Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

வ.வே.சு ஐயர்

Labels: ,

vavesu-iyer

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கிற வ.வே.சு. ஐயர் திருச்சி நகருக்கு அருகில் வரகனேரி என்னும் ஊரில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். 1897-ல் வ.வே.சு. ஐயருக்கும் பாக்கியலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. 1907-ல் பாரிஸ்டர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். 1910-ல் திரும்பி கடல் மார்க்கமாக புதுச்சேரி வந்தார். புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன் ஐயருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தமிழில்  சிறுகதைகளை அதன் வடிவப் பிரக்ஞையுடன் கையாண்ட முதல் எழுத்தாளர் ஐயர்தான். 1915-ஆம் ஆண்டு ஐந்து சிறுகதைகளைக் கொண்ட மங்கையர்க்கரசியின் காதல்' வ.வே.சு. ஐயரின் கம்ப நிலையம் வெளியீடாக வெளிவந்தது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1921-ல் கம்பராமாயணம் குறித்து ஆங்கிலத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். 1925-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி பாபநாசம் கல்யாணி தீர்த்தம் அருவியில் தவறி விழுந்த மகள் சுபத்ராவை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்த வ.வே.சு. ஐயர் அருவியிலேயே காலமானார். குளத்தங்கரை அரசமரம்' கதை முதலில்  வ.வே.சு. ஐயரின் மனைவி ஸூ. பாக்கியல்டசுமி அம்மாள் பெயரில் விவேகபோதினி என்னும் மாத இதழில் பிரசுரமானது.

2 comments:

Prof Raja Mutthirulandi, Tiruchy said...

குளத்தங்கரை அரசமரம் கதை எந்த ஆண்டு, எந்த மாத விவேகபோதினி இதழில் பாக்யலக்ஷமி அம்மாள் பெயரில் வந்தது ?

Prof Raja Mutthirulandi, Tiruchy said...

It has been shown with evidence that Kamba Nilayam was formed by Va,Ve.Su Iyer and his friend Mandayam Srinivasa Iyer in Pondicherry only in 1916. Therefore the compiled volume 'Mangaiyarkarasiyin Kathal Muthaliya Kathaigal' could not have been published by Kamba Nilayam in 1915.
Actually, the above mentioned collection was the fourth publication of Kamba Nilayam, indicating further beyond 1916 as the year of publication of the collection of Short Stories.