நகுலன் நன்றி: 'ழ' இலக்கிய இதழ்
நான்
    
எனக்கு யாருமில்லை     
நான்     
கூட...     
இவ்வளவு பெரிய     
வீட்டில்     
எனக்கு இடமில்லை     
இவ்வளவு     
பெரிய நகரத்தில்     
அறிந்த முகம் ஏதுமில்லை     
அறிந்த முகம் கூட     
மேற் பூச்சுக் கலைய     
அந்நியமாக     
உருக்காட்டி     
மறைகிறது     
என்னுருவங்     
கலைய     
எவ்வளவு     
காலம்     
கடந்து செல்ல வேண்டும்     
என்ற நினைவுவர     
''சற்றே நகர்''     
என்று ஒரு குரல் கூறும்.     
 
0 comments:
Post a Comment