Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

புதுமைப்பித்தன்

Labels: ,

புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருதாச்சலம். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, திருப்பாதிர்புலியூரில் அவர் பிறந்தார். தந்தை பெயர் வி. சொக்கலிங்கம் பிள்ளை; அம்மா பெயர் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தனின் உடன் பிறந்த-வர்கள் இரண்டுபேர். முதலில் தங்கை ருக்மணி அம்மாள், பிறகு தம்பி சொ. முத்துசாமி.

pudu3தாசில்தாராகப் பணியாற்றிய வி. சொக்கலிங்கம் பிள்ளை பணிநிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றலாகிப்-போனபோது, புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வியும் அந்தந்த ஊர்களுக்கு மாற்றப்பட்டது. செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிஞ்சி ஆகிய ஊர்களில் தொடக்கக் கல்வி கற்ற புதுமைப்பித்தன், 1918இல் வி. சொக்க-லிங்கம் பிள்ளை ஓய்வுபெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பி, ஆர்ச்யோவான் ஸ்தாபனப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931 இல் பி.ஏ. பட்டம் பெற்றார். அதேவருடம் ஜுலையில் கமலாம்மாளுக்கும் புதுமைப்-பித்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கமலாம்மாள் (1917_1995) திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.

1933 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி புதுமைப்பித்தனின் முதல் கதையான `குலோப் ஜான் காதல்’ காந்தியில் வெளிவந்தது. பிறகு 1934 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து அவருடைய பல கதைகள் மணிக்-கொடியில் வெளிவரத் தொடங்கின. மணிக்கொடி பி. எஸ். ராமையாவுடன் அவருக்கு நெருங்கியத் தொடர்பிருந்தது. 1934 ஆம் முற்பகுதியில் புதுமைப்பித்தன் சென்னைக்கு சென்றார். 1934 ஆகஸ்டு மாதம் ஊழியனில் உதவியாசிரியராக சேர்ந்து 1935 பிப்ரவரி வரை ஊழியனில் பணியாற்றினார். பிறகு 1936 முதல் 1943 செப்டம்பர் வரை தினமணியில் உதவியா-சிரியராக இருந்தார். நிர்வாகத்துடனான மோதலின் காரணமாக ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் தினமணியிலிருந்து விலகியபோது பிற உதவியா-சிரியர்களோடு சேர்ந்து புதுமைப்பித்தனும் விலகினார்.

புதுமைப்பித்தனின் புத்தகங்கள், முறையே 1939இல் உலகத்துச் சிறுகதைகள், பேஸிஸ்ட் ஜடாமுனி கப்சிப் தர்பார், ஆகியவையும் 1940 இன் தொடக்கத்தில் புதுமைப்-பித்தன் கதைகள்_ம் பிறகு ஆறு கதைகள்_ம் 1943 இல் காஞ்சனையும், 1947 இல் ஆண்மை, உலக அரங்கு ஆகியவையும் வெளிவந்தன.

1944 ஆம் ஆண்டு டி. எஸ். சொக்கலிங்கம் தினசரி_யை தொடங்கிய போது புதுமைப்பித்தன் அதில் சேர்ந்தார். பிறகு தினசரியிலிருந்து விலகித் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1946 இல் ஜெமினியின் `அவ்வை’ மற்றும் `காமவல்லி’ படங்களில் பணியாற்றினார். பின்பு `பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படக் கம்பெனியை தொடங்கினார். 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் புதுமைப்பித்தனின் மகள் தினகரி பிறந்தாள்.

1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 1948 மே தொடக்கம் வரை புதுமைப்பித்தன் எம். கே. டி. பாகவதரின் `ராஜமுக்தி’ படத்திற்காக புனேயில் தங்கி பணியாற்றினார். அங்கு அவர் கடுமையான காசநோய்க்கு ஆளானார். நோய் முற்றி மருத்துவர்கள் கைவிட்டு-விட்ட நிலையில் 5 மே 1948 இல் திருவனந்தபுரத்திற்குத் திரும்பினார். அதே ஆண்டு ஜுன் 30 இல் மறைந்தார்.

0 comments: