல நிற்கேன். மச்சினி வழக்கம் போலப் பூ வாங்கதுக்கு வாரா, எங்க அம்மை, 'ஏட்டி ' வைத்தி உன்னை யாரு யாருண்ணு கேட்டுக்கிட்டு இருக்கான். உன்னைக் கட்டிக்கிடப் போறவண்ணு சொல்லிட்டுப் போ ' என்று சொல்லவும் வெட்கப்பட்டுக்கிட்டே ஒரே ஓட்டமா ஓடியே போயிட்டா. அது அப்படியே இன்னைக்கு நடந்தது மாதிரிக் கண்ணுக்குள்ளேயே நிக்கி '.</p> <p>வைத்தியலிங்கச் சித்தப்பா இன்னும் அந்த மார்கழி மாதத்துக் காலையிலேயே நிற்பது போல இருந்தது. அவருடைய நண்பரைப்போல என்னையும் கூட ஒரு அன்பான சிநேகிதனாக ஏற்று, இந்த இருட்டுக்கு மத்தியில் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளச் சித்தமானது போலத் தோன்றிற்று.</p> <p>தெரு, அதன் மனிதர்கள் மாறிக்கொண்டே போகிற நெருக்கடியிலும், வைத்தியலிங்கச் சித்தப்பா போல ஒரு மனிதர் எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இன்னும் இருப்பது அந்த நேரத்தில் பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு.</p> <p>****</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-54689034906432192112010-01-08T18:29:00.000-08:002010-02-15T03:17:04.649-08:00சாப விமோசனம் - புதுமைப்பித்தன்<blockquote> <h4><font size="2">புதுமைப்பித்தன்</font></h4> </blockquote> <p>ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0fp9pKO07I/AAAAAAAAFdM/dWqAUoW1kqM/s1600-h/ahalya%5B30%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="ahalya" border="0" alt="ahalya" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0fp-rRmvlI/AAAAAAAAFdQ/-u_H-gq_7f0/ahalya_thumb%5B39%5D.jpg?imgmax=800" width="338" height="257" /></a> </p> <p>1</p> <p>சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று. சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை. <br />அந்தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்துவைத்த சோகமாக, அவளது சோகத்தைப் பேதமற்ற கண் கொண்டு பார்க்கும் துறவி போன்ற இயற்கையின் மடியிலே கிடக்கிறாள். சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக - கல்லாக - கிடக்கிறாள். </p> <p>சற்றுத் தூரத்திலே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை, அவனையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது. </p> <p>இன்னும் சற்றுத் தூரத்திலே இந்தத் தம்பதிகளின் குடும்பக் கூடு கம்பமற்று வீழ்ந்ததுபோல, இவர்களுக்கு நிழல் கொடுத்த கூரையும் தம்பம் இற்று வீழ்ந்து பொடியாகிக் காற்றோடு கலந்துவிட்டது. சுவரும் கரைந்தது. மிஞ்சியது திரடுதான். இவர்கள் மனசில் ஏறிய துன்பத்தின் வடுப் போலத் தென்பட்டது அது. <br />தூரத்திலே கங்கையின் சலசலப்பு. அன்னை கங்கை, இவர்களது எல்லையற்ற சோகத்தை அறிவாளோ என்னவோ! <br />இப்படியாக ஊழி பல கடந்தன, தம்பதிகளுக்கு. <br />ஒரு நாள்... <br />முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமைதான். என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்துவரும் காற்றும், உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய தத்துவம் போல, இழைந்து மனசில் ஒரு குளுமையைக் கொடுத்தன. <br />ஆண் சிங்கம் போல, மிடுக்கு நடை நடந்து, எடுத்த கருமம் முற்றியதால் உண்ட மகிழ்ச்சியை மனசில் 'அசை போட்டுக்கொண்டு' நடந்து வருகிறான் விசுவாமித்திரன். மாரீசனும் சுவாகுவும் போன இடம் தெரியவில்லை. தாடகை என்ற கிழட்டுக் கொடுமை நசித்து விட்டது. நிஷ்டையில் ஆழ்ந்தும், எரியோம்பியும் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிம்மதியைத் தரும் சாதனமாகத் தன்னை ஆக்கிக் கொண்டதில் ஒரு திருப்தி. <br />அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறான். பார்வையில் என்ன பரிவு! இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றன. அவர்கள் வேறு யாருமல்ல; அவதார சிசுக்களான ராம லக்ஷ்மணர்களே. அரக்கர் நசிவை ஆரம்பித்து வைத்துவிட்டு, அதன் பொறுப்புத் தெரியாமல் ஓடிப் பிடித்து வருகிறார்கள். </p> <p>ஓட்டம் புழுதியைக் கிளப்புகிறது. முன்னால் ஓடி வருகிறான் லக்ஷ்மணன்; துரத்தி வருபவன் ராமன். புழுதிப் படலம் சிலையின் மீது படுகிறது... <br />என்ன உத்ஸாகமோ என்று உள்ளக் குதுகலிப்புடன் திரும்பிப் பார்க்கிறார் விசுவாமித்திரர். பார்த்தபடியே நிற்கிறார். </p> <p>புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது. <br />எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள் துடிக்கிறது. போன போன இடத்தில் நின்று இறுகிப் போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள தசைக் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது. <br />கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. பிரக்ஞை தெரிகிறது. சாப விமோசனம்! சாப விமோசனம்!</p> <p>தெய்வமே! மாசுபட்ட இந்தத் தசைக்கூட்டம் பவித்தரம் அடைந்தது. </p> <p>தனக்கு மறுபடியும் புதிய வாழ்வைக் கொடுக்க வந்த தெய்விக புருஷன் எவன்? அந்தக் குழந்தையா? <br />அவன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள். ராமன் ஆச்சரியத்தால் ரிஷியைப் பார்க்கிறான். </p> <p>விசுவாமித்திரருக்குப் புரிந்துவிட்டது. இவள் அகலிகை. அன்று இந்திரனுடைய மாய வேஷத்துக்கு ஏமாறிய பேதை. கணவன் மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தின் விளைவாக, தன் உடம்பை, மாய வேஷத்தால் ஏமாறி, மாசுபடுத்திக் கொண்டவள்; கோதமனின் மனைவி. அவ்வளவையும் ராமனிடம் சொல்லுகிறார். அதோ நிற்கும் புற்று இருக்கிறதே; அதில் வலை முட்டையில் மோனத்தவங்கிடக்கும் பட்டுப்பூச்சி போலத் தன்னை மறந்து நிஷ்டையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ அவனே எழுந்து விட்டானே! </p> <p>நிஷ்டை துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்திபோல் சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு பின்னிப் பாய்கிறது. மிடுக்காக, பெண்ணின் கேவலத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாதவனைப் போலத் தயங்கித் தயங்கி வருகிறான். </p> <p>மறுபடியும் இந்தத் துன்ப வலையா? சாப விமோசனத்துக்குப் பிறகு வாழ்வு எப்படி என்பதை மனசு அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுதோ அது பிரம்மாண்டமான மதிலாக அவனது வாழ்வைச் சுற்றியே மண்டலிக்கிறது. அவள் மனமும் மிரளுகிறது. </p> <p>ராமனுடைய கல்வி, தர்மக்கண்கொண்டு பார்த்தது. தெளிவின் ஒளி பூண்டது. ஆனால் அநுபவச் சாணையில் பட்டை பிடிக்காதது; வாழ்வின் சிக்கலின் ஒவ்வொரு நூலையும் பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த வசிஷ்டனுடைய போதனை. ஆனால் சிறுமையை அறியாதது. புது வழியில் துணிந்து போக அறிவுக்குத் தெம்பு கொடுப்பது. </p> <p>உலகத்தின் தன்மை என்ன, இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது! மனசுக்கும் கரணசக்தியின் நிதானத்துக்கும் கட்டுப் படாமல் நிகழ்ந்த ஒரு காரியத்துக்கா பாத்திரத்தின் மீது தண்டனை? "அம்மா!" என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்குகிறான் ராமன். </p> <p>இரண்டு ரிஷிகளும் (ஒருவன் துணிச்சலையே அறிவாகக் கொண்டவன்; மற்றவன் பாசத்தையே தர்மத்தின் அடித்தலமாகக் கண்டவன்) சிறுவனுடைய நினைவுக் கோணத்தில் எழுந்த கருத்துக்களைக் கண்டு குதுகலிக்கிறார்கள். எவ்வளவு லேசான, அன்புமயமான, துணிச்சலான உண்மை! </p> <p>     "நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக்கொள்ளுவதுதான் பொருந்தும்" என்கிறான் விசுவாமித்திரன் மெதுவாக. </p> <p>குளுமை பூண்ட காற்றில் அவனது வாதக் கரகரப்பு ரஸபேதம் காட்டுகிறது. </p> <p>கோதமனும், அவள் பத்தினியும், அந்தத் தம்பமற்றுத் திரடேறிப் போன மேடும் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. முன்பு உயிரற்றிருந்த இடத்தில் ஜீவகளை துவள நினைத்தது. </p> <p>சாட்டையின் சொடுக்கைப் போலப் போக்கை மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப் பெயர்ந்துவிட்டன. மிதிலைக்குப் பொழுது சாயும்பொழுதாவது போக வேண்டாமா? மணவினை, இரு கைகளை நீட்டி அழைக்கிறதே. </p> <p>கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன் நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? <br />     "என்ன வேண்டும்?" என்றான் கோதமன். அறிவுத் திறம் எல்லாம் அந்த உணர்ச்சிச் சுழிப்பிலே அகன்று பொருளற்ற வார்த்தையை உந்தித் தள்ளியது. <br />     "பசிக்கிறது" என்றாள் அகலிகை, குழந்தை போல.</p> <p>அருகிலிருந்த பழனத்தில் சென்று கனிவர்க்கங்களைச் சேகரித்து வந்தான் கோதமன். அன்று, முதல் முதல் மணவினை நிகழ்ந்த புதிதில் அவனுடைய செயல்களில் துவண்ட ஆசையும் பரிவும் விரல்களின் இயக்கத்தில் தேக்கத்தில் காட்டின. </p> <p>     'அந்த மணவினை உள்ளப் பரிவு பிறந்த பின்னர்ப் பூத்திருந்தாலும் ஏமாற்றின் அடிப்படையில் பிறந்ததுதானே! பசுவை வலம் வந்து பறித்து வந்ததுதானே!' என்று கோதமனுடைய மனசு, திசைமாறித் தாவித் தன்னையே சுட்டுக் கொண்டது. </p> <p>அகலிகை பசி தீர்ந்தாள். </p> <p>அவர்களது மனசில் பூர்ணமான கனிவு இருந்தது. ஆனால் இருவரும் இருவிதமான மனக்கோட்டைகளுக்குள் இருந்து தவித்தார்கள். </p> <p>கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே அகலிகையின் கவலை. </p> <p>அகலைகைக்குத் தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை. </p> <p>சாலையோரத்தில் பூத்திருந்த மலர்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன.</p> <p>2</p> <p>அகலிகையின் விருப்பப்படி, ஆசைப்படி அயோத்தி வெளி மதில்களுக்குச் சற்றுத் ஒதுங்கி, மனுஷ பரம்பரையின் நெடி படராத தூரத்தில், சரயூ நதிக்கரையிலே ஒரு குடிசை கட்டிக் கொண்டு தர்மவிசாரம் செய்து கொண்டிருந்தான் கோதமன். இப்பொழுது கோதமனுக்கு அகலிகை மீது பரிபூர்ண நம்பிக்கை. இந்திரன் மடிமீது அவள் கிடந்தால் கூட அவன் சந்தேகிக்க மாட்டான். அவ்வளவு பரிசுத்தவதியாக நம்பினான் அவன். அவளது சிற்றுதவி இல்லாவிடின் தனது தர்மவிசாரமே தவிடுபொடியாகிவிடும் என்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது. </p> <p> அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க முடியாத ஓர் அன்பால் தழைக்க வைத்தாள். <a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S0fp_Vqwx3I/AAAAAAAAFdU/wkA4-ynBTjE/s1600-h/acs.sized%5B33%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="acs.sized" border="0" alt="acs.sized" align="left" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S0fqAd_x19I/AAAAAAAAFdY/qEVzFR_9Q6I/acs.sized_thumb%5B31%5D.jpg?imgmax=800" width="242" height="269" /></a>அவனை நினைத்துவிட்டால் அவள் மனமும் அங்கங்களும் புது மணப் பெண்ணுடையன போலக் கனிந்துவிடும். ஆனால், அவள் மனசில் ஏறிய கல் அகலவில்லை. தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி, விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக்கூட இடங்கொடாதபடி நடக்க விரும்பினாள். அதனால் அவள் நடையில் இயற்கையின் தன்மை மறைந்து இயல்பு மாறியது. தன்னைச் சூழ நிற்பவர்கள் யாவருமே இந்திரர்களாகத் தென்பட்டார்கள்; அகலிகைக்குப் பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. அந்தக் காலத்திலிருந்த பேச்சும் விளையாட்டும் குடியோடிப் போயின. ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக்கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள். </p> <p>வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று. <br />அன்று மரீசி வந்தார். முன்னொரு நாள் ததீசி வந்தார். மதங்கரும் வாரணாசி செல்லும்போது கோதமனைக் குசலம் விசாரிக்க எட்டிப் பார்த்தார். அவர்கள் மனசில் கனிவும் பரிவும் இருந்தபோதிலும் அகலிகையின் உடம்பு குன்றிக் கிடந்தது. மனசும் கூம்பிக் கிடந்தது. அதிதி உபசாரங்கூட வழுவிவிடும்போல் இருந்தது. ஏறிட்டுச் சாதாரணமாகப் பார்க்கிறவர்களையும் களங்கமற்ற கண்கொண்டு பார்க்கக் கூசியது. குடிசையில் ஒளிந்து கொண்டாள். </p> <p>கோதமனுடைய சித்தாந்தமோ இப்பொழுது புதுவித விசாரணையில் திரும்பியது. தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செய்பவர்களுக்கே. சுயப்பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, அதனால் மனுஷ வித்து முழுவதுமே நசித்துவிடும் என்றாலும் அது பாபம் அல்ல; மனலயிப்பும், சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடுபாடுமே கறைப்படுத்துபவை. தனது இடிந்துபோன குடிசையில் மறுபடியும் பிறர் கூட்டிவைத்த ஒரு தன்மையில் இருந்துகொண்டு புதிய கோணத்தில் தன் சிந்தனையைத் திருப்பிவிட்டான் கோதமன். அவனுடைய மனசில் அகலிகை மாசு அற்றவளாகவே உலாவினாள்; தனக்கே அருகதை இல்லை; சாபத் தீயை எழுப்பிய கோபமே தன்னை மாசுபடுத்திவிட்டது என்று கருதினான்.</p> <p>சீதையும் ராமனும் உல்லாசமாகச் சமயாசமயங்களில் அந்தத் திசையில் ரதமூர்ந்து வருவார்கள். அவதாரக் குழந்தை, கோதமனின் மனசில் லக்ஷ்ய வாலிபனாக உருவாகித் தோன்றினான். அவனது சிரிப்பும் விளையாட்டுமே தர்மசாஸ்திரத்தின் தூண்டாவிளக்குகளாகச் சாயனம் (வியாக்கியானம்) பண்ணின. அந்த இளம் தம்பதிகளின் பந்தந்தான் என்ன? அது கோதமனுக்குத் தனது அந்தக் காலத்து வாழ்வை ஞாபகப்படுத்தும். </p> <p>அகலிகையின் மனப் பாரத்தை நீக்க வந்த மாடப்புறா சீதை. அவளது பேச்சும் சிரிப்பும் தன்மீதுள்ள கறையைத் தேய்த்துக் கழுவுவன போல் இருந்தன அகலிகைக்கு. அவள் வந்த போதுதான் அகலிகையின் அதரங்கள் புன்சிரிப்பால் நெளியும். கண்களில் உல்லாசம் உதயவொளி காட்டும். <br />வசிஷ்டரின் கண்பார்வையிலே வளரும் ராஜ்ய லக்ஷ்யங்கள் அல்லவா? சரயூ நதியின் ஓரத்தில் ஒதுங்கி இரு தனி வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் ஜீவன்களிடையே பழைய கலகலப்பைத் தழைக்க வைத்து வந்தார்கள். </p> <p>அகலிகைக்கு வெளியே நடமாடி நாலு இடம் போவதற்குப் பிடிப்பற்று இருந்தது. சீதையின் நெருக்கமே அவளது மனச்சுமையை நீக்கிச் சற்று தெம்பை அளித்தது. <br />பட்டாபிஷேக வைபவத்தின் போது அயோத்திக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தாள். ஆனால் அரண்மனைக்குள் ஏற்பட்ட உணர்ச்சிச் சுழிப்புக்குத்தான் என்ன வலிமை! ஒரே மூச்சில் தசரதன் உயிரை வாங்கி, ராமனைக் காட்டுக்கு விரட்டி, பரதனைக் கண்ணீரும் கம்பலையுமாக நந்திக்கிராமத்தில் குடியேற்றிவிட்டது. </p> <p>மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீத சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச் சொக்கட்டான் ஆடியது போல், நடந்து முடிந்துவிட்டது. </p> <p>விசிஷ்டர்தான் என்ன, சர்வ ஜாக்கிரதையோடு மனுஷ தர்மத்தின் வெற்றியாக ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்கக் கண்ணில் எண்ணெயூற்றி வளர்த்தார். அவருடைய கணக்குகள் யாவும் தவிடுபொடியாகி, நந்திக்கிராமத்தில் நின்றெரியும் மினுக்கு வெளிச்சமாயிற்று. </p> <p>சரயூ நதிக் குடிசை மறுபடியும் தம்பமற்று விழுந்தது என்று சொல்ல வேண்டும். கோதமன் தர்மவிசாரமெல்லாம் இந்தப் பேய்க் காற்றில் சூறை போயிற்று. மனசில் நம்பிக்கை வறண்டு சூன்யமாயிற்று. </p> <p>அகலிகைக்கோ? அவளது துன்பத்தை அளந்தால் வார்த்தைக்குள் அடைபடாது. அவளுக்குப் புரியவில்லை. நைந்து ஓய்ந்துவிட்டாள். ராமன் காட்டுக்குப் போனான். அவன் தம்பியும் தொடர்ந்தான்; சீதையும் போய்விட்டாள். முன்பு கற்சிலையாகிக் கிடந்தபோது மனசு இருண்டு கிடந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் மனப்பாரத்தின் பிரக்ஞை மட்டும் தாங்க முடியவில்லை. </p> <p>கருக்கலில் கோதமர் ஜபதபங்களை முடித்துக்கொண்டு கரையேறிக்குடிசைக்குள் நுழைந்தார். <br />அவர் பாதங்களைக் கழுவுவதற்காகச் செம்பில் ஜலத்தை ஏந்தி நின்ற அகலிகையின் உதடு அசைந்தது. <br />     "எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. மிதிலைக்குப் போய் விடுவோமே." </p> <p>     "சரி, புறப்படு; சதானந்தனையும் பார்த்து வெகு நாட்களாயின" என்று வெளியே இறங்கினார் கோதமர். <br />இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள். இருவர் மனசிலும் பளு குடியேறி அமர்ந்திருந்தது. கோதமர் சற்று நின்றார். <br />பின் தொடர்ந்து நடந்து வந்த அகலிகையினுடைய கையை எட்டிப் பிடித்துக் கொண்டார்; நடந்தார்; "பயப்படாதே" என்றார். <br />இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள்.</p> <p>பொழுது புலர்ந்துவிட்டது. கங்கைக் கரைமேல் இருவரும் சென்று கொண்டிருக்கிறார்கள். <br />யாரோ ஆற்றுக்குள் நின்று கணீரென்ற குரலில் காயத்திரியைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். <br />ஜபம் முடியுமட்டும் தம்பதிகள் கரையில் எட்டிக் காத்து நின்றார்கள். </p> <p>     "சதானந்தா!" என்று கூப்பிட்டார் கோதமர். <br />     "அப்பா... அம்மா!" என்று உள்ளத்தின் மலர்ச்சியைக் கொட்டிக் காலில் விழுந்து நமஸ்கரித்தான் சதானந்தன். <br />அகலிகை அவனை மனசால் தழுவினாள். குழந்தை சதானந்தன் எவ்வளவு அன்னியனாகிவிட்டான், தாடியும் மீசையும் வைத்துக் கொண்டு ரிஷி மாதிரி! <br />கோதமருக்கு மகனது தேஜஸ் மனசைக் குளுமையூட்டியது. <br />சதானந்தன் இருவரையும் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றான். </p> <p>சிரமப்பரிகாரம் செய்து கொள்ளுவதற்கு வசதி செய்துவைத்துவிட்டு, ஜனகனது தத்துவ விசார மண்டபத்துக்குப் புறப்படலானான். </p> <p>கோதமரும் உடன் வருவதாகப் புறப்பட்டார். மகனுக்கு அவரை அழைத்துச் செல்லுவதில் பிரியந்தான். நெடுந்தூரத்துப் பிரயாணமாச்சே என்று ரத்த பந்தத்தின் பரிவால் நினைத்தான். ஊழிகாலம் நிஷ்டையில் கழித்தும் வாடாத தசைக்கூட்டமா, இந்த நடைக்குத் தளர்ந்துவிடப் போகிறது? அவனுக்குப் பின் புறப்பட்டார். அவருடைய தத்துவ விசாரணையின் புதிய போக்கை நுகர ஆசைப்பட்டான் மகன். </p> <p>மிதிலையின் தெருக்கள் வழியாகச் செல்லும்போது அயோத்தியில் பிறந்த மனத்தொய்வும் சோகமும் இங்கும் படர்ந்திருப்பதாகப் புலப்பட்டன கோதமருக்கு. அடங்கிவிட்ட பெருமூச்சு காற்றினூடே கலந்து இழைந்தது. <br />ஜனங்கள் போகிறார்கள், வருகிறார்கள்; காரியங்களைக் கவனிக்கிறார்கள்; நிஷ்காம்ய சேவை போல எல்லாம் நடக்கிறது; பிடிப்பு இல்லை; லயிப்பு இல்லை. <br />திருமஞ்சனக் குடம் ஏந்திச் செல்லும் அந்த யானையின் நடையில் விறுவிறுப்பு இல்லை; உடன் செல்லும் அர்ச்சகன் முகத்தில் அருளின் குதுகலிப்பு இல்லை. </p> <p>இருவரும் அரசனுடைய பட்டிமண்டபத்துக்குள் நுழைந்தார்கள். சத்சங்கம் சேனா சமுத்திரமாக நிறைந்திருந்தது. இந்த அங்காடியில் ஆராய்ச்சி எப்படி நுழையும் என்று பிரமித்தார் கோதமர். அவர் நினைத்தது தவறுதான். </p> <p>ஜனகன் கண்களில் இவர்கள் உடனே தென்பட்டார்கள். <br />அவன் ஓடோ டியும் வந்து முனிவருக்கு அர்க்கியம் முதலிய உபசாரங்கள் செய்வித்து அழைத்துச் சென்று அவரைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான். <br />ஜனகனுடைய முகத்தில் சோகத்தின் சோபை இருந்தது. ஆனால் அவன் பேச்சில் தழுதழுப்பு இல்லை; அவனுடைய சித்தம் நிதானம் இழக்கவில்லை என்பதைக் காட்டியது. <br />என்னத்தைப் பேசுவது என்று கோதமர் சற்றுத் தயங்கினார். <br />     "வசிட்டன் தான் கட்டிய ராஜ்யத்தில் உணர்ச்சிக்கு மதகு அமைக்கவில்லை" என்றான் ஜனகன், மெதுவாகத் தாடியை நெருடிக் கொண்டு. </p> <p> <br />ஜனகனின் வாக்கு, வர்மத்தைத் தொட்டுவிட்டது. <br />     "உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்" என்றார் கோதமர்.</p> <p>"துன்பமும் பிறக்கும், உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது போனால். ராஜ்யத்தைக் கட்ட ஆசைப்படும்போது அதற்கும் இடம் போட்டு வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் ராஜ்யம் இருக்காது" என்றான் ஜனகன். </p> <p>     "தங்களதோ?" என்று சந்தேகத்தை எழுப்பினார் கோதமர். <br />     "நான் ஆளவில்லை; ஆட்சியைப் புரிந்து கொள்ள முயலுகிறேன்" என்றான் ஜனகன். </p> <p>இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். <br />     "தங்களது தர்மவிசாரணை எந்த மாதிரியிலோ?" என்று விநயமாகக் கேட்டான் ஜனகன். </p> <p>     "இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; இனிமேல் தான் புரிந்துகொள்ள முயலவேண்டும்; புதிர்கள் பல புலன்களையெல்லாம் கண்ணியிட்டுக் கட்டுகின்றன" என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் கோதமர். </p> <p>மறுநாள் முதல் அவர் ஜனகன் மண்டபத்துக்குப் போகவில்லை. புத்தியிலே பல புதிர்கள் ஹிமாசலத்தைப் போல ஓங்கி நின்றன. தனிமையை விரும்பினார். ஆனால் நாடிச் செல்லவில்லை. அகலிகை மனசு ஒடிந்துவிடக் கூடாதே! </p> <p>மறுநாள் ஜனகன், "முனீசுவரர் எங்கே?" என்று ஆவலுடன் கேட்டான். <br />     "அவர் எங்கள் குடிசைக்கு எதிரே நிற்கும் அசோக மரத்தடியில் தான் பொழுதைக் கழிக்கிறார்" என்றார் சதானந்தர். <br />     "நிஷ்டையிலா?" <br />     "இல்லை; யோசனையில்." <br />     "அலை அடங்கவில்லை" என்று தனக்குள்ளே மெதுவாகச் சொல்லிக்கொண்டான் ஜனகன்.</p> <p>*****</p> <p>அகலிகைக்கு நீராடுவதில் அபார மோகம். இங்கே கங்கைக் கரையருகே நிம்மதி இருக்கும் என்று தனியாக உதய காலத்திலேயே குடமெடுத்துச் சென்றுவிடுவாள். <br />இரண்டொரு நாட்கள் தனியாக, நிம்மதியாகத் தனது மனசின் கொழுந்துகளைத் தன்னிச்சையோடு படரும்படி விட்டு, அதனால் சுமை நீங்கியதாக ஒரு திருப்தியுடன் குளித்து முழுகி விளையாடிவிட்டு நீர் மொண்டு வருவாள். <br />இது நீடிக்கவில்லை. </p> <p>குளித்துவிட்டுத் திரும்பிக் குனிந்த நோக்குடன், மனசை இழைய விட்டுக்கொண்டு நடந்துவந்து கொண்டிருந்தாள். <br />எதிரே மெட்டிச் சப்தம் கேட்டது. ரிஷி பத்தினிகள் யாரோ! அவர்களும் நீராடத்தான் வந்துகொண்டிருந்தார்கள். அவளைக் கண்டதும் பறைச்சியைக் கண்டதுபோல ஓடி விலகி, அவளை விறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். </p> <p>     "அவள்தான் அகலிகை" என்பது தூரத்தில் கேட்டது. கோதமனுக்கு அன்று அடிவயிற்றில் பற்றிக்கொண்டு பிறந்த சாபத் தீயைவிட அதிகமாகச் சுட்டன அவ்வார்த்தைகள். <br />அவள் மனசு ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெந்து தகித்தது. சிந்தனை திரிந்தது. "தெய்வமே! சாபவிமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா?" என்று தேம்பினாள். </p> <p>யந்திரப் பாவை போல அன்று கோதமருக்கும் சதானந்தருக்கும் உணவு பரிமாறினாள். 'மகனும் அன்னியனாகிவிட்டான்; அன்னியரும் விரோதிகளாகிவிட்டார்கள்; இங்கென்ன இருப்பு?' என்பதே அகலிகையின் மனசு அடித்துக் கொண்ட பல்லவி.</p> <p>கோதமர் இடையிடையே பிரக்ஞை பெற்றவர் போல் ஒரு கவளத்தை வாயிலிட்டு நினைவில் தோய்ந்திருந்தார். <br />இவர்களது மன அவசத்தால் ஏற்பட்ட பளு சதானந்தனையும் மூச்சுத் திணற வைத்தது. </p> <p>பளுவைக் குறைப்பதற்காக, "அத்திரி முனிவர் ஜனகனைப் பார்க்க வந்திருந்தார். அகத்தியரைப் பார்த்துவிட்டு வருகிறார். மேருவுக்குப் பிரயாணம். ராமனும் சீதையும் அகத்தியரைத் தரிசித்தார்களாம். அவர்கள் இருவரையும், 'நல்ல இடம் பஞ்சவடி. அங்கே தங்குங்கள்' என்று அகத்தியர் சொன்னாராம். அங்கே இருப்பதாகத் தான் தெரிகிறது" என்றான் சதானந்தன். </p> <p>     "நாமும் தீர்த்த யாத்திரை செய்தால் என்ன?" என்று அகலிகை மெதுவாகக் கேட்டாள். <br />     "புறப்படுவோமா?" என்று கைகளை உதறிக் கொண்டு எழுந்தார் கோதமர். <br />     "இப்பொழுதேயா?" என்றான் சதானந்தன். <br />     "எப்பொழுதானால் என்ன?" என்று கூறிக்கொண்டே மூலையிலிருந்த தண்டு கமண்டலங்களை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கினார் கோதமர். <br />அகலிகை பின் தொடர்ந்தாள். <br />சதானந்தன் மனம் தகித்தது.</p> <p>4</p> <p>பொழுது சாய்ந்து, ரேகை மங்கிவிட்டது. இருவர் சரயூ நதிக்கரையோரமாக அயோத்தியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். </p> <p>பதினான்கு வருஷங்கள் ஓடிக் காலவெள்ளத்தில் ஐக்கியமாகிவிட்டன. அவர்கள் பார்க்காத முனிபுங்கவர் இல்லை; தரிசிக்காத க்ஷேத்திரம் இல்லை. ஆனால் மனநிம்மதி மட்டிலும் அவர்களுக்கு இல்லை. <br />வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக் கோயில் போல, திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கைலயங்கிரியைப் பனிச் சிகரங்களின்மேல் நின்று தரிசித்தார்கள். <br />தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை உருவகப்படுத்தின பாலையைத் தாண்டினார்கள். <br />தம் உள்ளம் போலக் கொழுந்துவிட்டுப் புகைமண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம்வந்து கடந்தார்கள். </p> <p>தமது மனம் போல ஓயாது அலைமோதிக்கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டுத் திரும்பினார்கள். <br />தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்களைக் கடந்து வந்துவிட்டார்கள். </p> <p>     'இன்னும் சில தினங்களில் ராமன் திரும்பிவிடுவான்; இனி மேலாவது வாழ்வின் உதயகாலம் பிறக்கும்' என்ற ஆசைதான் அவர்களை இழுத்து வந்தது. </p> <p>பதினான்கு வருஷங்களுக்கு முன் தான் கட்டிய குடிசை இற்றுக் கிடந்த இடத்தை அடைந்தார்கள். <br />இரவோடு இரவாக, குடியிருக்க வசதியாகக் கோதமர் அதைச் செப்பனிட்டார். வேலை முடியும்போது உதய வெள்ளி சிரித்தது. </p> <p>இருவரும் சரயூவில் நீராடித் திரும்பினார்கள். <br />கணவனாருக்குப் பணிவிடை செய்வதில் முனைந்தாள் அகலிகை. இருவரது மனசும் ராமனும் சீதையும் வரும் நாளை முன்னோடி வரவேற்றது. இருந்தாலும் காலக் களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றப்படித் தாண்டிவிட முடியுமா?</p> <p>ஒருநாள் அதிகாலையில் அகலிகை நீராடச் சென்றிருந்தாள். <br />அவளுக்கு முன், யாரோ ஒருத்தி விதவை குளித்துவிட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தாள்; யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை; ஆனால் எதிரே வந்தவள் அடையாளம் கண்டு கொண்டு விட்டாள். ஓடோ டியும் வந்து அகலிகையின் காலில் சர்வாங்கமும் தரையில் பட விழுந்து நமஸ்கரித்தாள். </p> <p>தேவி கைகேயி! தன்னந்தனியளாக, பரிசனங்களும் பரிவாரமும் இல்லாமல், துறவியாகிவிட்டாளே! <br />குடத்தை இறக்கிவைத்துவிட்டு அவளை இரு கைகளாலும் தூக்கி நிறுத்தினாள். அவளுக்குக் கைகேயின் செயல் புரியவில்லை. </p> <p>     "தர்ம ஆவேசத்திலே பரதன் தன்னுடைய மனசில் எனக்கு இடம் கொடுக்க மறந்துவிட்டான்" என்றாள் கைகேயி. <br />குரலில் கோபம் தெறிக்கவில்லை; மூர்த்தண்யம் துள்ளவில்லை. தான் நினைத்த கைகேயி வேறு; பார்த்த கைகேயி வேறு. படர்வதற்குக் கொழுகொம்பற்றுத் தவிக்கும் மனசைத்தான் பார்த்தாள் அகலிகை. <br />இருவரும் தழுவிய கை மாறாமல், சரயுவை நோக்கி நடந்தார்கள். </p> <p>     "பரதனுடைய தர்ம வைராக்கியத்துக்கு யார் காரணம்?" என்றாள் அகலிகை. அவளுடைய உதட்டின் கோணத்தில் அநுதாபம் கனிந்த புன்சிரிப்பு நெளிந்து மறைந்தது. <br />     "குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவதா?" என்றாள் கைகேயி. <br />குழந்தைக்கும் நெருப்புக்கும் இடையில் வேலி போடுவது அவசியந்தான் என்று எண்ணினாள் அகலிகை. "ஆனால் எரிந்தது எரிந்ததுதானே?" என்று கேட்டாள்.      "எரிந்த இடத்தைச் சுத்தப்படுத்தாமல் சாம்பலை அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தால் மட்டும் போதுமா?" என்றாள் கைகேயி. </p> <p>     "சாம்பலை அகற்றுகிறவன் இரண்டொரு நாட்களில் வந்து விடுவானே" என்றாள் அகலிகை. </p> <p>     "ஆமாம்" என்றாள் கைகேயி. அவள் குரலில் பரம நிம்மதி தொனித்தது. ராமனை எதிர்பார்த்திருப்பது பரதனல்ல; கைகேயி. </p> <p>மறுநாள் அவள் அகலிகையைச் சந்தித்தபொழுது முகம் வெறிச்சோடியிருந்தது; மனசு நொடிந்து கிடந்தது. </p> <p>     "ஒற்றர்களை நாலு திசைகளிலும் விட்டு அனுப்பிப் பார்த்தாகிவிட்டது. ராமனைப் பற்றி ஒரு புலனும் தெரியவில்லை. இன்னும் நாற்பது நாழிகை நேரத்துக்குள் எப்படி வந்துவிடப் போகிறார்கள்? பரதன் பிராயோபவேசம் செய்யப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறான்" என்றாள் கைகேயி. </p> <p>பரதன் எரியில் தன்னை அவித்துக் கொள்ளுவது தன்மீது சுமத்தப்பட்ட ராஜ்ய மோகத்துக்குத் தக்க பிராயச்சித்தம் என்று அவள் கருதுவது போல இருந்தது பேச்சு. <br />சற்று நிதானித்து, "நானும் எரியில் விழுந்துவிடுவேன்; ஆனால் தனியாக, அந்தரங்கமாக" என்றாள் கைகேயி. அவள் மனசு வைராக்கியத்தைத் தெறித்தது. </p> <p>பதினான்கு வருஷங்கள் கழித்து மறுபடியும் அதே உணர்ச்சிச் சுழிப்பு. அயோத்திக்கு ஏற்பட்ட சாபத்தீடு நீங்கவில்லையா? </p> <p>அகலிகையின் மனசு அக்குத்தொக்கு இல்லாமல் ஓடியது. தனது காலின் பாபச் சாயை என்றே சந்தேகித்தாள்.</p> <p>"வசிட்டரைக் கொண்டாவது அவனைத் தடைசெய்யக் கூடாதோ?" என்றாள் அகலிகை. </p> <p>     "பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான்; வசிட்டருக்குக் கட்டுப்படமாட்டான்" என்றாள் கைகேயி. </p> <p>     "மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு" என்று கொதித்தாள் அகலிகை. </p> <p>தன்னுடைய கணவர் பேச்சுக்குப் பரதன் ஒரு வேளை கட்டுப்படக் கூடாதோ என்ற நைப்பாசை. மறுபடியும் அயோத்தியில் துன்பச் சக்கரம் சுழல ஆரம்பித்துவிடக் கூடாதே என்ற பீதி. </p> <p>கோதமன் இணங்கினான். ஆனால் பேச்சில் பலன் கூடவில்லை. </p> <p>பரதனை உண்டு பலிகொள்ள அக்கினி தேவன் விரும்பவில்லை. அனுமன் வந்தான்; நெருப்பு அவிந்தது. திசைகளின் சோகம், கரை உடைந்த குதுகல வெறியாயிற்று. தர்மம் தலை சுற்றியாடியது. <br />வசிட்டனுக்கும் பதினான்கு வருஷங்கள் கழிந்த பிறகாவது கனவு பலிக்கும் என்று மீசை மறைவில் சிரிப்புத் துள்ளாடியது. </p> <p>இன்ப வெறியில் அங்கே நமக்கு என்ன வேலை என்று திரும்பி விட்டான் கோதமன். </p> <p>சீதையும் ராமனும் தன்னை பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள். வரவேற்பு ஆரவாரம் ஒடுங்கியதும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி வந்தார்கள். </p> <p>ரதத்தைவிட்டு இறங்கிய ராமனது நெற்றியில் அநுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது. சீதையின் பொலிவு அநுபவத்தால் பூத்திருந்தது. இருவர் சிரிப்பின் லயமும் மோக்ஷ லாகிரியை ஊட்டியது. </p> <p>ராமனை அழைத்துக்கொண்டு கோதமன் வெளியே உலாவச் சென்றுவிட்டான். </p> <p>தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தையால் சுரக்கும் ஒரு பரிவுடன் அகலிகை அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். இருவரும் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள். <br />ராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன் சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம் இடம் ஏது? <br />அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்து விட்டாள். </p> <p>     "அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டாள். </p> <p>     "அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக. </p> <p>     "அவன் கேட்டானா?" என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவ மாடியது. </p> <p>அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? <br />ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? <br />இருவரும் வெகு நேரம் மௌனமாக இருந்தனர்.</p> <p>  "உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?" என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை. </p> <p>     "உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?" என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது. </p> <p>     "நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்றாள் அகலிகை. </p> <p>வெளியில் பேச்சுக் குரல் கேட்டது. அவர்கள் திரும்பிவிட்டார்கள். </p> <p>சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை. </p> <p>ராமன் மனசைச் சுட்டது; காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது. </p> <p>ரதம் உருண்டது; உருளைகளின் சப்தமும் ஓய்ந்தது. <br />கோதமன் நின்றபடியே யோசனையில் ஆழ்ந்தான். நிலைகாணாது தவிக்கும் திரிசங்கு மண்டலம் அவன் கண்ணில் பட்டது. </p> <p>புதிய யோசனை ஒன்று மனக்குகையில் மின்வெட்டிப் பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை நீக்கிப் பழைய பந்தத்தை வருவிக்க, குழந்தை ஒன்றை வரித்தால் என்ன? அதன் பசலை விரல்கள் அவள் மனசின் சுமையை இறக்கிவிடாவா? <br />உள்ளே நுழைந்தான். </p> <p>அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்கவேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது. </p> <p>கோதமன் அவளைத் தழுவினான். </p> <p>கோதமன் உருவில் வந்த இந்திரன் வேடமாகப் பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி! </p> <p>கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை. <br />அகலிகை மீண்டும் கல்லானாள். </p> <p>மனச் சுமை மடிந்தது.</p> <p>*****</p> <p>கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப் பாலைவனத்தின் வழியாக விரைந்து கொண்டிருந்தது. அதன் குதிகாலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. </p> <p>அவன் தான் கோதமன். </p> <p>அவன் துறவியானான்.</p> <p>*****</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-34138482703066204682010-01-03T07:42:00.000-08:002010-02-15T03:17:04.662-08:00மெளனம் நீல.பத்மநாபன்<blockquote> <p><b>நீல</b><b>.</b><b>பத்மநாபன்</b></p> </blockquote> <p>இன்று எனக்கு மெளன விரதம்.</p> <p>இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா ? பின் எதுக்கு இந்த நோன்பு ?</p> <p>நடுக்கூடத்தில் வழவழப்பான தரையில் சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன், மனசின் உள் வெளியில் இன்னதென்று தெரியாது சொரு சொருவென்று நினைவுகள்...</p> <p>நரம்பில்லாத நாக்கின் சுழற்சியில் வெளிப்படும் சப்தங்களுக்குத்தான் என்னவெல்லாம் தொனி விசேஷம். அவை பேசும், கேட்கும் உள்ளங்களில் எழுப்பும் நமைச்சல்கள் உம்...இப்போகூட வாயைத்தான் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடிகிறது....உள்ளம் ?</p> <p><a href="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S0C67N7hRKI/AAAAAAAAFbQ/RJ5Kmrl2ARk/s1600-h/2170%5B13%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="2170" border="0" alt="2170" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0C68Kvb_UI/AAAAAAAAFbU/Cqv7f96xFFs/2170_thumb%5B15%5D.jpg?imgmax=800" width="362" height="200" /></a> </p> <p>நேர் எதிர்ச்சுவரில் மேலே அவர் முகம் என்னையே கொட்டுக் கொட்டென்று பார்த்துக் கொண்டிருப்பது போல் சென்ற மாதம் நடந்த அவர் முதல் திவசத்தின் போது வரை, இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கையில் என் செவிப்புலனில் மெளன மொழியில் தேவீ.....தேவீ என்று அவ குசுகுசுக்கும் உணர்வு....(அவர் மட்டும்தான் என்னை இந்தப் பெயரில் அழைப்பார்.) இப்போ மட்டும் என்ன வந்துவிட்டது ? அந்தக் குரலை என்னால் உணர முடியாதது ஏன் ? சே....இதெல்லாம் என் பிரமைகள்......</p> <p>பதினைந்து வருட கால தாம்பத்திய வாழ்வின் தடையமாய் ஒரே ஒரு குழந்தை... ?</p> <p>ஹ்ஊம்....அந்தப் பாக்கியம்தான் நான் செய்யவில்லையே.....என் அண்ணாவுக்கும் தங்கைகளுக்கும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி யானாலும் என் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை போல் ஆகுமோ ?</p> <p>எதிர்ச் சுவரோரத்தில் கீழே அவர் அம்மா--என் மாமியார் படுத்திருந்த கட்டில் வெறிச்சோடிக் கிடக்கிறது.....கொள்ளிவைக்க நிற்காமல் போய்விட்ட ஒரே மகனைத் தேடிக் கொண்டு அவுங்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.</p> <p>வெளியில் ரோடில் அடிக்கடி கார் 'ஹாரன் சத்தம் ' மற்றபடி நிசப்தம்.</p> <p>சமையலறை வாசல்படியில் தலைவைத்துப் படுத்திருக்கும் அம்மா தலை உயர்த்தி 'ஏண்டி...தேவகீ...இப்படியேவா உட்கார்ந்திருப்பது, கொஞ்சம் படுத்துத் தூங்கினால் என்ன ? ' என்கிறாள்.</p> <p>நான் பதில் சொல்லவில்லை. எனக்கு இன்று மெளன விரதம் என்பது அவளுக்குத் தெரியும். சற்று நேரத்தில் மறுபடியும் அம்மாவிடமிருந்து அமர்ந்த குரலில் குறட்டை வரத் தொடங்கி விட்டது. உம்..அவர் போன பின் இவளும் இந்த வீட்டுப் பிரஜையாகிவிட்டாள். அடுத்த தெருவில் என் அண்ணா அண்ணி கூட இருக்கும் அப்பா அடிக்கடி இங்கே வந்து பார்த்து விட்டுச் செல்வார்.</p> <p>உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. மெல்ல எழுந்து வெளிவராந்தாவுக்கு வந்தபோது முற்றத்தில் பளிச்சென்று காயும் மத்தியான வெயில் மேலே வராந்தாவிலிருந்து கீழே முற்றத்துக்கு இறங்கிக் கொண்டிருக்கும் படிகள், அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மேலே ஏறி வந்ததும் 'அப்பாடா....பதினெட்டாம் படிதான்.... ' என்று சொல்வது ஞாபகம் வருகிறது.</p> <p>கீழே முற்றத்தில் வெயிலில் துவண்டு நிற்கும் செடி கொடிகள், நிழல் விரித்து லேசாய் சரிந்து நிற்கும் மாமரம், பிறகு முற்றத்திலிருந்து கீழே ரோடுக்கு இறங்கும் படிகள் மறுபடியும்.</p> <p>ரோடுக்கும் வீட்டு முற்றத்துக்கும் இடையில் உள்ள காம்பவுண்ட் சுவரின் இடது கோடியில் சுவரோரமாய் மூலையில் கிடந்த அந்த கான் கிரீட் பெஞ்சியும் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பெஞ்சும் என் கழுத்தைப் போல் --மூளியாகி விட்டதைப் போ....</p> <p>அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. கடை இல்லையாதலால் அவர் காப்பி சாப்பிட பத்து மணியாகி விட்டது. வழக்கம்போல் முற்றத்துக்கு வந்து இந்த பெஞ்சியின் மீது ஏறி நின்று ரோட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அத்தை பாத்ரூமில், நான் சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.</p> <p>வீ......</p> <p>வீ......</p> <p>--என்னமோ மாதிரி ஒரு சத்தம்...ஒரு மனித கண்டத்திலிருந்து இப்படியொரு குரல் வர முடியுமென்று தோன்றவில்லை. மீண்டும் மீண்டும் இந்த உளறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு இதோ நான் நிற்கும் இங்கே வந்து நின்று கொண்டு, இப்படிக் கீழே இடது கோடியில் காம்பவுண்ட் சுவரோர மூலையில் பார்த்தபோது--</p> <p>கான்கிரீட் பெஞ்சியில் அலங்கோலமாய் விழுந்து கிடக்கும் அவர்.</p> <p>என் இதயம் அப்படியே நின்று போய் விட்டதைப் போல்....</p> <p>அருகில் ஓடிச்சென்றேன். அவர்நாக்கு--அக்ஷர சுத்தமாய் மணிக்கணக்கில் எத்தனை பேரிடமானாலும் களைத்துப் போகாமல் மாறி மாறி பேசும் அவர் நாக்கு, ஒரு வார்த்தையை ஒரு எழுத்தைக்கூட தெளிவாய் உச்சரிக்க முடியாமல் தத்தளிக்கிறது. விழிகளில் ஒரு அசக்த பாவம்.</p> <p>நான் அலறுகிறேன். அப்பாவுக்கு ஆள் போனது. அடுத்த வீட்டிலிருந்து என் தங்கை புருஷன் ஓடி வருகிறான். எல்லோருமாய்ச் சேர்ந்து காரில் தூக்கிப் போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகிறார்கள். ஸ்ட்ரோக்காம் மாலை நாலு மணிவாக்கில் ஆம்புலன்ஸிலிருந்து ஸ்டெரச்சரில் தூக்கிக் கொண்டு வந்து வடக்கில் தலை வைத்து கிடத்திவிட்டுப் போய்விடுகிறார்கள், அப்படி எல்லாம் முடிந்து போய்விட்டது.</p> <p>வெயிலின் வெக்கையைச் சுமந்து கொண்டு காற்று வந்து படபடக்கிறது. நான் படியில் கால் வைத்தேன். வெயிலில் சுட்டுப் பழுத்துக் கிடக்கும் படிகள். மெல்ல இறங்கி கான்கிரீட் பெஞ்சின் முன் வந்து நிற்கிறேன்.</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S0C68428QkI/AAAAAAAAFbI/juJkqJL6Qvw/s1600-h/neelapadmanaban1130.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="neelapadmanaban11" border="0" alt="neelapadmanaban11" align="right" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S0C69zTmYEI/AAAAAAAAFbM/OCsQiBtuQyM/neelapadmanaban11_thumb28.jpg?imgmax=800" width="224" height="234" /></a> பெஞ்சின் மீது சுவரோரத்தில் காரை பெயர்ந்து தெரிகிறது. சிமண்ட் காரையும் இன்னும் விலகவில்லை. உம்...அவர் சிதை பஸ்மம் அடங்கிய சின்னச் செம்பும், அதன் மீது சிறுசாய் அழகாய் கட்டியிருந்த பீடமும் இப்போ இங்கில்லை. சென்ற மாதம், அவர் மறைந்து முதலாண்டு திகையும் நாள் அன்று இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. இப்போ இங்கே ஒரு சூனியம், என் அகத்தைப்போல்.</p> <p>அவர் இறந்த அடுத்த நாள்....</p> <p>அப்பாவும் மற்ற உறவினர்களும் மயானத்திற்குச் செல்ல இங்கிருந்து இறங்கும்போது...</p> <p>'இது அவர் வாழ்ந்த கோயில், இங்கேதான் அவர் இனியும் குடியிருக்கணும். அவர் அஸ்தியை இங்கே கொண்டு வந்து விடுங்கள். அதை அவர் கடைசியாய் நின்று விழுந்த இந்த கான்கிரீட் பெஞ்சின் மீது ஸ்தாபித்து, ஒரு சின்னக் கோயில் கட்டி என் வாழ்நாள் பூராவும் வழிபடப் போகிறேன் ' என்று நான் சொன்னதைக் கேட்டு எல்லோரும் பரஸ்பரம் முகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் முகத்தில் ஒரு கலவரம்....அடக்கமான பேச்சு....</p> <p>கடைசியில் அம்மா மூலையில் கிடக்கும் என் செவியில் வந்து ரகசியமான குரலில் சொன்னாள்.</p> <p>தேவகீ....நீ என்ன சொல்றே... செத்துப் போன உயிருக்கு ஆத்ம சாந்தி அடைய அஸ்தியை கடலில் கொண்டு போய்த்தான் கரைக்கணும் வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது அது ஆபத்து.... '</p> <p>பக்கத்தில் கிடந்து பிலாக்கணம் பாடி அழுது கொண்டிருந்த என் பெரியம்மாவும் ஒத்துப் பாடினாள். 'அது மட்டுமா...... ' அப்படி நீ சொல்வதைப் போல் அஸ்தியை இங்கே கொண்டு வந்து அடக்கினால், அந்த இடத்தில் தீட்டுப்படவே கூடாது.... நீ இப்போ கிழவி ஆயிட்டியா.... மாசத்தில் மூணு நாலு நாட்கள் உனக்கும் அதன் பக்கத்தில் போக முடியாது, பூஜை செய்ய முடியாது.... '</p> <p>ஆனால் என் பிடிவாதத்தின் முன் அவர்கள் வாதங்கள் நிற்கவில்லை. கடலில் கொண்டு போய் கரைத்தது போக மீதியை ஒரு சின்னச் செம்பில் போட்டு, இந்த கான்கிரீட் பெஞ்சின் மீது வைத்து, சுற்றி செங்கல் அடுக்கி ஒரு சின்ன பீடமும், மழைநனையாதிருக்க சிறு கோயிலும்.</p> <p>வெயில் சுள்ளென்று உறைத்தது.</p> <p>திரும்பி நடந்தேன், படிகள் ஏறும்போது, சென்ற மாதம், அவர் மறைந்து முதலாண்டு திகைவதற்கு முந்தியநாள் நாள் வரையிலும் என்றும் இந்த பீடத்தில் விளக்கேற்றி வைத்ததும். அடுத்த நாள் திவசத்தின் அன்று அப்பா, அண்ணா உடன் நிற்க உறவினர்கள் பீடத்தை உடைத்து செம்பை வெளியில் எடுத்து கன்யாகுமரிக்கடலில் கொண்டு கரைத்து விட்டு வந்ததும் ஞாபகம் வருகிறது. அப்போது அதை எதிர்க்கவோ தடுக்கவோ எனக்குத் தோன்றவில்லை. இது ஏன் ?</p> <p>வராந்தா படியில் நின்று கொண்டு மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்.</p> <p>கான்கிரீட் பெஞ்சி வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது.... தொட்டு காம்பவுண்டு சுவர்....அதை மீறி தூரத்தில் நீண்டு செல்லும் கன்னங் கரிய தார் ரோடு, விரைந்து செல்லும் கார்கள்....பாதசாரிகள் என்றும் அவர் கடைக்குச் செல்ல இங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு இறங்கிய பின்னும், விரித்த குடையின் கீழ் சிறைப்பட்டுச் செல்லும் நிழலில் நனைந்தவாறு அவர் தூரத்தில் இந்த ரோடு முனையில் சென்று மறைவதுவரை, இங்கே இப்படி நின்று கொண்டு பார்த்துவிட்டுத்தான் கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போனேன். மத்தியானம் சாப்பிட வரும்போதும், சாப்பிட்டு விட்டுத் திரும்பிச் செல்லும் போதும், எல்லாம் இதே நாடகம் இதே லயத்தில் இங்கே ஆவர்த்தனமாகிக் கொண்டிருந்தன.</p> <p>இப்போது....</p> <p>அதே ரோடு.....</p> <p>பாதசாரிகள்... கார்கள்....</p> <p>நிற்கும் அதே நான்....</p> <p>அவர் ?</p> <p>மறுபடியும் உள்ளே வந்து சுவரில் சாய்ந்து உட்காருகிறேன்.</p> <p>இந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைத்து நிகழ்ந்த சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மழைக்கால மேகங்களாய் என் சிரஸைத் தொட்டுக் கொண்டு ஓடி நடக்கின்றன.</p> <p>மெளனமாய் பரிவுடன் உற்று நோக்கும் அவர்.... செவிப்புலன் மேலும் மேலும் கூர்மையாகியும் தேவீ..... என்று அந்த அடக்கமான அழைப்பு என் சித்தத்தில் கேட்கவில்லை.</p> <p>கன்னியாய் இருக்கையில், பக்கத்தில் எனக்காகப் பிறந்திருந்த இவரை இனம் காண இயலாமல், ஊரெல்லாம் எனக்கு மாப்பிள்ளைத் தேடிக் களைத்து, இறுதியில் இவரைக் கைப்பிடித்தது......</p> <p>ஒரு தடவை பெரியம்மை கண்டு, அக்கினி நட்சத்திரதின் ஆரத்தழுவலில் என்னை மறந்து கிடக்கையில், முகமில்லா நாலு பேர் தோள் தாங்கி என்னை தூக்கி, ஆதியந்தமில்லா காலப் பெருவெளியில் அமிழ்ந்து சென்று கொண்டிருந்த, கனவில்லை என்று உணரும் ஒரு நினைவு மிரட்சி.....</p> <p>'தேவகீ.... மணி மூணு இருக்கும்.... காப்பி போடட்டுமா ? '</p> <p>அம்மா கேட்கிறாள்.</p> <p>நான் பதில் சொல்லவில்லை. அம்மா பதிலை எதிர் பார்த்திருக்க மாட்டாள். அவளுக்குத்தான் தெரியுமே இன்று எனக்கு மெளன விரதம் என்பது.</p> <p>அம்மா எழுந்து சோம்பல் முறித்துவிட்டுக் கொட்டாவி விட்டவாறு சமயலறைக்குச் சென்றாள்.</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-32752226337753483542010-01-02T07:49:00.000-08:002010-02-15T03:17:04.671-08:00பழக்கம்- அசோகமித்திரன்<blockquote> <p><b>அசோகமித்திரன்</b><b>.</b></p> </blockquote> <p>'உன்னைத் தேடிண்டு பாலு வந்தாண்டா, ' என்று அம்மா சொன்னாள்.</p> <p>'எந்த பாலு ? ' என்று கணேசன் கேட்டான்.</p> <p>'என்னடா இப்படிக் கேக்கறே ? உன் ஆபிஸிலேயே வேலை பண்ணிண்டிருந்தானே, அவன்தான். வேற யாரு பாலு இருக்கா ? '</p> <p>'அவனா ? இரண்டு மூணு தரம் வந்துட்டான் போலேயிருக்கே ? ஏதாவது விஷயம் உண்டா ? '</p> <p>'தெரியலை. வந்து பத்து நிமிஷம் பேசிண்டிருந்தான். ரொம்ப நல்ல பையன். அவன் அம்மா, மாமியார் இரண்டு பேரும் ஊரிலேந்து வந்திருக்காளாம். நாளைக்கு மறுபடியும் உன்னைப் பார்க்க வரேன்னு சொன்னான். '</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/Sz9q6S8zTBI/AAAAAAAAFaw/i3HduMENjdk/s1600-h/Nalir_Cover27.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="Nalir_Cover" border="0" alt="Nalir_Cover" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/Sz9q7piCcfI/AAAAAAAAFa0/R0-nnIjh2T0/Nalir_Cover_thumb25.jpg?imgmax=800" width="372" height="231" /></a></p> <p>கணேசனுக்கும் பாலுவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இந்த ஆறு மாதத்தில் ஒரே ஒரு முறை அவன் பாலு புதிதாக வேலை செய்யும் ஆபீசில் அவனைப்போய் பார்த்ததோடு சரி. ஆனால் பாலுவோ ஐந்தாறு முறை கணேசன் வீட்டுக்கு வந்து விட்டான். சொல்லி வைத்தாற் போல் ஒரு முறைகூட கணேசன் வீட்டில் இல்லை.</p> <p>ஒருகாலத்தில் அவர்கள் இருவரையும் தனித்தனியாக நினைத்துப் பார்க்க முடியாதபடி எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். ஆபீசில் அடுத்தடுத்த மேசைகள். இருவருக்கும் அநேகமாக ஒரே வயது. இருவரும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஷார்ட் ஹாண்ட் டைப்ரைட்டிங் லோயர் பரிட்சை தேறி வேலைக்கு வந்தவர்கள். இருவருக்கும் சங்கீதம் சினிமா-- முதலிய விஷயங்களில் ஒரே மாதிரியான ரசனை. இருவரும் சிறு வயதிலேயே தந்தையிழந்தவர்கள். ஒரு வித்தியாசம், பாலுவின் அம்மா பாலுவுக்கு இரு வருடங்கள் முன்னால் கல்யாணம் செய்து வைத்து விட்டாள். தங்கை கல்யாணம் முதலில் முடிய வேண்டும் என்று கணேசனால் மட்டும் ஒத்திப்போட முடிந்தது.</p> <p>கணேசன் சாப்பிட்டுவிட்டுக் கையை அலம்பும் போது அம்மா சொன்னாள், 'நீதான் ஒரு நடைப்போய்ப் பார்த்து விட்டு வாயேண்டா. '</p> <p>'அவனேதான் வரேன்னு சொல்லியிருக்கானே ? '</p> <p>இப்படி ஆறு மாதத்திற்கு முன்பு சொல்லியிருக்க மாட்டான். பாலு வீட்டுக்கு வந்து போனானென்றால் நிச்சயம் கணேசன் உடனே பாலுவைப் பார்க்கப் போயிருப்பான். இப்போது ஓர் அசிரத்தை வந்துவிட்டது. பாலுவை பார்க்க வேண்டாமென்றில்லை. ஆனால் அதற்காக அவன் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.</p> <p>அன்று படுத்து அரைமணியாகியும் தூக்கம் வரவில்லை. ஆபீஸிலேயே சிறுசிறு சிக்கல்கள். இப்போது பெரிய தலைவலியாயிருப்பது ஆபீஸ் பையன் மோகன் தீர்க்கமான விரோதியாக நடந்து கொள்வது. இந்த மோகனுக்காகத்தான் எவ்வளவு முறை அரை ரூபாயும் ஒரு ரூபாயுமாக விட்டுக் கொடுத்தாயிற்று ? எப்போது டிபன் காப்பி வாங்கி வரச் சொன்னாலும் உடனே கணக்கு ஒப்புவித்துப் பாக்கிச் சில்லறை தரமாட்டான்: கேட்டுக் கேட்டு வாங்க வேண்டும். அது தரும் கசப்புணர்ச்சிக்காகவே சரியாகச் சில்லறையாகத் தருவது. ஆனால் அப்போதும் மோகன்தான் வெற்றியடைவான். 'தோசையெல்லாம் ஆயிடுத்து, ' என்று சொல்லிவிட்டு காபி மட்டும் மேசை மீது வைப்பான். 'தோசை இல்லைன்னா வேறே ஏதாவது வாங்கி வருவது தானே ? ' என்று கேட்டால், 'நீ சொல்லலியே, ' என்பான். மீதிச் சில்லறையைக் கேட்டாலொழிய தரமாட்டான்.</p> <p>இயல்பாகவே வேண்டாதவனாக இருப்பவன் இப்போது தெரிந்த விரோதியாகி விட்டான். இருபது ரூபாய் கேட்டான். கணேசன், 'நீ சொல்லாம எடுத்துண்டது ஐம்பது, நூறு ரூபாய் கூட இருக்கும், ' என்றான். இது என்னபதில் ? கையில் பணம் இல்லை என்று கூறியிருக்கலாம். விளைவு, மோகன் எப்படி எப்படியல்லாமோ கணேசனை வதைக்கிறான்.</p> <p>பாலு மோகனிடமே கூடக் கடன் வாங்கியிருக்கிறான். கடனும் கொடுத்திருப்பான். எல்லாம் பத்து பதினைந்து; மிகவும் அதிகமாகப் போனால் இருபது ரூபாய். பாலு கணேசனிடம் கடன் வாங்காத மாதமில்லை. வாங்கிய கடனில் பாதி அவர்கள் இருவரும் சேர்ந்து போகும் சினிமாவுக்குச் செலவழிந்துவிடும். பாலுவுடன் சினிமா பார்ப்பதே ஒரு தனி அனுபவம். குப்பை என்றும் பிரமாதம் என்றும் பரவாயில்லை என்றும் எவ்வளவு பேர் சொல்லியிருக்கிறார்கள் ? ஆனால் பாலு ஒரு சினிமாப்படம் பற்றி அப்படிச் சொல்வது பல புரியாத விஷயங்களைத் தெளிவாக்குவது போல இருக்கும். அவனுக்குக் கல்யாணம் ஆனபிறகு கூட நண்பர்களுடன் சினிமா போக அவன் நேரம் ஒதுக்கிக் கொள்வான். இப்போது வேலைக்குப் போன புதிய இடத்தில் அவனுக்கு யார் சினிமா தோழர்கள் ?</p> <p>பத்து ரூபாய் வாங்கிக் கொள்வதைக் கடன் என்று சொல்லலாமா ? கைமாற்று எனலாம். தீர்க்க திருஷ்டியுடன் தான் இப்படிச் சொல்கிறார்கள்.</p> <p>இந்தப் பத்து அல்லது இருபது ரூபாய்கள் கைமாறினால் மாறியதுதான். கணேசனிடம் பாலு வாங்கியது கைமாற்று தான். தவறாமல் மாதத்தில் மூன்றாவது வாரத்தில், 'ஏம்பா, இருபது ரூபா வேணுமே. இருக்கா சம்பளம் வாங்கினவுடனே கொடுத்துடறேன், ' என்பான்.</p> <p>கணேசனிடம் இருபது ரூபாய் இருக்கக் காரணம் அவன் சீட்டாட மாட்டான். அவனிடம் இருக்கும் என்று பாலுவுக்கு நன்றாகத் தெரியும். கணேசன் உடனே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிடுவான். அன்று மாலைக்குள் அதிலிருந்து நான்கைந்து ரூபாயைக் கணேசனுக்காகவே பாலு செலவழித்திருப்பான். சம்பளம் வாங்கியவுடன் அவனுக்குப் பத்து, இவனுக்கு இருபது, இன்னொருவனுக்கு இருபத்தைந்து என்று பிரித்துக் கொடுத்துவிடுவான். சனி, ஞாயிறு தவறாமல் சீட்டாடம் இருக்கும். வியாழன் அல்லது வெள்ளி அன்று ஒரு சினிமா இருக்கும்.</p> <p>கணேசன் எழுந்து விளக்கைப் போட்டுப் படுக்கையை மீண்டும் ஒரு முறை உதறிப் போட்டுக் கொண்டான். தூக்கம் வராமல் சிரமப்படுவதற்குக் காரணம் எறும்பு, வண்டு ஏதாவது இருக்கக்கூடும். தங்கை தம்பி ஆகிய இருவரும் <a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/Sz9q8eMzVFI/AAAAAAAAFa4/KUO_7KxhrOA/s1600-h/ashokmit31.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="ashokmit" border="0" alt="ashokmit" align="right" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/Sz9q9F32LUI/AAAAAAAAFa8/AeueF2hK79k/ashokmit_thumb29.jpg?imgmax=800" width="225" height="291" /></a> ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மாதான் அவன் விளக்கைப் போட்ட சமயத்தில் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அம்மாவுக்கு இந்த கைம்மாற்று விஷயங்கள் அதிகம் தெரியாது. அவளுடைய உலகிலும் ஒரு கரண்டி சர்க்கரை, ஒரு தம்ளர் எண்ணெய் என்ற கைமாற்றுகள் உண்டு. ஆனால் யாராவது மாதம் தவறாமல் பணம் கைமாற்று கேட்டால் அவளுக்கு அந்த நபர் மீது ஏதேதோ சந்தேகங்கள் வந்துவிடும். பாலுவின் கைமாற்றம் பழக்கம் பற்றி அவளுக்குத் தெரியாது. தெரிந்து விட்டால் அவனால் கணேசனின் வீடு தேடி வர முடியாது. அவளுடைய சந்தேகங்கள் முதலில் பாமரத்தனமாகத்தான் இருக்கும். ஆனால் நாலைந்து கேள்விகள் கேட்டுச் சீக்கு இருக்கிற இடத்தைக் கண்டுவிடுவாள். நல்ல வேளை, பாலு அதிக நேரம் இன்று அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கவில்லை.</p> <p>டைப்பிஸ்ட் குமாஸ்தாக்களுக்கு மிகச் சில பெரிய கம்பெனிகளில்தான் தாராளமாகச் சம்பளம் தருகிறார்கள். பாலு, இப்போது வேலை போயிருக்கும் கம்பெனி பெரியது இல்லை என்றாலும் கொஞ்சம் தாராளம் என்று பெயர். மாதம் எழுபத்தைந்து ரூபாய் கூடும் என்றுதான் பாலு கணேசனை விட்டுப் பிரிந்து போனான். போய்ச் சேர்ந்த ஒரு வாரத்துக்குள் அங்கு இன்னொரு டைபிஸ்ட் தேவைப்படுகிறது என்றும் கணேசனை அந்த இடத்திற்கு வந்து விடலாம் என்றும் சொன்னான். கணேசன்தான் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. பாலு விட்டுப் போனவுடன் பாலு பயன்படுத்திக் கொண்டிருந்த புதிய டைப்ரைட்டர் இவனுக்குக் கிடைத்தது. அதுதான் காரணம் என்றில்லை. ஏனோ புதிய வேலைக்குப் போகப் போதிய உற்சாசம் ஏற்படவில்லை, மாதம் எழுபத்தைந்து ரூபாய் அதிகப்படியாகக் கிடைக்கும் என்று தெரிந்தும் கூட. ஆனால் அப்போது அந்த முயற்சி எடுத்துக் கொள்ளாதது தவறோ என்று மனம் ஏங்குகிறது. இந்த மோகன் போன்ற மனிதர்களோடு காலம் தள்ள வேண்டாமல்லவா ?</p> <p>காலையில் குளித்துவிட்டு வெளியே கிளம்ப ஜிப்பாவை மாட்டிக் கொண்டிருக்கையில் தெருவில் குரல் கேட்டது. பாலுவே வந்து விட்டான் '</p> <p>'உன்னைத்தான் பாக்கக் கிளம்பிண்டிருந்தேம்பா, நீயே வந்துட்டே, ' என்று கணேசன் கூறினான். '</p> <p>'வரவன் இவ்வளவு நாள் வரக்கூடாது ? ஒரேயடியா மறந்துட்டியேப்பா. '</p> <p>'அப்படியெல்லாம் இல்லை, பாலு. ஆபீஸ் விட்டா வீடு, வீடு விட்டா ஆபீஸ். அவ்வளவுதான். இப்பல்லாம் எங்கேயும் போறதில்லை. '</p> <p>'அதுதான் நான் ராத்திரி ஏழு மணி எட்டு மணிக்கு வந்தாக்கூட நீ வீட்டிலே இருக்கிறதில்லையாக்கும். '</p> <p>'அது சரி, என்ன விசேஷம் ? பாத்து எவ்வளவு நாளாறது.... '</p> <p>'நீ சொல்லறே இதை, உம்...மறுபடியும் ஒரு வேகன்சி இருக்கு. கையோட அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் நேரே டைரக்டர்கிட்டே கொடுக்கிறேன். இங்கே உடனே ரிலீஸ் பண்ண முடியாது, அப்படி இப்படான்னாங்கன்னா லீவு போட்டுட்டு வந்துடு. '</p> <p>'இதை நீ அம்மா கிட்டே சொல்லிட்டுப் போயிருக்கக் கூடாதா ? நான் ராத்திரி உக்காந்து எழுதியிருப்பேனே ? '</p> <p>'இப்ப முடியாதா ? '</p> <p>'முடியாதுனில்லே. எழுதினா சரியா வரதில்லை. நான் எழுதி நாளைக் கார்த்தாலே உன் வீட்டிலே கொண்டு வந்து கொடுக்கிறேனே. '</p> <p>'நாளைக்கா ? '</p> <p>'ஏன் ரொம்ப லேட்டா ? '</p> <p>'பரவாயில்லை. நான் சொல்லி வைக்கிறேன். கட்டாயம் கொண்டு வந்துடு. இப்ப சான்ஸ் விட்டா அப்புறம் அஞ்சாறு வருஷத்துக்குக் கிடையாது. '</p> <p>'சரி, கொண்டு வந்துடறேன். '</p> <p>'நீ எப்படியும் அங்கே வந்துடணும், கணேசன். நீயில்லாத ஒரு ஆபிஸிலே வேலை பண்ணறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு, தெரியுமா ? ' பாலுவின் குரல் கரகரத்தது.</p> <p>'எனக்கும் அப்படித்தான், பாலு. '</p> <p>சற்று நேரம் இருவருக்கும் பேசத் தோன்றவில்லை. கணேசன்தான் முதலில் துவங்கினான்.</p> <p>'வாயேன், காபி சாப்பிட்டுப் போகலாம், ' என்றான்.</p> <p>'வேண்டாம், இன்னொருத்தனைப் பார்க்கணும். '</p> <p>'நிறையத்தான் வேலை வைச்சிண்டிருக்கே. உன் ஆபீஸ் எத்தனை மணிக்கு ? ஒம்போதரைத்தானே ? '</p> <p>'ஆமாம், ஆனாத் தேதி இருபதாச்சே ? '</p> <p>'ஏன், என்னாச்சு ? '</p> <p>'இதுக்காகவாவது நீ என் கம்பெனிக்கே வந்துடணும். '</p> <p>'எதுக்கு ? '</p> <p>'எனக்கு இப்போ இருபது ரூபா வேணும். முதல் தேதி பொறந்து சம்பளம் வந்தவுடனே கொடுத்துடறேன். </p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-22883833614194192442010-01-01T08:44:00.000-08:002010-02-15T03:17:04.683-08:00சாமியாரும் குழந்தையும் சீடையும் - புதுமைப்பித்தன்<blockquote> <p>     <strong>புதுமைப்பித்தன்</strong></p> </blockquote> <p>"மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.</p> <p>     "இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.</p> <p>     "நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு கட்டிக் கொண்டு வந்தான்.</p> <p>     "இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?</p> <p>     "நிச்சயிக்க என்ன இருக்கிறது?..."</p> <p>இப்படியாகப் பின்னிக்கொண்டே போனார் ஒரு சாமியார். எதிரிலே தாமிரவருணியின் புதுவெள்ளம் நுரைக் குளிர்ச்சியுடன் சுழன்று உருண்டது.</p> <p><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/Sz4mUoeUnVI/AAAAAAAAFaM/C7uNvPEZR5w/s1600-h/modernart886.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="modern-art-8" border="0" alt="modern-art-8" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/Sz4mVpA3hoI/AAAAAAAAFaQ/D7aHneb12II/modernart8_thumb89.jpg?imgmax=800" width="354" height="267" /></a> </p> <p>அவர் உட்கார்ந்திருந்தது ஒரு படித்துறை. எதிரே அக்கரையில் பனைமரங்களால் புருவமிட்ட மாந்தோப்பு; அதற்கப்புறம் சிந்துபூந்துறை என்று சொல்வார்களே அந்த ஊர். இப்பொழுது பூ சிந்துவதற்கு அங்கு மரம் இருக்கிறது. அதைப் போல எண்ணக் குலைவையும் ஏமாற்றத்தையும் சிந்துவதற்கு சுமார் ஆயிரம் இதயங்கள் துடிக்கின்றன. துடிப்பு நின்றவுடன் வைத்து எரிக்க அதோ சுடுகாடு இருக்கிறது. இப்பொழுதும், இந்த நிமிஷத்தில் கூடத்தான் அது புகைந்து கொண்டிருக்கிறது. தோல்வியின், ஏமாற்றத்தின் வாகனங்களை வைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது பலவீனந்தானே. பலவீனத்தை வைத்துக்கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால் தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.</p> <p>அதை இந்தச் சாமியார் அறிந்து கொண்டிருந்தார். அதனால்தான், இவருக்கு விரக்தி ஏற்பட்டது. இவருக்கு இடது பக்கத்தில் சுலோசன முதலியார் பாலம். கட்டபொம்மு சண்டையின் போது சமரசம் பேச முயன்ற துபாஷ் அவர். அவர்தான் அதைக் கட்டியது. திருநெல்வேலிக்காரர்களுக்கு அதில் அபாரப் பெருமை. முட்டையும் பதநீரும் விட்டு அரைத்த காரையில் கட்டியதாம். அதில் ஒரு தனிப் பெருமை.</p> <p>இதற்கு முன் எப்போதோ ஒரு முறை இது போல வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த வைக்கோல் போர், முன் பல்லைத் தட்டிய மாதிரி இரண்டு மூன்று கணவாய்களைப் பெயர்த்துக் கொண்டு போய் விட்டது. இப்பொழுது, மறுபடியும் கட்டி விட்டார்கள். பொய்ப்பல் கட்டிக் கொண்டால் எப்படியும் கிழவன் தானே; அப்படித்தான் அதுவும். வயசு முதிர்ந்த நாகரிகம் ஒன்று தன்னை வலுவுள்ளது மாதிரி காட்டிக் கொள்வது போன்றிருந்தது. அதற்கும் சற்று அப்பால் பொதிகை. குண்டுக்கல் மாதிரி ஒரு குன்று; தெத்துக்குத்தான வானத்தின் சிவப்பு கோரச் சிரிப்பைத் தாங்குவது போலப் படுத்திருந்தது குன்றின் தொடர்.</p> <p>சாமியாருக்குப் பின்புறத்தில் சுப்பிரமணியன் கோவில். அதாவது வாலிபம், வலிமை, அழகு, நம்பிக்கை இவற்றையெல்லாம் திரட்டி வைத்த ஒரு கல் சிலை இருக்கும் கட்டிடம். அதற்குப் பின்னால் ஒரு பேராய்ச்சி கோவில். மேற்குத் திசையின் கோரச் சிரிப்புக்கு எதிர்ச்சிரிப்பு காட்டும் கோர வடிவம். இருட்டில் மினுக்கும் கோவில். வாலிபமும் நம்பிக்கையும் அந்தக் கோரச் சிரிப்பின் தயவில் நிற்பது போல, சாமியாரின் முதுகுப் புறத்திலிருந்தன. <br />அவர் வெறுத்து விட்டவை; ஆனால், மனிதனால் வெறுக்க முடியாதவை. அதனால்தான், அவரது முதுகுப் புறமானது அவற்றிற்கு அப்பால் விலகிச் செல்ல முடியாது தவித்தது.</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/Sz4mWErJpTI/AAAAAAAAFaU/jwK1klFKL5w/s1600-h/pudu210.gif"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="pudu2" border="0" alt="pudu2" align="left" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/Sz4mXTPX7EI/AAAAAAAAFaY/w1svk4pNa6c/pudu2_thumb8.gif?imgmax=800" width="220" height="251" /></a> சாமியாரின் வலது பக்கத்தில்... <br />சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை. நான்கு வயசுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடையை மூட்டை கட்டிக் கொண்டு, படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிரிந்து வெளிவரும் பொழுது, ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம், கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும். </p> <p>குழந்தை சீடையை மென்று கொண்டு சாமியாரைப் பார்க்கிறது.</p> <p>சாமியார் வெள்ளத்தைப் பார்க்கிறார். வெள்ளம் இருவரையும் கவனிக்கவில்லை.</p> <p>     "மனிதன் நல்லவன் தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது, அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது... இப்பொழுது, அறிவாளியாக அல்லல்படுகிறான். </p> <p>     "சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். அதற்காக அவனைக் குற்றம் சொல்ல முடியுமா?</p> <p>     "மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது.</p> <p>     "அதனால் தான் காத்திருக்கிறான். ஆனால், அவனுக்குத் துரு துருத்த கைகள். அதனால்தான் பிசகுகளின் உற்பத்திக்கு கணக்கு வரம்பை மீறுகிறது..." என்றார் சாமியார். <br />துறையில் தலை நிமிர்ந்து வந்த நாணல் புல் ஒன்று சுழலுக்குள் மறைந்து விட்டது. குழந்தையும் 'ஆமாம்' என்பது போல் தலையை அசைத்துக் கொண்டு ஒரு சீடையை வாயில் போட்டுக் கொண்டு கடுக்கென்று கடித்தது. <br />அந்தப் படித்துறையில் கடுக்கென்ற அந்த சப்தத்தைக் கேட்க வேறு யாரும் இல்லை.</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-39526678085962786342009-12-30T05:06:00.000-08:002010-02-15T03:17:04.890-08:00மீதமிருக்கும் சொற்கள்!<blockquote> <h5>எஸ். ராமகிருஷ்ணன்  iகதாவிலாசம் </h5> </blockquote> <h5><strong><font size="4"></font></strong></h5> <h5><strong><font size="4">அசோகமித்திரன்</font></strong></h5> <p><strong><font size="4"></font></strong> <br />‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் திருடர்களாக நடித்தவர்களில் எவரையாவது நினைவிருக்கிறதா? ‘கர்ணன்’ படத்தில் யுத்தக் காட்சியில் வரும் தேரோட்டிகளில் எவர் முகமா வது ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் இதற்கான பதிலை யோசித்துக்கொண்டு இருக்கும் போது, நான் கடந்த காலத்தின் சாலையில் சில மைல் பின்னால் போய்விட்டு வந்துவிடுகிறேன்.</p> <p><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="3661536473_c4cb3d4b2c_m" border="0" alt="3661536473_c4cb3d4b2c_m" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/SztQQ0mI1dI/AAAAAAAAFZY/NYymwhh8PQY/3661536473_c4cb3d4b2c_m_thumb%5B22%5D.jpg?imgmax=800" width="332" height="240" /></p> <p>தேனாம்பேட்டையின் குறுகலான ஒரு பிள்ளையார் கோயில் சந்தில் இருக்கிறது ஒரு மரக் கடை. அந்தக் கடைக்கு யார் உரிமையாளர் என்று நான் பார்த்ததே கிடையாது. அவர் எங்கோ மார்த்தாண்டத்தில் இருக்கிறார் என்பார்கள். எப்போதாவது மரக் கடையில் ஊதுவத்தியும் பூமாலைகளுமாக சாமி படங்கள் புத்துணர்ச்சி பெறும் நாளில், அவர் ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரியும். கடையைக் கவனித்துக் கொள்வதற்கு கேசவன் என்ற நண்பன் பொறுப்பாக இருந்தான்.</p> <p>கேசவன் கடையை விட்டு வெளியே போவதேயில்லை. ஆனால், அவனுக்கு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள  வேண்டும் என்ற ஆசை அதிகமாயிருந்தது. இதற்காக சினிமா, இலக்கியம், அரசியல் என்று சகல தரப்பு நண்பர்களையும் இரவு நேரத்தில் கடைக்கு வரச் சொல்லி டிபன் வாங்கிக் கொடுத்து, கைச்செலவுக்குக் காசும் கொடுத்துப் பேசிக்கொண்டு இருப்பான். பேச்சு பல நேரங்களில் பின்னிரவைக் கடந்து சென்றுவிடும். <br />அந்தக் கடையில் நடராசன் என்ற வயதானவர் வேலைக்கு இருந்தார். வயது அறுபதைக் கடந்திருக்கும். ஒடிசலான தோற்றம். பழுப்படைந்து போன வேஷ்டியை உடுத்தியிருப்பார். டீ வாங்கி வருவதற்கும் சிகரெட், பழம் வாங்கி வருவதற்கும் அரை மணிக்கொரு தரம் நடந்துகொண்டு இருப்பார். இரவு எத்தனை மணியானாலும் தனது பழைய சைக்கிளில் ஏறிச் சென்று எங்கிருந்தாவது சைனா டீ வாங்கிக்கொண்டு வருவார். மற்றபடி அவருக்கென்று மரக் கடையில் ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் உட்கார்ந்தபடி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பார். யாரிடமும் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. எப்போதாவது சில நேரம் மறைவாக அவர் சிகரெட் புகைப்பதைப் பார்த்திருக்கிறேன்.</p> <p>ஒரு இரவு கேசவனின் கடையில் பேச்சு நீண்டு, மணி மூன்றாகிவிட்டது. டீ வாங்குவதற்குப் போன நடராசன் திரும்பி வந்தால் டீயைக் குடித்துவிட்டு சபை கலைந்துவிடலாம் என்று யாவரும் காத்துக் கொண்டு இருந்தோம். நேரம் கடந்துகொண்டு இருந்ததே தவிர, அவர் வரவே இல்லை. ஏமாற்றத் துடன் கேசவன் மோசமான கொச்சை வார்த்தைகளால் நடராசனைத் திட்டியபடி கடையை மூடிவிட்டு தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.</p> <p>நானும் இன்னொரு நண்பனும் ஆட்டோ கிடைக்காமல் நடந்தே திருவல்லிக்கேணி அறைக்குப் போவது என்று நடக்கத் துவங்கினோம். ராயப்பேட்டையை நெருங்கும்போது மணிக்கூண்டு பக்கமிருந்து சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார் நடராசன். அவரைப் பார்த்ததும் நண்பன் டீ குடிக்கும் ஆசையில் ‘நடராசன்!’ என்று கத்திக் கூப்பிட்டான். அவர் கவனிக்காதது போல சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தார். ‘ஏய் நடராசன்!’ என்று அவன் கத்தினான். அவர் வேகவேகமாக அருகில் வந்து நின்று கோபத்துடன், ÔÔபோடா மசிரு... நடராசன் என்ன உன் வீட்ல சாணி அள்ளிப் போடுற வேலையா செஞ்சுக்கிட்டு இருக்கான். உங்களுக்கு எல்லாம் என்னடா தெரியும். நானாவது உழைச்சுச் சாப்பிடுறேன்... நீங்க எல்லாம் நக்கித் தாண்டா பிழைக்குறீங்க!ÕÕ என்று ஆவேசமாக சைக்கிளில் மாட்டியிருந்த ஃபிளாஸ்கை எடுத்து சாலையில் வீசியெறிந்தார். அதிர்ச்சியில் நண்பனது முகம் வெளிறிப்போனது. அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை... சைக்கிளை எடுத்துக்கொண்டு தேனாம்பேட்டைக்குப் போய்விட்டார்.</p> <p>இரண்டு நாட்களுக்குப் பிறகு கேசவ னின் கடைக்குப் போனபோது எப்போதும் போல நடராசன் அதே படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் சலனமேயில்லை. நானும் நடந்த எதை யும் காட்டிக்கொள்ளவே இல்லை.</p> <p>அன்றிரவு நான் அறைக்குத் திரும்பும் போது நடராசனும் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு என் கூடவே வந்தார். இருவரும் எதையும் பேசிக் கொள்ளவேயில்லை. <br />அறையை நெருங்கும்போது அவர் தணிவான குரலில், ‘‘தெரியாமப் பேசிட் டேன் தம்பி. மன்னிச்சிருங்க. அன்னிக்கு டீ வாங்கப் போன இடத்திலே சந்தேகப்பட்டு, என்னை போலீஸ் பிடிச்சு நாலஞ்சு அடி அடிச்சு, ‘நீ யார்டா... என்ன வேலை செய்றே?’னு கேட்டாங்க. என்ன சொல்றதுனு தெரியலை. பேசாம நின்னுட்டே இருந்தேன். ரெண்டு மணி நேரம் ஜாம் பஜார் ஸ்டேஷன்ல உட்கார வெச்சுட் டாங்க. அவமானமாப் போச்சு. அந்தக் கோபத்துலதான் உங்களைத் தப்பா பேசிட்டேன்’’ என்றார்.</p> <p>அப்போதுதான் உறைத்தது. நடராசன் எந்த ஊர், எதற்காக இந்த வேலை செய்கிறார் என்று இத்தனை நாள் எதையும் கேட்டதே இல்லையே. இருவரும் மேன்ஷன் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டோம். ‘‘உங்களுக்கு எந்த ஊரு? எப்போ மெட்ராஸ§க்கு வந்தீங்க?’’ என்று நடராசனைக் கேட்டேன். அவர் தலை கவிழ்ந்தபடியே சொன்னார்... ‘‘சார்! நீங்க ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ பார்த்து இருக்கீங்களா? ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் வரும் திருடங்க யாரையாச்சும் ஞாபகமிருக்கா?’’</p> <p>எதற்குக் கேட்கிறார் என்று புரியா மல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் குரல் கரகரத்தது... ‘‘நாப்பத்து மூணு படத்துல நடிச்சிருக்கேன் சார். எல்லாம் துணை வேஷம். குதிரையில வர்ற சேவகன், ஜெயில்ல கிடக்கிற கைதி. குதிரை வண்டிக்காரன். இப்படி இருபது வருசம் கோடம்பாக்கத்தைச் சுத்திட்டே இருந்துட்டேன். ஒரு படத்துலகூட ஒரு வார்த்தை பேசுனது கிடையாது.</p> <p>ஊமைப்படம் காலம் முடிஞ்சு எப்பவோ பேசும் படமா மாறிருச்சு. ஆனா, என்னை மாதிரி ஊமையா, படத்துல ஒரு வசனம்கூடப் பேசாம நடிச்சுக்கிட்டு இருக்கிறவங்க நூத்துக் கணக்கிலே இருக்கிறோம். ‘வள்ளி திருமணம்’ நாடகத்திலே வேலன், வேடன், விருத்தன்னு மூணு வேஷம் கட்டிப் பாடினவன் சார். ‘ராஜபார்ட் நடராசன்’னு சொன்னா அவ்வளவு பேரு.</p> <p>சினிமாவுல போனா கிட்டப்பா, மகாலிங்கம் மாதிரி வந்திரலாம்னு சொன்னாங்க. என் நேரம்... படத்துல ஒரு வார்த்தை பேசுறதுக்கே சான்ஸ் கிடைக்காமப் போயிருச்சு. நடிக்க வந்த இடத்துல எப்படியோ பழக்கமாகி, டான்ஸ் ட்ரூப்ல உள்ள சரோஜானு ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன். குடும்பமும் சரிப்படலே. வாலிபத்துலே பாட்டு பாட்டுனு பெத்தவங்களைக் கூட கவனிக்காம அலைஞ்சேன். இன்னிக் குப் பாருங்க... கிழிஞ்ச காகிதத்துக்கு இருக்கிற மதிப்பு கூட எனக்குக் கிடையாது!’’</p> <p>இருவரும் மௌனமாக உட்கார்ந் தோம். நட்சத்திரம் ஒன்று வானில் எரிந்து மறைந்தது. <br />‘‘வள்ளி திருமணப் பாட்டு இப்பவும் ஞாபகமிருக்கா?’’ என்று கேட்டேன். கவிழ்ந்த தலை நிமிர்ந்து கொண்டது. ‘மேயாத மான்... புள்ளி மேவாத மான்’ என்ற பாடலை அவர் தனது நடுங்கும் குரலில் பாடத் துவங்கினார். பாட்டு பாதியில் உடைந்து சிதறியது. அவர் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். பிறகு, வேஷ்டியால் முகத்தைத் துடைத்த படி எழுந்து தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்.</p> <p>நடராசனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முதல் முறையாக ‘நடராச அண்ணே!’ என்று கூப்பிட்டேன். அவர் சைக்கிளை உருட்டியபடியே, ‘‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க தம்பி!’’ என்று சொல்லியபடி இருளில் போய் மறைந்தார்.</p> <p>காலம், ஆசைகளைக் கரையானைப் போல் தின்று தீர்த்துவிடுகிறது. ஜெயிக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்து கிடக்கின்றன. விருப்பம் தோற்றுப் போகும் போது கிடைப்பதைப் பற்றிக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார்கள். ஆனால், அடிமனதில் ஒரு பூரானைப் போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன. என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப் படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. <br />தமிழ் நாவல்களிலே சினிமா உலகின் நிஜத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரேயரு நாவல் மட்டுமே உள்ளது. அது அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.</p> <p>தமிழ் சினிமாவின் உண்மையான வரலாறு அந்த நாவலில்தான் உள்ளது. சினிமாவில் சந்தர்ப்பங்கள் நெருங்கிய மனிதர்களைக் கூட எப்படி எல்லாம் ஏமாற்றச் செய்கின்றன என்பதையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் எத்தனை பேரின் உழைப்பும் வாழ்க்கையும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த நாவல் முழுமையாக வெளிப்படுத்துகிறது.</p> <p>சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை <a href="http://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_850.html">‘புலிக் கலைஞன்’</a>. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது. நானே இருபது முறைக்கும் மேலாகப் படித்திருக்கிறேன். நடிக்க ஆசைப்பட்டு வரும் இளம் நண்பர்கள் பலருக்கும் படிக்கத் தந்திருக்கிறேன். படித்து முடித்த பலரும் பெருமூச்சுடன், வார்த்தைகள் அற்ற நிலையில் தலை கவிழ்ந்து கொள்வதையும் கண்டிருக்கிறேன்.</p> <p>சாகித்ய அகாதமி பரிசு பெற்ற அசோகமித்திரன் தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர். தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங் களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளன. ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.</p> <p>இவரது சிறுகதைகள் மொத்தமாகத் தொகுக்கப் பட்டு இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தற்போது இவர் எழுதிய கட்டுரைகள் இரண்டாயிரம் பக்க அளவில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், போன்றவை இவரது முக்கிய நாவல்கள். <br />அந்தக் கதை ஒரு அனுபவம். கண்ணாடிக் கோப்பை கை தவறி விழும்போது மனது கொள்ளும் பதைபதைப்பு போல உணர்ச்சி நிலை. கதையின் பிரதான பாத்திரம் காதர். அவ னது பாஷையில் சொல்வதானால் ‘டகர்பாயிட்’ காதர். அதாவது (டைகர் ஃபைட்) புலிச்சண்டை போடும் காதர்.</p> <p>புலி வேஷம் போடுவதில் அவன் சாமர்த்தியசாலி. ஒரு நாள் சினிமா கம்பெனி ஒன்றுக்கு நடிப்பதற்கு வேஷம் கேட்டுச் செல்கிறான் காதர். வேஷம் இல்லை என்று துரத்தப் படுகிறான்.</p> <p>அவனோ தனது திறமையைப் பார்த்துவிட்டு வேஷம் தருமாறு சொல்லியபடி கையோடு கொண்டு வந்திருந்த புலித் தலை முகமூடியை மாட்டிக்கொண்டு சட்டென நான்கு கால் பாய்ச்சலில் நாற்காலி மீது பாய்ந்து தாவி புலி போல குலை நடுங்கும் முறையில் கர்ஜனை செய்கிறான். நிஜப் புலியே நேரில் வந்தது போலிருக்கிறது. அவன் உடலில் புலியின் கோடுகள் தோன்றி மறைவது போலிருக்கிறது.</p> <p>மேஜை, நாற்காலி என தாவித் தாவி, கடைசியில் மின்சார விசிறி உயரத்துக்கு எகிறி தரையில் விழுகிறான். ஆவேசம் அடங்கி யது போல அவன் உடல் தளர் கிறது. புலி வேஷம் கலைந்து, ‘எனக்கு ஏதாவது ரோல் நடிக்க வாய்ப்பு தருவீர்களா?’ என்று மன்றாடும் மனிதனின் உருவமாக மாறுகிறது.</p> <p>சினிமா கம்பெனிக்காரர்களுக்கு அவனை என்ன செய்வதெனத் தெரியவில்லை. படப்பிடிப்பின்போது வேஷம் தருவதாகச் சொல்லி, சாப்பிட்டுப் போகும்படி இரண்டு ரூபாய் சில்லறையைத் தேடி எடுத்துத் தரு கிறார்கள். அவன் காசை வாங்க மறுத்துவிடு கிறான். சில மாதங்களுக்குப் பிறகு, வேஷம் தருவதற்காக அவனைத் தேடி கடிதம் போடும் போது, அவன் அந்த விலாசத்தில் இல்லை என்று கடிதம் திரும்பி விடுகிறது என முடிகிறது கதை.</p> <p>எங்கே போனான் அந்தப் புலிக் கலைஞன்? அவனது குடும்பம் என்ன ஆனது? சினிமாவில் நிஜ யானையே கோமாளிபோல டவுசர் அணிந்து பைக் ஓட்டுவதற்கும், பந்து போடுவதற்கும் பழக்கப்படுத்தப் பட்டுவிட்ட சூழலில் புலிக்கலைஞன் என்னதான் செய்வான்? புலியாக வாழ்வதற்குப் புலிகளா லேயே முடியவில்லை என்ற நிஜம் அவனுக்கு இந்நேரம் புரிந்திருக்குமா? வாழ்க்கையின் பற்சக்கரங்கள் கருணையற்று அவனை மென்று துப்பிவிட்டன. ஆனாலும், அவன் காலத்தின் மனசாட்சியைப் போல அழிவற்று இருந்துகொண்டே இருக்கிறான்.</p> <p>புலிக்கலைஞனைப் படிக்கும் போதெல்லாம் இது கற்பனையாக இருந்துவிடக் கூடாதா என்று மனது ஏங்குகிறது. ஆனால், நிஜம் புலியின் கண்களைப் போல கதையெங்கும் மினுங்கிக்கொண்டு இருக்கும்போது, எப்படி என்னை நானே ஏமாற்றிக் கொள்வது? <br />ஜெயித்தவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் இருக்கின்றன. தோற்றுப் போனவர்களின் கதையோ பெரும்பாலும் ஒன்று போலத்தான் இருக்கிறது. தோல்வி என்று அதை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. புறக்கணிப்பின் பெயர் தோல்வியா என்ன?</p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-31753739170608810672009-12-27T06:00:00.000-08:002010-02-15T03:17:04.901-08:00திரை - கு.ப.ரா<blockquote> <p><td class="content"><b>கு.ப.ரா</b></p> </blockquote> <p><span>தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது. <br /> <br /><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/SzdoeVgs7ZI/AAAAAAAAFXY/aS0sQSLw-Y0/s1600-h/modernart107.jpg"><img style="border-right-width: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto" title="modern-art-10" border="0" alt="modern-art-10" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/SzdofZiewMI/AAAAAAAAFXc/iE8CE4cyLUU/modernart10_thumb5.jpg?imgmax=800" width="388" height="278" /></a> </span></p> <p><span>ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். அவற்றில் அவ்வளவு ஆர்வத்துடனும் உணர்வுடனும் எழுதிவிட்டு, நேரில் வந்தபோது ஏன் அவள் அப்படி இருந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. தின்பண்டம், பலகாரம், காப்பி எல்லாம் மாமியார் கொண்டுவந்து வைத்தாள். தாம்பூலம் மடித்து வந்தது, அதை யார் மடித்தார்கள்? <br /> <br />மாடி அறையில் அவன் தனியாக எவ்வளவு நேரந்தான் அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது? பகலெல்லாம் எதிர்பார்த்தான்; இரகசியமாக வருவாளோ என்று இரவில்கூட வெகுநேரம் விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தான். <br /> <br />கடிதத்தில் வெகு துணிச்சலாக எழுதிவிட்டாள். நேரில் கண்டவுடனே வெட்கம் மேலிட்டு விட்டது போல் இருக்கிறது! ஒருவேளை அப்படி அசடுபோல் கடிதத்தில் எழுதி விட்டோமே என்று பயந்தே தன்னிடம் வராமல் இருந்தாளோ என்று எண்ணினான். <br /> <br />என்ன சமாதானம் செய்து கொண்டாலும் அவள், அவ்வளவு அருகில், தன்னிடம் வராமல் இருந்ததன் காரணம் அவனுக்கு விளங்கவே இல்லை. <br /> <br />இரண்டாவது நாள் இரவு எட்டு மணி. தொலைவில் கோவிலிருந்து திருவிழாக் கொட்டு முழக்குச் சத்தம் கேட்டது. தெருவில் பெண்கள் கும்பல் கும்பலாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாளரம் வழியாக உள்ளே விழுந்த வெண் நிலவு அவனது இருதயத்தை வலைபோட்டு வெளியே இழுப்பதுபோல இருந்தது. வெளியுலகத்து இன்பம் அவனை 'வா, வா' என்று அழைத்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. அந்த அழகு அவன் கண்களில் படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ராஜத்தின் மேல் இருந்தது. அவள் எழுதின கடிதங்களின் வாக்கியங்களும் அவளுடைய முகமும் கண்களுமே அவன் முன் நின்றன. <br /> <br />அன்றிராவாவது கட்டாயம் ராஜம் தன்னிடம் வருவாள் என்று எண்ணினான். நடுப்பகல் வேடிக்கையாக மைத்துனனைப் பார்த்து, "உன் அக்கா இந்த ஊரில்தானே இருக்கிறாள்?" என்று கேட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார்கூடக் கொஞ்சம் பதறிப் போய் ஏதோ குசுகுசுவென்று யாருடனோ பேசினாள். யாருடனோ என்ன, 'அவளுடன்' தான். ஆகையால் தன்னுடைய மனநிலையை ஒருவாறு அவர்கள் அறிந்திருந்ததால் அன்றிரவு கட்டாயம் வருவாள் என்றே எதிர் பார்த்தான். முதல் நாளிரவு பாவம், வெகுநேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிரமத்தால் தன்னை அறியாமல் தூங்கிப் போய்விட்டான். மறுநாள் காலையில் அவனுக்குக் கோபமும் துக்கமும் வந்து, காப்பி வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்றுகூட எண்ணினான். <br /> <br />கீழே வீணை மீட்டும் சத்தம் கேட்டதும் சற்று நேரத்திற்கெல்லாம் சங்கராபரணத்தில் "தாரி சூசுசுன்னதி நீது ப்ரியா" என்ற ஜாவளியை யாரோ பாடிக்கொண்டே வாசித்தார்கள். வேறு யார்? அவள்தான்! <br /> <br />"உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், உன் வழி நோக்கிக் கொண்டிருக்கிறாள்" என்று பொருள்படத் தொடங்கிய அந்தப்பாட்டு, படுக்கையறையின் அலங்காரத்தைக் கவர்ச்சி கரமாகச் சித்தரித்தது. இசையும் பாட்டுமாகக் கலந்து அவனது உள்ளத்தை உருக்கின. <br /> <br />"ஆகா! நல்ல ரசிகையாக அல்லவா இருக்கிறாள் ராஜம்! ஏன் இருக்க மாட்டாள் அவளுடைய கடிதங்களே அவ்வளவு கதையாக இருந்தனவே! என்ன வாசிப்பு, என்ன சாரீரம். இதற்கு மேற்பட்ட இன்பம் கிடையா... ஆனால் இதோடு அவளுடைய வாய் வார்த்தை ஒன்றை, என் முன்பு, என் <a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/Szdogqa7pDI/AAAAAAAAFXg/OqE6fT2Iygw/s1600-h/ku.ba.ra%5B40%5D.gif"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="ku.ba.ra" border="0" alt="ku.ba.ra" align="left" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/SzdohQA3Y7I/AAAAAAAAFXk/BBJi5V2d0Uk/ku.ba.ra_thumb%5B38%5D.gif?imgmax=800" width="215" height="255" /></a> பக்கத்தில், நான் கேட்டால்... இன்பத்தின் மின்னொளியைப் பாய்ச்சும் அவளுடைய கைபட்டதும் எழும்பும் இனிமை என்னுள் பாய்ந்தால் என்ன பேறு பெறுவேன்! ராஜம் வேண்டுமென்றுதான் இப்படி ஏக்கத் தீயிட்டு என் உள்ளத்தை வாட்டுகிறாளோ? எதற்காக இந்தச் சோதனை? என் கடிதங்களில் காணவில்லையா அவள், என் உள்ளத்தின் வேட்கையை? பெண்ணின் கொடுமை உன்னிடங்கூடத்தான் இருக்கிறது. உன் இங்கிதமும், புத்தியும், தேர்ச்சியும், ஈரமும் எங்கே? உன் கடிதங்களிலேயே நின்றுவிட்டனவே அவை! இல்லை, இது சரியன்று. ராஜம் உடனே வீணையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வா! அந்த வீணை எதற்கு உனக்கு? என் இருதய வீணையை மீட்டி வாசி, சுருதி கலைந்து கிடக்கிறேன் நான். குழைவற்றிருக்கிறேன். உன் இழைக்கும் விரல்களால், என்னைச் சுருதி கூட்டிச் சரி செய்து, உன் விரல் விந்தையால், விண்ணொலி கொள்ளச் செய்" என்று உணர்ச்சி மேலிட்டவனாய்த் தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தான் அவன். <br /> <br />"உன் காதலி வழி நோக்கிக் கொண்டு கத்திருக்கிறாள்" என்ற பல்லவி திரும்பத் திரும்ப ஓர் ஏக்கக் குரலாக வந்து அவன் காதில் தாக்கிற்று. அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து கீழே இறங்கிப் போனான். <br /> <br />முற்றத்திலிருந்த மாடிப்படியின் உச்சியில் நின்று கொண்டு கூடத்தைப் பார்த்தான். அங்கே கையில் வீணையுடன் உட்கார்ந்திந்தாள்! ராஜம் அல்ல! அவளுடைய தமக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவள் பிறந்த வீட்டில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அவள் ஒரு வருஷத்திற்கு முன்பு கணவனை இழந்தவள், பாவம்! அவள் கதை ஒரு சோக நாடகம். எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். நிரம்பக் கெட்டிக்காரி: அழகு என்றால் அப்படி; கணவன் ஒரு குடிகாரன்; ஈரல் வீங்கி இறந்தான். குடும்பம் என்று அவள் நடத்தி அறியாள். <br /> <br />அவளா வீணை வாசித்தது! ஏன் அப்படி வாசித்தாள்? வீட்டில் மற்ற எல்லோரும் எங்கே? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும் - ராஜம் கூட! ஒருவரும் வீட்டில் இல்லாதபொழுது, ஏன் இவள், அவன் கேட்கும்படி வீணையை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி உருக வேண்டும்? <br /> <br />திடீரென்று அவன் உலுக்கி விழுந்தான். ஒரு வேளை கடிதங்களெல்லாம் இவள் எழுதினவைதாமோ? ராஜத்தின் பெயரை வைத்து இவள்தான் அப்படி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட முறையில் எழுதினாளோ? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவ்வளவு எழுதினவள் இப்போது அருகில்கூட வராமல் இருப்பாளா? <br /> <br />மடமடவென்று அவன் மாடிப்படி இறங்கினான். வீணையும் கையுமாக உட்கார்ந்திருந்த சரசுவதி சட்டென்று வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்தாள், உள்ளே போய் மறைந்து கொள்ள. அதற்குள் அவன் அவள் அருகில் வந்துவிட்டான். ஒன்றும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றாள் சரசுவதி. <br /> <br />கூடத்து மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளது உருவம் நன்றாகத் தெரிந்தது. அவளது உடம்பும் உடையும் ஒரே வெள்ளையாக இருந்தன. தலைமயிரை அசிரத்தையாக முடிந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவளது முகம் காலை நேரத்துச் சந்திரன் போல வெளுத்த சோபையற்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்துக்கு முன்பு வாசித்த பாட்டால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கில் அதில் இருந்த சோகம் கொஞ்சம் மறைந்து சற்றே ஒளிர்ந்தது. <br /> <br />"நீதானா கடிதங்கள் எழுதினது?" என்று அவன் உடனே கேட்டான். <br /> <br />"இல்லை, - அவள்தான் எழுதினாள் - அதாவது" என்று ஒன்றும் மேலே சொல்ல முடியாமல் திகைத்தாள் சரசுவதி. <br /> <br />"உண்மையைச் சொல்லிவிடு!" <br /> <br />"அதாவது அவள் சொன்னாள் - நான் எழுதினேன்" என்று அவள் இழுத்தாள். <br /> <br />"நிஜமாக!" <br /> <br />"அவள் உள்ளம் சொல்லிற்று, நான் பார்த்து எழுதினேன்." <br /> <br />"எப்படித் தெரியும்?" <br /> <br />"எப்படியா -" என்று கேட்டுச் சற்றுத் தயங்கினாள் சரசுவதி. <br /> <br />பிறகு திடீரென்று அவள், "எப்படியா? நான் நினைத்தது போலத்தானே அவள் நினைத்திருக்க வேண்டும்? ஆகையால் அப்படியே எழுதிவிட்டேன்" எனச்சொல்லிவிட்டு, சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது போலவும் கதிகலங்கினவள் போலவும் நாலு புறமும் பார்த்தாள். <br /> <br />"மாப்பிள்ளை! நீங்கள் இங்கே நிற்கக்கூடாது. மாடிக்குப் போய்விடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள். குடி முழுகிப்போகும்" என்று கெஞ்சினாள் பிறகு. <br /> <br />அவன் தீர்மானமாக அங்கே நின்றான்.</span></td> </tr><tr><td style="padding-bottom: 10px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 10px" align="center"><!--<img src="BannerImages/bannersample.gif" border="0">--></td></tr><tr><td class="content"><span id="lblContent2">"என்னை ஏன் கூப்பிட்டாய்?" என்று ஏக்கப் பார்வையுடன் கேட்டான். <br /> <br />"கூப்பிட்டேனா! ஐயோ! இல்லையே! தெரியாமல் செய்திருந்தால் மன்னியுங்கள் - இல்லை - கூப்பிடவில்லை. பிசகு!" என்று சரசுவதி நிலை தவறினவள் போல் பதற்றத்துடன் பேசினாள். <br /> <br />"ராஜத்தின் மூலமாக -" என்று அவன் ஆரம்பித்தான். <br /> <br />"இல்லை - வேண்டாம் - எல்லாம் மறந்துவிடுங்கள் தவறு" <br /> <br />"எப்படி மறப்பது சரசுவதி? மறக்கும்படியாகவா எழுதியிருந்தாய் நீ?" <br /> <br />"மன்னியுங்கள்; பிசகு செய்துவிட்டேன் இப்படி ஆகுமென்று தெரியாது!" <br /> <br />"நான் கட்டை என்று எண்ணினாயா?" <br /> <br />"தப்பிதம், தப்பிதம்!" என்று வெறி பிடித்தவளைப் போல சொன்னாள். <br /> <br />"தப்பிதம் இல்லை; சரசுவதி, உண்மையை எழுதினாய், அல்லவா?" <br /> <br />அவள் குற்றவாளியைப்போல் நடுநடுங்கினாள், உணர்ச்சி மேலிட்டு அழலானாள். <br /> <br />"சரசுவதி! பயப்படாதே, அம்மா! நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லை. உண்மையாகவே கட்டைபோல இருந்த என்னைச் செப்பனிட்டு வாத்தியமாக்கி விட்டாய்!" <br /> <br />"இல்லை, இல்லை. அப்படிச் சொல்லாதேயுங்கள்! ராஜந்தான்! நீங்கள் அவள் சொத்து. அவள்தான் உங்களை உருக்க உரிமை பெற்றவள். அவள் எழுதியதாகவே எண்ணுங்கள்." <br /> <br />"இந்தப்பாட்டு -" <br /> <br />"அவள் பாடியதுதான். தேர்ச்சி இருந்தால், அறிந்திருந்தால், அவளே இப்படிப் பாடியிருப்பாள்." <br /> <br />"பாடியிருப்பாள்! - தேர்ச்சியிருந்தால்தானே? சரசுவதி, தைரியமாக நீதான் அவற்றை எழுதினது சொல்லேன், என்ன பிசகு?" <br /> <br />"ஐயோ, கூடாது." <br /> <br />"ஏன்?" <br /> <br />"நான் - நான் - எனக்குக் கை ஏது எழுத? எனக்கு வாய் ஏது - பாட? அவள்தான் என் கை, அவள் தான் என் வாய். அவள் மூலந்தான் எனக்கு வாழ்க்கை. அவள் மூலந்தான் என் உயிர்." <br /> <br />"இன்னும் வேறொன்றும் இல்லையா?" என்று அவன் இளகிக் கொண்டான். <br /> <br />"உண்டு - அதையும் சொல்ல வேண்டுமா என் வாய் திறந்து?" என்று சரசுவதி ஒருவிதமான அமைதியுடனும் ஏக்கத்துடனும் தன்னையே மறந்து கேட்டுவிட்டாள். <br /> <br />கோவிலுக்குப் போயிருந்தவர்கள் திரும்பி வந்து வாசற் கதவைத் தட்டினார்கள். <br /> <br />அவன் மாடிக்குப் போனான். அவள் உள்ளே போனாள். <br /> <br />இருவருக்கும் நடுவில் மறுபடியும் திரை வந்து கூடிற்று. <br /> <br />ஆனால் திரை என்ன அறியும்? <br /> <br />"ராஜம்! மாடிக்குப் போ!" என்றாள் சரசுவதி, சற்று நேரம் கழித்து.</span></p> <p><span>********</span></p> <p><span><span><strong>நன்றி</strong>:   விட்டல் ராவ் தொகுத்த 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' என்ற தொகுப்பிலிருந்து. வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 <br /></span></span></p> </td> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-42767470621814170162009-12-26T00:41:00.000-08:002010-02-15T03:17:04.912-08:00கயிற்றரவு - புதுமைப்பித்தன்<blockquote> <p><b>புதுமைப்பித்தன்</b></p> </blockquote> <p>"கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிட்டுத் தொங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல் காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது... ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு-பின்னம் விழாமல் இழுக்கப்பட்டு வரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கிறது. இல்லை, இல்லை. சிலந்திப்பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழைபோல நீண்டு கொண்டே வருகிறது. இன்று-நேற்று-நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக் கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும் சவுகரியக் கற்பனைதானே. நான் என்ற ஒரு கருத்து. அதனடியாகப் பிறந்த நானல்லாத பல என்ற பேத உணர்ச்சி, எனக்கு முன், எனக்குப் பின், என்ற நாமாக வக்கணையிட்டுப் போட்டுக் கொண்ட வரிகள்... இவை எல்லாம் எத்தனை தூரம் நிலைத்து நிற்கும்... நான் என நினைத்து, நினைக்கும், நினைக்கப்போகும் பல தனித் துளிகளின் கோவை செய்த நினைப்புத்தானே இந்த நாகரிகம்....கூட்டு வாழ்வு என்ற வாசனையையொட்டி, மனசு இழைத்து இழைத்துக் காட்டும் மணற் சிற்றில்தானே இந்த நாகரிகம்...மகா காலம் என்ற சிலந்தியின் அடிவயிற்றிலிருந்து பிறக்கும் ஜீவநதியின் ஓரத்தில் கட்டிவைத்த மணற்சிற்றில்....என்ன அழகான கற்பனை'' என்று உச்சிப்போதில் பனை மூட்டினடியில் குந்தி உட்கார்ந்திருந்த பரமசிவம் பிள்ளை நினைக்கலானார்.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/SzXMO8EiwAI/AAAAAAAAFV4/a7tyCOv3WyY/s1600-h/asstract-pictures%5B19%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="asstract-pictures" border="0" alt="asstract-pictures" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/SzXMPz1QUbI/AAAAAAAAFV8/pNYt-v3Ouxk/asstract-pictures_thumb%5B19%5D.jpg?imgmax=800" width="391" height="284" /></a></p> <p>துவர்த்து முண்டில் அவர் கட்டியிருந்த ஒற்றைப்பிரி முண்டாசுக்குத் தப்பிய சிகைத்தலையில் வெயில் தாக்கியது. குனிந்து குந்தியிருந்த பனைநிழல்வாக்கில் வெயில் சற்றுப் படாதபடி ஒரு பக்கமாக நகர்ந்தார். முள்ளும் முனையுமாக நின்ற ஊவாஞ்செடி, கருவேலங்கன்று பெருந்துடையில் குத்தியது. மறுபுறமாக விலகிக் கொண்டார். குனிந்து கவனித்துக் கொண்டிருந்தவருக்கு நினைவு பிரபஞ்ச யாத்திரை செய்ததென்றாலும், மலத்தில் மாண்ட குடல்புழு கண்ணில் விழுந்தது. 'மலப்பிறவி...பல ஜன்மம், பல மரணம். சீச்சீ...' மனம் குமட்ட வேறு ஒரு பனை மூட்டினடியில் போய் அமர்ந்தார். அது விடலிப் பனை. சற்றுத் தாழ்வாக இருந்ததனால் நிழலும் சுமாராக இருந்தது. முள் குத்தலும் இல்லை. ஆனால் சரல் குத்தியது. <br /> <br />மனமோ 'பிறவா நெறி' காட்டாமல் மீண்டும் மீண்டும் மலப்புழு மாதிரி உடற் கூறின் விளைவாக எழுந்த அவசரங்களின்பால் விழுந்து குமைந்தது. <br /> <br />'மனம் என்ற ஒன்று உடம்பைவிட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக்கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத்தானா... நான் பிறப்பதற்குமுன்... என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞையுண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப்பற்றியுள்ள சூழ்நிலைக்குத்தான் பிரக்ஞையுண்டா? <br /> <br />'இந்தப் பனை, இந்தப் பனை விடலியெல்லாம் என் பிரக்ஞைக்குள் பட்டது. இது முளைத்தது எனக்குத் தெரியும். இது முளைப்பதற்கு முன் இந்தக் கட்டாந்தரை, இந்த நிழல்கூட அற்று இருந்தது தெரியும். முந்திய ஆடிக் காற்றில் விழுந்ததே அந்தப் பனை. அது எங்கு நின்றது என்றுகூட நிதானிக்க முடியாமல் வரட்டுக் கட்டாந்தரையாகத்தானே கிடக்கிறது... நான் பிறப்பதற்கு முன்பு... பரமசிவம்பிள்ளை என்ற ஒருவன் விருப்பு வெறுப்பு, ஆசை, துயரம், கவலை, பொறுப்பு முதலியவற்றுடன் கூடிய ஒரு ஜந்து, வாழையடி வாழையாக வரும் விளையாட்டின் வித்தைகளை வாலாயமாகக் கற்று, அதற்கு இசைந்தோ <a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/SzXMQlw4FqI/AAAAAAAAFVw/nvbCcSna-3g/s1600-h/pudu5%5B29%5D.gif"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="pudu5" border="0" alt="pudu5" align="right" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/SzXMRm5G7vI/AAAAAAAAFV0/WX7fTfjYje0/pudu5_thumb%5B27%5D.gif?imgmax=800" width="203" height="252" /></a> இசையாமலோ விளையாடி... பிறகு பரமசிவம் என்ற பெயர் மட்டும் போகுமிடத்துக்கு வழி வைத்துவிட்டு, வந்த வழியைப் பார்த்துக்கொண்டோ அல்லது புது வழியிலோ போய்விடும் ஒரு தோற்றம்... ஒரு பொம்மலாட்டம்! பொம்மலாட்டம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? சூத்திரக் கயிறு இழுக்கிறதா அல்லது சூத்திரதாரன் உண்டா? நிச்சயமாக எப்படி இருக்கிறது அல்லது இல்லையென்று இரண்டில் ஒன்று சொல்லிவிட முடியும்? வருகிற வாசல், போகிற திசை இரண்டுந்தான் தெரிகிறது. வருகிறது ஒரு யோனித் துவாரம். போகிறது மற்றொரு யோனித் துவாரம்...பிரகிருதி என்ற அன்னையிடந்தானா? அல்லது கருவூரிலிருந்து கருவூருக்குச் செல்லும் பாதைதான் மனித வாழ்வா? முடிவில்லா வித்தையா? முறையில்லாத் தந்திரமா? <br /> <br />கைலாசபுரத்து ஆற்றங்கரை பனை மூட்டடியிலே உட்கார்ந்த பரமசிவம் பிள்ளையின் மனம் 'தான்' இல்லாத ஒரு காலத்தைச் சற்றுச் சிரமத்துடன் கற்பனை பண்ணத் தொடங்கியது. <br /> <br />சுமார் அரை நூற்றாண்டுக்குமுன் கைலாசபுரத்திலும் சூரியோதயம், சூரியாஸ்த மனம் தெரிந்து கொண்டுதானிருந்தது. அப்பொழுது ஆற்றங்கரைக்கு வரும் பாதையில் அத்தனை காரைக் கட்டிடங்கள் கிடையாது. புழுதி கிடையாது. சுகமான மருதமர நிழல் உண்டு. மாடு படுத்திருக்கும். மனித நாகரிகமே அந்தப் பிராந்தியத்தில் அப்பொழுது உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருந்த மாதிரிதான் தென்பட்டது. ஆனால் இயக்கம் இருந்து கொண்டுதானிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மடிந்து திங்கட்கிழமை பிறக்கிறது. எந்த வினாடிக்குள் என்று யாருக்காவது நிர் தாரணமாகச் சொல்ல முடியுமா? நாமாக முடுக்கிவிட்ட கெடிகாரம் சொல்லுவதும், நாம் சொல்லுவதும் ஒன்றுதான். ஞாயிற்றுக் கிழமையாகவே இருந்து கொண்டு வந்தது, திங்கட்கிழமை என்று நாம் சொல்லும் படியாகிவிட்ட ஒரு தன்மைபோல், நாகரிகம் அங்கே உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருப்பது போலத் தென்பட்டதும் ஒரு தோற்றந்தான். அது அப்படியே உட்கார்ந்து கொண்டே இருந்தால், இப்பொழுது காரைக் கட்டிடங்கள் எப்படி முளைத்திருக்கும்? மருத மரத்து நிழல் இன்னும் இருந்து கொண்டிருக்குமே! அப்பொழுது காற்றடித்தது; மழை பெய்தது; நதியில் வெள்ளம் வந்தது; பனை மரங்கள் சாய்ந்தன; விறகாயின. விட்டமாயின. விடலிகள் முளைத்தன. சூரியாஸ்தமனம், சூரியோதயம்... ஆற்றங்கரைப் படிக்கல்லில் அழகியநம்பியா பிள்ளை வேட்டி துவைப்பார். உட்கார்ந்திருந்து அழுக்குத் தேய்ப்பார். ஆற்றில் மூழ்கிக் குளிப்பார். நின்று திருநீறு அணிவார். அனுஷ்டானாதிகள் செய்வார். படிமீது மருதமர நிழல்கள் கவிந்திருக்கும். ஆனால் இப்போது படிக்கல் சரிந்துவிட்டது. பாதை உண்டு. மணலிலும் தெற்றுக்குத்தாக நிற்கும் படிகளை மறைத்தும் தண்ணீர் ஓடும். இப்பொழுது மருதமரம் இல்லை. வெயில் உண்டு; கல் வழுக்கும். <br /> <br />அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது; மீனாயிற்று; தவளையாயிற்று; வாலிழந்தது; குரங்காயிற்று; சமாதி நிலையிலே உறங்க லாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுக்கட்டாகக் காத்திருந்தது. <br /> <br />கைலாசபுரத்திலே மரங்கள் மொக்குவிட்டன. பூ மலர்ந்தது. தேன் வண்டுகள் போக்குவரத்து வைத்துக் கொண்டன. மரமும் சூலுற்றது. பிஞ்சுற்றது. <br /> <br />கருவூருக்கு வடக்கே உதாரபுரியிலே§யிருந்து ஹ¥ங்காரம் போன்ற அலறல் பிறந்தது. வேதனையிலேகுரல் பிறந்தது. கைக்கட்டை விரல்களை உள்மடக்கிப் பிடித்துக் கொண்டு தலைகுப்புற வந்து விழுந்தது ஒரு பிண்டம் - ஒரு ஜன்மம். பிரக்ஞை வந்தது. கட்டு மலம் போயிற்று... ஜன்மம் வீறிட்டது. கைகளையும் கால்களையும் சுண்டி உதறிக்கொண்டு அழுதது. கருவூர்க் கயிற்றைக் கத்தரித்து விட்டார்கள். தனி ஜன்மமாயிற்று. தனித் தன்மை பெற்றது. முலை சுவைத்தது. உறங்கியது. அழுதது.. முலை சுவைத்தது. <br /> <br />கைலாசபுரத்திலே மரங்கள் காய்த்தன. கொத்துக் கொத்தாக, பச்சை பச்சையாகக் காய்த்துத் தொங்கின. மரத்தையே தரையில் இழுத்துக் கிடத்திவிடும் போலிருந்தது அந்த வருஷத்துக் காய்ப்பு. <br /> <br />நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகிய நம்பியாபிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது. <br /> <br />''அப்பா யாரு?'' என்று கேட்கிறார் அழகிய நம்பியாபிள்ளை. <br /> <br />குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது. <br /> <br />"முட்டாப் பயலே, நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம், பரமசிவம் பிள்ளை!'' என்றார் அழகிய நம்பியா பிள்ளை.</span></td> </tr><tr><td style="padding-bottom: 10px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 10px" align="center"><!--<img src="BannerImages/bannersample.gif" border="0">--></td></tr><tr><td class="content"><span id="lblContent2">''அப்பா யாரு?'' என்றார் அழகிய நம்பியா பிள்ளை. <br /> <br />குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது. <br /> <br />''பரமசிவம் யாரு?'' என்று கேட்டார் அழகிய நம்பியாபிள்ளை. <br /> <br />''நான்'' எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை. <br /> <br />''போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!'' எனக் குழந்தையை மெய்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார். <br /> <br />குழந்தை பரமசிவமாகி நான்-நீ-அவன் என்ற பேதாபேதப் பிரக்ஞையுடன் வாழையடி வாழையாக இருந்துவரும் விளையாட்டைக் கற்றுகொள்ள ஆரம்பித்தது. அம்மா-அப்பா-தெரு-ஊர் எனப் பரிச்சய விலாசம் படிப்படியாக வளர்ந்தது. வாத்தியார், பிரம்படி, பிறகு கல்வி, சில்லறை அறிவு, பிரம்புக் கொட்டடியிலும் மற்றப்படி இனிக்கின்ற, அவசியமான, பிரியமான ஞானச் சரக்குகளை வேற்று அங்காடிகளிலும் பரமசிவம் பெற்றார். சீனி இனிக்கும் - நெருப்பு சுடும் - அப்பா கோபிப்பார் - கடவுள் மன்னிக்க மாட்டார் என்ற நேர் அனுபவ, அனுபவ சூன்யக் கருத்துக்கள் எல்லாம் நான்-என்னுடைய என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் கட்டிடம் அமைக்க ஆரம்பித்தது. பள்ளிக்கூடம்-பரமசிவம்-அடி-உதை-பலம்-பலவீனம்-சடுகுடு முதலிய பாதைகளில் செல்ல, கிழமைகள் என்ற கால அமைதி தாரளமாக வசதி செய்து கொடுத்தது. <br /> <br />அழகிய நம்பியா பிள்ளையின் வேலைகளை மேற்கொள்ளும் கட்டம் வந்தது. பரமசிவம், பரமசிவம் பிள்ளையானார். உடல் வாட்ட சாட்டமாக அமைந்தது. உடம்பில் வலு, நெஞ்சில் உரம், மனசில் நம்பிக்கை, தைரியம், வீட்டில் சமைத்துப் போட, பிறகு வம்ச விருத்திக் களமாக்கிக் கொள்ள ஒரு யவுதி... உச்சுவாச நிச்சுவாசத்தைவிட என்ன சுகம், போகம். உடலில் உள்ள வலு வீரியமாகப் பெருக்கெடுத்து ஜீவ தாதுக்களை அள்ளி விசிறியது. இப்பொழுது கிழமைக்கும் வாரத்துக்கும் மாதத்துக்கும் ஓடும் வேகந்தான் என்ன? கஷ்டம்-வருத்தம்-கசப்பு-ஏமாற்றம்-கடன் வாங்கி அதற்குள் ஐந்து வருஷங்களா?.. என்ன ஓட்டமாக ஓடுகிறது. மணல்கூண்டு சரிகையில் கடைசி மணல் பொடி விரைந்து ஓடி வருவது மாதிரி என்ன வேகம்? நிஜமாகத் திங்களும் செவ்வாய்களும் இப்போதுதான் இவ்வளவு வேகமாக ஓடுகின்றனவா?... அல்லது நான்தான் ஓடுகிறேனோ? நான் யார்? இந்த உடம்பா? தூங்கும்போது, பிறக்குமுன் இந்த நான் எங்கிருந்தது? இந்த நான்தான் ஓடுகிறதா? பெட்டியடிக் கணக்கு. இடுப்பொடிக்கும் உழைப்பு, குனிந்து குனிந்து இன்னொருவன் பணமூட்டைக்குத் தலையை அண்டை கொடுத்து கழுத்தே சுளுக்கிக் கொண்டதே. முதுகிலே கூன் விழுந்துவிட்டது. பிறனுக்கு நலம் பார்த்து நாலு காசு சேர்த்து வைத்துக் கண்ணிலும் வெள்ளெழுத்து. வீட்டிலே பூனை படுத்திருக்கும். பொய்மை நடமாடும். வறுமையும் ஆங்கே பெற்றெடுத்த பிள்ளையுடன் வட்டமிட்டுக் கைகோத்து விளையாடும். மனையாளுக்கு கண்ணிலே இருந்த அழகு - ஆளைத் தூண்டிவிட்டு இழுக்கும் அந்த அழகு எங்கே போயிற்று? கையில் ஏன் இந்த வறட்சி? வயலோ ஒத்தி.. வீடோ படிப்படியாக மூலப் பிரகிருதியோடு லயமாகிவிட யோக சாதனம் செய்கிறது. விட்டமற்றுப் போனால் வீடும் வெளியாகும்... அப்பொழுது அழகிய நம்பியா பிள்ளை எங்கே? அவர் மகன் பரமசிவம் எங்கே? எல்லாம் பரம ஒடுக்கத்திலே மறைந்துவிடும். எத்தனை துன்பம், எத்தனை நம்பிக்கைக்காக எத்தனை ஏமாற்று, எத்தனை கடவுள்கள்? வாய்க்கு ருசி கொடுக்க ஓரு கடவுள்... வயலுக்கு நீர் பாய்ச்ச ஒரு கடவுள்... வியாச்சியம் ஜயிக்க, சோசியம் பலிக்க, அப்புறம் நீடித்து, நிசமாக உண்மையில் பக்தியாய்க் கும்பிட... எத்தனையடா எத்தனை? நான் தோன்றியபின் எனக்கு என்று கடவுள்கள் தோன்றினார்கள்? எனக்கே இத்தனையென்றால் என்னைப் போன்ற அனந்தகோடி உயிர்-உடம்புகள் கொண்ட ஜீவ நதியில் எத்தனை? ஆற்று மணலைக்கூட எண்ணிவிடலாம். இந்தக் கடவுளர்களை? ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனைக் கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்கள் மடிந்து விடுகிறார்களா? 'நான்' மடிந்து விடுகிறதா? அப்பொழுது ஒருவேளை அவர்களும் இந்த நானோடு போய்விடக்கூடும்... இந்த நானையும் மீறித் தங்கிவிடுகிற கடவுளர்களும் உண்டு. அவர்கள்தான் மனம் என்ற ஒன்று காலவெள்ளத்துக்கு அருகே அண்டிவிளையாடும் மணல் வீட்டைப் பந்தப்படுத்த முயலும் சல்லி வேர்கள்... பரமசிவம், 'பரமசிவம்! உனக்கு ஏதுக்கடா இந்தச் சள்ளை! அதோ, காலடியில் பாம்புடா, பாம்பு... <br /> <br />கயிற்றரவு!' <br /> <br />காலம் ஒரு கயிற்றரவு? <br /> <br />பரமசிவம் பிள்ளையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரையில் கிடத்திவிட்டார்கள். பாம்பு கடித்தால் பிழைக்க முடியுமா? போகிறவருக்குப் புண்ணியம் சேர்க்கத் தலைமாட்டில் உட்கார்ந்து யாரோ தேவாரம் படித்தார்கள். பரமசிவம்பிள்ள ஏறிட்டுப் பார்த்து சிரமத்துடன், 'தூரத்தில் இருந்து படித்தால் கேட்பதற்குச் சுகமாக இருக்கும், பக்கத்திலிருந்தால் காதில் வண்டு குடைகிற மாதிரி தொந்தரவாக இருக்கிறது' என்றார். <br /> <br />கண்ணை முழுவதும் திறக்காமலும் முழுவதும் மூடாமலும் அரைக்கண் போட்டபடி உலகைப் பார்ப்பதிலே அவருக்கு ஓர் ஆனந்தம் இருந்தது. நிம்மதி இருக்கிறது. தூரத்திலே தேவாரம்... தண்ணீரடியில் முங்கி உட்கார்ந்திருக்கும்போது கேட்கும் தூரத்து ரீங்காரம் மாதிரி சுகமாக இருக்கிறது. அதோ தெரிகிறது என் புஸ்தகம்... என்னுடைய கால் கட்டைவிரல்தான்... ஸ்மரணையில் கால் இருக்கிற மாதிரி தெரியவில்லையே... கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் போதுமா? ஸ்மரணைக்குப் புலனாக வேண்டாமா? கால் கட்டைவிரல் ரொம்ப தூரத்திலிருக்கிறதோ... இரண்டு மைல் தூரத்தில்... சீ எட்டு மைலாவது இருக்க வேண்டும்... அதோ அந்த புஸ்தகம். இப்பொழுது அதுவும் தூரத்தில் தெரிகிறதோ... அதில் என்ன எழுதி வைத்திருந்தேன்... கணக்கா... சுவடியா? அழகியநம்பியைக் கூப்பிட்டுக் கேட்கவேண்டும். எது இருந்தால்தான் என்ன? நாம் செத்துப்போனால் இந்தக் கால் கட்டைவிரல் சாம்பலாகத்தானே... அது எவ்வளவு நேரம் எனக்குத் தெரியப்போகிறதோ... கொஞ்சம் நிம்மதியாகப் பார்த்துக் கொண்டே இருப்போமா? அதுவும் சுகமாகத்தானிருக்கிறது. கணணை மூடினால்... அப்பா என்ன சுகம்... மூச்சு நின்றது. கைக்கட்டைவிரல்கள் உள்வாங்கின. கட்டுமலம் வந்தது. நான் சுழன்றது. ஸ்மரணை சுழன்றது. உயிர் - ஆமாம்; உயிரும் அகன்றது... அன்று கருவூரிலே உருவற்று நிலைத்த பிண்டம் இன்று உருவுடன் வதங்கிக் கிடந்தது. <br /> <br />சாம்பல் காற்றோடு போச்சு; பெயர் பெயரோடு போச்சு.. மனிதமனம் இம்மாதிரி அனந்தகோடி கூடுகளைக் கட்டிக் கட்டி விளையாடியது. கைலாசபுரத்து மருதமரம் நிழல் கொடுத்தது. மரம் பூத்துக் காய்த்தது. பழுத்தது... ஆற்றில் தண்ணீர் மணலிலும் படியிலும் தவழ்ந்து ஓடியது. என்ன? காலவெள்ளம் தேக்கற்று ஓடிக் கொண்டே இருந்தது. அதிலே வரையில்லை, வரம்பில்லை, கோடுகூடத் தெரியவில்லை. கருவூரிலானாலென்ன? காட்டூரிலானாலென்ன? சமாதியோ பிரக்ஞையோ எதுவானாலென்ன? <br /> <br />நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் . செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும் - வெறும் கயிற்றரவு! <br /> <br />பரமசிவம் பிள்ளை எங்கே?</span></td></p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-3932002285948604342009-12-25T03:12:00.000-08:002010-02-15T03:17:04.924-08:00வெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி<blockquote> <p><td class="content"><b>  ந. பிச்சமூர்த்தி</b></p> </blockquote> <p><span>அதுவரையில் தீர்மானத்துடன் வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை நாட்கள்தான் ஓட்டமுடியும்? நடக்கும் போதெல்லாம் செருப்பின் கீழ் அட்டை மடித்துக் கொள்ளும். அப்பொழுது ஒட்டகையின் முதுகின்மேல் நடப்பது போன்ற வேதனையும் கஷ்டத்தையும் அடைந்தேன். நல்லவேளை அன்று மனதே உத்தரவு கொடுத்துவிட்டது.</span></p> <p><span><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/SzSeIr_k36I/AAAAAAAAFU8/dWdx9suw98c/s1600-h/100_7089_PS01%5B17%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px" title="100_7089_PS01" border="0" alt="100_7089_PS01" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/SzSeKFBOvDI/AAAAAAAAFVE/KTVlWelDTeQ/100_7089_PS01_thumb%5B15%5D.jpg?imgmax=800" width="375" height="245" /></a> <br />விர்ரென்று கடைத்தெருவுக்குச் சென்று நவீன செருப்புக் கடைக்குள் நுழைந்தேன். கடைக்காரப் பையன் விதவிதமான செருப்பு, பூட்ஸ¤ தினுசுகளை என் முன் கொணர்ந்து பரப்பினான். அதையும் இதையும் புரட்டிப் பார்த்து தோல் வந்த கப்பல், கப்பல் கிளம்பிய நாடு, நாட்டின் கால்நடை வளம் இவ்வளவையும்பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு முடிவாக ஒரு ஜோடி ஸ்லிப்பர் ஆறரை ரூபாய்க்கு வாங்கினேன். <br /> <br />சிவப்பு ஸ்லிப்பர், மஞ்சள்நூல் தையல், மேல்புறத்தில் தாமரைப்பூ - இவ்வளவு லட்சணங்களுமுள்ள ஸ்லிப்பர் என் சொத்தான உடனே அதை அனுபவிக்காமல் இருக்க முடியுமா? <br /> <br />காலில் மாட்டிக் கொண்டே வீட்டை நோக்கி திரும்பினேன். பட்டென்று ஸ்லிப்பர் கால் அடிபாகத்தில் படுவதினால் பின் பராக் யாரோ சொல்லிக் கொண்டு வருவது போலிருந்தது. அரசர்களுக்கு முன்னால் பராக் சொல்லிக் கொண்டு வருவார்களாமே, எனக்குப் பின்னால் சொன்னால் போதாதா? ஒவ்வொரு ஒசையைக் கேட்டதும் என் மனது கம்பீரமாய் விரிந்தது. புதுச்செருப்பு வாங்கினால் புது மனிதனல்லவா? வானத்தைத் தொட்டுவிடக்கூடிய உன்னதமும் தெம்பும் நெஞ்சில் குமிழியிட்டன. முன்புறம் மார்பைத் தள்ளி தெருவெல்லாம் நடந்து வந்தேன். <br /> <br />வீட்டை அடைந்ததும் ஸ்லிப்பரைத் துடைத்து சுவரில் மாட்டினேனோ இல்லையோ? ஒரு நினைப்பு வந்தது. பழைய செருப்பு இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். இனி அதை எடுத்து எறிந்து விடலாமா என்று யோசித்தேன். <br /> <br />இவ்வளவையும் என் மனைவி கவனித்து வந்தாள் என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து தான் விளங்கிற்று. <br /> <br />''நான் கிழவியாகி விட்டால் என்னையும் தள்ளித்தான் விடுவார்கள், இல்லையா? கேள்வி சுருக்கென்று மனதில் தைத்தது. காலுடன் காலாய் எவ்வளவு கஷ்ட சுகங்களில் அது என்னை தாங்கி வந்திருக்கிறது. அவ்வளவு ஈரமில்லாமல் எடுத்தெறியப் போகலாமா? என் மனதில் இரக்கமில்லை என்று நினைக்க நான் விரும்பவில்லை. ஆகையால் என் யோசனையை கைவிட்டுவிட்டு, என் ஜோலியைப் பார்க்கப் போனேன். புலனெல்லாம் ஒடுங்கித் திண்ணை மூலையில் குந்தியிருக்கும் கிழவியைப் போல் செருப்பு மூலையிலே கிடந்தது. இளைய தாரத்துடன் உலாவப்போகும் எழுச்சியுடன் புது ஸ்லிப்பர் மாட்டிக்கொண்டு ஆபீசுக்குப் போய் திரும்பினேன். <br /> <br /> வீட்டிற்கு வந்து உட்கார்ந்த ஐந்து நிமிஷத்திற்குள்ளாகவே, ஒரு தந்திக் கிடைத்தது. உயிருக்குயிரான நண்பன் காலமாகி விட்டதாக அதில் கண்டிருந்தது. என்னால் செய்தியை நம்ப முடியவில்லை. நானும் தந்தியில் குறிப்பிட்டிருந்த நண்பனும் ஒரு வாரத்திற்கு முந்தி தான் ஒரு கல்யாணத்திற்கு சேர்ந்து போயிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம். பகலொளியும் இரவு நிலாவும் படுக்கப் போகும் வரையில் பேசித் தீர்த்தோம். சேர்ந்தே தூங்கினோ<a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/SzSeqBw8s0I/AAAAAAAAFVI/bn1ol7mwfn8/s1600-h/pichchamurthy2%5B23%5D.gif"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="pichchamurthy2" border="0" alt="pichchamurthy2" align="left" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/SzSereOj01I/AAAAAAAAFVM/fGNO3NiL7S4/pichchamurthy2_thumb%5B21%5D.gif?imgmax=800" width="156" height="221" /></a>ம். நண்பன் உடம்பிலோ மனத்திலோ எவ்விதமான நோயும் தென்படவில்லை. பின் செய்தியை எப்படி நம்பமுடியும்? ஆனால் பொய்த் தந்தி கொடுக்கக்கூடிய விஷமிகள் யாரும் எனக்கோ என் நண்பனுக்கோ இல்லை. பின் செய்தியை எப்படி நம்பாமலிருப்பது? குழப்பம். மனது தெளியவில்லை. மறுநாள் மற்றொரு கடிதம் வந்தது. வேறொரு நண்பன் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு சந்தேகத்திற்கே இடத்தைக் காணோம். <br /> <br />கிராமபோன் தட்டு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே சாவி குறைவினால் பிறக்கும் அவ ஒலியைப்போல் என் நெஞ்சின் துயர் எழுந்தது. தாங்கமாட்டாமல் விம்மி விம்மி அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று யார் கண்டது? <br /> <br />எதிர்வீட்டுப் பையனொருவன் கோவில் மணி கணீரென்று அடிப்பதுபோல், <br /> <br />''ஆண்டாண்டுதோறும் அழுதுபுரண்டாலும் <br />மாண்டார் வருவரோ மாநிலத்தில்'' <br /> <br />என்று பாடினான். <br /> <br />என் அழுகை தானே நின்றுவிட்டது. இனிச் செய்ய வேண்டியதைப் பற்றிய நினைப்பு எழுந்தது. சாயங்கால ரயிலில் நண்பன் ஊருக்குப் போய், அவன் வீட்டிலுள்ளவர்களுக்காவது தேறுதல் சொல்லிவர வேண்டியது என் கடமை என உணர்ந்தேன். <br /> <br />மாலை ஐந்து மணி ரயிலுக்கு ஒரு பாடியையும் ஜிப்பாவையும் மாட்டிக் கொண்டு கிளம்பி வீட்டு ரேழிக்கு வந்தேன். சுவரில் புது ஸ்லிப்பர் அசட்டுப் பெண்ணைப் போல் இளித்துக் கொண்டிருந்தது. ஸ்லிப்பரை எடுத்துக் காலில் மாட்டப் போனேன். <br /> <br />''கல்யாணத்துக்குப் போகிறாயா குஷாலாக?'' என்று மூலையில் இந்த பழஞ் செருப்பு முனகுவது போல் தோன்றிற்று. கொஞ்சம் தயங்கினேன். காலையில் புது ஸ்லிப்பர் வந்தது. மாலையில் செய்தி வந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று அறிவு சொன்ன போதிலும் நெஞ்சு கேட்கவில்லை. <br /> <br />அதற்குள் என் ஆபீஸ் நண்பன் ஒருவன் வந்தான். ''என்ன யோசித்துக் கொண்டு ரேழியில் நிற்கிறாய்?'' <br /> <br />''ஒன்றுமில்லை'' <br /> <br />''நான் இதோ ரயிலுக்குப் போகிறேன். மத்தியான்னம் இடி போன்ற அந்தச் செய்தி வந்தது. கடவுள் என்கிறார்களே அது எனக்கு விளங்கவில்லை. சரகு உதிர்வதில் வண்டு வருந்துவதில்லை. தளிரும் பூவும் உதிர்ந்து தரையில் கிடக்கும்பொழுது எவ்வளவு வண்டுகளும் தேனீக்களும் அவைகளை மொய்த்துக் கொண்டு புலம்புகின்றன!'' <br /> <br />''எனக்கும் செய்தி வந்தது. என் நெஞ்சே சூன்யமாகி விட்டது. இதோ நானும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.'' <br /> <br />''பின்னே கிளம்பு'' <br /> <br />கிளம்பு என்று சொன்னபிறகு கூட நான் கொஞ்சம் தயங்கினேன். <br /> <br />''என்ன யோசனை?'' <br /> <br />மனதை வேரோடு பிடுங்கினது போல் நிலைகுலையச் செய்யும் துயரம் மூண்டிருக்கும் வேளையில் ஸ்லிப்பர் போட்டுக் கொள்ளலாமா கூடாதா என்று யோசிக்கலாமா என்ற நினைப்பு வரவும் மூலையில் கிடந்த பழஞ்செருப்பு அடக்கத்துடன் கண் காட்டிற்று. அதைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன். <br /> <br />ரயில்வே ஸ்டேஷன் போகும் வரையில் ஒரே யோசனை. புது ஸ்லிப்பர் வந்தது நன்மைக்கன்று. ஒருநாளைக்குள் ஒரு உயிரைக் கொண்டு போய்விட்டதே; அதை மாதக்கணக்கில் வைத்துக் கொண்டால் என்னவெல்லாம் நேரிடும் அல்லது என்னதான் செய்யக்கூடாது? இதே யோசனையில் மெளனமாக இருந்தேன். <br /> <br />ரயில்வே ஸ்டேஷன் மாடிப்படி ஏறும்பொழுது ஒருதரம் செருப்பின் அடி அட்டை பின்புறமாக மடித்துக் கொண்டது. <br /> <br />''என்ன தடுமாறுகிறாயே?'' என்றான் நண்பன்.</span></td> </tr><tr><td style="padding-bottom: 10px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 10px" align="center"><!--<img src="BannerImages/bannersample.gif" border="0">--></td></tr><tr><td class="content"><span id="lblContent2">''ஒன்றுமில்லை. செருப்பு அடி அட்டை கிழிந்துபோய் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றும் போயின. அட்டை மடித்துக் கொண்டு இடறிவிட்டது. நல்லவேளை விழாமல் தப்பித்தேன்.'' <br /> <br />பிறகு நாங்கள் பேசவில்லை. என் மனது மறுபடியும் ஓடத் துவங்கி விட்டது - கிழிந்த செருப்புகளைப் பற்றிய ஞாபகங்கள். <br /> <br />ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து உட்கார்ந்தோம். ரயில் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. நண்பன் பிளாட்பாரத்தில் நிலவின் கீழ் வேஷ்டியை விரித்துப் படுத்துக் கொண்டான். எனக்குப் படுக்கத் தோன்றவில்லை. உம்மென்று... உட்கார்ந்திருந்தேன்.. சிறிது நேரத்திற்கெல்லாம் திடீரென்று யோசனை ஒன்று முளைத்தது. <br /> <br />''உன்னிடத்தில் ஒரு ஹூக் இருக்கிறதா?'' என்றேன். <br /> <br />''எதற்கு?'' <br /> <br />''இந்த இரண்டு அட்டைகளையும் சேர்த்து ஹூக் போட்டுவிட்டால் இந்த மாதிரி அட்டை மடியாது.'' <br /> <br />''இதென்ன, செருப்பையே கடவுளாக்கித் தியானம் செய்கிறாயே - தூக்கி எறிந்தாலும் போச்சு, தைக்கச் சொன்னாலும் போச்சு.'' <br /> <br />பேச்சு நியாயமாகத்தான் பட்டது சரிதான் என்றேன். ஆனால் மனதில் பல மட்டங்கள் இருக்கின்றன என்பதும், மேல் மட்டம் பேசினால் அடிமட்டம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது இல்லை என்றும் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். <br /> <br />கால் மணிநேரத்திற்குப் பிறகு என் கை என்னை அறியாமலேயே ஒரு செருப்பை எடுத்துவிட்டது. என் கண்கள் இருள் குகை ஒன்றைக் காணும் ஆச்சரியத்துடன் அச்செருப்பின் பிளந்த அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. மன உலகத்தில் ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மனத்தின் நடுமட்டம்...'' அதெல்லாம் சரிதான்.. நீ போகும் காரியமென்ன? நாளைப்போய் மெனக்கட்டு செருப்பைத் தைத்துவிடுவாயா? முடியுமா?'' மனத்தின் மேல் மட்டம்; ''அதற்கென்ன, வேண்டாமே. செருப்பையே எறிந்துவிட்டால் போகிறது. சொத்தே போய்விடுமா? நஷ்டம் தாங்காதா?'' <br /> <br />நடுமட்டம் ''அதுவா போச்சு! வீணடிக்கவே கூடாது அப்படியாவது பணம் பெருத்த ஆளா? சாதாரணமாக தோட்டத்திற்குப் போவதற்கும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கும் உபயோகப்படுமே, மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள் என்று பாட்டி சொல்லவில்லையா?'' <br /> <br />படுத்திருந்த நண்பன் எழுந்து கண்கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டே, ''நீ என்ன யோகியா, கருமியா, தெரியவில்லையே! யோகியைப் போல ஒரே எண்ணத்தில் லயித்திருக்கிறாயே... ஆனால் லயித்திருக்கும் விஷயமோ சிறியது. கருமியைப் போல் கிழிந்த செருப்பைக்கூட தடவிப் பார்க்கிறாயே'' என்றான். <br /> <br />புண்ணில் நெருஞ்சி முள் குத்தியது போலிருந்தது. சிவனே என்று மன ஓட்டத்தை அடக்கி, மல்லாந்து படுத்துக் கொண்டேன். <br /> <br />சிறிது நேரத்திற்கெல்லாம் ரயில் வந்தது. நானும் நண்பனும் ஏறிக் கண்ணயர்ந்தோம். <br /> <br />காலைக் கரிச்சான் குரல் துயிலைக் கலைத்தது. கண் விழித்து வெளியே தலை நீட்டிப் பார்த்தேன். வானத்தின் கிழக்கு மைதானத்தில் செம்மறி ஆட்டு மந்தைப்போல் மேகத் துணுக்குகள் விரைந்து கொண்டிருந்தன. இருளில் வினோதமான தேத்தாங் கொட்டையைப் போட்டது போல் ஒளி தெளிந்து மேலே தோன்றிற்று. அடுத்த ஸ்டேஷன் நாங்கள் இறங்க வேண்டிய இடம். நண்பன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தான். <br /> <br />மனதில் இரண்டு நிலைகள்தான் இருப்பதாக நினைத்த நான் மூன்றாவது நிலை ஒன்றிருப்பதை அப்பொழுது உணர்ந்தேன். பரந்தவெளி உலகின் காலை அமைதியில் உள்ளுலகினின்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. <br /> <br />''நீ வரும் வேலை நினைவிருக்கிறதா? உடம்பு உயிர் என்றெல்லாம் சொத்துரிமை கொண் டாடுகிறாயே அது சரியா? யோசித்துப் பார், நேற்றிருந்தான், இன்றிறந்தான். பழுத்தும் உதிரலாம். பழுக்காதும் விழலாம். பழுக்காது விழுந்த வேதனை - உயிரின் விசித்திர விபரீதப் போக்கல்லவா உன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வெறும் செருப்பு ஒரு பொருளா? அதைப்பற்றி யோசிக்க அவ்வளவு பிராணனை செலவழிப்பது நியாயமா?'' <br /> <br />இக்குரல் பேசியபொழுது உள்ளத்திலே பெரிய அமைதி நிலவியிருந்தது. மாறுபட்ட மன அலைகளே காணோம். ஏறிவரும் ஒளியையே நோக்கிக் கொண்டிருந்தேன். மனத்தில் அசைவே இல்லை. அதற்கு ஏற்றாற்போல, அசைந்து கொண்டிருந்த ரயிலும் ஸ்டேஷனை அடைந்து நின்றுவிட்டது. <br /> <br />நண்பனை எழுப்பி வண்டியை விட்டு இறங்கி மாட்டுவண்டியில் ஏறி நண்பன் வீடு சென்றோம். பச்சைக் குழந்தைகள் - சூதுவாதற்ற மனைவி - இவர்களை கொழுக் கொம்பற்றுத் துடிக்கும் கொடி போல பரிதவிக்கவிட்டுச் சென்ற ஒரு குடும்பத் தலைவன் - வயது அதிகம் ஆகாதவன் - எதிர்பாராமல் திடீரென்று காலகதி அடைந்தவன் - அவன் மறைந்துவிட்ட பிறகு எவ்விதமான ஆறுதல்தான் சொல்ல முடியும்? வாய் திறந்து வார்த்தைகளைக் கொட்டாமல் பகல் முழுதும் கழித்தோம். <br /> <br />மத்தியானம் மணி மூன்றிருக்கும். ஊருக்குத் திரும்புவதற்காக வண்டி நிற்கும் இடத்திற்குக் கிளம்பினோம். <br /> <br />சரியான வெயில். மூன்று என்றாலும் தலைவெடிக்கிறது. பொடி ஒட்டுகிறது. நான் காலை மாற்றி மாற்றி நொண்டி போல் தத்தித்தத்தி நடந்தேன். <br /> <br />அப்பொழுதுதான் என்னுடன் கூடவந்த நண்பன் என் காலைக் கவனித்தான். <br /> <br />''செருப்பெங்கே? இந்த வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தாயா?'' என்றான். <br /> <br />''அதெல்லாம் மறக்கவில்லை.'' <br /> <br />''அப்படி என்றால் வேண்டுமென்றே வைத்துவிட்டு வந்தாயா?'' <br /> <br />''அதுவுமில்லை'' <br /> <br />''பின்?'' <br /> <br />'' ஒரு நிமிஷம் தயங்கினேன். <br /> <br />''பின் செருப்பெங்கே?'' <br /> <br />''ரயிலிலேயே வைத்துவிட்டேன்.'' <br /> <br />''மறந்துவிட்டாயா?'' <br /> <br />''இல்லை. நினைப்புடனேயே விட்டுவிட்டேன்.'' <br /> <br />இரவில் நான் செருப்பு மயமாய் இருந்ததையும் இப்பொழுது செருப்பையே விட்டு விட்டதையும் பற்றியோ என்னமோ நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தால் வாய் திறந்து ஒருவினாடி நின்றான். பிறகு என்னவென்று கேட்டான். <br /> <br />“கிழியாத செருப்பைக்கூட அவன் திடீரென்று விட்டுச் சென்றுவிடவில்லையா? ஒரு ஒட்டைச் செருப்பைப்பற்றி பெரிய துயரத்தின் முன்னிலையிலே என் மனது அவ்வளவு குழப்பலாமா என்ற எண்ணம் உதித்தது.” <br /> <br />''எப்பொழுது?'' <br /> <br />''இந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்ததும்!'' <br /> <br />''பிறகு?'' <br /> <br />''ரயிலை விட்டு இறங்கியபொழுது செருப்பை மாட்டிக் கொள்ளாமல் இறங்கிவிட்டேன். <br />அவ்வளவுதான்.'' <br /> <br />நண்பன் பேசவில்லை. ஒரு வினாடி கழிந்தது. <br /> <br />''ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் வழிப்போக்கன் எப்பொழுதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எரியலாம். யாரால் தடுக்க முடியும்?'' என்றான். <br /></span></p> Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com1