Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

முத்தம்

Labels: ,

ஆத்மாநாம்

auguste-rodin-the-kiss-rodin-museum-paris

முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

உங்களைப் பார்த்து

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு முத்தம்

கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும்

மறந்துவிட்டு

சங்கமமாகிவிடுவீர்கள்

பஸ் நிலையத்தில்

ரயிலடியில்

நூலகத்தில்

நெரிசற் பூங்காக்களில்

விற்பனை அங்காடிகளில்

வீடு சிறுத்து

நகர் பெருத்த

சந்தடி மிகுந்த தெருக்களில்

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை

உங்கள் அன்பைத் தெரிவிக்க

ஸாகஸத்தைத் தெரிவிக்க

இருக்கும் சில நொடிகளில்

உங்கள் இருப்பை நிரூபிக்க

முத்தத்தைவிட

சிறந்ததோர் சாதனம்

கிடைப்பதரிது

ஆரம்பித்து விடுங்கள்

முத்த அலுவலை

இன்றே

இப்பொழுதே

இக்கணமே

உம் சீக்கிரம்

உங்கள் அடுத்த காதலி

காத்திருக்கிறாள்

முன்னேறுங்கள்

கிறிஸ்து பிறந்து

இரண்டாயிரம் வருடங்கள் கழித்து

இருபத்தியோறாம் நூற்றாண்டை

நெருங்கிக் கொண்டிருக்கிறோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து

சுத்தமாக

முத்தம்

முத்தத்தோடு முத்தம்

என்று

முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள்

1 comments:

தண்டோரா ...... said...

ஜென்மசாபல்யம்...நன்றி